என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest"

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் முகக்கவசத்துடன் வந்தனர்.

    இந்த நிலையில் டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்று முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காங்கிரஸ் பாராளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது சோனியா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, 'குழந்தைகள் இறந்து கொண்டு இருப்பதால் அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்ற வயதானவர்களும் காற்று மாசு'வால் சிரமப்படுகிறார்கள் என்றார்.

    பிரியங்கா கூறும்போது, 'காற்று மாசுபாடு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் காற்று மாசுடன் தான் இருக்கிறோம். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

    காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர். மேலும் பிரதமர் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக நேற்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    3-வது நாளாக இன்று டெல்லி காற்று மாசு பிரச்சனையை தடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




    • கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
    • வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.

    கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் காலை 10 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

    • திமுக அரசைக் கண்டித்து 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.
    • மழை எச்சரிக்கையால் இந்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

    ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்) நடைபெறும். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
    • அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

    பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உருவபொம்மையை எரித்துப்போராட்டம் நடத்தப்பட்டது.

    பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

    கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். உருவபொம்மையை எரித்தபடி சாலையில் ஓடியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து கருப்பு கொடி போராட்டம் நடத்திய முற்போக்கு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

    • சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
    • இதனால் ஆர்ப்பாட்டம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் 17.11.2025, திங்கட்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளதால், மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20.11.2025, வியாழக்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    • குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்.

    தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை வெளிப்படுத்த ஒரு வழி தேவைப்படுகிறது. அதே போல், அதி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இயல்பாகவே நாம் தான் வன்னியர்களுக்கான சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எனவே, நமது பாட்டாளி சொந்தங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நாம் நடத்தவிருக்கும் 'வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தின்' நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக்கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் டிசம்பர் 17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
    • இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.

    இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.

    இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜவுளி வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சார்பில் 240 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    வணிக வளாகத்தில் முகப்பு வாயிலை அவலப்படுத்தி தரவேண்டும். 2022-23 ஆம் ஆண்டில் கட்டிட பயன்பாட்டிற்கு முன்பே வசூலித்த பிப்ரவரி, மார்ச் மாத வாடகை தொகையை கழித்து தொடர்ந்து வாடகை செலுத்த வகை செய்ய வேண்டும்.

    ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் வாடகையை குறைத்து தர வேண்டும். வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் வளாகத்தின் மேல் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது.

    வணிக வளாக பகுதியை சுற்றி வியாபாரிகளை பாதிக்கும் வகையில் எந்தவித சாலையோர தற்காலிக கடைகளை நடத்த அனுமதிக்க கூடாது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    வணிக வளாக உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் போதுமான மின் விளக்குகள் அமைத்தும், கழிவறைகளை சரியான முறையில் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    இது தொடர்பாக பலமுறை அதிகாரிகள் சந்தித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஜவுளி வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மாநகர செயலாளர் சுப்ரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜவுளி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது உங்களது 7 கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது வியாபாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் 7 கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    • மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல்.
    • தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, SIR-ஐ கண்டித்து வரும் நவம்பர் 16ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், ஆர்ப்பாட்டத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்.
    • திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.

    SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 11ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.

    அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.

    • அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
    • அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில் கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    4.11.2025- செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானர்ஜியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    பீகாரை தொடர்ந்து 2-ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த 4 மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    எஸ்.ஐ.ஆருக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் வருகிற 4-ந்தேதி கொல்கத்தாவில் போராட்டம் நடக்கிறது.

    கட்சியின் பொதுச் செயலாளரான அபிஷேக் பானர்ஜியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இதற்கிடையே மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

    மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க தலைவருமான சுவேந்து, பூத் நிலை அதிகாரிகளுக்கு (பி.எல்.ஒ.) மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

    ×