என் மலர்
நீங்கள் தேடியது "Sachin Tendulkar"
- விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார்.
- அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி, லோகேஷ் ராகுல் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தனர்.
122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட்கோலி ஒருநாள் போட்டியில் 47-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெண்டுல்கரை அவர் நெருங்கியுள்ளார். டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 3 செஞ்சூரி தேவை.
மேலும் விராட்கோலி 13 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்து டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். கோலி 267 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்னை தொட்டார். டெண்டுல்கர் 321 இன்னிங்சில்தான் இந்த ரன்னை எடுத்தார்.
சர்வதேச போட்டிகளில் விராட்கோலி 77 செஞ்சூரி அடித்து (டெஸ்ட் 29 + ஒருநாள் போட்டி 47 + 20 ஓவர் 1) 2-வது இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் விராட்கோலி ஒருநாள் போட்டிகளில் 100 சதங்களை அடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாக்கர் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விராட்கோலிக்கும், மற்ற வீரர்களுக்கு இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்கையை முடிக்கும் போது ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் அடித்து இருந்தார். விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பதற்கு நீண்ட காலம் இருக்கிறது. அவர் டெண்டுல்கரின் சாதனையை எளிதில் கடப்பார். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவர் 100 சதங்கள் அடிப்பார்.
விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுப்பதில் விராட்கோலி எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். அவர் தனது உடல் தகுதி விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்கிறார்.
இவ்வாறு வாக்கர் யூனுஸ் கூறியுள்ளார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண விஐபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கினார்.
மும்பை:
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
இதற்கிடையே, இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலக கோப்பை போட்டிகளை நேரில் காண பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது.
இந்நிலையில், பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு சச்சின் தெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
- ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள்.
- எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்
மும்பை:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.
இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா, முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முரளிதரன் பேசுகையில், 'டெண்டுல்கர் எனது பந்து வீச்சை நன்றாக கணித்து செயல்பட்டார். அதனை பலரால் செய்ய முடியாது. பிரையன் லாரா எனக்கு எதிராக நன்றாக ஆடினார்.

ஆனால் பெரிய அளவில் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கியதில்லை. ராகுல் டிராவிட்டை போன்ற சிலரை நான் அறிவேன். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒருபோதும் எனது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடியது கிடையாது. ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள். எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.
+2
- இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முரளீதரன்
- மும்பையில் நடைபெற்ற சச்சின் தெண்டுல்கர், முரளீதரன், ஜெயசூர்யா பங்கேற்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அழிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தவர் முத்தையா முரளீதரன். இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு "800" என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய சச்சின் தெண்டுல்கர் ''அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான அம்சம் என்னவென்றால், பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கிறோம், ஒருவரையொருவர் சகஜமாக ரசிக்கிறோம். நிச்சயம் அனைவரும் படத்தைப் பார்க்கப் போகிறார்கள்.'' என்றார்.
இந்த விழாவில் இலங்கை அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டார்.
- கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது.
- லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.
தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.
கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை அன்று டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது. மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்றது. டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.
தொடரை கைப்பற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் அவர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்து வரலாறு படைத்துள்ளார். அவர் முதல் 5 போட்டிகளில் 348 ரன்கள் குவித்து அந்த சாதனை பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.
1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின், தனது முதல் ஐந்து போட்டிகளில் 321 ரன்களைக் குவித்தார். அதைத் தொடர்ந்து சுப்மன் கில் 320 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
- ஆஷஸ் தொடரில் முதல் 2 போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றது.
- 3-வது மற்றும் 5-வது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
மும்பை:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சிறப்பை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது.
முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என பின்னிலை வகித்தது. அதிலிருந்து மீண்டு 2-2 என சமநிலையில் இருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகுக்கு ஒரு மரியாதை.
இங்கிலாந்து அணியின் மீண்டு எழும் திறன் அவர்களின் மன உறுதியைக் காட்டுகிறது.
இயற்கை அன்னை எங்களுக்கு ஒரு தொடர் முடிவை மறுத்திருக்கலாம். ஆனால் அது இந்த நம்பமுடியாத விளையாட்டின் உணர்வைக் குறைக்கவில்லை.
இந்தத் தொடர் நீண்ட நாட்களாக நினைவில் நிற்கும் தொடராக அமைந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.
- ஜோ ரூட் இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார்.
- டெஸ்டில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் (19 முறை) சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும் எடுத்தன.
இதனால் 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3ம் நாள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (18 முறை), பிரையன் லாரா (18), ரிக்கி பாண்டிங் (17), அலெஸ்டர் குக் : 17 முறை
- டெண்டுல்கர் சிறந்த வீரர். கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் சாதித்து விட்டார்.
- புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் அம்ரோஸ் கூறியதாவது:-
டெண்டுல்கர்- விராட்கோலி ஒப்பீடு இருக்க கூடாது. வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இருவரையும் ஒப்பிடுவதில் அர்த்தம் இல்லை. இருவருமே தங்களது காலத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. இருவரையும் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது.
டெண்டுல்கர் சிறந்த வீரர். கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் சாதித்து விட்டார். விராட்கோலியே மிக சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.