என் மலர்

    நீங்கள் தேடியது "protest"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாக நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    • விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் - பழனி சாலையில் வட கவுஞ்சி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கும், தங்களது கிராமப் பகுதிகளை ஒட்டியுள்ள மலை கோவில்களுக்கு செல்வதற்கும், விவசாய நிலங்களில் வேலி அமைத்துக் கொள்வதற்கும் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

    அத்துடன் கிராம மக்களை வன ஊழியர்கள் தரக்குறைவாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவற்றை கண்டித்து வட கவுஞ்சி பிரிவு அருகே பஸ் மறியல் போராட்டம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இதை அடுத்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் வருவதற்கு போலீசாரும், வனத்துறையினரும் வருவாய் துறையின் கிராம மக்களை அழைத்தனர். இதை அடுத்து இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி, வனத்துறை சரகர்கள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களை தரக்குறைவாக நடத்தும் வன ஊழியர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் பயன்படுத்தும் பாதைகள் உள்ளிட்டவைகளை எப்பொழுதும் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது என்றும் இந்த அமைதி பேச்சு வார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

    ஏற்கனவே இந்த பகுதியில் 15,000 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பாணை 16-வெளி வந்த பின்னர் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
    • பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும்

     காங்கயம்,செப்.25-

    பிஏபி பாசன பகுதிகளில் தண்ணீா் திருட்டைத் தடுக்க வேண்டும், மற்ற பகுதிகளில் சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாள்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிதிலமடைந்த பகிா்மான, உபபகிா்மான வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,

    பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே, கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், தொடா் பட்டினிப்போராட்டத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா்.போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு பெண் சனிக்கிழமை மயங்கி விழுந்தாா்.

    போராட்டத்தின் 3 -ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை 5 பெண்கள் மயங்கி விழுந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.மேலும் அதிகாரிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ேதால்வியில் முடிந்தது.

    இதனால் விவசாயிகள் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நா டகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போராட்டங்களும் நடக்கிறது.

    இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து பெங்களூரில் நாளை (26-ந் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    மேலும் கர்நாடகாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் கர்நாடகாவில் நாளை அரசு பஸ்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    சென்னை:

    கொரோனா பேரிடர் காலத்தில் பணிபுரிந்த நர்சுகள் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 3 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக முறையில் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களது பணிக்காலம் முடிவடைந்ததால் அரசு அவர்களை கடந்த ஆண்டு பணியில் இருந்து விடுவித்தது.

    இதை கண்டித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்து தொடர் உண்ணா விரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. சங்கத்தின் மாநில தலைவி விஜயலட்சுமி, துணை தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் தேவிகா ஆகியோர் தலைமையில் கைக்குழந்தைகளுடன் நர்சுகள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.

    பகல்-இரவாக தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டு போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கைக்குழந்தைகளை கையில் ஏந்தி போராட்ட களத்தில் செவிலியர்கள் கலந்து கொண்டது பொது மக்களை கவர்ந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
    • பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

    மாநில தலைவர் சேசுராஜா, மாநில செயலாளர் ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடர் உண்ணாவிரதம் நடந்தது.

    தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.

    பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் முதல்வர், கல்வி அமைச்சர் கவனத்தை பெற கவன ஈர்ப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றும் எந்த பலனும் இல்லை. 12 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் எங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.
    • சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

    காங்கயம்:

    காங்கயம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி., நிா்வாகம் முறைகேடாக பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சமச்சீா் பாசனம் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு, வெள்ளக்கோவில் கிளைக்குத் தேவையான தண்ணீரை பிஏபி., நிா்வாகம் கொடுப்பதில்லை.எனவே விவசாயத்துக்கு முறையாக தண்ணீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இந்நிலையில் இந்தக் கோரிக்கை தொடா்பாக நீதிமன்றத்தின் தீா்ப்புகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, காங்கயம் அருகே கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.

    பிஏபி., கிளை வாய்க்காலுக்கு நீா் திறக்கும் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீா்ப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தண்ணீா் திருட்டை ஒழித்து தண்ணீா் திறக்கும் சுற்றுகளை அதிகப்படுத்த வேண்டும். பிஏபி., தொகுப்பு அணைகளின் காலாவதியான ஷட்டா் மற்றும் உபகரணங்களை உடனே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உரையாற்றினர். விவசாயிகள் பலர் கலந்து கொண்டனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் கோஸ்டல் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    430 சதவீதம் உயர்வு

    தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 430 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவர் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    சோலார் மேற்கூரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வெல்டிங் உள்ளிட்ட மின் இணைப்பு களுக்கு டேரிப் மாற்றம் செய்து தர வேண்டும்.

    மல்டி இயர் டேரிப் கட்டணத்தை ரத்து செய்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்வை கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாளை 25-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    இதற்கு நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொ ழில்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    கடையடைப்பு

    இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கலந்துகொண்டு கடை யடைப்பு செய்ய உள்ளனர்.

    நாமக்கல் மாவட்ட பாடி பில்டர்கள் சங்கம், கண்ணாடி கடை அசோசி யேசன், சேகோ பேக்டரி உரிமையாளர்கள் சங்கம், தேங்காய் நார் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சுமார் 2,500 சிறு, குறந்தொழில்கள் சங்கத்தினர் தங்கள் நிறுவனங்களை நாளை ஒரு நாள் மூடி வைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
    • ஊராட்சி தலைவர் சுஜாதாரகு சுத்தமான குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் நாலூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், வெங்கடாபுரம் இந்துஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

    இவ்வாறு வழங்கப்பட்டு வரும் குடிநீர் அதிக உப்பு தன்மையுடன் இருப்பதால் அதனை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுபற்ற அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் சுத்தமான குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர், சாலை வசதி மின்விளக்கு வசதி ,அடிப்படை வசதிகள் மற்றும் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களிடம் ஊராட்சி தலைவர் சுஜாதாரகு பேச்சு வார்த்தை நடத்தினார். சுத்தமான குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, அண்ணா நகரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்யாததால் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நாங்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடத்தில் தண்ணீர் கொண்டு வருகிறோம். குழாயில் வரும் தண்ணீரை சமையல் செய்யமுடியவில்லை. இதனால் கூடுதல் விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.சாலை வசதி, தெரு மின்விளக்கு செய்து தர வேண்டும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
    • நாங்கள் விவசாயிகளை காப்பாற்றி இருக்கிறோம். காவிரி விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    பெங்களூரு:

    தமிழகம்-கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதனால் காவிரி நீரை நம்பி இருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. ஏற்கனவே இதுபோல் தண்ணீர் திறக்க அறிவுறுத்தியும் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை.

    இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கர்நாடக அரசு முழுமையாக தண்ணீர் திறக்க மறுத்து பெயரளவிலேயே கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

    இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 20 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இதற்காக பெங்களூருவில் வருகிற 26-ந் தேதி (நாளை மறுநாள்) முழுஅடைப்பு போராட்டம் நடத்த கர்நாடக நீர் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் காலையில் டவுன்ஹாலில் இருந்து மைசூரு வங்கி வரை பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பெங்களூரு சுதந்திர பூங்காவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் என 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    போராட்டத்திற்கு பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் வாடகை கார்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், கர்நாடக சினிமா வர்த்தக சபை, தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன.

    கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், பெங்களூருவில் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்து கடைகள் மற்றும் அவசர சேவைகள், அரசு அலுவலகங்கள், மெட்ரோ சேவைகள், போக்குவரத்து சேவைகள், அவசர சேவைகளை தவிர்த்து தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கித் துறை, வணிக நிறுவனங்கள், பல்வேறு துறைகள், தொழில் அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. ஆனால் இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுகின்றன.

    எனவே முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் அவசியம் இல்லை. மாநில நலனை காப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. எனவே பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து தவறிழைக்கக்கூடாது. சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

    விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள், சினிமா சங்கங்கள், எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் அரசு தலையிடாது. போராட்டங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. நாங்கள் எங்கள் கடமையை செய்து வருகிறோம். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் புதிய தெம்புடன் அரசியல் செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் நாங்கள் விவசாயிகளை காப்பாற்றி இருக்கிறோம். காவிரி விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    காவிரி கர்நாடகத்தின் சொத்து அல்ல என்று தி.மு.க. நிர்வாகி ஒருவர் பேசி இருக்கிறார். காவிரி தென்னிந்தியா முழுமைக்கும் சொந்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூருவில் நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மேட்டூர் அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை நுழைவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவு வாயில், ஈேராடு மாவட்டம் தாளவாடி நுழைவுவாயில் வழியாக தமிழக பஸ்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது. எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ்மாக் கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
    • பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை கவுண்டம்பாளையம் அடுத்த உருமாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 டாஸ்மாக் கடைகள் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.அதன்படி கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வும், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் உருமாண்டாம்பாளையம் பஸ் நிலையம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் வனிதா மணி, வார்டு செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், சாந்தி பூஷண் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ பேசுகையில், கவுண்டம்பாளையம், உருமாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்வெளிகள், தோட்ட ங்கள் நிறைந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமை க்கக்கூடாது, அப்படி செய்தால் இதனை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    இதுகுறித்து தகவலறிந்த துடியலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு உடனடியாக வந்து எம்.எல்.ஏ. அருண்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து லைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print