search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm kumaraswamy"

    கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை வரைக்கும் பதவியில் இருப்பார் என பா.ஜ.க தலைவர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
    பெங்களூர்:

    பாராளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 300 இடங்கள் வரையில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 25 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே கர்நாடாகவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இடையே பஞ்சாயத்து தொடர்ந்து வரும் நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு பா.ஜ.க.வை உற்சாகம் அடைய செய்துள்ளது. 

    மாநிலத்தில் ஆட்சியை கலைப்பதற்கு பாராளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க பா.ஜ.க. டெல்லி தலைமை கூறியதாகவும், அதனால் எடியூரப்பா அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பா.ஜனதா தரப்பு தகவல்கள் வெளியாகியது.



    இதற்கிடையே, நாளை தேர்தல் முடிவு வெளியானதும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்க ஆப்ரேஷன் தாமரையை பா.ஜ.க. முன்னெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார் என தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பா.ஜ.க. தயார் நிலையில் உள்ளது. முதல் மந்திரியாக இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார், அவரால் இரவு தூங்கவே முடியாது. அவர்களின் கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
    கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமார்சாமியின் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்த பைகள் மற்றும் முதல் மந்திரி அமர்ந்துள்ள சீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #Kumaraswamy
    கர்நாடக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை கண்டித்து முதல் மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #Kumaraswamy #PMModi #ITRaid
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். கட்சி சார்பில் குமாரசாமி முதல் மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார். 

    இதற்கிடையே, நுண்ணுயிர் பாசனத்துறை மந்திரி சிஎஸ் புட்டாராஜூ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமான வரித்துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என பதிவிட்டு இருந்தார்.



    இந்நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தின் முன்னால் முதல் மந்திரி குமாரசாமி, துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மற்றும் ஜே.டி.எஸ். கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். #Kumaraswamy #PMModi #ITRaid
    எம்.எல்.ஏ.வுடன் பேரம் பேசிய ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. தொடர்ந்து சதிசெய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.
     
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைக்கு வாங்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக மிக உயர்ந்த பரிசை அவர்களுக்கு தர பா.ஜ.க. காத்திருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    இதற்கிடையே, முதல் மந்திரி குமாரசாமி சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா ஆசை வார்த்தை கூறி பேசிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.



    இந்நிலையில், ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன் என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

    முதல் மந்திரி குமாரசாமி கர்நாடக மாநிலம் தென்பகுதியில் அமைந்துள்ள புனிதத்தலமான தர்மஸ்தலாவுக்கு இன்று சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆடியோ ஆதாரத்தை போலி என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன். அந்த ஆடியோவில் எடியூரப்பாதான் பேசியுள்ளார். அவர் தான் பேசவில்லை, அது மிமிக்ரி என்பதை நிரூபிக்கட்டும். நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என தெரிவித்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர். #Kumaraswamy #IndependentMLAs #WithdrawSupport
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பாஜக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.



    இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் குமாரசாமி அரசுக்கு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 117 ஆக குறைந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் விலகலால் குமாரசாமி அரசுக்கு ஆபத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Kumaraswamy #IndependentMLAs #WithdrawSupport
    கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூருவுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். #RahulGandhi #Kumaraswamy
    பெங்களுரு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகம் மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவன ஊழியர்களை சந்திக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூருவில் தங்கிய ராகுல் காந்தி, திடீரென அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினார்.

    இருவரும் கர்நாடகம் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #RahulGandhi #Kumaraswamy
    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து மத்திய அரசு குழுவினர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். #SouthWestMonsoon #KeralaRains #CMKumaraswamy

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் குடகு, ஹாசன், தென்கன்னடம், சிக்கமகளூரு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த மாதம் பலத்த மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு, ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்கள் மற்றும் உள்கடட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக கர்நாடக அரசின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான குழுவினர், வேள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்கு ஆய்வுக் குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய அரசின் இரு குழுக்கள் ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை இணை செயலாளர் அணில்மாலிக் தலைமையில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஜிதேந்திரபன் வார், மத்திய வேளாண்துறை இணை இயக்குனர் பொன்னுசாமி ஒரு குழுவினர் குடகு மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

    பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இக்குழு ஹாரங்கி சென்று, அங்கிருந்து சோம்வார்பேட் வட்டத்தின் ஹட்டிஹோளே கிராமத்துக்கு சென்றனர். அங்கு உள்கட்டமைப்பு சேதங்கள், பயிர் சேதங்களை பார்வையிட்டனர். பின்னர் முக்கூட்லு பகுதிக்கு சென்று, அங்கிருந்து ஜம்பூருக்கு சென்ற குழுவினர் தோட்டகலை சேதமங்களை ஆய்வு செய்தனர்.

    அதன் பிறகு மடிக்கேரிக்கு சென்ற மத்திய ஆய்வு குழுவினர், அங்கு மாவட்ட கலெக்டரை சந்தித்து வெள்ள சேதங்கள் குறித்து கேட்டு அறிந்தனர். இந்த குழுவினர் வியாழக்கிழமை ஹெப்பட்டகெரி பகுதியில் உள்ள சண்முகா, குமாரசாமி காலனியில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு சேதங்களை பார்வையிடுகிறார்கள்.


    அதன் பிறகு, தேவஸ்தூர் பள்ளி சந்திப்புக்கு சென்று அங்கு உள்கட்டமைப்பு சேதம், பயிர் சேதங்களை ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு தந்திபாலா பாலம், கலூர் சாலை, மண்டலப் பட்டி, குந்தரகோடி, மடே கிராமம், மொன்னன்கெரே பகுதிகளுக்கு சென்று அங்கும் வெள்ள சேதங்களை பார்வையிட்டு மதிப்பிடுகிறார்கள்.

    இதேபோல, மத்திய நிதித்துறை துணைச் செயலாளர் பர்தெந்துகுமார்சிங் தலைமையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் மாணிக் சந்திபண்டித், மத்திய தரைவழிப் போக்குவரத்து கழக மண்டல அதிகாரி சதானந்த்பாபு ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் தென்கர்நாடக மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மங்களூரு சென்ற மத்திய ஆய்வுக்குழுவினர் அங்கிருந்து உடுப்பி சென்று, முல்கி, அட்யபாடி, பஜ்பே ஆகிய இடங்களில் பயிர் சேதம் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களை பார்வையிட்டு, பின்னர் மங்களூரில் மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, வெள்ள சேதங்கள் குறித்த மதிப்பீடுகளை மாவட்ட கலெக்டரிடம் கேட்டு அறிந்தனர்.

    மங்களூருவில் இரவு தங்கும் ஆய்வு குழுவினர் நேற்று பண்ட்வால் வட்டத்தின் மூலார்பட்டனா, விட்லபண்டூரு, கணியூர், கல்லஜே, சுப்ரமணியா, குண்டியா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து பயிர் சேதங்களை மதிப்பிட்டனர்.

    இந்த இரு குழுவினரும் இன்று பெங்களூருவுக்கு வந்து முதல்-அமைச்சர் குமாரசாமி, தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வெள்ளச் சேதங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு புதுடெல்லி திரும்பும் இக்குழுவினர், வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க இருக்கிறார்கள்.

    அதன் அடிப்படையில் வெள்ள நிவாரண உதவிகளை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.1,190 கோடி நிவாரண நிதி உதவியை மத்திய அரசிடம் கர்நாடக அரசு கேட்டு இருக்கிறது. #SouthWestMonsoon #KeralaRains #CMKumaraswamy

    நில முறைகேடு தொடர்பான வழக்கில் கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kumaraswamy #LandCheating

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தனிசந்தரா என்ற இடத்தில் பெங்களூரு வளர்ச்சி குழுமம் சார்பில் வீட்டு மனை உருவாக்கப்பட்டது.

    இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு அதில் 3.9 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. அப்போது குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.

    இதில், தனி நபருக்கு சாதகமாக அரசு முடிவு எடுத்திருப்பதாக புகார் கூறப்பட்டது. குமாரசாமி மற்றும் சில அதிகாரிகள், முன்னாள் மந்திரி ஆகியோர் இதில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார்கள் வந்தன.

    இது சம்பந்தமாக மகா தேவசாமி என்பவர் 2011-ம் ஆண்டு லோக் அயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது.

    இதில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று குமாரசாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதை விசாரித்த நீதிபதி பி.வி.பட்டேல், முதல்-மந்திரி குமாரசாமி, அப்போதைய மந்திரி சென்னிகப்பா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி ராமலிங்கம் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு 4 ஆண்டுகள் கழித்து தாமதமாக தொடரப்பட்டுள்ளது. மேலும் குமாரசாமி உள்ளிட்டோர் முறைகேடு செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. விதி முறைகளை மீறியதற்கான ஆவணங்களும் தாக்கல் ஆகவில்லை.

    எனவே, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என்று நீதிபதி கூறினார்.

    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #KarnatakaFlood #PMModi #Kumaraswamy
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவால் ஏற்கனவே குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, ஜோடுபாலா பகுதியில் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர் உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வெள்ள பாதிப்புகள் குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன். வெள்ளம் பாதித்த கர்நாடகாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #KarnatakaFlood #PMModi #Kumaraswamy
    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு விமான கண்காட்சி மாற்றப்படுவது ஏன் என முதல் மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். #Kumaraswamy #AeroShow
    பெங்களூரு:

    உலக அளவில் பிரபலமான இந்திய விமானத் தொழில் கண்காட்சி, 1996-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூரு ஹெப்பாளில் உள்ள விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு மாற்றப்பட  உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த அறிவிப்புக்கு கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் ஹுப்ளியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விமான கண்காட்சியை பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவுக்கு இடம் மாற்றுவது சரியல்ல. இதன்மூலம் கர்நாடக மாநிலத்தை அலட்சியப்படுத்துவது ஏற்புடையதல்ல. 

    பெங்களூருவில் விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நிறைந்துள்ளது. இந்த கண்காட்சியை மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்தது ஏன் என தெரியவில்லை. இங்குள்ள பாஜக சகோதரர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார் குமாரசாமி. #Kumaraswamy #AeroShow
    விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி குமாரசாமி, ஆலகால விஷத்தை விழுங்கிய சிவபெருமானை போல் தவிக்கிறேன் என கண் கலங்கியப்டி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Kumaraswamy
    பெங்களூரு:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அளித்தது.

    இதையடுத்து, மதச்சார்பற்ற கட்சி தலைவர் குமாரசாமி காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி குமாரசாமி, ஆலகால விஷத்தை விழுங்கிய சிவபெருமானை போல் தவிக்கிறேன் என கண் கலங்கியப்டி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் விவசாய கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல் மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    சிவபெருமான் ஆலகால விஷத்தை விழுங்கி விட்டு தவிப்பது போல் நானும் தவித்து வருகிறேன். நான் முதல் மந்திரியாக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை.

    முதல் மந்திரி பதவியால் எனக்கு நெருக்கடிகள் அதிகமானால் எந்த நேரத்திலும் பதவி விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை. விவசாயிகளையும் அவர்களது கடனையும் தள்ளுபடி செய்யவே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன்.

    விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் எந்த மாநிலத்துக்கும் விருப்பம் இல்லை, அக்கறை இல்லை. ஆனால் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

    குமாரசாமி பேசியபோது அவரது கண்கள் கலங்கியது. அடிக்கடி அவர் கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு பேசியதை கண்ட கூட்டத்தினர், உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    காவிரி விவகார ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி  பெங்களூரு விதான சவுதாவில் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இதுமட்டுமில்லாமல் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகா தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்படும். காவிரி ஆணையம் அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என கர்நாடகா அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், வரவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கர்நாடகாவின் அனைத்து எம்.பி.க்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி குமாரசாமி கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்திற்கு பாதகமான விதிமுறைகளுக்கு எதிராக போராடுவோம் என தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமைய்யா கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    ×