search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badrinath"

    • இமயமலைப் பகுதியில் ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளன.
    • வாரணாசிக்கு அடுத்ததாக உத்தரகாசி.

    இமயமலைப் பகுதியில் ஏராளமான புண்ணிய தலங்கள், திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெள்ளைவெளேர் என்ற பளிங்கு நிறத்தில் தெய்வத் திருமேனிகள் பளிச்சென்று தோற்றம் அளிக்கின்றன. அந்த தெய்வ உருவங்களை நாம் தொட்டு அபிஷேகம் செய்யலாம். மலர் மாலை அணிவிக்கலாம். இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் 'தேவபூமி' என அழைக்கப்படுகிறது.

    கேதார்நாத், கங்கோத்ரி, யமுனுத்திரி, பத்ரிநாத் போன்ற பல புனித பகுதிகளை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    வாரணாசிக்கு அடுத்ததாக உத்தரகாசி. அடுத்ததாக உத்தரகாசியில் சார் தாம் பாதையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோவில், கலியுகத்தின் இரண்டாவது கோவில் என அழைக்கப்படும் பெருமைக்கு உரியது. உத்தரகாசி நகரம், கங்கை நதிக்கரையில் வரூணா மற்றும் அசி நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.

     காசி அல்லது வாரணாசி நகரம், தண்ணீரால் மூழ்கடிக்கப்படும்போது காசி விஸ்வநாதர். உத்தரகாசியில் உள்ள இந்தக் கோவிலுக்கு மாற்றப்படுவார் என்பது நம்பிக்கை. அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிக்கும் இத்தலத்தில், அனைத்து கடவுள்களும் தங்கள் முழுவடிவத்தில் வசிப்பதாகவும், இங்கு வசிப்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் கந்தபுராணம் கூறுகிறது.

    கங்கோத்ரி, யமுனுத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களுக்கும் (சார் தாம் பயணம்) நுழைவு வாசலாக விளங்குவது, உத்தரகாசி. இது ரிஷிகேசில் இருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் கங்கோத்ரி தாமுக்கு செல்லும் பிரதான சாலை அருகில் அமைந்துள்ளது.

    இந்தக் கோவில் பழங்கால பிராதன பின்னணியில் சிகரங்களாக அடுக்கி வைக்கப்பட்ட தோற்றத்தில் உள்ள கோபுரத்துடன் கட்டப்பட்டு உள்ளது. இவ்வாலயத்தில் அருளும் மூலவரான சிவபெருமான், 56 சென்டிமீட்டர் உயரம் உள்ள லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

    கருவறையில் பார்வதி தேவி, விநாயகப்பெருமான் உள்ளனர். கருவறைக்கு வெளியே நந்தி உள்ளது. மார்க்கண்டேய முனிவர் தியானத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். வெளிப்புறத்தில் ஆஞ்சநேயர் மற்றும் ராமர் சீதை ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. எமனின் கோரப்பிடியில் இருந்து தன் பக்தன் மார்க்கண்டேயரைப் பாதுகாத்து அவருக்கு அருளிய திருத்தலமாகவும் உத்தரகாசி விளங்குகிறது.

    தல வரலாறு

    ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர், பரசுராமன். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படுகிறார். இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, 'பரசு' என்ற கோடரியை பெற்ற காரணத்தால், இவருக்கு 'பரசுராமன்' என்ற பெயர் ஏற்பட்டது. 'தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்ற வாசகத்தை உலகத்துக்கு உணர்த்த, தந்தையாரின் கட்டளைப்படி செயல்பட்டு, பெற்ற தாயாரான ரேணுகா தேவியின் தலையை வெட்டியவர்.

    ஒரு முறை கார்த்தவீர்யார்ஜூனன் என்ற மன்னன், காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு மிகுந்த பசி உண்டானது. பசிக்கான உணவு காட்டில் கிடைக்காத நிலையில், அங்கே ஆசிரமம் அமைத்திருந்த ஜமதக்னி முனிவரின் குடில் தென்பட்டது.

    அந்தக் குடிலுக்குச் சென்ற கார்த்தவீர்யார்ஜூனன், ஜமதக்னி முனிவரிடம் தன் பசியைப் போக்கும்படி கேட்டுக்கொண்டான், ஜமதக்னி முனிவரிடம் நினைத்ததை எல்லாம் வழங்கும் காமதேனு என்ற பசு இருந்தது. அதன் மூலம் உணவை வரவழைத்து கார்த்தவீர்யார்ஜூனனுக்கும், அவருடன் வந்த படைவீர்களுக்கும் உணவு பரிமாறினார்.

    இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கார்த்தவீர்யார்ஜூனன், அந்தப் பசுவை தனக்கு வழங்கும்படி ஜமதக்னி முனிவரிடம் கேட்டுக்கொண்டான். அதற்கு முனிவர் மறுப்பு தெரிவிக்கவே, கார்த்த வீர்யார்ஜூனன் அந்தப் பசுவை முனிவருக்கு தெரியாமல் கவர்ந்து சென்றான். இதை அறிந்த முனிவர், தன் மகன் பரசுராமரிடம் சொல்ல, கோபத்துடன் சென்ற பரசுராமன், மன்னனைக் கொன்று பசுவை மீட்டார்.

    கார்த்த வீர்யார்ஜூனன் அந்தணன் என்பதால், அவனைக் கொன்ற பாவம் நீங்க, தீர்த்த யாத்திரை சென்று வரும்படி பரசுராமனிடம் ஜமதக்னி முனிவர் கூறினார். அதன்படி பரகராமன் தீர்த்த யாத்திரை சென்றார். இந்த நிலையில் தனது தந்தையைக் கொன்றதால் ஜமத்கனி முனிவரிடமும், பரசுராமரிடமும், கார்த்தவீர்யார்ஜூனனுடைய மகன்கள் தீராத பகை கொண்டிருந்தனர். அவர்கள் பழிக்குப்பழி வாங்க தீர்மானித்தனர்.

    ஒரு நாள் ஆசிரமத்தில் தியானத்தில் இருந்த ஜமதக்னி முனிவரை, கார்த்தவீர்யார்ஜூனனின் மகன்களில் ஒருவன் வாளால் தலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டான். இதை அறிந்த பரசுராமன், 'தந்தையை கொன்ற மன்னனின் 21 தலைமுறையை கூண்டோடு அழிப்பேன்' என்று சூளுரைத்தார். பின்னர் திக்விஜயம் சென்று சத்திரிய குலத்தைச் சேர்ந்த 21 தலைமுறையினரை வேரற்று போகும்படி செய்தார்.

    அந்த பாவம் தீர்வதற்கு வேள்வி செய்தார். இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தர காசியில் ரிஷிகளும், சித்தர்களும், கந்தர்வர்களும் தவம் செய்த இடத்தில் பரசுராமர், காசிவிஸ்வநாதர் கோவிலைக் கட்டி முடித்தார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்கிறது.

     திரிசூல மகிமை

    உத்தரகாசி விஸ்வநாதர் கோவிலுக்கு எதிரில், பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட சக்தி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கனமான திரிசூலம் 26 அடி உயரம் உள்ளது. இது துர்க்கா தேவியால் பிசாசுகள் மீது வீசப்பட்டது. அன்னை சக்தி இங்கு திரிசூல வடிவில் மாபெரும் சக்தியாக விளங்குகிறார்.

    உத்தரகாண்டின் பழைய நினைவுச் சின்னமாக இங்குள்ள திரிசூலம் கருதப்படுகிறது 26 அடி உயரம் உள்ள திரிசூலத்தில் நாக வம்சத்தின் விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த திரிசூலத்தின் விசேஷமான அம்சம் என்னவென்றால், இதை முழு உடல் பலத்தால் நகர்த்த முடியாது. மாறாக உங்கள் விரல் நுனியை வைத்து லேசாக அழுத்தும் போது அது அதிர்கிறது.

    இந்த திரிசூலத்துக்கு பக்தர்கள் தண்ணீரால் அபிஷேகம் செய்து பூ வைத்து வழிபடுகிறார். திரிசூலத்தை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை வேண்டி வருபவர்களும் இந்த திரிசூலத்தை வணங்கி வழிபட்டால், அவர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    • தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
    • தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    கேதார்நாத் கோவில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோவில்களுள் ஒன்றாகும். இது உத்தராகாண்டத்தில் உள்ள, உருத்ர பிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். இக்கோவிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தொலைவு மலை ஏறியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும். ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.

    கோயிலின் முக்கியத்துவம்

    இக்கோவில் ஒரு கவர்ச்சியான கல் கட்டடம் ஆகும். இதன் தொடக்கம் பற்றி அறியக்கூடவில்லை. இக்கோவில் முகப்பில் உள்ள முக்கோண வடிவக் கல்லில் மனிதத் தலை ஒன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு வழமைக்கு மாறான அம்சம் ஆகும்.

    தொடர் கனமழை, வெள்ளப் பெருக்கு / இமயமலை சுனாமி 11.06.2013ல் இப்பகுதியில் வரலாறு காணாத அளவில் கொட்டி தீர்த்த கனமழையினால் உண்டான மழை நீர் வெள்ளப் பெருக்கினால் கேதார்நாத் கோவில் தவிர சுற்றுப்புறப்பகுதிகள் கடுஞ்சேதம் அடைந்தது. இக்கோவில் மதிற்சுவர்கள், ஆதிசங்கரர் சமாதி மற்றும் கோவில் கடைவீதிகள் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மழை வெள்ளப் பெருக்கினால் குறைந்தது ஐந்தாயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு இனி கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி எனும் நான்கு புனித தலங்களுக்கான பயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக உத்தராகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    கடுஞ்சேதத்திற்கு காரணம் கேதார்நாத் கோவில் மூன்று புறங்களிலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டது. அதில் ஒரு மலையில் முகட்டை மூடியிருந்த மிகப்பெரிய பனிகட்டி, கேதார்நாத் கோயிலுக்கு மேற்புறத்தில் இருந்த நீர் தேக்கப் பகுதியில் விழுந்து, அதனால் நீர்தேக்க அணை உடைந்து கடுமையான மழை வெள்ளத்த்துடன், அணைக்கட்டு நீரும் சேர்ந்து கேதார்நாத் பகுதிகளை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

    கோயிலின் வரலாறு

    இந்தக் கோவில் புராண காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டது எனக்கூறப்பட்டாலும், இக்கோவிலின் முதன்மை அமைப்பு 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    இக்கோவில் ஈசனைப் பற்றி சைவக் குரவர்கள் பாடி இருக்கின்றார்கள்.

    "கேதாரம் மேவி னானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார். பன்னிரண்டாம் திருமுறையில், "வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள்.

    கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புராதன யாத்திரைத் தலங்களை தரிசிப்பது சார் தாம் யாத்திரை எனப்படும்.
    டேராடூன்:

    உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புராதன யாத்திரைத் தலங்கள் குளிர்காலத்தின்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சுமார் 6 மாத காலத்திற்கு நடை சாத்தப்படும்.

    அவ்வகையில் இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கியதையடுத்து, நவம்பர் 5ம் தேதி கங்கோத்ரியில் நடை சாத்தப்பட்டது. நவம்பர் 6ம் தேதி கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில் நடை சாத்தப்பட்டது. 

    இந்நிலையில், பத்ரிநாத் கோவில் இன்று மாலை 6.45 மணிக்கு சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு நடை சாத்தப்பட்டது. இன்று மட்டும் 4000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டில் மொத்தம் 1,97,056 பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்கு வந்துள்ளனர்.

    கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு தலங்களை தரிசிப்பது சார் தாம் யாத்திரை எனப்படும். இந்த ஆண்டு சார் தாம் யாத்திரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது. நடை சாத்தப்படும் 4 கோவில்களில் பத்ரிநாத் கடைசியாக இருப்பதால், இது சார்தாம் யாத்திரை காலம் நிறைவடைவதை குறிக்கிறது. 

    இந்த  யாத்திரை சீசனில் மொத்தம் 5,06,240 பக்தர்கள் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் 42 பக்தர்கள் உணவு இன்றி முகாமில் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Badrinath #Snowfall #Pilgrims
    புவனேஸ்வரம்:

    உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் உள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பத்ரிநாத் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதையும் பனி சூழ்ந்துள்ளது.

    சாலைகளில் பனித்துகள்கள் படர்ந்து இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்ற ஒடிசாவை சேர்ந்த 42 பேர் முகாமில் சிக்கி உள்ளனர்.

    அவர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு முகாம் திரும்பிய நிலையில், பனிப்பொழிவு காரணமாக முகாமில் இருந்து வெளியேற முடியாதபடிக்கு சிக்கிக்கொண்டனர். கடந்த சனிக்கிழமை இரவு முதல் அவர்கள் அனைவரும் உணவு இன்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு முகாம் இருளில் மூழ்கியதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்து உள்ளது.  #Badrinath #Snowfall #Pilgrims 
    உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாதருக்கு 4 கிலோ எடையுள்ள தங்க குடையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். #Badrinath #GoldUmbrella
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து மக்களின் பிரபல வழிபாட்டு ஸ்தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உருவான பத்ரிநாத் ஆலயம் கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்நிலையில், பத்ரிநாதர் கோவிலுக்கு குவாலியரில் வசிக்கும் ராஜ வம்சத்தினர் புதிய தங்க குடை ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளனர்.



    குவாலியர் மகாராணி அஹில்யா பாய் சோல்கர் காணிக்கையாக அளித்த 4 கிலோ எடையுள்ள தங்க குடை பத்ரிநாத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பத்ரிநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தங்க குடைக்கு, வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பத்ரிநாத பெருமாளுக்கு சாத்தப்பட்டது.

    இதற்காக நடந்த சிறப்பு பூஜையில் குவாலியரை சேர்ந்த ராஜ குடும்பத்தினரும், குடையை செய்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். #Badrinath #GoldUmbrella
    ×