என் மலர்
நீங்கள் தேடியது "Mumbai Indians"
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக குஜராத் அணியிடம் இருந்து ரூ.2.6 கோடிக்கு அதிரடி வீரர் ஷெர்பான் ரூதர்போர்ட்-ஐ மும்பை அணி TRADE செய்துள்ளது.
முன்னதாக லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் நேற்று தெரிவித்தார். .
இந்நிலையில், லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
2026 ஐபிஎல் தொடருக்காக பலவித TRADE யூகங்கள் பரவிய நிலையில், முதல் வீரராக ஷர்துல் தாக்கூர் TRADE ஆகியுள்ளார்.
முன்னதாக, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக தனக்கு அணியின் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.
- மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும்.
- முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வரும் 15-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். இதனால் டிரேட் முறையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்படி ஏதும் செய்ய தேவையில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

மும்பை ஒரு அற்புதமான அணி. அவர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. தீபக் சாஹர் போன்ற ஒருவரை மாற்றுவது பற்றி அவர்கள் யோசிக்கலாம். அதைத் தவிர, அவர்களுக்கு வேறு யாரும் தேவையில்லை.
ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரியான் ரிக்கல்டன் என சொல்லி கொண்டே போகலாம். ஒரு அணிக்கு வேறு என்ன தேவை. எனவே அவர்களுக்கு இன்னும் இரண்டு முதல் மூன்று வீரர்கள் மட்டுமே தேவை. அது ஒரு துப்பாக்கி அணியாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் அணி எந்த சர்வதேச டி20 அணியையும் வீழ்த்த முடியும். அவர்கள் எதையும் மாற்ற வேண்டியதில்லை. ஏலத்தில் சில வீரர்களை அவர்கள் எடுக்கலாம். ஆனால் முக்கிய அணி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
என்று பத்ரிநாத் கூறினார்.
- பஞ்சாப்புக்கு எதிரான தோல்வியின் மூலம் மும்பை இந்த மைதானத்தில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.
- நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் மும்பை தோல்வியடைந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் மும்பை அணி தோல்வியை சந்தித்தே இல்லை. அந்த சாதனையை நேற்று பஞ்சாப் அணி தகர்த்தது.
இந்நிலையில் இந்த தோல்வியில் மும்பை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்த மைதானத்தில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
2014-ம் ஆண்டிற்கு பிறகு நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடந்த போட்டிகளில் மும்பை வெற்றி பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் விவரம்:-
2015 VS ராஜஸ்தான்
2023 VS குஜராத்
2023 VS குஜராத்
2024 VS குஜராத்
2025 VS குஜராத்
2025 VS பஞ்சாப் கிங்ஸ்
- எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
- இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்க இருந்தது.
டாஸ் போடப்பட்ட சில நிமிடங்களில் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
- இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.
ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.
அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை தரப்பில் ரோகித் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. 47 ரன்கள் எடுத்த போது பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரோகித் - சூர்யகுமார் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் அடித்து அசத்தினார். 20 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்த போது சூர்யகுமார் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து ரோகித்துடன் திலக் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் 81 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த திலக் 11 பந்தில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் நமன் மற்றும் பாண்ட்யா ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் தோல்வியடைந்ததே இல்லை. அந்த வகையில் மும்பையின் சாதனை இலக்கை குஜராத் அணி தகர்த்து குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
- இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 'கிளைமாக்சை' நெருங்கி விட்டது. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 3-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் லக்னோ, சென்னையிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 679 ரன்), கேப்டன் சுப்மன் கில் (649), ரூதர்போர்டு, ஷாருக்கான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 5 அரைசதம் உள்பட 538 ரன்கள் எடுத்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் மேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் தேசிய அணிக்காக விளையாட வேண்டியதிருப்பதால் லீக் சுற்றுடன் வெளியேறினார். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள குசல் மென்டிஸ் (இலங்கை) அவரது இடத்தை எப்படி நிரப்புவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (23 விக்கெட்), சாய் கிஷோர் (17), முகமது சிராஜ் (15) அசத்துகின்றனர். இதுவரை 9 விக்கெட்டுகள் (14 ஆட்டம்) வீழ்த்தி இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானிடம் இருந்து எதிர்பார்த்த மயாஜாலம் இன்னும் வெளிப்படவில்லை.
5 முறை சாம்பியனான மும்பை அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 11-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்ற அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி எழுச்சி கண்டது. ஆனால் கடைசி 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வி கண்டு சற்று சறுக்கியது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (5 அரைசதம் உள்பட 640 ரன்), ரோகித் சர்மா, திலக் வர்மா, நமன் திர் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தென் ஆப்பிரிக்காவின் ரையான் ரிக்கெல்டன் (388 ரன்), இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் (233 ரன், 6 விக்கெட்) ஆகியோர் லீக் சுற்றுடன் விலகி இருப்பது அந்த அணிக்கு பலவீனமாகும். ரிக்கெல்டனுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடுகிறார். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (19 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (17), ஹர்திக் பாண்ட்யா, கரண் ஷர்மா வலுசேர்க்கின்றனர்.
நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. அதில் முறையே குஜராத் அணி 36 ரன் மற்றும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், குசல் மென்டிஸ், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், ஜெரால்டு கோட்ஜீ, அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
மும்பை: ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சரித் அசலங்கா அல்லது பெவன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் 11 முறையாக பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது.
- தனது நாட்டுக்காக விளையாடுவதால் ஜாஸ் பட்லர் பிளே ஆப் சுற்றில் விலகியுள்ளார்.
நியூ சண்டிகர்:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பிளே ஆப் சுற்று நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பஞ்சாப் கிங்ஸ்-இரண்டாம் இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன் னேறும்.
நாளை (30-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு நடை பெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த குஜராத் டைட் டன்ஸ்-4ம் இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி பஞ்சாப்-பெங்களூரு இடையேயான ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் குவாலிபையர் 2' போட்டியில் விளையாடும்.இதில் வெல்லும் அணி 2-வதாக இறுதிப் போட் டிக்கு தகுதிபெறும்.
குவாலிபையர்-2 ஆட்டத்துக்கு முன்னேறப் போவது குஜராத்தா? மும்பையா? என்று ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 ஆட்டத்திலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் 36 ரன் வித்தியாசத்திலும், மும்பை வான்கடே மைதானத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது. இதனால் குஜராத் மிகுந்த நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்சை எதிர் கொள் ளும். அதே நேரத்தில் அந்த அணி கடந்த 2 ஆட்டத்தில் லக்னோ, சென்னையிடம் தோற்று இருந்தது.
மேலும் 538 ரன்கள் குவித்த முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) தனது நாட்டுக்காக விளையாடுவதால் பிளே ஆப் சுற்றில் விலகியுள்ளார். இது குஜராத்துக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த குஷால் மெண்டீஸ் இடம் பெற்றுள்ளார். கேப்டன் சுப்மன் கில் (649 ரன்) , சாய் சுதர்சன்( 679 ) , ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவே தியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் , பிரசித் கிருஷ்ணா (23 விக்கெட்) சாய்கிஷோர் (17 ), முகமது சிராஜ் (15) ரஷீத்கான் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.
5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் 11 முறையாக பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அந்த அணி குஜராத்தை தோற்கடித்து 'குவாலிபையர்-2' ஆட்டத்துக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
தொடக்கத்தில் தடுமாறிய அந்த அணி பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ரிக்கல்டன், வில்ஜேக்ஸ் ஆடாதது அந்த அணிக்கு சற்று பாதிப்பே. அவர்களுக்கு பதில் பேர்ஸ்டோவ், அசலெங்கா ஒப்பந்தாகி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (640 ரன்) கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, திலக் வர்மா, நமன்தீர் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்), போல்ட் (19 விக்கெட்), தீபக் சாஹர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருஅணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
- குஜராத் -மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2-வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்த குஜராத், 4 -ம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியின் போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், சக வீரரான மிட்செல் சான்ட்னர் மாதிரி சுழற்பந்து வீசினார். அருகில் இருந்த பும்ரா இதனை சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தார். கிட்ட தட்ட அவரே மாதிரி போல்ட் பந்து வீசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






