என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான நிலையம்"

    • அருணாசலப் பிரதேச பெண்ணின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என சீன அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.
    • இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

    ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

    அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

    சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், ""சாங்னான் சீனாவிற்கு சொந்தமானது. இந்தியாவால் சட்டவிரோதமாக "அருணாச்சலப் பிரதேசம்" என்று அழைக்கப்படுவதை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. அப்பெண் துன்புறுத்தப்படவில்லை; விதிகள் மற்றும் சட்டங்களின் படியே சோதிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட நபரின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. அவர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விமான நிறுவனம் அப்பெண்ணுக்கு ஓய்வு எடுக்க வசதி செய்து கொடுத்தது. உணவு வழங்கியது" என்று தெரிவித்தார்.

    "அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒன்று. அது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி" என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.
    • இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

    ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

    அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

    சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஷாங்காய் விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமைமிக்க இந்தியக் குடிமகனான பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கை சீன குடியேற்ற அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் நடத்திய விதம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவரை அவமானப்படுத்துவதும், இன ரீதியாக கேலி செய்வதும் மிகவும் கொடூரமானது.

    அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். இது தொடர்பாக எந்தவொரு குற்றச்சாட்டும் அடிப்படையற்றது மற்றும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது. இத்தகைய செயல் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் ஏற்படுத்துவதாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை அவசரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் என கூறி கேலி செய்ததாகவும் தோங்டாக் குற்றம் சாட்டினார்.
    • இந்திய பயணி கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

    ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

    அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

    சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் தோங்டாக் குற்றம் சாட்டினார்.

    இதுதொடர்பாக ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், வெளிப்படையான காரணமின்றி ஒரு இந்திய பயணி கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதன் குடிமக்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டில் பயணிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன. சீனாவின் நடவடிக்கைகள் சர்வதேச சிவில் விமான ஒப்பந்தங்களுக்கு எதிரானவை என்று தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய தோங்டாக், இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.     

    • ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
    • தொழில்நுட்ப கோளாறால் ரன்வேயில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ரன்வேயில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை. விமான நிலைய ரன்வே வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறை செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
    • தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ற்னர்.

    வங்கதேச தலைநகர் டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.

    விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் இடத்தில தீ விபத்து ஏற்பட்டது.

    விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ற்னர். 

    • 19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.
    • அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது

    மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்க நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    குன்றுகளை தரைமட்டமாக்கி, ஆறுகளை மடைமாற்றிவிட்டு, நிலப்பரப்புகளை இணைக்க பாலங்கள் அமைத்து 1,160 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.

    அதானி ஏர்போர்ட்ஸ் மற்றும் பொது-தனியார் கூட்டு முயற்சியில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த விமான நிலையம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அதானிக்கு ஷீல்ட் கொடுக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.

    அந்த புகைப்படத்தில், மோடிக்கு அதானி ஷீல்ட் கொடுப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு, அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது மோடிக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மோடியின் அர்ப்பணிப்பு அதானி குழுமத்தை மென்மேலும் வளர செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாட்டின் பெரும்பாலான அரசு திட்டங்களின் டெண்டர்கள் அதானிக்கு வழங்கப்படுவது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே. தாராவி மறுக்கட்டுமான திட்டம், பழங்குடியினர் மற்றும் சுற்றுசூலை பாதிக்கும் என விமர்சனத்துக்குள்ளாகும் கிரேட்டர் நிகோபார் திட்டம் உள்ளிட்டவை அதானி குழுமம் வசம் செல்வதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி வருகிறது.

    மேலும் அண்மையில் அதானி குழும பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்தான ஹிண்டன்பெர்க் அறிக்கையை அரசின் செபி அமைப்பு நிராகரித்தது அதானிக்கு நிவாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தன.
    • இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது.

    பெர்லின்:

    டென்மார்க், போலந்து நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரோன்கள் கண்டறியப்பட்டன. இதனால் அந்த விமான நிலையங்களை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், தற்போது ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டதால் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 15 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் சுமார் 3 ஆயிரம் பயணிகள் அவதியடைந்தனர்.

    ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து டிரோன்கள் பறக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில மணி நேரங்களுக்கு பிறகு விமான நிலையம் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • லண்டன், ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ், பெர்லின் போன்ற முக்கிய விமான நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின.
    • விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது இன்று பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. இதனால் பல நாடுகளிலும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த சைபர் தாக்குதல், விமான நிலையங்களின் சேவை வழங்கும் அமைப்புகளை குறிவைத்துள்ளது. குறிப்பாக, பயணிகளின் செக்-இன் மற்றும் போர்டிங் போன்ற முக்கியமான சேவைகளில் முடக்கம் ஏற்பட்டது.

    லண்டன், ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ், பெர்லின் போன்ற முக்கிய விமான நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின.

    பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    இந்த சைபர் தாக்குதல் காரணமாக, விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    தொழில்நுட்ப நிபுணர்கள்  பிரச்னையை தீர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே விமான நிலையங்களுக்கு வந்துள்ள பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • இடத்தை தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவு.
    • 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் என டிட்கோ அறிவிப்பு.

    ராமநாதபுரத்தில் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் டிட்கோ அறிவித்துள்ளது.

    • பயணிக்கும், விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த பயணி சுத்தியலை எடுத்து கண்ணாடியை உடைத்தார்.

    ரோம்:

    இத்தாலியின் மிலன் நகரில் மால்பென்சா விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு உடைமைகளை சோதனை செய்வதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது 1-வது முனையம் வழியாகச் சென்ற ஒரு பயணிக்கும், விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணி தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து அங்கிருந்த கண்ணாடியை உடைத்தார். அதன்பின் அங்கிருந்த கவுண்ட்டருக்கு தீ வைத்தார். இதனைப் பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்தார்.
    • சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர், குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

    டெல்டா போயிங் விமானம் மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது. விமானம் நின்ற சிறிது நேரத்திலேயே, போலீசார் விமானி அறையில் நுழைந்து பகவாகரை கைது செய்தனர்.

    குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடந்து வருகிறது. பகவாகர் மீதான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியடைந்ததாக கூறிய டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. 

    • மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
    • முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை நடத்தினர்.

    வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் ராஜஸ்தான் முதல்வர் அலுவலகம் பீதியில் ஆழ்ந்தது.

    முதல்வர் அலுவலகத்துடன் சேர்த்து ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த மின்னஞ்சல்களில், முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு தடுப்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடியாக முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை நடத்தினர்.

    இருப்பினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இரு இடங்களிலும் கிடைக்காததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.  

    ×