என் மலர்
நீங்கள் தேடியது "MS Dhoni"
- டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார்.
- எல்லோரும் கேட்ச் பிடித்த பட்டியலை பார்க்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.
எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கேள்விக்கு பதிலத்த லத்தீஃப் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்டரான டிகாக்கை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார். இது பெரிய எண்ணிக்கையாகும். டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங், ஒருநாள் போட்டிகளில் 321 கேட்சுகள் மற்றும் 123 ஸ்டம்பிங் மற்றும் டி20 போட்டிகளில் 57 கேட்சுகள் மற்றும் 34 ஸ்டம்பிங்குகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பர் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்தும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும்.
டோனி ஒரு பெரிய பெயர். ஆனால் நான் புள்ளிவிவரங்களுடன் கூறினால், அவரது (கேட்ச்) தவறவிட்டது 21 சதவீதமாகும். எல்லோரும் கேட்ச் பிடித்த பட்டியலை பார்க்கிறார்கள். ஆனால் கைவிடப்பட்ட கேட்சுகளின் எண்ணிக்கை, தவறவிட்ட ஸ்டெம்பிங்கின் எண்ணிக்கை, தவறவிட்ட ரன்-அவுட்களை யாரும் கவனிப்பதில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் குயின்டன் டி காக் சிறந்தவர். அவர் மூன்று வடிவங்களிலும் கீப்பிங் மற்றும் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் ஒரு சிறந்த பினிஷராக இல்லை. ஆனால் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். அவருக்கு முன் மார்க் பவுச்சர் மற்றும் குமார் சங்கக்காரா சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தனர்.
இவ்வாறு லத்தீஃப் கூறினார்.
- 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.
- வங்காளதேச அணிக்கு எதிராக டோனி இதே மாதிரி ஸ்டெம்பிங் செய்திருப்பார்.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 222 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது.
4 ரன்கள் முன்னிலையில் ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்தது. 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. கடைசி நாளான இன்று 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தான் அணி வெற்றியின் விழும்பில் உள்ளது.

2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். இலங்கை வீரர் டிக்வெல்லா ஸ்டெம்பிங் செய்த ஸ்டைல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி மாதிரி இருந்தது. வங்காளதேச அணிக்கு எதிராக டோனி இதே மாதிரி ஸ்டெம்பிங் செய்திருப்பார். இந்த ஸ்டெம்பிங்கை பார்த்த ரசிகர்கள் டோனி ஸ்டைலில் உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
- ஒவ்வொரு வருடமும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார்.
- சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5-வது சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 9-வது இடத்தில் நீடித்து வந்தது.
15-வது சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகியவுடன் அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. கேப்டன் பொறுப்பை மாற்றியதில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் வெளியேறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அதனை உறுதி செய்யும்படியான விஷயங்களை ஜடேஜா செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் பதிவுகளை திடீரென முற்றிலுமாக நீக்கியுள்ளார். சிஎஸ்கே குறித்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க டோனிக்கும் - ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வருடமும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார். ஆனால் இந்தாண்டு மற்ற அனைத்து வீரர்களும் வாழ்த்து தெரிவித்த போதும், ஜடேஜா எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.
சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.
- அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் வீரேந்திர சேவாக் முதல் இடத்தில் உள்ளார்.
- இங்கிலாந்தில் இரண்டு சதங்களை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 98 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ரிஷப் பண்ட்- ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.
ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா அரை சதம் விளாசினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 111 பந்துகளில் 146 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக சதம் அடித்ததன் மூலம் டெஸ்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை ரிஷப் பண்ட் பிடித்தார்.
முதல் இடத்தில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளார். அவர் 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 78 பந்தில் சதம் அடித்தார். 1990-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அசாருதீன் 88 பந்தில் சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது ரிஷப் பண்ட் 89- பந்தில் சதம் அடித்துள்ளார்.
இதேபோல் அதிவேகமாக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்களில் டோனி சாதனையை பண்ட் முறியடித்தார். 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டோனி 93 பந்துகளில் சதம் விளாசினார். அதனை பண்ட் முறியடித்துள்ளார். அவர் மேலும் இரண்டு சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
ஒரு ஆண்டில் இரண்டு சதங்களை அடித்த நான்காவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் பண்ட் படைத்துள்ளார். 24 வயதில் வெளிநாட்டு மண்ணில் இரண்டு சதம் அடித்தவர்கள் பட்டியலில் பண்ட் மட்டுமே இருந்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் அவர் சதம் அடித்திருந்தார்.
இங்கிலாந்தில் இரண்டு சதங்களை அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பண்ட் 2018 சுற்றுப்பயணத்தின் போது ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 2000 ரன்களை கடந்துள்ளார்.
- டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன்.
- டோனிபோல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.
நெல்லை:
டி.என்.பி.எல். போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய திருச்சி வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது.
முரளி விஜய் 16 பந்தில் 34 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர் ), அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டும், மோகன் பிரசாத், எம். முகமது, லட்சுமி சத்யநாராயணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துஷ்கர் ரகேஜா 26 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்பிரமணியன் ஆனந்த் 26 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எம். முகமது 15 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சரவணகுமார் 3 விக்கெட்டும், மதிவாணன் 2 விக்கெட்டும், பொய்யாமொழி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
திருப்பூர் தமிழன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 14.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
7-வது விக்கெட்டான துஷ்கர் ரகேஜா-எம்.முகமது ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தது. இந்த வெற்றி குறித்து திருப்பூர் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அணிருதா கூறியதாவது:-
டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். அவரைப்போல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற எஸ்.முகமது கூறும்போது, "எந்த சூழலிலும் நான் நெருக்கடியை உணரவில்லை இறுதிவரை களத்தில் நின்றால் வெற்றி பெற முடியும் என்று உறுதியோடு நம்பினோம். அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்தது" என்றார்.
திருச்சி அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ராஹில் ஷா கூறும்போது, "எங்களது பேட்டிங்கில் இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அதே நேரத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றிக்கான தருணத்தை நாங்கள் தவறவிட்டு விட்டோம்" என்றார்.
நெல்லையில் டி.என்.பி.எல். ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும்.
30-ந் தேதியில் இருந்து திண்டுக்கல்லில் போட்டிகள் நடக்கிறது. அன்று நடைபெறும் ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் (மாலை 3.15), மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன. * * * திருச்சி அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் தன்னை அவுட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் எம்.முகமதுவை பாராட்டினார்.
- நெதர்லாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பட்லர் 86 ரன்கள் குவித்தார்.
- நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 19 சிக்சர்களை பட்லர் அடித்துள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.
3-வது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 244 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 30.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஜாஸ் பட்லர் 86 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர் அடங்கும்.
கடைசி போட்டியில் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஜாஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஒருநாள் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பட்லர் படைத்துள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 19 சிக்சர்களை அடித்ததன் மூலம் பட்லர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். டோனி 2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 17 சிக்சர் அடித்தார். டோனியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 16 சிக்சர்களை ஏபி டி வில்லியர்ஸ் அடித்துள்ளார்.

