என் மலர்
நீங்கள் தேடியது "சி.எஸ்.கே"
- மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
- மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் 37ஆவது தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வாகியுள்ளார்.
அதே சமயம் பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராக தேவஜித் சைக்யா ஆகியோர் நீடிக்கின்றனர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.
- மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
- மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது. பின்னர் அது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், காலியாக உள்ள பதவிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து விவாதம் நடைபெற்றது. மிதுன் மனாஸ் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு தலைவர் பதவிக்கு மிதுன் மனாஸ் பெயரே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பி.சி. சி.ஐ.யின் தலைவராக மிதுன் மனாஸ் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார். இதே போல புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு நியமனங்களும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.
ஓய்வு பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடுகளின் இயக்குநராகவும் பணியாற்றி, நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளார். இந்த அனுபவமே அவரை பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும்.
- பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரில் நேற்றுடன் 55 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதுவரை எந்த அணியும் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இன்னும் 15 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தன. தற்போது பிளே ஆப் சுற்றின் 4 இடங்களுக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன.
இதில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும். பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி ஆகிய அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆர்.சி.பி.க்கு இன்னும் 3 போட்டிகள் (லக்னோ, ஐதராபாத், கொல்கத்தா) உள்ளது. இதில் 2 ஆட்டம் சொந்த மண்ணில் நடக்கிறது. இதில் ஒன்றில் வென்றாலே தகுதி பெற்று விடும். முதல் 2 இடத்தை பிடிப்பதை அந்த அணியின் இலக்காக உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்: 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளுடன் விளையாட வேண்டும். 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும். ஒன்றில் வென்றால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து பிளே ஆப் வாய்ப்பு அமையும்.
மும்பை இந்தியன்ஸ்: 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் (குஜராத், பஞ்சாப், டெல்லி) எஞ்சியுள்ளது. இதில் 2 ஆட்டம் உள்ளூரில் இருக்கிறது. ரன் ரேட்டில் வலுவாக உள்ள அந்த அணி தொடர்ச்சியாக 6 போட்டி யில் வெற்றி பெற்றது. 2 வெற்றி பெற்றால் தகுதி பெற்றுவிடும். முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.
குஜராத் டைட்ன்ஸ்: குஜராத் அணிக்கு 4 ஆட்டம் உள்ளது. மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை அணிகளிடம் மோத வேண்டும். இதில் 2 போட்டிகள் உள்ளூ ரில் நடக்கிறது. 14 புள்ளிகளு டன் 4-வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக ரன்ரேட்டில் நன்றாக இருக்கிறது. 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெறும். முதல் 2 இடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.4 போட்டிகளில் தோற்றதால் வெளியேறும்.
டெல்லி கேபிடல்ஸ்: 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப், குஜராத், மும்பை அணிகளுடன் மோத வேண்டும். தொடக்கத்தில் முன்னேறி இருந்த அந்த அணிக்கு தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்துடன் தோற்க வேண்டிய நேற்றைய ஆட்டத்தில் அதிர்ஷ்ட வசமாக ஒரு புள்ளி கிடைத்தது. கடைசி 5 ஆட்டத்தில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றது. எஞ்சிய ஆட்டங்களில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அணி உள்ளது. 17 புள்ளிகள் வரை பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் இருக்கிறது. மூன்றிலும் வெற்றியை பெற்றால் மட்டுமே வாய்ப்பில் இருக்க இயலும். அதே சமயம் மற்ற முடிவுகள், ரன் ரேட்டை பொறுத்தே இருக்கிறது. முன்னறுவதற்கான வாய்ப்பு குறைவே.
லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்: 10 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ள பெங்களூரு குஜராத், ஐதராபாத் அணிகளுடன் மோத வேண்டும். 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் அந்த அணியின் ரன்ரேட் மோசமாக இருக்கிறது ஒரு ஆட்டத்தில் தோற்றால் வெளியேறி விடும்.
- ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
- இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சி.எஸ்.கே அணி அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் நடக்கும் இந்த போட்டியை நடிகர் மற்றும் ரேசரான அஜித் குமார் அவருடைய மனைவி ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் மகள் - அனுஷ்கா உடன் நேரில்கண்டுகளித்து வந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் இரு தல-யையும் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்துடனும் ஆரவாரத்துடனும் பார்த்து வருகின்றனர்.
- எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம்
- சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் 2 போட்டிகளிலும் சென்னை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார்
- அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும்
இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார். அப்போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை டோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்த டோனி பௌலர்கள் மாற்றம் குறித்தும், பீல்டர்கள் மாற்றம் குறித்த திட்டத்தையும் எடுத்துரைத்தார்.
ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே உடனடியாக ருதுராஜிடம் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம் என்று டோனி நேரடியாக கூறிவிட்டதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும். அதனால் தான் அவரையே முடிவெடுக்க சொல்லி டோனி கடைசியாக ஒருமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.
5 முறை சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டம் இதுவாகும். இங்கு சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி (லக்னோவுக்கு எதிராக) கண்டுள்ளது.
இந்நிலையில் டாஸில் வெற்றி பெற பயிற்சி செய்து வருவதாக எஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
டாஸ் குறித்து பேசிய அவர், "டாஸை உன்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதை நீ வென்றாக வேண்டும். எனவே, அதற்கு பயிற்சி எடு என டோனி பாய் கூறினார். அப்போதில் இருந்து டாஸ் போடுவதை தொடர்ச்சியாக டக் அவுட்டில் பயிற்சி செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 9 போட்டிகளில் வழிநடத்தியிருக்கும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அதில் 8 முறை டாஸில் தோற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் மட்டும் தான் அவர் டாஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார்.
- ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
போட்டி முடிந்து தோனி விராட் கோலிக்கு கை குழுக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் தோனிக்கு இதுதான் ஐபிஎல் போட்டியில் கடைசியாக விளையாடுவது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.
அதனால் நாம் தோனியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் . ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
- இந்த ஐ.பி.எல் தொடரில் 14 ஆட்டங்களில் ஆடிய டோனி 161 ரன்களை எடுத்துள்ளார்.
- அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
இந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் டோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
ஆனால் இதுவரை டோனியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.
அதில், "எனக்கு அது தெரியாது. இதற்கான பதில் எம்.எஸ்.டோனிக்கு மட்டும் தான் தெரியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் மரியாதை தருவோம். அவர் சம்பந்தமான முடிவுகளை எப்போதும் அவர் தான் எடுப்பார். சரியான சந்தர்ப்பங்களில் அந்த முடிவுகளை அவர் தெரிவிப்பார். ஆனால் அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் என்னுடைய விருப்பமும் ரசிகர்களின் விருப்பமும் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
CSK CEO : We are very hopeful that MS Dhoni will play the next season ? pic.twitter.com/nMdZnPKN7w
— Beast (@Beast__07_) May 23, 2024
- விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.
- இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.
அந்த வீடியோவில், பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.
இந்நிலையில் அந்த பைக் காட்சியின் புகைப்படத்தில் விஜய்க்கு பதிலாக எம்.எஸ்.டோனி மற்றும் ருதுராஜ் முகத்தை எடிட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த பதிவை விஜய் ரசிகர்கள் மற்றும் டோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
- அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.
இந்நிலையில், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அப்படி எந்த கோரிக்கையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் அதே சமயம் அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை IPLல் இருந்து வந்தது. எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தை ஒட்டி, அந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வர, ஐபிஎல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- டோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' என சிஎஸ்கே அணி பதிவிட்டுள்ளது.
- இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.
அதே சமயம், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், டோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' எனப் பதிவிட்டுள்ளனர்.
இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் டோனி ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும் மறு தரப்பினர் சிஎஸ்கே ஜெர்ஸி மாறப்போகிறது அதனால் தான் இப்படி பதிவிட்டுள்ளார்கள் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை இதுகுறித்து எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் வரவுள்ளார் என்று கூறப்படும் நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் டோனியின் ஓய்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்றே கூறப்படுகிறது.






