search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stomach"

    • புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
    • எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரை பரிசோதித்த பொது மருத்துவர் டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் மருத்துவ குழுவினர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வாலிபரின் வயிற்று பகுதியில் சிறிய இரும்பு துண்டு இருப்பதும் அதன் காரணமாக அவர் வயிற்று வலியால் அவதிப்படுவதை உறுதி செய்தனர்.

    உடனடியாக எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.

    இதுகுறித்து டாக்டர் ரவீந்திர பாரதி, கூறியதாவது:-

    வாலிபர் பல்வலிக்கு சிகிச்சைக்காக சென்ற–போது இந்த இரும்பு துண்டை விழுங்கியுள்ளார்.

    அந்த இரும்பு துண்டு உணவுடன் கலந்து மிதந்ததால், அதனை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சி.ஆர்ம் என்று சொல்லக்கூடிய தொடர் எக்ஸ்ரே கருவி மூலம் நிதானமாக 3 மணிநேர முயற்சிக்கு பின் இரும்பு துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. வாலிபர்  வீடு திரும்பினார்.

    இவ்வாறு டாக்டர் ரவீந்திர பாரதி கூறினார்.

    சிக்கலான இந்த சிகிச்சையை மயக்க மருந்து இல்லாமல் எண்டோஸ் கோப்பி மூலம் மேற்கொண்ட டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் குழுவினரை பிம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல், கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் பாராட்டினர்.

    திருவாரூரில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. #thiruvarurgovernmenthospital
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே தைக்கால் காலனித் தெருவை சோ்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஆனந்தராஜ் என்பவர், தனது மனைவி கார்த்திகாவின்  இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற கார்த்திகா, வீடு திரும்பிய பிறகும் தொடர்ந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். 

    இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது பிரசவத்தின்போது, தவறுதலாக வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்தது தெரியவந்துள்ளது. 

    அதன்பின்னர், அறுவை சிகிச்சை மூலம் கையுறை அகற்றப்பட்டது. எனினும், தற்போது கார்த்திகா மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கார்த்திகாவின் கணவர் ஆனந்தராஜ் புகார் மனு அளித்துள்ளார். #thiruvarurgovernmenthospital
    ×