என் மலர்

    லைஃப்ஸ்டைல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடை மாவு போலத்தான் குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும்.
    • போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும்.

    அடை மாவு போலத்தான் இந்த குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும். அடை மாவை கொஞ்சம் தண்ணீராக அரைப்போம். இந்த குணுக்கிற்கு போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக மாவு அரைத்துக் கொள்ள வேண்டும். தஞ்சாவூர் கும்பகோணம் பக்கங்களில் இந்த குணுக்கு ரொம்பவும் பிரபலம். சுவையான முறையில் அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில் சாமை குணுக்கு செய்வது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை - 50 கிராம்

    பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை - தலா 25 கிராம்

    பச்சரிசி - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - கால் டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    எண்ணெய் - 200 கிராம்

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் சாமை, பச்சைப்பருப்பு, பச்சரிசி அனைத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து, இவற்றுடன் ஊறவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ரவை ரவையாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இதில் உப்பு, சீரகம், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையான சாமை குணுக்கு தயார். மழைக்காலங்களில் ஈவ்னிங் சூடான டீயுடன் பரிமாற அருமையாக இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரிசி ஊத்தப்பம் சாப்பிடும்போது வெறும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது.
    • புரதச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள் போன்றவையும் கிடைக்கும்.

    வழக்கமாக அரிசி ஊத்தப்பம் சாப்பிடும்போது வெறும் மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது. ஆனால் அதையே சாமை அரிசியில் ஊத்தப்பம் செய்து சாப்பிடும் போதும் புரதச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள் போன்றவையும் கிடைக்கும். இது அனைவருக்கும் ஏற்ற சிற்றுண்டியாக அமையும்.

    தேவையான பொருட்கள்:

    சாமை - 100 கிராம்

    பச்சரிசி, ஜவ்வரி இரண்டும் சேர்த்து - 4 டேபிள் ஸ்பூன்

    உளுந்து - 25 கிராம்

    எண்ணெய் - தேவையான அளவு.

    பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

    பொடியாக நறுக்கிய கேரட், தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன்

    பொடித்த முந்திரி - 25 கிராம்

    ஊறிய கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் (அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும்)

    செய்முறை:

    சாமை, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்க வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், தக்காளி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, முந்திரி ஆகியவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை சூடுசெய்து எண்ணெய் விட்டு, மாவை தடிமனாக வார்த்து மேலே தூவவேண்டிய பொருட்களை தூவி, இருபுறமும் வேக விட்டு எடுத்தால் சுவையான சாமை ஊத்தப்பம் தயார். அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.... பரிமாறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம்.
    • அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.

    டீடாக்ஸ் என்பது சமீபத்தில் அதிகமாக காதில் கேட்கிற வார்த்தையாக இருக்கலாம். டீடாக்ஸ் என்பது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துதல் என்று பொருள். உடல் டீடாக்ஸை போலவே முகத்தை டீடாக்ஸ் செய்யும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

    முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கழிவுகள், அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இதன் மூலம் சருமத்துக்குள் இருக்கும் அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு ஆகியவற்றைக் குறைத்து ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

    சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டியது மிக அவசியம். முகத்தை சோப்பு போட்டு முகத்தைக் கழுவுவோம். அது சருமத்தின் மேல்புறத்தில் இருக்கிற அழுக்குகள் மட்டும் தான் வெளியேறும். அதனால் டபுள் க்ளன்சிங் முறையை பின்பற்றுவது மிக முக்கியம். அதாவது இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும்.

    இப்படி இரண்டு முறை க்ளன்சிங் செய்யும்போது சருமத் துளைகளுக்குள் உள்ளே சென்றிருக்கிற மேக்கப் பொருள்கள், சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட லோஷன்கள், அதிகப்படியான சீபம் சுரப்பு ஆகியவற்றை நீக்கும்.

    சருமத்தை க்ளன்சிங் செய்து விட்டால் மட்டும் போதுமா என்றால் போதாது. அதன்பிறகு சருமத்தில் தினமும் தேங்குகிற இறந்த செல்களை நீக்கி சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது முக்கியம். இதற்கு நல்ல ஸ்கிரப் ஒன்றை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி மென்மையாக சருமத்தை ஸ்கிரப் செய்து கழுவுங்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்தால் போதுமானது.

    க்ளே மாஸ்க்கை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்கள் முழுமையாக வெளியேறும். கடைகளில் முகத்துக்குப் பயன்படுத்துகிற க்ளே மாஸ்க்குகள் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது அதற்கு பதிலாக முல்தானி மட்டியும் பயன்படுத்தலாம்.

    சருமத்தை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சருமம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்படி குடிக்கும்போது உடல் மற்றும் சருமத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

    முகத்தை மசாஜ் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இது ஆயில் மசாஜாகவும் இருக்கலாம். அல்லது க்ரீம் அல்லது வீட்டு வைத்தியங்களின் மூலம் மசாஜ் செய்யலாம். தயிர், மஞ்சள் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அதேபோல பேஷியல் ஆயில் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.

    கிரீன் டீயில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த கிரீன் டீயை சருமத்துக்கு அப்ளை செய்வதன் மூலம் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு சருமத்தை டீடாக்ஸ் செய்து பளிச்சென்று மாற்றும்.

    கிரீன் டீயை நன்கு நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் ஸ்பிரே செய்து விட்டு முகத்தை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் சுற்றுச்சூழுல் மாசுக்களால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.
    • உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

    நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை நம்முடைய செல்களுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் செயல்பாட்டிற்குப் பெயர் தான் மெட்டபாலிசம். இந்த வளர்சிதை மாற்றம் சரியாக இருந்தால் தான் உடலின் ஜீரண உறுப்புகள் சரியாகி இயங்கி உடல் எடை அதிகரிக்காமல் தடுப்பது முதல் உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என பல்வேறு வேலைகளை உடலால் சரியாக செய்ய முடியும்.

    மெட்டபாலிசம் அதிகரிக்கும் பானம்

    தேவையான பொருள்கள்

    இஞ்சி - ஒரு துண்டு

    சீரகப் பொடி - கால் ஸ்பூன் (வறுத்து அரைத்தது),

    எலுமிச்சை பழம் - பாதி அளவு

    கல் உப்பு - சிறிதளவு

    செய்முறை

    இஞ்சியை மண் இல்லாமல் நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு, அதன் மேல் தோலை சீவி எடுத்து விடுங்கள். பின்பு அதை துருவிக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் துருவிய இஞ்சி, சீரகப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.

    இந்த கலந்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து வெதுவெதுபடபான நீரில் கலந்தால் பானம் தயார்.

    பயன்படுத்தும் முறை

    இந்த பானத்தை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு எடுத்துக்கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மேலே சொன்ன கலவையை ஒரு வாரத்திற்கு ஏற்றபடி தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது வெந்நீரில் கலந்து குடித்துக் கொள்ளலாம்.

    பயன்கள்

    * இந்த பானத்தை தினமும் குடிப்பதால் ஜீரண ஆற்றல் மேம்படும்.

    * அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

    * உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

    * உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடலின் உறுப்புகளுக்கு முக்கிய அம்சம் எலும்புகள் தான்.
    • உறுப்புகளை பாதுகாக்கவும் எலும்புகள் மிகவும் அவசியம்.

    நம் உடலின் உறுப்புகளுக்கு முக்கிய அம்சம் எலும்புகள் தான். அவை தான் உடலுக்கு உரிய கட்டமைப்பையும், வலிமையையும் வழங்கும். அதோடு தசைகளை பாதுகாக்கவும், உறுப்புகளை பாதுகாக்கவும் எலும்புகள் மிகவும் அவசியம். அப்படிப்பட்ட எலும்புகள் வலிமையின்றி போனால் அவை உங்களை பலவீனம் அடையச்செய்யும். எலும்புகளின் ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது உடலின் கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும்

    இதனைத் தவிர்க்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். அப்படி இயற்கையாகவே எலும்புகளை வலுப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க...

    எலும்புகளை பலவீனமாக்கும் உணவுப்பழக்கம்

    தற்போதைய உணவுப்பழக்கம் நமது எலும்புகளை பெரிதும் பாதிக்கிறது. ஏனெனில், நாம் சாப்பிடும் பல உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏதும் இருப்பதில்லை. இதுபோன்ற உணவுகளையே தொடர்ந்து எடுத்துக் கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    மெக்னீசியம் நிறைந்த காலை உணவுகள்

    நட்ஸ் வகைகளான முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகள் மட்டுமின்றி சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சோயா விதைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதன் அடர்த்தியை அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் உதவும். நட்ஸ் சாப்பிட விரும்புவோர் இரவு முழுவதும் அதனை ஊற வைத்துவிட்டு பின் காலையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதேபோல், சியா விதையை காலையில் ஒரு கிளாஸ் வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து சாப்பிடலாம்.

    கால்சியம் நிறைந்த உணவுகள்

    நம் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்கள் கால்சியத்தால் ஆனது ஆகும். இவை தான் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான தாதுக்கள் ஆகும். பொதுவாக நம் உடலுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படும். பெரும்பாலும் மதிய உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் பால் பொருட்களான பன்னீர் போன்றவை, பச்சை இலை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை மெக்னீசியம் மற்றும் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகும்.

    புரதம் நிறைந்த உணவுகள்

    எலும்புகள் 50 சதவீதம் புரதத்தால் ஆனது. அதனால் போதுமான அளவு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதேபோல், இவை கால்சியத்தை உறிஞ்சவும் உதவும். காலை உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டியில் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். இது புரதம் நிறைந்த சிறந்த உணவாகும். அதேபோல், வறுத்த கொண்டைக்கடலை, ஹம்முஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது சுவையுடன், ஆரோக்கியத்தையும் உங்களுக்கு அளிக்கும்.

    யோகாசனங்கள்

    சில வகை ஆசனங்கள் மூட்டு வலியைத் தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் மட்டுமின்றி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும். அவை என்னவென்றால், ஏகபாதாசனம் மற்றும் நடராஜாசனம். இவை ஒற்றைக் காலால் செய்யும் ஆசனங்கள்.

    அதுமட்டுமின்றி, அதோமுக ஸ்வனாசனத்தையும் முயற்சிக்கலாம். யோகாசனம் மட்டுமின்றி, ஸ்கிப்பிங், ஜாக்கிங், வாக்கிங் போன்றவற்றையும் முயற்சி செய்யலாம். இதனால் உடல் எடை குறையும். உடலுக்கேற்ற சரியான உடல் எடையை விட, அதிக எடை கூட எலும்புகளை வலுவிழக்கச் செய்து உங்களை பலவீனமாக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முழங்கால் நம்முடைய உடலில் மிக முக்கியமானது.
    • நம்முடைய உடல் எடையைத் தாங்கக் கூடியது.

    முழங்கால் நம்முடைய உடலில் மிக முக்கியமானது. அதுதான் நம்முடைய உடல் எடையை தாங்கக் கூடியது. உடல் வலுவாக இருக்க வேண்டும் என்று சொல்வதில் பெரும்பங்கு இந்த முழங்காலைத் தான் சேரும். முழங்காலை வலுவாக வைத்திருக்க போதிய உடற்பயிற்சிகளுடன் யோகாசனமும் உதவி செய்யும். அந்தவகையில் முழங்கால்களை வலுப்படுத்தும் யோகாசனங்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    நடைபயிற்சி, ஓடுதல், குதித்தல் என நம்முடைய இயக்கம் எதுவாக இருந்தாலும் அதற்கு முழங்கால் உறுதியாகவும் வலுவாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம். முழங்கால்களை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. மூட்டுகளில் வலி ஏற்படுவது முழங்கால்களை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துவது முக்கியம். அதற்கு யோகாசனங்கள் உதவி செய்யும்.

    உத்தனாசனம்

    * விரிப்பின் மேல் நின்று கொண்டு இரண்டு கால்களையும் சேர்த்து வைத்தபடி நிற்க வேண்டும்.

    * இரண்டு கைகளையும் காதுகளோடு ஒட்டியது போல மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.

    * மூச்சை மெதுவாக வெளியே விட்டுக்கொண்டே இடுப்பை வளைத்து முன்னோக்கி குனிய வேண்டும். அப்படி குனியும்போது இடுப்பை மட்டும் தான் வளைக்க வேண்டும். கால் முட்டியை மடக்கக் கூடாது.

    * இதே நிலையில் சிறிது நேரம் இருந்து பின் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இதை திரும்பத் திரும்ப 10 முறை செய்யலாம்.

    வீரபத்ராசனம்

    உடலை வலுவாகவும் உறுதியாகவும் வைத்திருக்க உதவும் ஆசனங்களில் ஒன்று தான் இந்த வீரபத்ராசனம். போர் வீரர்களைப் போல உடலை உறுதியாக்கும் ஆசனம் இது.

    * தரை விரிப்பில் நேராக நின்று கொண்டு இடது காலை மட்டும் முன்பக்கம் இரண்டு அடி தூரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்.

    * மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி இரண்டு கைகளையும் முன்புறமாக மேலே எடுத்துச் செல்ல வேண்டும்.

    * அதேபோல முன்புறத்தில் உள்ள காலை லேசாக மடக்கியபடி மேலே தூக்கிய இரண்டு கைகளையும் இணைக்க வேண்டும்.

    * முதுகெலும்பை நன்றாக பின்னோக்கி வளைத்தபடி, பார்வையை மட்டும் மேலே உயர்த்தியபடி இருக்க வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள்.

    * இதேபோல அடுத்த காலை முன்னோக்கி நகர்த்தி இதேபோல் செய்ய வேண்டும்.

    உபவிஸ்த கோணாசனம்

    இந்த உபவிஸ்த கோணாசனம் முதுகுத்தண்டு மற்றும் இடுப்புத் தசையை நெகிழ்வாக்கி மூட்டுகளை வலுவாக வைத்திருக்கச் செய்யும்.

    * தரைவிரிப்பின் மேல் கால்களை நேராக நீட்டியபடி அமருங்கள். அடுத்து கால்களை பக்கவாட்டில் விரித்தபடி கால் முட்டி மேல்நோக்கியபடி இருக்க வேண்டும்.

    * மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி உள்ளங்கைகளை முன்னோக்கி வைக்க வேண்டும்.

    * மூச்சை வெளியேற்றியபடி முன்னோக்கி குனியவும். குனியும்போது கைகளை பாதங்களை நோக்கி நீட்டுங்கள்.

    * முன்னால் குனிந்தபடி கால் பெருவிரலை பிடித்தபடி நெற்றியை தரையில் வைக்கவும்.

    * 20 விநாடிகள் இதேநிலையில் வைத்திருக்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி கால் பெருவிரல்களை விட்டுவிட்டு கைகளை தரையில் வைக்க வேண்டும். அதை திரும்பத் திரும்ப 5 முறை செய்யுங்கள்.

    ஆஞ்சநேயசனம்

    * தரை விரிப்பில் நேராக நின்று இரண்டு கால்களையும் கொஞ்சம் அகலமாக விரத்தபடி இருங்கள்.

    * அடுத்ததாக வலது காலை பின்னால் நீட்டியபடி முட்டி முதல் பாதம் வரை தரையில் வரும்படி வைக்க வேண்டும்.

    * கைகளை மேல்நோக்கி உயர்த்தியபடி இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றுடன் ஒன்று பார்த்தபடி வைக்க வேண்டும்.

    * நேராக பார்த்தபடி வயிற்றுப்பகுதியை மட்டும் முன்னோக்கியபடி நகர்த்தி முதுகை வளைத்து தலையையும் கைகளையும் பின்னால் சாய்த்தவாறு இருக்க வேண்டும்.

    * 20 விநாடிகள் இதேநிலையில் இருந்து பின்னர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல மீண்டும் செய்ய வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோழி கால்கள் இரும்புச்சத்து நிறைந்தவை.
    • ஏராளமான "கொலாஜன்" கால்களில் நிரம்பி உள்ளன.

    நாம் பெரிதும் கண்டுகொள்ளாமல் விடப்படுவது கோழியின் கால்கள்தான்... ஆட்டுக்கால்கள் அனைவராலும் விரும்பப்படும் அளவுக்கு சிக்கன் கால்கள் விரும்பப்படுவதில்லை... உடைந்துபோன எலும்புகளை விரைவில் ஒன்று சேர ஆட்டுக்கால் எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதுபோல, சில உள்சார்ந்த கோளாறுகளை தீர்க்க இந்த கோழிக்கால்களும் உதவுகின்றன.

    கோழிக்கால்கள்:

    கோழிக் கால்கள் அதிக கொழுப்பு சத்து இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், இது முழுவதுமே உண்மை கிடையாது.. நமது உடலின் நலமானது பாதுகாக்கப்படுகிறது. கோழியின் மார்பகத்தில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகளானது, கோழி கால்களில் உள்ளதை விட குறைவாக இருந்தாலும், கோழி மார்பகங்களை தோலுரித்த பிறகு கோழி கால்களில் உள்ள கொழுப்பின் அளவு, மாட்டிறைச்சி மற்றும் செம்மறி ஆட்டு இறைச்சியைவிட குறைவாகவே உள்ளதாம்.

    கோழி கால்கள் இரும்புச்சத்து நிறைந்தவை. அத்துடன், ஏராளமான "கொலாஜன்" இந்த கால்களில் நிரம்பி உள்ளன. இந்த கொலாஜன்தான், நம் உடலில் ஏற்படும் வயதான சுருக்கத்தை தள்ளி போடுகிறது. சருமத்தை பாதுகாக்கிறது. நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவுவதே கொலாஜன்தான்.

    ரத்த சிவப்பணுக்கள்:

    அடிக்கடி கோழிக்காலை சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கிவிடும். நமக்கான ரத்த சிவப்பணுக்கள் அளவை அதிகரிக்கவும் செய்கின்றன. அதுமட்டுமல்ல, கோழியின் கால்களில், புரோட்டீனும், கால்சியமும் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. உடலில் ஏற்படும் காயங்களை விரைந்து குணமாக்க இந்த கால்கள் உதவுகின்றன. மற்ற சிக்கனை போலவே, இந்த கோழியின் கால்களில், குழம்பு செய்யலாம், சிக்கன் ௬௫ செய்யலாம். ஆனால், சூப் செய்து குடிப்பதையே பலரும் விரும்புவார்கள்.

    கால் சூப்:

    இந்த சூப் செய்வதற்கு, முதலில் கோழியின் கால்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கோழி கால்களை அதில் போட்டு, எடுக்க வேண்டும். பிறகு, கோழியின் கால்களில் உள்ள மெல்லிய மஞ்சள் நிற தோலை கையாலேயே உரித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, கால் விரல்களை வெட்டித்தள்ளி விட்டு, கால்களை மட்டும் சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

    கோழிக்கால் குழம்பு:

    இப்போது, ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், கல் உப்பு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், குழம்பு மசாலா தூள் சேர்த்து தண்ணீர் + கோழி கால்களை அதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கொதித்தபிறகு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால், கோழிக்கால் சூப் ரெடி. அதேபோல, வெறும் கோழிகால்களை சுத்தம் செய்து, வெறும் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் சேர்த்தும் சூப் செய்து குடிக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெட்டை ஆடுகளின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்படும்.
    • பொலி கிடாய்களை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    ஆடுகளை பாரம்பரியமாக வளர்த்து வருபவர்கள் ஒரே கிடாயை பல ஆண்டுகள் இனவிருத்திக்காக பயன்படுத்துகின்றனர்.

    இனவிருத்தி மேலாண்மை

    இவ்வாறு பயன்படுத்தும் போது உள் ரத்த சொந்தங்கள் கூடி பிறக்கக்கூடிய பெட்டை ஆடுகளின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் பிறக்கக்கூடிய குட்டிகளில் இறப்பு விகிதம் கூடியும், இனவிருந்திய பண்புகள் மற்றும் வளர்திறன் பாதிப்புடனும் காணப்படுகிறது.

    இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பட்டியில் இனவிருத்திக்காக வளர்க்கப்படும் கிடாக்களை மாற்ற வேண்டும். மாற்று மந்தைகளில் இருந்து பொலி கிடாய்களை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய ரத்த சொந்தங்களை தவிர்த்து உற்பத்தியை மேன்மை அடைய செய்ய முடியும்.

    கொட்டகை பராமரிப்பு முறைகள்

    பகுதிநேர மேய்ச்சல் முறையில் ஆடுகளை லாபகரமாக வளர்க்கலாம். இரவு நேரங்களில் மட்டும் ஆடுகளை அடைப்பதற்கு கொட்டகை அமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு ஆட்டிற்கு 10 சதுர அடி என்ற அளவில் இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும். தரையில் இருந்து 1 அடி உயரத்துக்கு கொட்டகையின் தரைத்தளம் இருக்குமாறு அமைக்க வேண்டும். சாதாரண மண் தரையின் அமைப்பே போதுமானது.

    கொட்டகையின் மத்தி உயரம் 10 முதல் 11 அடியாகவும், சாய்ப்பு உயரம் 78 அடியாகவும் இருக்குமாறு அமைத்தல் அவசியம். வெள்ளாடு கொட்டகையாக இருந்தால் 2½ அடி பக்கவாட்டு சுவரும், செம்மறியாட்டு கொட்டகையாக இருந்தால் 1 அடி பக்கவாட்டு சுவரும் தேவை. மேலும் தரையில் இருந்து 4 அடிக்கு கம்பிவலை அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

    மேய்ச்சல் பராமரிப்பு முறைகள்

    மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளுக்கு குறைந்த விலை தாவர வகை கழிவுகள் மற்றும் உலர் தீவனங்களை கொடுத்து வளர்க்கும் போது அவற்றின் உடல் எடை நன்றாக கூடும். மேலும் ஒரு நாளைக்கு 8 மணி நேர மேய்ச்சல் அவசியமாகிறது. அதிக குளுமை இல்லாத நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்கு அனுப்பலாம் மேலும் மாலை வேளைகளில் ஆடுகள் நன்றாக மேயும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லா இடங்களிலும் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
    • நாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

    நாய்களின் தொல்லை கட்டுப்படுத்த முடியாத பிரச்சினையாக, நாடு முழுவதும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நகரின் ஒவ்வொரு தெருவிலும், சாலையிலும் நாய்கள் கூட்டம், கூட்டமாக திரிந்து கொண்டிருக்கின்றன.

    இந்த நாய்களால் மனிதர்கள் கடி வாங்குவது ஒரு பிரச்சினையாக இருந்தாலும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குறுக்கே பாய்ந்து, மக்களை விபத்துக்குள்ளாக்குவதும் மற்றொரு பிரச்சினையாக இருக்கிறது. நாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

    இதனால் கருத்தடை செய்து கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டாலும், அதற்கு பலன் இல்லை. இந்த நிலையில் உலகம் முழுவதும் ரேபிஸ் விழிப்புணர்வு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    ஹைட்ரோ போபியா

    விலங்குகளிடம் இருந்து ரேபிஸ் என்னும் வைரஸ்கள் ஏற்படுத்தும் இந்த நோயை தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளதே தவிர முழுமையாக குணப்படுத்துவது இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது. உலகில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுகிறார். இந்த நோய் நாய் கடித்தால் தான் பரவும் என்ற தவறான கண்ணோட்டம் மக்களிடையே இருந்து வருகிறது. பாலூட்டி வகை விலங்குகள் மூலமும் பரவுகிறது.

    இந்தியாவில் பெரும்பாலும் தெருவோர நாய்களின் மூலமாகத்தான் இந்த நோய் பரவுகிறது. பாலூட்டி வகை உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும் போது அதன் உமிழ்நீர் ரத்தத்தில் கலந்து அல்லது திறந்த காயங்களில் கலந்து இந்த நோயை ஏற்படுத்துகின்றது.

    வெறிநாய்கடியின் பாதிப்பு ஒருவருக்கு அதிகமாகி உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட நபர் தனக்கு மேலாக சுழலும் மின்விசிறியைக் கண்டு அச்சப்படுவதில் இருந்தும், தண்ணீரை குடிக்க கொடுத்தால் அதை பார்த்து அலறுவதில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். இதை தான் ஹைட்ரோ போபியா என்று கூறுகிறோம். குணப்படுத்தவே முடியாது என்று ஒரு நோய் உண்டெனில் அதுதான் இந்த வெறிநாய்கடி நோய்தான். ஆனால் முறையான விழிப்புணர்வு மூலம் அதனை தடுக்கலாம்.

    மரணம் நிச்சயம்

    உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் பேர் இந்நோய்க்கு பலியாகின்றனர். இந்தியாவில் 14 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.பெரும்பாலும் இந்தநோய் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் மேலோங்கி காணப்படுகிறது. 5 முதல் ௧௫ வயது வரை உள்ள சிறுவர்களே பெரும்பாலும் பலியாகிறார்கள். இந்தநோய் பாதிப்பு அதிகமானால் மரணம் நிச்சயம். ஆனால் முறையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டால் முற்றிலும் நாம் நம்மை இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    உயிரை பறிக்கும் இந்தநோய் எதிர்பாராத நேரத்தில் நம்மை தாக்கக்கூடும். எனவே இதற்கு 100 சதவீத சிகிச்சை தடுப்பூசி மட்டுமே. முறையாக நாய் கடித்த உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். நாய்கடித்த ஒருவருக்கு உடனே முதலுதவி செய்ய வேண்டும். அவருக்கு காயம்பட்ட இடத்தை 15 நிமிடம் சோப்புத்தண்ணீரில் கழுவ வேண்டும். ஏதேனும் ஆண்டிசெப்டிக் மருந்தினை தடவலாம்.

    காயம் பெரியதாக இருந்தால் ரேபீஸ் தடுப்பு புரதத்தை காயத்தை சுற்றிலும் போட வேண்டும். தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனைப்படி வெறிநாய்க்கடி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். ஒருபோதும் நாய் கடித்த இடத்தை கட்டுதல் கூடாது.

    நாய்கடி பட்டவர் 5 தவணை தடுப்பூசியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாய் கடித்த நாள் முதல் தவணையும், 3-ம் நாள் இரண்டாம் தவணையும், 7-ம் நாள் மூன்றாம் தவணையும், 14-ம் நாள் நான்காம் தவணையும், 28-ம் நாள் 5-ம் தவணையும் தடுப்பூசி தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது.

    நம் நாட்டைப் பொறுத்தவரை தெருவோர நாய்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தி, முறையாக தடுப்பூசி செலுத்தினால் வெகுவாக இந்தநோயின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம், அதன்மூலம் பல உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது.
    • வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.

    சரும அழகை கூட்ட என்னென்ன செய்யலாம் என்பதைத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் சிலவற்றைத் தவிர்த்தாலே நம் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பேணிக்காக்க முடியும்.

    முகப்பரு, கரும்புள்ளியை கண்டதும் முகம் பார்க்கும் கண்ணாடியும் கையுமாக மாறிவிடுவோம். முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது. அதிலும் முகப்பருவை போக்க பக்கத்து வீட்டார் கொடுத்த அறிவுரை, நண்பர்களின் டிப்ஸ், கேள்விப்பட்டது கேள்விப்படாதது என எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தால் நீங்காத தழும்பு முகத்தில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    முகத்தை பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சொல்லப்போனால் முகப்பொலிவை பாதுகாக்க இயற்கையில் சருமத்தில் இருந்து எண்ணெய் சுரக்கும். அடிக்கடி முகம் கழுவுவதால் இந்த எண்ணெய் நீக்கப்பட்டு தோலின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.

    இதேபோல் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் பலர். சருமத்தின் அழகு, ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்கள்கூட கழுத்து பகுதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தினமும் காலையும் இரவும் முகத்தில் கிரீம்களை பூசிவிட்டு கையில் இருக்கும் மிச்சம் மீதியை கழுத்தில் தேய்ப்பவர்கள்தான் பெரும்பாலானோர். எதையும் அதிகப்படியாக உபயோகிப்பது கேடு விளைவிக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin