search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sara Tendulkar"

    • சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான 29-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 19.2 ஓவரில் சென்னை அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி களம் இறங்கினார். அவர் அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 206 ரன்களை குவித்தது. இதுதான் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    இந்நிலையில், போட்டியின் போது டோனி ஹாட்ரிக் சிக்சர் அடித்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
    • எக்ஸ் தளம் அத்தகைய கணக்குகளைப் பார்த்து அவற்றை இடைநிறுத்தும் என்று நம்புகிறேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஆவார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். இவரது புகைப்படத்துக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வருவதுண்டு. இவரை இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் இணைத்து பல செய்திகள் வெளியாகி உள்ளது.

    மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது எக்ஸ் தளத்தில் சாரா பெயரில் இருந்து கில்லுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் பெயரில் போலிக்கணக்குகள் தொடங்கி பணம் செலுத்தி ப்ளு டிக் பெற்று சர்ச்சை பதிவுகள் வந்தது.

    இந்நிலையில் எக்ஸ் தளத்தில் தனக்கு எந்தவித கணக்கு இல்லை என சாரா, இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-



    சமூக ஊடகங்கள் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, துக்கம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ள ஒரு அற்புதமான இடம். இருப்பினும், இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.

    எக்ஸ் தளத்தில் என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் இது மாதிரியான போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் என்னிடம் கணக்கு இல்லை. மேலும் எக்ஸ் அத்தகைய கணக்குகளைப் பார்த்து அவற்றை இடைநிறுத்தும் என்று நம்புகிறேன்.

    என்று அவர் வலியுறுத்தினார்.

    • சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
    • கில் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

    இந்திய அணியின் தற்போது நட்சத்திர கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். 3 வடிவ (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

    கிரிக்கெட் தவிர மற்றொரு காரணத்திற்காகவும் கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் இவரையும் சாரா டெண்டுல்கர் மற்றும் சாரா அலிகான் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில காலமாக, சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்ததாகவும் மேலும் சிலர் அதை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்ததாகவும் நெட்டிசன்கள் குழப்பி வந்தனர்.

    முன்னதாக, சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது அனைவராலும் பகிரப்பட்டு பெரிய அளவில் பேசப்பட்டது.

    ஆனால் தங்கள் டேட்டிங் வதந்திகள் குறித்து மூவரும் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். அதே வேளையில், அவர் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் பிரிந்ததாகக் தகவல் வெளியாகி உள்ளது. சாரா டெண்டுல்கருடனான டேட்டிங் வதந்திகளுக்கு மத்தியில், சாரா கானும் கில்லும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர். மற்றும் அவர்களின் சமீபத்திய நடவடிக்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    சர்வதேச கிரிக்கெட்டில் கடவுளாக திகழும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு அளித்த பதில் பதிவு கிரிக்கெட் ரசிகர்களை அன்பு மழையில் நனையச் செய்தது. #SachinTendulkar #SaraTendulkar
    புதுடெல்லி:  

    ஒவ்வொரு தந்தைக்கும் அவர்களது பெண் குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பிருக்கும் என்று கூறலாம். அதே போல் தான் சச்சின் டெண்டுல்கருக்கும். தந்தையர் தினத்தன்று சச்சினின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது அப்பாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அதில் பாதுகாப்பான, பாசமிகு  தந்தையாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.


    அதற்கு பதிலளிக்கும் வகையில் சச்சின் பதிவிட்டது கிரிக்கெட் பிரியர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது. அதில், 'அர்ஜூன் மற்றும் நீ என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியான பரிசு. நீங்கள் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இருவரும் எப்போதும் எனக்கு சிறிய குழந்தைகள் தான். நீ என்னுடன் இருப்பதற்கு நன்றி' என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

    தந்தை என்பதற்கு சச்சின் சிறந்த எடுத்துகாட்டாய் திகழ்கிறார் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். சச்சினுக்கு பிறகு அவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #SachinTendulkar #SaraTendulkar
    ×