என் மலர்
நீங்கள் தேடியது "பான்"
- இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
- நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.
நாடு முழுவதும் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து 7 முக்கியமான சேவைகளில் வர உள்ள மாற்றம் மற்றும் அப்டேட்கள் குறித்து பார்ப்போம்...
1 ஆதார் அப்டேட் முறைகள்
செல்போன் மூலம் ஆதார் அட்டைகளில் செய்யப்படும் அப்டேட்கள் இப்போது எளிதாகிவிட்டன. அதில் குழந்தைகள் ஒரு வருடத்திற்கு இலவச பயோமெட்ரின் அப்டேட்களை பெறலாம். மேலும் பெரியவர்களுக்கு அனைத்து வகையான அப்டேட்டுகளுக்கும் கட்டணங்கள் வசூல் செய்யப்படும்.
2 பான் லிங்கிங் முறை
உங்கள் பான் கார் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன் வழங்கப்பட்டிருந்தால், டிசம்பர் 30-ந்தேதிகள் ஆதாருடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
3 வங்கியில் நாமினி முறை
வங்கியில் தற்போது நடைமுறையில் இருக்கும் நாமினி முறையில் இனி 4 பேர் வரை நாமினியாக சேர்த்து சமமான பங்கை ஒதுக்கலாம்.
4 வலைத்தள பாதுகாப்பு முறை
வங்கிகளின் பெயரில் போலி இணைப்பு மோசடிகளை குறைக்க வங்கிகள் இனி .bank.in டொமைனைப் பயன்படுத்த உள்ளன.
5 ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தல் விதி
ஜி.எஸ்.டி. வரியில் சிறு வணிகங்கள் விரைவான ஒப்புதலையும், குறைவான ஜி.எஸ்.டி. அடுக்குகளையும் பெறுகின்றன.
6 ஓய்வூதியதாரர் விதி
நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.
7 NPS-க்கு UPS விதி
அரசு ஊழியர்கள் UPS-ஐத் தேர்வுசெய்தால் நவம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற வேண்டும்.
- கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிப்பு பீடா வகையான பான் என்பது வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய பண்டம் ஆகும். சமீப காலங்களில் தென்னிந்தியாவிலும் இந்த பான் வகைகள் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன. ஐஸ் பான் முதல் ஃபயர் பான் வரை பான் வகைகள் உருவாகி இளைஞர்களின் விருப்பத்தை தூண்டியுள்ளது.

இதில் புகையுடன் கூடிய திரவ நைட்ரஜன் பான் வகை உண்ணும்போது திரில் ஆன அனுபவத்தை தருவதால் சிறுவர்கள் அதனை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் அதுவே ஒரு சிறுமிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. பெங்களூருவில் 12 வயது சிறுமி திரவ நைட்ரஜன் பான் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருதுவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வயிற்றில் துளை உருவாகியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இந்த துளை உருவாகுதலுக்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ் (perforation peritonitis) என்பது மருத்துவப் பெயர் ஆகும். வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பின் சிறுமி உடல் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் உணவில் திரவ நைட்ரஜனை பயன்படுத்துவது கடுமையான விளைவுகளைத் ஏற்படுத்தும். திரவ நைட்ரஜனில் ஆவியாகும் இரசாயனமே இதற்கு காரணம் ஆகும். இந்த நீராவிகளை உள்ளிழுப்பது சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.







