என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sachin tendulkar"

    • ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார்.
    • இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.

    ராய்ப்பூர்:

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே உள்ள பிரம்மாண்ட சாதனைப் பட்டியலில் ரோகித் இணைய அதிக வாய்ப்பு உள்ளது.

    ராய்ப்பூரில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், அவர் இன்னும் 41 ரன்கள் எடுத்தால் வரலாற்றுச் சாதனை படைப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    ஏனென்றால் 2025-ம் ஆண்டு ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 561 ரன்களைக் குவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கூட 51 பந்துகளில் 57 ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் உள்ளார். அதற்கு முன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்து இருந்தார். தான் விளையாடிய கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார். 20,000 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை அடைய அவருக்கு இன்னும் வெறும் 41 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.

    அந்த பட்டியல்:

    சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்

    விராட் கோலி - 27,808 ரன்கள்

    ராகுல் டிராவிட் - 24,064 ரன்கள்

    ராய்ப்பூரில் 41 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், இந்த ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்வார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி தனது 52-வது சதத்தை பதிவு செய்தார்.
    • ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) விராட் கோலி முந்தினார்.

    ராஞ்சி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52-வது சதத்தை (306-வது போட்டி) பதிவு செய்தார்.

    இதன் மூலம் ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) அவர் முந்தினார்.

    டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். அவரை 37 வயதான விராட் கோலி ஏற்கனவே முந்தி இருந்தார். ஒரு நாள் போட்டியில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா, டெண்டுல்கரா? என்ற விவாதம் எழுந்து உள்ளது.

    இது குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

    விராட் கோலியுடன் ஆடியவர்களும் அவருக்கு எதிராக விளையாடியவர்களும் அவர் ஒருநாள் போட்டியில் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

    ரிக்கிபாண்டிங்கும் அவரை ஒருநாள் போட்டியின் எல்லா கட்டத்திலும் ஒரு சிறந்த வீரர் என்று மதிப்பிட்டார். ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது மிகவும் கடினமானது. நீங்கள் டெண்டுல்கரை கடந்து செல்லும் போது இந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்
    • பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இன்று நடைபெற்ற சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார். அதன்பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், "ஒரே ஒரு இனம் தான், அது மானுட இனம். ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான், அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர்" என்று தெரிவித்தார்.

    ஐஸ்வர்யா ராயின் இந்த பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    • ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என சச்சின் கூறினார்.
    • ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது என கோலி கூறினார்.

    மும்பை:

    இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்திய தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார். அட்டகாசமாக ஆடிய அவர் அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார்.

    இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அற்புதமான வெற்றி. முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா , நீங்கள் பந்தைக் கொண்டு ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். மூவர்ணக் கொடியை உயரே பறக்க விடுங்கள். என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமாவின் சிறப்பான ஆட்டம், உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. சபாஷ் இந்தியா. என தெரிவித்துள்ளார். 

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் 70 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார்.
    • ரோகித் சர்மா 49 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 121 (125 பந்துகள்), 74 (81 பந்துகள்) ரன்கள் அடிக்க, இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஜோடி 2அவது விக்கெட்டுக்கு 170 பந்தில் 168 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்தன. குறிப்பாக சதம் விளாசிய ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்தார். அவற்றில் முக்கியமானது, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்து, அவரை முந்தியது.

    சச்சின் தெண்டுல்கர் 71 போட்டியில் 70 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9 சதங்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 49 போட்டிகளில், 49 இன்னிங்சில் 9 சதம் அடித்துள்ளார். இன்னிங்ஸ் அடிப்படையில் சச்சின் தெண்டுல்கரை முந்தியுள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 போட்டிகளில், 53 இன்னிங்சில் விளையாடி 8 சதங்கள் அடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெஸ்மாண்ட் கெய்ன்ஸ் 64 இன்னிங்சில் 6 சதம் அடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிஸ்சிஸ் 21 இன்னிங்சில் 5 சதம் அடித்துள்ளார்.

    அத்துடன் ஆஸ்திரேலியா மண்ணில் இது அவருடைய 6ஆவது சதம் ஆகும். இதன்மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக விராட் கோலி இலங்கைக்கு எதிராக 10 சதங்கள் விளாசி சர்வதேச அளவில் அனைத்து அணிகளுக்கும் எதிராக முதல் இடத்தில் உள்ளனார்.

    • துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.

    பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.

    இதற்கிடையே, பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர் பரிசீலிக்கப்படுவதாகவோ அல்லது பரிந்துரைக்கப்படுவதாகவோ சில தகவல்கள், வதந்திகள் பரவி வருவதாக எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

    • கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 3பிஎச்கே படத்தை பார்த்ததாகவும் அதை ரசித்ததாகவும் கூறினார்.
    • அன்புள்ள சச்சின் ஜி, எங்கள் தமிழ் திரைப்படமான 3பிஎச்கே படத்தை பாராட்டியதற்கு நன்றி.

    சென்னை:

    நடுத்தர குடும்பத்தை மையமாக கொண்ட சித்தார்த்தின் சமீபத்திய படமான ''3பிஎச்கே'', பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

    இந்நிலையில், ஒரு நிகழ்வில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 3பிஎச்கே படத்தை பார்த்ததாகவும் அதை ரசித்ததாகவும் கூறினார்.

    அதற்கு சச்சின் , "எனக்கு நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் 3பிஎச்கே மற்றும் அட்டா தம்பாய்ச்சா நாய் ஆகிய படங்களை பார்த்து ரசித்தேன்'' என்றார்.

    இந்த நிலையில், சச்சினுக்கு சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அன்புள்ள சச்சின் ஜி, எங்கள் தமிழ் திரைப்படமான 3பிஎச்கே படத்தை பாராட்டியதற்கு நன்றி . 3பிஎச்கேவின் ஒட்டுமொத்த குழுவும் இந்த அங்கீகாரத்திற்காக மகிழ்ச்சியடைகிறது. என தெரிவித்துள்ளார் .

    • வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் நடுவர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
    • 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் ரெடிட் சமூக வலைதளப்பக்கத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் ரெடிட் இணையத்தில் அவ்வப்போது சச்சின் டெண்டுல்கர் நேரலையில் தோன்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை கொடுத்து வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அவர் ரசிகர்களிடம் பேசினார். அப்போது சச்சின் டெண்டுல்கரிடம் நிறைய ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினார்கள்.

    அதில் ஸ்டீவ் பக்னர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் பேட்டிங் செய்யும் போது அவருடைய கைகளுக்கு குத்துச்சண்டை கையுறைகளை (பாக்ஸிங் கிளவுஸ்) வழங்குங்கள். அப்போது தான் அவரால் தன்னுடைய விரலை உயர்த்த முடியாது. என்று கலகலப்பான பதிலை கொடுத்தார்.

    ஏனெனில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் அம்பயர் பக்னர் இந்தியா மற்றும் சச்சினுக்கு எதிராக நிறைய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

    குறிப்பாக 2008 ஆஸ்திரேலிய தொடரில் அவர் வழங்கிய மோசமான தீர்ப்புகள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது. அதே போல சச்சின் டெண்டுல்கரை பார்த்தாலே அவர் எதிரணி விக்கெட் கேட்டால் உடனடியாக கையை உயர்த்தி அவுட் வழங்கி விடுவார்.

    அவராலேயே சச்சின் டெண்டுல்கர் குறைந்தது 5 முதல் 7 சதங்களை தவற விட்டிருப்பார் என்றே சொல்லலாம். 

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை ஜோ ரூட் ஒருநாள் நிச்சயம் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜோ ரூட்டின் டெஸ்ட் சாதனைகள் குறித்து முதல்முறையாக சச்சின் மனம் திறந்துள்ளார்.

    ரெடிட்டில் நடந்த Ask Me Anything அமர்வின் போது, சச்சினிடம், "ஜோ ரூட் பற்றிய உங்கள் முதல் அபிப்ராயம் என்ன? அவர் இப்போது 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்துள்ளார், உங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் அவர் உங்களுக்கு எதிராக தான் தனது முதல் போட்டியை விளையாடினார்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சச்சின், "டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்களைக் கடந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அவர் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டு நாக்பூரில் அவரது முதல் டெஸ்டின் போது தான் நான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். அப்போதே எனது அணியினரிடம் அவர் இங்கிலாந்தின் எதிர்கால கேப்டனாக மாறுவார் என்று கூறினேன். அவர் விக்கெட்டை மதிப்பிடும் விதமும், அவர் விளையாடிய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு பெரிய வீரராக வருவார் என்று அந்த தருணத்திலேயே எனக்குத் தெரிந்தது" என்று தெரிவித்தார்.

    ஜோ ரூட்டை சச்சின்பாராட்டுவது இது முதல் முறையல்ல. 2021-ல் இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது, லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பேட்டிங் சரிவை சந்தித்தது. அப்போது வர்ணனை செய்த சச்சின், 'இந்த இங்கிலாந்து அணியை தனி ஆளாகத் தாங்கிப் பிடிக்கும் திறமை ஜோ ரூட்டிடம் மட்டுமே உள்ளது' என்று குறிப்பிட்டார். அவரது திறமை மீது சச்சின் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜோரூட் 3 சதங்களுடன் 537 ரன்கள் குவித்து தனது அசாத்தியமான பேட்டிங் நிலையை தொடர்ந்தார். அவரது அடுத்த பெரிய சவால் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடராகும். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் சதம்கூட அடிக்கவில்லை என்ற குறையை இந்த முறை அவர் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள்.
    • கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம்.

    ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. வரலாற்றில் ஒரு முறை கூட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதில்லை.

    இம்முறை 2011 போல இந்திய மகளிர் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

    அந்த நிலையில் நேற்று மும்பையில் 2025 மகளிர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 2011 உலகக் கோப்பையில் தான் வெளிப்புற சத்தங்களை காதில் வாங்காமல் உலகக் கோப்பையை வென்று காட்ட வேண்டும் என்று சச்சின் மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் சொன்னதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அதுவரை எந்த அணியும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. நாங்கள் 28 வருடங்களாக உலகக் கோப்பையை வெல்லவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை சமன் செய்த நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் நிலையிலிருந்து தோற்றோம். அப்போது நாங்கள் ஏராளமான விமர்சனங்களையும் சந்தித்தோம்.

    அப்போது எங்களிடம் வந்த சச்சின் மற்றும் கேரி, இங்கிருந்து நாம் கோப்பையை வெல்வதற்கான விஷயங்களை செய்ய வேண்டும். அதற்காக யாரும் தொலைக்காட்சியைப் பார்க்கக்கூடாது. செய்தித்தாளை படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்.

    களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள். களத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். சத்தங்களை நிறுத்தி கோப்பையை வெல்ல முயற்சியுங்கள் என்றும் சச்சின், கேரி சொன்னார்கள். கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம். அது வேலையும் செய்தது.

    என்று யுவராஜ் சிங் கூறினார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடம்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    லண்டன்:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இந்நிலையில், ஜோ ரூட், தெண்டுல்கரை சீக்கிரம் முந்தி விடுவார் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ரூட், தெண்டுல்கரின் சாதனையை நிச்சயம் முறியடிப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி நிறைய ரன்கள் குவிப்பார். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. எப்படியும் இன்னும் 6 ஆண்டு விளையாடுவார். அனேகமாக மேலும் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் எடுப்பார். 40 வயது வரை ஜோ ரூட் விளையாடும் போது டெஸ்டில் 18 ஆயிரம் ரன்கள் எடுத்து இருப்பார் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • நொண்டியபடி மைதானத்துக்கு வந்த அவர், வலியுடனேயே பேட்டிங் செய்தார்.
    • ரிஷப் பண்ட் காயத்துடன் மீண்டும் விளையாட வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான தன்மையைக் காட்டினார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 358 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியின் முதல் நாளில் கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் வலது கால் விரலில் காயம் அடைந்தார். வலியால் துடித்த அவர் பாதியில் வெளியேறினார். நேற்றைய 2-ம் ஆட்டத்தின் போது ஷர்துல் தாக்கூர் விக்கெட் விழுந்ததும் கால் காயத்துடன் ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.

    நொண்டியபடி மைதானத்துக்கு வந்த அவர், வலியுடனேயே பேட்டிங் செய்தார். இதில் அரைசதம் அடித்தார். பின்னர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்த நிலையில் காயத்துடன் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட்டை டெண்டுல்கர் உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.

    இதுதொடர்பாக டெண்டுல்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் காயத்துடன் மீண்டும் விளையாட வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மகத்தான தன்மையைக் காட்டினார். அவரது 50 ரன்கள், உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்து வதற்கு தேவையான மன உறுதியை நினைவூட்டுகிறது. இந்த துணிச்சலான முயற்சி நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறும்போது, உங்களுடைய நாட்டுக்காக எந்தளவில் விளையாடினாலும் இது போன்ற தைரியம் மற்றும் போராட்ட குணத்தைக் காண்பிக்க வேண்டும். காயத்தையும் தாண்டி பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்டுக்கு தலை வணங்குகிறேன் என்றார்.

    அதேபோல் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா கூறும் போது, ஆண்டிகுவாவில் அனில் கும்ப்ளே தாடை உடைந்ததைத் தாண்டி விளையாட வந்ததைப் பார்த்துள்ளேன். அது போன்ற நிகழ்வை இனிமேல் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் ரிஷப்பின் தைரியம் மூலம் அதை பார்த்தேன் என்றார்.

    ×