search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்கா"

    • இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது.
    • இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    இதற்கிடையே வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வங்காள தேசத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசை விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் சிறுபான்மையினரின் பிரச்சனைகள், தவறான தகவல் பிரச்சாரங்கள், ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது, பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசினர்.

    இதில் வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து விக்ரம் மிஸ்ரி கவலை தெரிவித்தார்.

    இந்த சந்திப்பில் முகமது யூனுஸ் கூறும்போது, இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது. வங்கதேச மக்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது.

    இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா பல கருத்துகளை அறிக்கைகள் மூலம் வெளியிடுகிறார். இது வங்காளதேசத்தில் பதட்டத்தை உருவாக்குகிறது. இதுபற்றி எங்கள் மக்கள் கவலைபடுகிறார்கள்.

    ஷேக் ஹசீனாவின் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது தொழிலாளர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் கைகோர்த்தனர். ஆனால் அவரின் கருத்துகளால் இங்கு பதற்றம் ஏற்படுகிறது.

    ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதற்கும் அவர்களின் மதம், நிறம், இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.

    • 500 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவிலும் பாதிப்பு.

    டாக்கா:

    வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25-ந் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

    சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நடந்த வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது.

    இந்த வழக்கில் சின்மோய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வருகிற ஜனவரி 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்த நிலையில் சிட்டகாங் மெட்ரோபாலிடன் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் எம்.டி அபு பக்கரிடம் தொழிலதிபரும், பங்களாதேஷின் ஹெபாசாத்-இ-இஸ்லாம் அமைப்பின் ஆர்வலருமான எனாமுல் ஹக் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், நவம்பர் 26-ந் தேதி நீதிமன்றத்தில்

    நிலப் பதிவேடு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது சின்மோய் கிருஷ்ண தாஸின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக புகாரில் கூறியுள்ளார்.

    தாக்குதலின் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சையில் இருந்தமையால் வழக்குத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ஹக் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணதாஸ் மற்றும் அவரது சீடர்கள் 164 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 500 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    • இஸ்கானில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.
    • போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல்.

    வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகளை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இந்து அமைப்பு தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் இஸ்கானில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. இந்த சம்பவத்தின் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது.

    இது தொடர்பான மோதலில் அரசு வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் மொனிருதீன் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி பராஹ் மஹ்பூப், நீதிபதி டெபாசிஷ் ராய் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்காளதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும், வங்காளதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாக ஏர் இந்தியா தெரிவித்தது.
    • மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியது.

    வங்காளதேசத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் போராட்டங்கள் காரணமாக இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பொக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக டாக்கா மற்றும் இந்தியா இடையில் திட்டமிடப்பட்ட எங்களது விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளது.

    வங்காளதேசத்தில் நிலவும் கள சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    முன்னதாக ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியது. போராட்டத்தின் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். இதைத் தொடர்ந்து தனது சகோதரி ஷேக் ரெகனாவுடன் சேர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுக்க போராட்டக்காரர்கள் அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைகாட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்க அறிவுறுத்தினார்.

    ×