search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sachin Tendulkar"

    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார்.
    • இந்திய அணி 46 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 46 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதன்படி சர்வதேச அளவில் இந்திய அணிக்காக டோனி 535 போட்டிகளில் விளையாடி உள்ளார். விராட் கோலி இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் 536 போட்டிகளில் விளையாடி இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடிவர்கள் பட்டியலில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்து ஆடி வருகிறது.
    • இப்போட்டியில் ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டியில் இரட்டை சத்தம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் என்ற மைல்கல்லை ஜோ ரூட் கடந்துள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

    மேலும், இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதம் விளாசிய சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

    • காயங்கள் மட்டுமே அவரை சாதனையை உடைப்பதிலிருந்து நிறுத்த முடியும்.
    • 2025 ஆஷஸ் தொடர் மட்டுமே ரூட்டுக்கு சவாலாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் உலக சாதனை படைத்துள்ளார்.

    ஆனால் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் அந்த சாதனையை உடைப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் இதுவரை 146 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12500 ரன்களை கடந்துள்ளார். தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரூட் இன்னும் குறைந்தது 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த 4 வருடங்களில் 3000 - 4000 ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கரை முந்தி எளிதாக அவர் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதமடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் வாழ்நாள் சாதனையை உடைத்து ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் அட்டகாசமாக விளையாடி வரும் ரூட்டை காயம் மட்டுமே தடுக்க முடியும் என்றும் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முந்துவதை என்னால் பார்க்க முடியும். நான் ஓய்வு பெற்ற போது என் சாதனையை அவர் உடைக்க அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக கருதினேன். கேப்டன்ஷிப் மட்டுமே அவருடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    அப்போது பென் ஸ்டோக்ஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டது ரூட்டுக்கு பெரிய உதவியை செய்தது. இப்போதும் அந்த சாதனையை உடைக்க முடியாது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதற்கு வாய்ப்புள்ளது. அனைத்து மகத்தான வீரர்களும் காயங்களை கடந்து நீண்ட காலம் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே போல ரூட் கேரியரில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது.

    ஆனால் அது போன்ற காயங்கள் மட்டுமே அவரை சாதனையை உடைப்பதிலிருந்து நிறுத்த முடியும். இருப்பினும் இப்போதும் பசியுடன் விளையாடும் அவர் இன்னும் சில வருடங்கள் இப்படியே விளையாடுவதை நான் பார்ப்பேன். 2025 ஆஷஸ் தொடர் மட்டுமே ரூட்டுக்கு சவாலாக இருக்கும். தற்போதைய நிலையில் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக சச்சின் 51%, ரூட் 49% இருப்பார்கள் என்று சொல்வேன். ஆனாலும் ரூட் அதை உடைப்பார் என்று நான் பந்தையம் கட்டுவேன்.

    இவ்வாறு குக் கூறினார்.

    • ஸ்மித், ஸ்டார்க், உஸ்மான் கவாஜா, மார்னஸ் ஆகியோர் ஜாம்பவான் சச்சினை தேர்வு செய்தனர்.
    • ஜோஷ் ஹசில்வுட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட விரும்பும் வீரராக பும்ராவை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் ஒரு இந்திய வீரரை நமது அணியில் தேர்வு செய்ய விரும்பினால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சச்சின், விராட் கோலி, பும்ரா ஆகியோரை தேர்வு செய்தனர்.

    ஸ்மித், ஸ்டார்க், உஸ்மான் கவாஜா, மார்னஸ் ஆகியோர் ஜாம்பவான் சச்சினை தேர்வு செய்தனர். அதே நேரத்தில் நாதன் லயன், அலெக்ஸ் கேரி ஆகியோர் விராட் கோலியை தேர்வு செய்தனர். மேலும் ஜோஷ் ஹசில்வுட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட விரும்பும் வீரராக பும்ராவை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய வீரர்கள் டோனியை தேர்வு செய்யாதது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.
    • சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 144 போட்டிகளில் விளையாடி 12131 ரன்கள் குவித்துள்ளார்.

    33 வயதான ஜோ ரூட் இன்னும் சில வருடங்கள் டெஸ்ட்ட் கிரிக்கெட் விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் 62 ரன்கள் அடித்து புதிய சாதனை ஒன்றை ஜோ ரூட் படைத்துள்ளார். இந்த அரைசதத்தோடு ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஆலன் பார்டரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் டெண்டுல்கர்.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார்.

    சிட்னி:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 143 போட்டிகளில் விளையாடி 12,027 ரன்கள் குவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் உள்ளார். 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,472 ரன்கள் குவித்துள்ள அலிஸ்டர் குக் அவருக்கு முன் உள்ளார்.

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நிச்சயம் முறியடிப்பார் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

    டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் எடுத்துள்ள ரன்களை ஜோ ரூட் கடந்து செல்லக்கூடும். ரூட் ஆண்டுக்கு 800 முதல் 1000 ரன்கள் எடுத்தால் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியும்.

    ஜோ ரூட்டுக்கு 33 வயது. சுமார் 3,000 ரன்கள் அவர் பின்தங்கியுள்ளார். அவர் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து அமையும்.

    அவர் ஆண்டுக்கு 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், ஆண்டுக்கு 800 முதல் 1,000 ரன்கள் எடுத்தால் ஜோ ரூட் அங்கு வருவதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மட்டுமே இருக்கும்.

    அதுவரை ஜோ ரூட் ரன்களை எடுப்பதற்கான பசியுடன் இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை இலக்காகக் கொண்டுள்ள அவருக்கு அதற்கான வயதும் உள்ளது என தெரிவித்தார்.

    • சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
    • வினேஷ் போகத் நிச்சயமாக வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர்.

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதைதொடர்ந்து, இறுதிப்போட்டி வரை முன்னேறியதால் வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் னெ சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளிக்கிறது.

    இந்நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு நிச்சயமாக வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்பே எடையின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன. அந்த விதிகள் சூழலில் வைத்து பார்க்கப்பட வேண்டும். சில சமயங்களில் மறுபரிசீலனை செய்யப்படலாம்.

    செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளின் பயன்பாடு போன்ற நெறிமுறை மீறல்களுக்காக ஒரு தடகள வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

    அப்படியானால், எந்தப் பதக்கமும் வழங்கப்படாமல், கடைசி இடத்தைப் பிடித்திருப்பது நியாயமானதாகவே இருக்கும்.

    வினேஷ் தனது எதிரிகளை நியாயமான முறையில் தோற்கடித்து முதல் இரண்டு இடங்களை எட்டினார். அவர் நிச்சயமாக வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர்.

    விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம். வினேஷ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படுகிறார்.
    • வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் நேராக இல்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டி மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    தற்போது 52 வயதில் இருக்கும் வினோத் காம்ப்ளி , கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது.

    இந்நிலையில் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் நேராக இல்லை.

    இந்த வீடியோ சிகர்களிடையேயும் கிரிக்கெட் வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கிரிக்கெட் உலகில் 1990-களில் சச்சின் டெண்டுல்கர் நுழைவையடுத்து வினோத் காம்ப்ளியின் நுழைவும் தூள் கிளப்புவதாக அமைந்தது. அதிரடி இடது கை வீரராக இரண்டு இரட்டைச் சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று வெற்றியில் இவரது பெயர் உச்சம் பெற்றது. இத்தனைப் பிரமாதமான திறமை இருந்தும் 1996 உலகக் கோப்பை அரையிறுதியில் காலிறுதிப் போட்டியில் ஈடன் கார்டனில் டாஸ் வென்று பேட் செய்வதற்குப் பதிலாக கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி களத்தில் 120/8 என்று மடிய ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாட்டாவிலும் ரகளையிலும் ஈடுபட ஆட்டம் கைவிடப்பட்டது.

    அப்போது வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் சென்ற காட்சியை யாரும் மறப்பதற்கில்லை. இந்தியா வெளியேறியது. அப்போது இவர் கேப்டன் அசாருதீனை அவரின் அறைக்குச் சென்று கடுமையாக வசையை பொழிந்ததாகவும் செய்திகள் உலாவின. அதன் பிறகே இவரது கரியர் கொஞ்சம் பின்னடைவு கண்டது. பிறகு காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள் ஆகியன ஒரு அற்புதமான உலக பிரசித்தி பெற வேண்டிய வீரரை அழித்து விட்டது.

    17 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடிய வினோத் காம்ப்ளி 4 சதங்கள் 3 அரைசதங்களுடன் 227 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்து ஓய்வு அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2477 ரன்களை 2 சதங்கள் 14 அரைசதங்கள் எடுத்துள்ளார். 

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார்.
    • அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் விரும்புவேன்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 241 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதனால் 2- 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.

    இந்த வெற்றிக்கு இங்கிலாந்தின் ஜோ ரூட் பேட்டிங்கில் 14, 122 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினார். இதையும் சேர்த்து அவர் 142 டெஸ்ட் போட்டிகளில் 11940* ரன்கள் குவித்துள்ளார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சந்தர்பாலை (11867) முந்தியுள்ள அவர் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்நிலையில் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைப்பார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறியவதாவது:-


    இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார். அப்படியே சச்சின் டெண்டுல்கரையும் அவர் முந்தப்போவது ஸ்பெஷலாக இருக்கும். பேட்டிங்கில் தற்போதைய இங்கிலாந்து அணி கடந்த காலத்தை போல் பொறுப்பற்றவர்களாக தெரியவில்லை. அவர்கள் விரைவாக ஸ்கோர் செய்கின்றனர்.

    அவர்கள் ஈகோவை எடுத்துக் கொள்வதாகவும் தெரியவில்லை. அவர்கள் நன்றாக விளையாடுகின்றனர். அதற்கு ரூட் பாறையைப் போல் நின்று பேட்டிங்கில் முக்கிய பங்காற்றுகிறார். அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் விரும்புவேன்.

    என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    ஜாம்பவான் சச்சின் 24 வருட டெஸ்ட் கிரிக்கெட் 200 போட்டிகளில் 15921 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லார்ட்ஸ் போட்டியில் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன்.
    • கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும்.

    டிரினிடாட்:

    கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுவர்கள் இந்தியாவை சேர்ந்த சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆவர்.

    இந்நிலையில் சச்சின் மற்றும் தன்னை விட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    கூப்பர் நான் பார்த்த வீரர்களில் சிறந்தவர். சொல்லப்போனால் நானும் சச்சின் டெண்டுல்கர் கூட அவருடைய திறமையை நெருங்க முடியாது என்று சொல்வேன். கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும். கேப்டனாகவும் கூட பொறுப்புடன் விளையாடிய அவருடைய சராசரி கிட்டத்தட்ட 50 தொடும். இருப்பினும் ஒரு கேப்டனாக மட்டுமே அவர் தனது உண்மையான திறனை நிறைவேற்றினார் என்பது வருத்தமளிக்கிறது.

    லார்ட்ஸ் போட்டியில் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன். அவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர். அப்போட்டியில் அவர் சீனியர்களை விட அற்புதமாக பேட்டிங் செய்தார். கார்ல் பேட்டிங் செய்யும்போது அதை தேஷ்மண்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், கோர்டான் க்ரீனிட்ஜ் ஆகியோர் தங்களின் வேலையை விட்டுவிட்டு பார்ப்பார்கள். அந்த வகையில் மிகவும் திறமையான அவர் நாம் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லை.

    என்று கூறியுள்ளார்.

    • 2002-ல் முதல் முறையாக நீங்கள் பந்து வீசியதை பார்த்தேன்.
    • நீங்கள் இங்கிலாந்தின் முதன்மை பவுலராக வருவீர்கள் என்று நாசர் ஹுசைன் என்னிடம் சொன்னார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியுடன் இங்கிலாந்தின் நட்சத்திர ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    கடந்த 2002-ல் அறிமுகமாகிய அவர் சச்சின், விராட் கோலி போன்ற நிறைய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தவர். அவர் 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சினுக்கு பின் (200) அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தி விடை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஹேய் ஜிம்மி. உங்களின் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். 2002-ல் முதல் முறையாக நீங்கள் பந்து வீசியதை பார்த்தேன். அப்போது நாசர் ஹுசைன் நீங்கள் இங்கிலாந்தின் முதன்மை பவுலராக வருவீர்கள் என்ற மிகப்பெரிய கருத்தை என்னிடம் சொன்னார். அதை நிரூபித்துள்ள நீங்கள் இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றவில்லை.

    உலகின் மற்ற ரசிகர்களுக்கும் நீங்கள் நிறைய மகிழ்ச்சியை கொடுத்தீர்கள். உங்களுடைய ஆட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் உங்களுக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி கிடையாது. ஏனெனில் புதிய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் நீங்கள் வித்தியாசமானவர். அதை வைத்து நீங்கள் பேட்ஸ்மேன்களின் வாழ்க்கையை கடினமாக்கினீர்கள். பலருக்கும் ரோல் மாடலாக திகழும் நீங்கள் 188 போட்டிகளில் 704 எடுத்துள்ளது அபாரமானது.

    எளிதாக சொல்ல வேண்டும்மெனில் அற்புதமானது நண்பா. இந்த நேரத்தில் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இனிமேல் தான் உங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது. இந்த வாய்ப்பில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவிக்கிறேன். அற்புதமான கேரியருக்காக வெல்டன்.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது சச்சின் எழுந்து நின்று கையசைத்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரி ஆகியோர் விளையாடினர்.

    இந்தப் போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்றார். அப்போது அவரை டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது எழுந்து நின்று கை அசைத்தார். அவருடன் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரும் இந்தப் போட்டியை கண்டுகளித்தனர்.

    ×