டெல்லி ஆப்கானிஸ்தான் தூதரக பிரதிநிதியாக பொறுப்பேற்ற தாலிபான் முக்கியப் புள்ளி!

2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியாவில் அவர்களின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.இந்தியா தலிபான் அரசாங்கத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
டெல்லி ஆப்கானிஸ்தான் தூதரக பிரதிநிதியாக பொறுப்பேற்ற தாலிபான் முக்கியப் புள்ளி!
Published on

டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கு தூதரகப் பிரதிநிதியாக தாலிபான் அரசு மூத்த அதிகாரி முஃப்தி நூர் அகமது நூர் நியமிக்கப்பட்டார். இன்று இந்தியா வந்த அவர் பதவிப்பொறுப்பை ஏற்றார்.  

2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியாவில் அவர்களின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முஃப்தி நூர் அகமது நூர் ஆப்கான் வெளியுறவு அமைச்சகத்தின் அரசியல் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2025 அக்டோபரில் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்தபோது அவருடன் வந்திருந்தார்.

இந்தியா தலிபான் அரசாங்கத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் அண்மையில் இரு நாட்டு உறவில் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த நியமனம் நடந்துள்ளது.

ஏற்கனவே மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆப்கான் தூதரகங்கள் தலிபான் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், தற்போது டெல்லியில் உள்ள பிரதான தூதரகமும் அவர்கள் வசம் வந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com