என் மலர்
நீங்கள் தேடியது "US consulate"
- சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- நேற்றைய தினம் அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்தது. இதனையொட்டி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்றைய தினம் திட்டமிடப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று ரத்து செய்யப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக சேவை சந்திப்புகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் விசா விண்ணப்ப மையத்தை (VAC) தொடர்பு கொள்ளவும் என்றும் support-india@usvisascheduling.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
- வாகனத்தில் வந்த நபர் திடீரென தாக்குதல் நடத்தினார்
- உயிரிழந்தவர் நேபாளத்தை சேர்ந்தவர் என அதிகாரிகள் தகவல்
சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய நபர் திடீரென பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மீது சுடச் தொடங்கினார். பதிலுக்கு பாதுகாப்பு போலீசாரும் சுடத் தொடங்கினர்.
இந்தச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலுக்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதி பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு வீழ்த்தினர்.
இதனையொட்டி தூதரகம் மூடப்பட்டது. அமெரிக்கர்கள், அமெரிக்க ஸ்டாஃப்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
உயிரிழந்தவர் நேபாளத்தை சேர்ந்தவர். அவர் தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பெங்களூருவில் கடந்த ஓராண்டில் 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன.
- வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் விட்டல் மல்லையா சாலையில் உள்ள ஜெ.டபிள்யு. மேரியாட் ஹோட்டலில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் ஐந்தாவது அமெரிக்க தூதரகமாகும். நிரந்தர கட்டடம் கட்டும் வரையில் தற்காலிகமாக தூதரகம் இங்கு இயங்கும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி துணை தூதரகத்தைத் திறந்துவைத்தனர். அப்போது கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவகுமார், தொழில்துறை மந்திரி எம்.பி.பாட்டீல், பெங்களூரு தெற்கு பா.ஜக. எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் உடனிருந்தனர்.
இதில் பங்கேற்ற வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:
பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டுள்ளது ஒரு மைல் கல்லாகும்.
நகர மக்களின் நீண்டகால வேண்டுகோளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நகர மக்களுக்கு இது மிகவும் அனுகூலமாக இருக்கும்.
ஏற்கனவே, 12 நாடுகளின் துணை தூதரகங்கள் பெங்களூரில் உள்ளன. பல நாடுகளின் துாதரகங்களை அமைக்கும் திட்டம் உள்ளது.
இந்தியா-அமெரிக்கா உறவை பலப்படுத்த முயற்சி நடக்கிறது. பெங்களூருவில் ஏராளமான வளங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்த வேண்டும்.
பெங்களூருவில் கடந்த ஓராண்டில் 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.






