search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மந்திரி வீட்டில் சோதனை - வருமான வரித்துறை அலுவலகம் அருகே குமாரசாமி போராட்டம்
    X

    கர்நாடக மந்திரி வீட்டில் சோதனை - வருமான வரித்துறை அலுவலகம் அருகே குமாரசாமி போராட்டம்

    கர்நாடக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை கண்டித்து முதல் மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #Kumaraswamy #PMModi #ITRaid
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். கட்சி சார்பில் குமாரசாமி முதல் மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார். 

    இதற்கிடையே, நுண்ணுயிர் பாசனத்துறை மந்திரி சிஎஸ் புட்டாராஜூ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமான வரித்துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என பதிவிட்டு இருந்தார்.



    இந்நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தின் முன்னால் முதல் மந்திரி குமாரசாமி, துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மற்றும் ஜே.டி.எஸ். கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். #Kumaraswamy #PMModi #ITRaid
    Next Story
    ×