என் மலர்
நீங்கள் தேடியது "தூதரகம்"
- 2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியாவில் அவர்களின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- இந்தியா தலிபான் அரசாங்கத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கு தூதரகப் பிரதிநிதியாக தாலிபான் அரசு மூத்த அதிகாரி முஃப்தி நூர் அகமது நூர் நியமிக்கப்பட்டார். இன்று இந்தியா வந்த அவர் பதவிப்பொறுப்பை ஏற்றார்.
2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியாவில் அவர்களின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முஃப்தி நூர் அகமது நூர் ஆப்கான் வெளியுறவு அமைச்சகத்தின் அரசியல் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2025 அக்டோபரில் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்தபோது அவருடன் வந்திருந்தார்.
இந்தியா தலிபான் அரசாங்கத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் அண்மையில் இரு நாட்டு உறவில் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த நியமனம் நடந்துள்ளது.
ஏற்கனவே மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆப்கான் தூதரகங்கள் தலிபான் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், தற்போது டெல்லியில் உள்ள பிரதான தூதரகமும் அவர்கள் வசம் வந்துள்ளது.
- ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.
- பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரகம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் பகுதியில் இந்தத் தூதரகம் திறக்கப்பட்டது.
விழாவில் பேசிய பாலஸ்தீனத் தூதர் ஹுசாம் சோம்லோட், "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.
காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை என எங்கு இருந்தாலும், பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று" என்று தெரிவித்தார்.
காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தைத் தனி நாடாகப் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அந்த முடிவின் தொடர்ச்சியாக இப்போது முழு அளவிலான தூதரக உறவுகள் எட்டப்பட்டுள்ளன.
- தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்படுவதாக அறிவித்தது.
- தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதன்போது இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன்பு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
டெல்லி தவிர, திரிபுராவில் உள்ள அகர்தலா மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள விசா சேவை மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் வங்கதேச தூதரகம் அருகே பாஜக, காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தின.
இதற்கிடையே வங்கதேசத் தூதரகம் முன்பு நடந்த போராட்டம் மிகவும் சிறியது என்றும், பாதுகாப்பு மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக வங்கதேசத்தில் பாதுகாப்பு காரணம் காட்டி சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
- டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC) மூடப்பட்டது.
- அந்நாட்டில் தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC), பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க் வளாகத்தில் இயங்கி வரும் இந்திய விசா விண்ணப்ப மையம், நேற்று மதியம் 2 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
வங்கதேசத்தில் உள்ள சில கிளர்ச்சியாளர்கள் இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றதாலும், அந்நாட்டில் சில தலைவர்கள் பொதுவெளியில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருவதாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு இடைக்கால அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச உயர் ஆணையருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் வங்கதேச மக்களுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை வலுப்படுத்தவே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
- சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- நேற்றைய தினம் அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்தது. இதனையொட்டி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்றைய தினம் திட்டமிடப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று ரத்து செய்யப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக சேவை சந்திப்புகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் விசா விண்ணப்ப மையத்தை (VAC) தொடர்பு கொள்ளவும் என்றும் support-india@usvisascheduling.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
- இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.
- இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி, சுமார் 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து போலி தூதரக நம்பர் பிளேட் கொண்ட கார்கள், போலி ஆவணங்கள், ஆடம்பர கடிகாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயின், காசியாபாத்தில் வாடகை வீட்டில் 'வெஸ்ட் ஆர்டிகா' என்ற அங்கீகரிக்கப்படாத நாட்டின் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்.
ஜெயின் வேலை மோசடிகளிலும், ஹவாலா மூலம் பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளது உ.பி. சிறப்பு அதிரடிப் படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.
சந்திராசுவாமிதான் ஜெயினை மோசடிக்காரர் அஹ்சன் அலி சையதுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சையது, ஜெயினுடன் இணைந்து 25 போலி நிறுவனங்களைதொடங்கி சுமார் 300 கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சையது ஏற்கனவே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயின் ஒரு கெளரவ தூதர் மட்டுமே என்றும், அவர் போலி இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது. மேலும், ஜெயினை தனது அமைப்பின் பிரதிநிதி பதவியிலிருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்துள்ளது.
ஜெயின் 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் மற்றும் வெளிநாடுகளில் பல வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறை நாளை நீதிமன்றத்தில் ஜெயினை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளது.
- முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.
- இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கத்தை ரஷியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தாலிபான் ஆட்சியை எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்காத நிலையில் முதல் நாடாக ரஷியாவின் அங்கீகரித்துள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ குல் ஹசனிடமிருந்து தாலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிய தூதர் குல் ஹசன் ஹாசன் இதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெற்றார்.
இது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. கூடுதலாக, மாஸ்கோவில் உள்ள ஆப்கான் தூதரகத்தில் இருந்து முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று நம்புவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி இது அவர்களின் இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.
இதற்கிடையில், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச தரங்களை தாலிபான்கள் பின்பற்ற வேண்டும் என்று உலகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, இதுவரை மற்ற எந்த நாடும் அவர்களின் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முன்வரவில்லை.
- ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை மோசமான நிலையை எட்டியுள்ளது.
- ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் அழைத்து வர மத்திய அரசு திட்டம்.
ஈரான்- இஸ்ரேல் இடையிலான மோதல் 8 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் அதி நவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மற்றும் அணுஉலை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி அழித்து வருகிறது.
இதனால் பேராபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் இந்தியா வெளியேற்றுகிறது என ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் சேனல் அல்லது +989010144557, +989128109115 +989128109109 எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது.
நேபாளம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்றுகிறோம். இரண்டு நாட்டின் அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. நேபாளம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் +989010144557; +989128109115; +989128109109 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு திரும்ப விரும்பினால், இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை, அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவிறுத்தியுள்ளது.
இலங்கை சேர்ந்வர்கள் ஈரானில் 100-க்கும் குறைவான பேர் உள்ள நிலையில், இஸ்ரேலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஈரானில் சிக்கியுள்ள 16 நேபாளத்தினரை மீட்டு வர இந்தியாவுக்கு, நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
- ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதலை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஒரு எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் மற்றும் பயணம் செய்யும் இந்திய குடிமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்தன.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலின் கீழ் ஈரானிய இராணுவத் தளங்களையும் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழி மூடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.
- இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள்.
ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் குடிமக்களை மீட்பது குறித்து அறிவித்துள்ளது.
தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள வரமின் நகரில் காவல்துறையினர் நடத்திய நடவடிக்கையில் இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் (MNA) தெரிவித்துள்ளது.
மே 1 ஆம் தேதி மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தெஹ்ரான் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பஞ்சாபைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஈரானுக்கு வந்திருந்தனர். உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வழங்க முன்வந்தது.
இருப்பினும், ஈரானுக்கு வந்த பிறகு மூவரும் காணாமல் போனார்கள். மே 29 அன்று, இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தது.
அவர்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான சூழலில் தற்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
- அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார்.
- ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
ஜப்பான் தூதரக பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மூத்த பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன் ஜப்பான் தூதரக பெண் அதிகாரி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் (International Studies) துறையில் பணியாற்றி வந்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங்கை அணுகியபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்காட்டார்.
அப்பெண் ஜப்பான் திரும்பியதும் இதுகுறித்து முறையாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் ஜப்பான் தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பேராசிரியர் ஸ்வரன் சிங் மீது ஏற்கனவே இதுபோன்ற பல புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த ஜேஎன்யு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் குழு (ஐசிசி) நடத்திய விசாரணையின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி ஓய்வுக்கு ஒரு வருடம் முன்னதாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
- மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
வங்கதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் பட்டத்தை வென்றுள்ளார்.
வங்கதேசத்தில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றிய திருமணமான அதிகாரி ஒருவரை மேஹ்னா காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேஹ்னா அந்த அதிகாரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மேஹ்னா ஆலமை டாக்காவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வங்கதேச போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
வங்கதேசம், சவுதி அரேபியா இடையேயான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் மேஹ்னா சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மேஹ்னாவின் கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.






