என் மலர்
நீங்கள் தேடியது "வங்கி"
- இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
- நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.
நாடு முழுவதும் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து 7 முக்கியமான சேவைகளில் வர உள்ள மாற்றம் மற்றும் அப்டேட்கள் குறித்து பார்ப்போம்...
1 ஆதார் அப்டேட் முறைகள்
செல்போன் மூலம் ஆதார் அட்டைகளில் செய்யப்படும் அப்டேட்கள் இப்போது எளிதாகிவிட்டன. அதில் குழந்தைகள் ஒரு வருடத்திற்கு இலவச பயோமெட்ரின் அப்டேட்களை பெறலாம். மேலும் பெரியவர்களுக்கு அனைத்து வகையான அப்டேட்டுகளுக்கும் கட்டணங்கள் வசூல் செய்யப்படும்.
2 பான் லிங்கிங் முறை
உங்கள் பான் கார் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன் வழங்கப்பட்டிருந்தால், டிசம்பர் 30-ந்தேதிகள் ஆதாருடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
3 வங்கியில் நாமினி முறை
வங்கியில் தற்போது நடைமுறையில் இருக்கும் நாமினி முறையில் இனி 4 பேர் வரை நாமினியாக சேர்த்து சமமான பங்கை ஒதுக்கலாம்.
4 வலைத்தள பாதுகாப்பு முறை
வங்கிகளின் பெயரில் போலி இணைப்பு மோசடிகளை குறைக்க வங்கிகள் இனி .bank.in டொமைனைப் பயன்படுத்த உள்ளன.
5 ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தல் விதி
ஜி.எஸ்.டி. வரியில் சிறு வணிகங்கள் விரைவான ஒப்புதலையும், குறைவான ஜி.எஸ்.டி. அடுக்குகளையும் பெறுகின்றன.
6 ஓய்வூதியதாரர் விதி
நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.
7 NPS-க்கு UPS விதி
அரசு ஊழியர்கள் UPS-ஐத் தேர்வுசெய்தால் நவம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற வேண்டும்.
- கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் பாபுபாய் ஜிராவாலா. இவரது சகோதரர் கன்ஷியாம். தொழிலதிபர்களான இருவரும் தனது தாயின் நினைவு நாளில் செய்யும் உதவி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என எண்ணினர்.
அமரேலியே சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலப்பத்திரங்களை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு அடகு வைத்தனர்.
விலை பத்திரங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்ததால் அவர்களுக்கு கடன் உதவியோ அல்லது அரசு நலத்திட்ட உதவிகளோ கிடைக்கவில்லை.
சுமார் 30 ஆண்டுகளாக கடனை அடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது தொழிலதிபர்கள் பாபு பாய் ஜீராவால மற்றும் அவரது சகோதரர் கன்ஷியாம் கவனத்திற்கு வந்தது.
கிராமத்தில் இருந்த 290 விவசாயிகளை வரவழைத்து ரூ.90 லட்சம் கடனை கூட்டுறவு வங்கியில் கட்டி கடனை அடைத்தனர். பின்னர் அவர்களது நில பத்திரங்களை வாங்கி விவசாயிகளிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 30 ஆண்டுகளாக நில பத்திரங்களை பெற போராடி வந்ததை ஒரே நிமிடத்தில் தீர்த்து வைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
விவசாயிகள் அனைவரும் தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர். இது குறித்து தொழிலதிபர்கள் கூறுகையில்:-
ஏழைகளுக்கு உதவி செய்ய தங்களது தாய் தூண்டியதாகவும் விவசாயிகளின் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு போதுமானது என தெரிவித்தனர்.
- இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது.
- புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
நவம்பர் 1-தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டணங்கள், என்.பி.எஸ்-ஐ யு.பி.எஸ்-க்கு மாற்றும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும்.
நவம்பர் 1-ந்தேதி முதல், வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு காப்பகப் பொருளுக்கு 4 நபர்கள் வரை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை அவசர காலங்களில் குடும்பங்களுக்கான நிதி அணுகலை எளிதாக்குவதையும், உரிமை தொடர்பாக எழும் சட்டப் பிரச்சனைகளைக் குறைக்க கொண்டு வரப்படுகிறது. மேலும் காப்பாளர்களைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது போன்ற நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு மற்றும் கட்டண அமைப்புகளிலும் மாற்றங்கள் காணப்பட உள்ளன. கல்வி தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1,000-க்கு அதிகமாகச் செய்யப்படும் மூன்றாம் தரப்பு கட்டண செயலிகள் மற்றும் வாலெட் டாப்-அப்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு இனி 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும்.
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது. இதன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்றாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே திருத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு, ஒரு நேரடி ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது இன்னும் அவசியமாகும்.
புதிய கட்டண அமைப்பின்படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75-ம், பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து தடையின்றி ஓய்வூதியம் பெற, ஓய்வு பெற்றவர்கள் நவம்பர் 1 முதல் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யு.பி.எஸ்.) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது பதிவு செயல் முறையை எளிதாக்குவதற்கும், சிறு வணிகங்கள் இணங்குவதைச் சுலபமாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பணத்தைப் பெற்ற வங்கிகள் அதைத் தேவைப்பட்டோருக்குக் கடனாகத் தந்து, வட்டியுடன் வசூலிக்கும் பொறுப்பை ஏற்றன.
- நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்காவது இருக்கும்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர யாருக்குத்தான் ஆசை இல்லை? பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். முக்தி என்னும் கோட்டைக்குள் நுழையப்போகும் பிணத்துக்கே அந்த கதி என்றால், தினந்தோறும் வாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கும் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு பணத்தை சம்பாதிக்கவேண்டும், சேமிக்கவேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்ற உத்வேகம் வரக் கேட்பானேன்? ஆகவேதான் தொடர்ந்து பணம் வரும் வழிகளையும், அதனை சேமித்துப் பெருக்கும் பர்சனல் பைனான்ஸ் முறைகளையும் பார்த்து வருகிறோம்.
பர்சனல் பைனான்சில் முதலீடு என்பது கடன் (Debt) சார்ந்தவை, பங்கு (Equity) சார்ந்தவை என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்று பார்த்தோம். கடன் சார்ந்த முதலீடுகளில் இன்று வரை ராஜாவாக இருப்பவை வங்கிகள். பர்சனல் பைனான்சின் அடித்தளம் சேமிப்பு என்றால், சேமிப்பின் அடித்தளம் வங்கிகள். ஐயாயிரம் வருடங்களாக மனிதர்களுடன் உறவாடுபவை வங்கிச் சேவைகள். சுமேரியக் கோவில்களில் ஆரம்பித்து, இன்று நம் ஸ்மார்ட் போன்களில் உறையும் வரை வங்கியின் பயணம் நீண்ட நெடிய ஒன்று.
முதலில் மக்கள் தங்களிடம் மீதி இருக்கும் பணத்தை வங்கிகளில் போட்டு, தங்கள் பணத்துக்குப் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் தேவையானபோது, தேவையான அளவு தொகையை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றைப் பெற்றனர். பணத்தைப் பெற்ற வங்கிகள் அதைத் தேவைப்பட்டோருக்குக் கடனாகத் தந்து, வட்டியுடன் வசூலிக்கும் பொறுப்பை ஏற்றன.
நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்காவது இருக்கும். இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவை கிட்ட வேண்டுமென்பதற்காக ஜன்தன் அக்கவுன்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாம் இருக்கும் ஊரில் உள்ள ஒரு வங்கியில் அக்கவுன்ட்டை ஆரம்பித்ததுமே பாஸ் புக், செக் புக், ஏ.டி.எம். கார்ட், இமெயில் அலர்ட், எஸ்.எம்.எஸ். அலர்ட் என்று அத்தனையும் நமக்கு வந்து விடுகின்றன.
வங்கி என்பது வெறும் சேவிங்ஸ் அக்கவுன்ட் மட்டுமல்ல; ரெக்கரிங் டெபாசிட், பிக்சட் டெபாசிட், 5 வருட வரி சேமிப்புத் திட்டம், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம் போன்ற டெபாசிட் திட்டங்களையும், வாகனக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், நகைக் கடன், தனி நபர் கடன், வேளாண்மைக் கடன், வியாபாரக் கடன், கரன்ட் அக்கவுன்ட் போன்ற கடன் திட்டங்களையும், டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், லாக்கர் போன்ற வசதிகளையும், உலகளாவிய பணப்பரிமாற்ற வசதிகளையும் உள்ளடக்கிய அட்சய பாத்திரம்.
இங்கு உள்ள ஒவ்வொரு விதமான அக்கவுன்ட்டும் ஒவ்வொருவிதமான பயன் தரக்கூடியவை. சேவிங்ஸ் அக்கவுன்ட்: சேவிங்ஸ் அக்கவுன்ட் எனப்படும் எஸ்.பி. அக்கவுன்ட்டை எடுத்துக் கொண்டால், நம்மிடம் உபரியாக இருக்கும் பணத்தை பத்திரமாக வைத்து, அதற்கு வட்டியும் வழங்கும் ஓரிடம் என்று கூறலாம். மேலும் மாதாந்திர பில்கள், கடனுக்கான இ.எம்.ஐ., சேமிப்புக்கான எஸ்.ஐ.பி., இன்சூரன்சுக்கான ப்ரீமியம் –இவை எல்லாவற்றுக்கும் நம் எஸ்.பி. அக்கவுன்ட்டில் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கலாம். அரசு தரும் மானியங்கள் இடைத்தரகர்கள் இன்றி, நம் எஸ்.பி.அக்கவுன்ட்டை வந்தடைகின்றன.
வெளிநாடுகளுக்குச் செல்வோர் இன்டர்நேஷனல் டெபிட் கார்ட் வாங்கிக் கொண்டால் அந்நியச் செலாவணி பற்றிய கவலை இன்றி எஸ்.பி. அக்கவுன்ட்டில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். மேலும் நம் எஸ்.பி.அக்கவுன்ட்டுகளில் இருந்து உலகின் எந்த மூலைக்கும் பணத்தை அனுப்ப இயலும். இன்று பல வங்கிகளிலும் 18 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு எஸ்.பி.அக்கவுன்டுடன் ஆக்சிடென்டல் டெத் இன்சூரன்சும் தருகிறார்கள். வருடத்திற்கு ரூ.100 செலுத்தினால் 2 லட்சம், ரூ. 200 செலுத்தினால் ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கிறது. வருடத்திற்கு 100 அல்லது 200 ரூபாய் செலுத்தி வங்கியில் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் எளிதாக இதனைப் பெறலாம். நீங்கள் அக்கவுன்ட் வைத்திருக்கும் வங்கியில் இது குறித்த மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ரெக்கரிங் டெபாசிட்: இன்றைய எஸ்.ஐ.பி.யின் (SIP) பழைய வடிவம்தான் ரெக்கரிங் டெபாசிட். இதிலும் மாதாமாதம் பணம் சேர்த்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வட்டியுடன் திரும்பப் பெறலாம். ஸ்கூல் பீஸ், தீபாவளி, பொங்கல் செலவுகள், சுற்றுலா, துணி மணி செலவுகள் போன்ற வருடாந்திரச் செலவுகளுக்கு தனித்தனியாக ஆர்.டி. ஆரம்பித்து சேர்த்து வந்தால், செலவு வரும் நேரம் திகைக்க வேண்டியிருக்காது.

சுந்தரி ஜகதீசன்
பிக்சட் டெபாசிட்: பிக்சட் டெபாசிட் என்பது, பெரிய தொகையை டெபாசிட் செய்து மாதாந்திர வட்டி பெறுதல் அல்லது வட்டியை டெபாசிடிலிருந்து எடுக்காமல், அதனையும் குட்டி போட வைத்து பெரிய தொகையை இன்னும் பெரிய தொகையாக்குதல் என்ற இரு விதமான வழிகள் கொண்டது.
7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை பிக்சட் டெபாசிட்டுகளை ஆரம்பிக்கலாம். 5 வருட வரி சேமிப்புத் திட்டமும் உள்ளது. வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை அரசின் உத்திரவாதம் உள்ளது. பிக் டிக்கட் ஐட்டம்ஸ் என்று அழைக்கப்படுகிற மேற்படிப்பு, திருமணம், வாகனம் வாங்குதல், வீடு வாங்குதல் போன்ற பெரிய செலவுகளுக்கு சேமித்துவர பிக்சட் டெபாசிட் உதவும். இவை போன்ற பெரிய செலவுகளுக்கு கண்டிப்பாகக் கடன் தேவைப்படும். அந்தக் கடனுக்கு பத்து பர்சன்டாவது டவுன் பேமென்ட் தர வேண்டியிருக்கும். அதைச் சேர்ப்பதற்கும் வங்கிதான் வழி.
கடன்கள் என்றதுமே நமக்கு உடனே நினைவுக்கு வருவதும் வங்கிகள்தான். கந்து வட்டிக்காரர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமடைந்த சாதாரண மக்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்தவை பொதுத் துறை வங்கிகள். இன்று தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், என்.பி.எஃப்.சி. என்று எத்தனை வந்தாலும், கடன்களுக்கு பொதுத்துறை வங்கிகள் விதிக்கும் கட்டணங்களும், வட்டி விகிதமுமே குறைவாக உள்ளன. வங்கிகள் தரும் கடன்கள், நகைக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் என்று ஆரம்பித்து பிசினஸ் லோன், கார்பரேட் லோன் என்று படிப்படியாக வளர்ந்தன.
டெலிகாம் மற்றும் டிஜிடலைசேஷன் வருகைக்குப் பின் வங்கிகளின் சேவை, இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங், ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எஃப்.டி., ஐ.எம்.பி.எஸ். என்று மேலும் இறக்கை கட்டிப் பறக்கின்றன. பேங்க்கின் இன்டர்நெட் பக்கத்தில் எந்த நிதியாண்டில் நம்மிடமிருந்து எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வரிப்பிடித்தம் செய்துள்ளன என்பதைக் காட்டும் 26ஏஎஸ் படிவம் காணக் கிடைக்கிறது.
எஸ்.பி. அக்கவுன்ட்டில் அதிகப் பணம் சேர்ந்துவிட்டால் வங்கிக்கு சென்று எப்.டி ஆரம்பித்ததெல்லாம் அந்தக் காலம். இன்று அதற்கென இருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தால் எப்பொழுதெல்லாம் நம் அக்கவுன்ட்டில் நாம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் சேர்கிறதோ, அப்பொழுதெல்லாம் ஒரு புதிய எப்.டி. ஒரு வருட காலத்திற்கு அன்றைய வட்டி விகிதத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் உபரிப் பணம் குறைந்த வட்டியில் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருப்பது தடுக்கப்படுகிறது. ஒருவேளை நம் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்தை விட அதிகப் பணத்திற்கு செக் கொடுத்தாலோ, அல்லது ஏ.டி.எம்.மில் எடுக்க முற்பட்டாலோ தேவையான அளவுப் பணம் இந்த எப்.டி.யில் இருந்து எஸ்.பி.அக்கவுன்ட்டுக்கு திரும்புகிறது.
முன்பெல்லாம் பிசினஸ் செய்பவர்களுக்கு மட்டுமே கரன்ட் அக்கவுன்ட் வசதி தரப்படும். இன்று உங்களிடம் ரூ.50000-க்கு பிக்சட் டெபாசிட் இருந்தால் போதும்; அதன் மீது ரூ.37500 வரை லிமிட் கொண்ட கரன்ட் அக்கவுன்ட்டை வங்கியில் கேட்டுப் பெறலாம். அவசரமாக ரூ.1000 தேவை என்றால் கூட இந்தக் கரன்ட் அக்கவுன்ட்டிலிருந்து செக் அல்லது ஏ.டி.எம். மூலம் எடுக்கலாம்; மறுநாளே கூட திரும்பக்கட்டலாம்; மறுபடி எடுக்கலாம். இதற்கான வட்டி, பிக்சட் டிபாசிட்டின் வட்டியைப் பொறுத்தது என்பதால் 8 சதவீதம் அல்லது 9 சதவீதம் வட்டியில் கடன் கிடைக்கிறது. பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்றவற்றில் 18 சதவீதம், 36 சதவீதம் என்று வட்டி கட்டுபவர்களுக்கு வெறும் 8 சதவீதத்தில் கடன் என்பது வரப்பிரசாதம் அல்லவா?
மியூச்சுவல் பண்டும், பங்குச்சந்தையும் மக்களின் மனதை ஆக்கிரமிக்கும் வரையில் தனிக்காட்டு ராஜாவாக விளங்கிய வங்கித் துறை இன்று பலம் குன்றுவதற்கு 3 காரணங்கள் உள்ளன:
முதலாவதாக, வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் 1990கள் வரை 13 சதவீதமும், அதற்கு அதிகமாகவும் கிடைத்து வந்த வட்டி, தற்போது 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையே தரப்படுகிறது. (ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் அதிகம் கிடைக்கும்).
இரண்டாவதாக டெபாசிட்டுகளிலிருந்து கிடைக்கும் வட்டி ரூ. 40000-த்தை தாண்டினால் (சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.50000) 10 சதவீதம் மூலவரிப்பிடித்தம் செய்யப்படுகிறது. இது முதலீட்டின் வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது. (வரி கட்டவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் படிவம் 15 ஜி/எச் சமர்ப்பித்து வரிப் பிடித்தத்தை தவிர்க்கலாம்).
மூன்றாவதாக, வங்கி டிபாசிட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரையே அரசின் உத்தரவாதம் உள்ளது. "இந்த உத்தரவாதத்துக்கு அவசியம் வரப்போவதில்லை; ஏனெனில் நம் வங்கிகள் பலம் வாய்ந்தவை" என்று நாம் உணர்ந்தாலும், நெருடல் தொடர்கிறது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் பொருளாதார உலகில் வங்கிகள் இன்றி நாம் செயல்படமுடியாது. வள்ளுவர் இன்றிருந்தால் "பர்சனல் பைனான்ஸ் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் வங்கி வழி சேராதார்" என்று புதுக் குறளே எழுதி இருப்பார்.
ஆனால் போகும் இடங்களிலெல்லாம் புதிது, புதிதாக வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் ரூ.500, ரூ.1000 என்று போட்டுவைப்பது தவறு. பொதுத் துறை வங்கிகளில் ஒன்று, தனியார் வங்கிகளில் ஒன்று என இரண்டு அக்கவுன்ட்டுகளை வைத்துக் கொண்டு மற்றவற்றை க்ளோஸ் செய்வது நல்லது.
நீங்கள் எத்தனை வங்கிகளில் அக்கவுன்ட் வைத்திருக்கிறீர்கள்?
- முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
- பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு 'சிபில் ஸ்கோர்' எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது.
தனிநபரின் கடன்தகுதியை நிர்ணயிக்கும் இந்த மதிப்பெண்ணை இந்திய கடன் தகவல் பணியகம் (சிபில்) வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.
இந்த சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதல் முறை வங்கிக்கடன் பெற முயற்சிப்போரும் இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
இது தொடர்பாக நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-
முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.
கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் இல்லை.
ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், கடன் வழங்குபவர்கள்தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள்.
முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அந்தவகையில் அவர்களின் கடன் வரலாறு, கடந்த கால திருப்பிச்செலுத்தும் வரலாறு, தாமதமான திருப்பிச் செலுத்தல்கள், தீர்க்கப்பட்ட கடன்கள், மறுசீரமைக்கப்பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை போன்றவற்றை சரி பார்க்க வேண்டும்.
இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறினார்.
- சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்துள்ளது.
- சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன.
இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்ணயிக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 11 அன்று குஜராத்தில் நடந்த ஒரு நிதி நிகழ்வின் போது பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, "சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தேவையையும், அதைப் பூர்த்தி செய்யாததற்கான அபராதங்களையும் சம்பத்தப்பட்ட வங்கிகள் தான் தீர்மானிக்கும். குறைந்தபட்ச இருப்புத் தொகை கொள்கை ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைக்கு கீழ் வராது. சில வங்கிகள் அதை ரூ.10,000 ஆக நிர்ணயித்திருந்தாலும், சில வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை அனுமதிக்கின்றன. இது சம்பத்தப்பட்ட வங்கியின் விருப்பம்" என்று தெரிவித்தார்.
சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக எஸ்.பி.ஐ., கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி போன்ற வங்கிகள் எந்த அபராதத்தையும் வசூலிப்பதில்லை.
அதே சமயம் சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்காக அபராதம் வசூலிக்கின்றன.
அண்மையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டது. அந்த வகையில், நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும், இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25 ஆயிரம், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு பொதுவிடுமுறையாகும். மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக அன்று பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.
நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மர்ம நபர்கள் வங்கி உள்ளே புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
- குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம்,வேதார ண்யம் அடுத்த மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேலும், லாக்கரைஉடைக்கும் போது வங்கி காவலாளி முத்து கண்னு வந்துள்ளார். இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.
இதனால், வங்கியில் இருந்த சுமார் 8 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பியது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்றுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
மோப்பநாய் வங்கியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்குள்ள வீரன் கோவில் அருகே நின்றுவிட்டது.
இந்நிலையில், நாகை எஸ்.பி ஜவகர் கொள்ளை முயற்சி நடந்த வங்கியை நேரில் பார்வையிட்டார்.கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்படை போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தும், கேஸ் சிலிண்டர் யாரிடம் வாங்கினர்கள்?
கொள்ளை கும்பல் காரில்வந்தர்களா? உள்ளுர் நபர்கள் யாருக்காவது தொடர்புள்ளதா?
என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
- கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பூதலூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை ) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
மேற்படி, கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் . சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இச்சிறப்பு முகாமில் சுலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ளது திங்கள் நகர். இங்குள்ள இரணியல் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.
அதன் அருகே பல்வேறு கடைகளும் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக மாக இருக்கும். இன்று காலை அந்த வழியாக வந்த வர்கள், ஏ.டி.எம். அறை கதவு சரியாக மூடப்படாமல் இருப்பதை பார்த்தனர்.
சந்தேகத்தின் பேரில் ஏ.டி.எம். மையம் அருகே அவர்கள் சென்ற போது அந்த எந்திரம் சேதப்படுத் தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வங்கி யின் மேலாளர் ஹசீந்தருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது ஏ.டி.எம். எந்தி ரத்தின் முன்பக்க கதவை யாரோ மர்ம மனிதர்கள், கம்பியால் நெம்பியிருப்பது தெரிய வந்தது.
எனவே நள்ளிரவுக்கு மேல் யாரோ சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர், இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அவர்கள், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரும் பகுதியின் கீழ் உள்ள இடம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த போலீ சார், அதுகுறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 4 சப்- டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. பூதப்பாண்டி சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் தலைமையிலான போலீசார் வரகுணமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் ரூ.12,200 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட் டத்தில் உள்ள 4 சப்- டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. பூதப்பாண்டி சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் தலைமையிலான போலீசார் வரகுணமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 3 நபர் களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீ சார் அவர்களது வாக னத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந் தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் பிடித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈசாந்தி மங்கலத்தைச் சேர்ந்த ஷாஜின் (வயது 20), அந்தரபுரத்தை சேர்ந்த அர்ஜுன் (19), சுதனேஷ் (20) என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் ரூ.12,200 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரின் வங்கி கணக்கு களை முடக்கி போலீ சார் நடவடிக்கை மேற்கொண்ட னர். ஷாஜின் மற்றும் அவரது தந்தை தாயாரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.மேலும் அர்ஜுன், சுதனேசனின் வங்கி கணக்குகளும் முடக்கப் பட்டுள்ளது.
இந்த வழக்கில் இறச்ச குளத்தைச் சேர்ந்த ராஜ வேல் என்பவர் தலை மறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட ஷாஜின், அர்ஜுன், சுதனேசனிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப் பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
- ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.
ராசிபுரம்:
சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி தலைமை வகித்தார். இதில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஜவகர், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.






