என் மலர்
நீங்கள் தேடியது "embassy"
- இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.
- இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி, சுமார் 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து போலி தூதரக நம்பர் பிளேட் கொண்ட கார்கள், போலி ஆவணங்கள், ஆடம்பர கடிகாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயின், காசியாபாத்தில் வாடகை வீட்டில் 'வெஸ்ட் ஆர்டிகா' என்ற அங்கீகரிக்கப்படாத நாட்டின் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்.
ஜெயின் வேலை மோசடிகளிலும், ஹவாலா மூலம் பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளது உ.பி. சிறப்பு அதிரடிப் படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.
சந்திராசுவாமிதான் ஜெயினை மோசடிக்காரர் அஹ்சன் அலி சையதுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சையது, ஜெயினுடன் இணைந்து 25 போலி நிறுவனங்களைதொடங்கி சுமார் 300 கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சையது ஏற்கனவே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயின் ஒரு கெளரவ தூதர் மட்டுமே என்றும், அவர் போலி இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது. மேலும், ஜெயினை தனது அமைப்பின் பிரதிநிதி பதவியிலிருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்துள்ளது.
ஜெயின் 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் மற்றும் வெளிநாடுகளில் பல வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறை நாளை நீதிமன்றத்தில் ஜெயினை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளது.
- முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.
- இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கத்தை ரஷியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தாலிபான் ஆட்சியை எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்காத நிலையில் முதல் நாடாக ரஷியாவின் அங்கீகரித்துள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ குல் ஹசனிடமிருந்து தாலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிய தூதர் குல் ஹசன் ஹாசன் இதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெற்றார்.
இது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. கூடுதலாக, மாஸ்கோவில் உள்ள ஆப்கான் தூதரகத்தில் இருந்து முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று நம்புவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி இது அவர்களின் இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.
இதற்கிடையில், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச தரங்களை தாலிபான்கள் பின்பற்ற வேண்டும் என்று உலகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, இதுவரை மற்ற எந்த நாடும் அவர்களின் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முன்வரவில்லை.
- ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை மோசமான நிலையை எட்டியுள்ளது.
- ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் அழைத்து வர மத்திய அரசு திட்டம்.
ஈரான்- இஸ்ரேல் இடையிலான மோதல் 8 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் அதி நவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மற்றும் அணுஉலை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி அழித்து வருகிறது.
இதனால் பேராபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் இந்தியா வெளியேற்றுகிறது என ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் சேனல் அல்லது +989010144557, +989128109115 +989128109109 எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது.
நேபாளம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்றுகிறோம். இரண்டு நாட்டின் அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. நேபாளம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் +989010144557; +989128109115; +989128109109 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு திரும்ப விரும்பினால், இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை, அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவிறுத்தியுள்ளது.
இலங்கை சேர்ந்வர்கள் ஈரானில் 100-க்கும் குறைவான பேர் உள்ள நிலையில், இஸ்ரேலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஈரானில் சிக்கியுள்ள 16 நேபாளத்தினரை மீட்டு வர இந்தியாவுக்கு, நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
- ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதலை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஒரு எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் இந்திய குடிமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்தன.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலின் கீழ் ஈரானிய இராணுவத் தளங்களையும் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.
- இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள்.
ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் குடிமக்களை மீட்பது குறித்து அறிவித்துள்ளது.
தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள வரமின் நகரில் காவல்துறையினர் நடத்திய நடவடிக்கையில் இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் (MNA) தெரிவித்துள்ளது.
மே 1 ஆம் தேதி மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தெஹ்ரான் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பஞ்சாபைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஈரானுக்கு வந்திருந்தனர். உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.
இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள். மே 29 அன்று, இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தது.
அவர்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான சூழலில் தற்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
- மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.
- இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.
ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தூதரகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் இருந்து ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன மூன்று பேர் ஹுஷான்பிரீத் சிங் , ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.
"ஈரானுக்குப் பயணம் செய்த பின்னர் தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக மூன்று இந்தியர்களின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர். தூதரகம் இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.
காணாமல் போன இந்தியர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது" என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார்.
- ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
ஜப்பான் தூதரக பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மூத்த பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன் ஜப்பான் தூதரக பெண் அதிகாரி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் (International Studies) துறையில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங்கை அணுகியபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்காட்டார்.
அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பேராசிரியர் ஸ்வரன் சிங் மீது ஏற்கனவே இதுபோன்ற பல புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த ஜேஎன்யு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் குழு (ஐசிசி) நடத்திய விசாரணையின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி ஓய்வுக்கு ஒரு வருடம் முன்னதாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
- மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் பட்டத்தை வென்றுள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றிய திருமணமான அதிகாரி ஒருவரை மேஹ்னா காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மேஹ்னா ஆலமை டாக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
வங்கதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
- பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
- பிரிஸ்பேனில் புதிய தூதரகம் அமைப்பது என்ற இந்தியாவின் திட்டங்களையும் வரவேற்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று காலை அவர் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர். அவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்து இடம் பெற்றது.
பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிப்பது இந்த பேச்சுவார்த்தையில் முக்கியம்சமாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு இறுதிச் செய்யப்பட்டது. தற்போது இரண்டு நாடுகளும் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்தார்.
மேலும் அவர், "இந்தியாவின் பெங்களூரு நகரில் எங்களது தூதரகம் ஒன்று புதிதாக அமைக்கப்படும் என அறிவித்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் நடைமுறைகளுடன், ஆஸ்திரேலிய வர்த்தக நடவடிக்கைகளை இணைப்பதற்கு அது உதவும்.
இதேபோன்று, பிரிஸ்பேனில் புதிய தூதரகம் அமைப்பது என்ற இந்தியாவின் திட்டங்களையும் வரவேற்கிறேன். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவில் அமைய பெறும் 5-வது தூதரகம் ஆக பெங்களூரு தூதரகம் இருக்கும்" என்றார்.
- சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் போராட்டம்
- ஐ.நா. சபையில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டன தீர்மானம் கொண்டு வந்தது
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் தூதரக அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேலும் இதுகுறித்த முழு விவரம் சரியாக தெரியவரவில்லை. இதுகுறித்து சுவீடன் தூதுரக அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாக்தாத்தில் நேற்று தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
- இஸ்லாமிய நாடுகளில் அமைப்பு ஐ.நா.வில் கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளது
சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் குர்ஆன் எரிப்பு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நேற்று ஈராக் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இந்த நிலையில் சுவீடன் தூதர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
- கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்.
- தூதரகத்தை மூடுவதற்கான மூன்று முக்கிய காரணங்களை ஆப்கானிஸ்தான் தெரிவித்திருந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதிகாரத்தை கைப்பற்றியதும் பெண்களுக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள் அங்கீகாரம் வழங்கவில்லை. தங்களது நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கவும் மறுத்து வந்தன.
இதற்கிடையே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள தூதரகத்தை கடந்த அக்டோபர் 1-ந்தேதி மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
அப்போது,
இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாக எங்கள் வேலையை திறம்பட செய்ய முடியவில்லை.
இந்தியாவிடமிருந்து ஆதரவு இல்லாததாலும், ஆப்கானிஸ்தானில் முறையான அரசாங்கம் இல்லாததாலும், ஆப்கானிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் குடிமக்களின் தேவைகள் மற்றும் நலன்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வளங்கள் குறைவதால், எங்கள் பணியைத் தொடர்வது பெரும் சவாலாக மாறியுள்ளது. தூதரக அதிகாரிகளின் விசா புதுப்பித்தல் முதல் மற்ற பணி வரை, எங்களுக்கு தேவையான உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. குழுவிற்குள் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இது வேலையை பாதிக்கிறது.
ஆகிய மூன்று காரணங்களை கூறியிருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடப்போவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.






