search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth"

    • முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.
    • இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லாதவர்களுக்கு இரட்டை அடி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக்கூட வரிசையில் நிற்கின்றனர்.

    முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.

    ஆட்சேர்ப்பு முடிந்தாலும் கூட கேள்விதாள் கசிந்து விடுகிறது. தேர்வுகள் நடந்தாலும் கூட அதன் முடிவு தெரியாது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு முடிவு வந்தாலும் பணியில் சேர்வதுதை உறுதி செய்வதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.

    ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறை வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறார். இவையனைத்தும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கும் போது, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது, இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது.இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லா தவர்களுக்கு இரட்டை அடி.

    காங்கிரசின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

    • டி.எஸ்.பி., உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • திருச்சி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி சேர்த்து விட்டனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவெறும்பூர் பஸ் நிலையம். இதில் பயணிகளின் இருக்கை பகுதியில் ஒரு பெண் கை, கால் செயல் இழந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கேயே படுத்து கிடந்தார்.

    இந்த பெண்ணால் எழுந்து அருகில் உள்ள பாத்ரூம் செல்ல முடியாததால் அங்கேயே அணைத்து செயல்களையும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    இதனால் பயணிகள் இருக்கை பகுதி மிகவும் அசுத்தமாகவும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறவே பயணிகள் சாலையில் நின்று பஸ் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் மனித நேயம் அன்பழகன், சமூக வலைதளத்தில், இப்பெண் குறித்து பதிவிட்டு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.

    இதனை அறிந்த திருவெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன், உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க திருவெறும்பூர் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து காவலர்கள் ஜான்சன், பிரபு ஆகியோர் திருச்சி மாநகராட்சி அலுவலர் சிவக்குமார் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு சுத்தப்படுத்தி புதிய ஆடை அணிவித்தனர்.

    பின்னர் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி சேர்த்து விட்டனர்.

    இந்த பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகராஜன் என்பவர் மனைவி ராஜேஸ்வரி (வயது 50) என்பதும், அவருக்கு ஒரு கை, கால் செயல் இழந்தவுடன், பராமரிக்க முடியாமல் கல் நெஞ்சம் கொண்ட அவரது மகன் இங்கே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

    உடனடி நடவடிக்கை எடுத்த டிஎஸ்பிக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.
    • உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டி மாவட்டம், ராஜம்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    வேலைக்குச் சென்ற சந்தோஷ் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    போதி ரெட்டி பள்ளி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை சந்தோஷ் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    சந்தோஷ் தங்களை வீடியோ எடுப்பதை கண்ட போலீசார் அவரது செல்போனை பறித்தனர். சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்று பாட்டிலில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு வந்தார்.

    போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

    உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

    அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சந்தோஷ் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இதனைக் கண்டு பதறிய போலீசார் சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சந்தோஷ் உடல் 50 சதவீதம் கருகி உள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வாலிபர் உடலில் தீயுடன் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

    • இசையமைப்பாளர் மணிசர்மா பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    • இவர் தமிழில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    சினிமா திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் மணிசர்மா. இவர் விஜய்யின் 'ஷாஜஹான்', 'யூத்', 'போக்கிரி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.


    இவர் தமிழில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படி பல படங்களுக்கு இசையமைத்த மணிசர்மாவிற்கு வாய்ப்புகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோர் வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அவர்களின் எல்லா படத்திற்கும் நான் இசையமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு வாய்ப்பு கொடுத்தல் ஒரு படத்திற்கு தமனுக்கும் ஒரு படத்திற்கு எனக்கும் தரலாம் அல்லது அவர்களுக்கு இரண்டு படங்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு எனக்கு ஒரு படம் தரலாம். இப்படி செய்தால் வழக்கமான உணர்வு இல்லாமல் மாறுபட்ட உணர்வு ரசிகர்களுக்கு கிடைக்கும்" என்று கூறினார்.


    பல முக்கிய படங்களுக்கு இசையமைத்துள்ள மணிசர்மா இப்படி நேரடியாக வாய்ப்பு கேட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • சக்திவேல் தனது வீட்டு அருகே நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.
    • தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) கூலித் தொழிலாளி.

    அரிவாள் வெட்டு

    இவர் தனது வீட்டு அருகே நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.

    இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் தூத் துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட னர்.

    6 பேர் கைது

    இதில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த வேல்முருகன், கண்ணன், முள்ளக்காடு முனியசாமிநகர் சிவா, பாரதிநகர் கெளிவின்ஸ், தலைவன் வடலியை முத்துக்குமார் மற்றும் இளஞ்சிரார் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
    • பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள்.

    முசிறி:

    என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். அவரது 61-வது நாள் நடைபயண யாத்திரை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபயணம் தொடங்கப்பட்டு முசிறி-துறையூர் பிரிவு சாலை வழியாக முசிறி கைகாட்டியில் முடிவடைந்தது.

    வழியில் அண்ணாமலை முசிறி பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார்.

    தமிழகத்தில் நியாய விலை கடையில் வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு கிலோ விற்கும் 32 ரூபாய் வழங்குகிறது. தமிழக அரசு 2 ரூபாய் வழங்குகிறது. தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகள் கிசான் அட்டை பெற்று விவசாய கடன் பெற்று வருகின்றனர்.

    இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. ஆவின் பாலில் நடக்கும் ஊழலை பா.ஜ.க. கண்டிக்கிறது. ஆவினிலிருந்து வரும் பால் தரக் குறைவாக உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு நாளுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 38 லட்சமாக உள்ளது, 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.

    தமிழகத்தில் அரசே காவிரி மணலை திருடுகிறது. இந்திய துணை கண்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 467 கோடி ரூபாய்க்கு 2 நாட்களில் மதுபானம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாராயத்திற்கு சிறப்பிடம் பெற்றது தமிழகம்.

    விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருப்பவர்கள் தி.மு.க.வினர். பாரதிய ஜனதா கட்சியின் கனவு பெரிது, பெரிய ஊர்கள் வளர்கிறது, சின்ன ஊர்கள் தேய்கிறது, கிராமங்கள் முன்னேற வேண்டும். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை, மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவோம், இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

    பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நல்லாட்சி அமைவதற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தன்னார்வ தொண்டு மற்றும் சமூகசேவை குறித்து சான்றிதழ் படிப்பு பெற கிராமப்புற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
    • விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட அள வில் கிராம ஊராட்சிகளுக் கான மாவட்ட வளமையத் தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வ தொண்டு மற் றும் சமூகசேவை குறித்து மூன்று மாத சான்றிதழ் படிப்பு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சான்றிதழ் வகுப்பு ஆறு நாட்கள் நேரடி வகுப்புகளாக (கள ஆய்வு உட்பட) மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படும்.

    மேலும் கிராம அளவில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங் கள், ஊராட்சிமன்ற அலுவ லகங்கள், வட்டாரவளர்ச்சி அலுவலகங்கள், அங்கன் வாடிகள், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பபள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை குறித்து கள ஆய்வு மேற் கொண்டு அறிக்கை சமர்ப் பிக்க வேண்டும். ஊராட்சி களுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட முன்மாதிரி ஊராட்சிகளுக்கு களப்பய ணம் அழைத்துச் செல்லப்ப டும்.சான்றிதழ் படிப்பிற்கான பாடப்புத்தகம், உபகரணங் கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப்பணியா ளர்கள், கிராம இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர் கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 12-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இப்பயிற்சியில் சேர 18 வயதுமுதல் 45 வயதுவரை உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேரகட்டணமாக ரூபாய் 1000 செலுத்தப்பட வேண் டும். பயிற்சிக் கட்டணம் செலுத்துவது குறித்தும் இப் பயிற்சி தொடர்பான விப ரங்களை தெரிந்து கொள்ள மாவட்ட வளமைய அலுவல ரின் 73976 35445 தெலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

    • மாதவன் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த ஆனந்த் கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.
    • இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அடுத்துள்ள சுந்தர பாண்டியபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த வேல்பாண்டி மகன் ஆனந்த் (22) கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கனகராஜத்தை தாக்கினாராம். மேலும் அவரது கணவர் மாதவனை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன், அருணாசலம் மகன் மனோகரன் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவ இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி நடந்தது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யோக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப் பட்டது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பி னர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டதின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறை களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை/துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவ லக வேலை நாட்களில் விலையின்றி கொள்ளலாம். பெற்று விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்க ளுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி, துணை, இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சார்பில் அறிவானந்தபாண்டியன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ஆதரவற்றோர் இல்லத்திலும், பின்னர் பசுமலையில் உள்ள இன்பா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    மதுரை

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் அறிவுச்சுடர் கே.அறிவானந்த பாண்டியனின் 63-வது பிறந்த நாள் விழா பேரவை யின் அவைத்தலைவர் எஸ்.கே.மோகன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

    நாகமலை, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும், தெப்பக்குளம் அய்ய நாடார் ஜெயலெட்சுமி அம்மாள் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து காமராஜர் அறநிலையத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடை பெற்றது. 12 மணிக்கு தெற்குவாசலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலும், பின்னர் பசுமலையில் உள்ள இன்பா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேரவையின் துணைத்தலைவர் கே.மதனகோபால். பொதுச்செயலாளர் வி.பி.மணி, பொருளாளர் பா.குமார், மாநகர் தலைவர் எஸ்.எம்.மகராஜன், துணைத்தலைவர்கள் எம்.என்.ரவி, ஜி.முத்து. செயலாளர் ஏ.மதிவாணன், துணைச்செயலாளர் ஜி.பி.பாண்டி.

    மதுரை நாடார் உறவின் முறை தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன், ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி துணைத் தலைவர் பி.செந்தில் குமார், துணைச்செயலாளர் சி.பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர் துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிர மணியன்.

    ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்கு லேசன் பள்ளி தலைவர் ஆர். கணேசன், செயலாளர் கே.ஆனந்த், இணைச்செய லாளர் ஒய். சூசை அந்தோணி, பேரவையின் கிழக்குத் தொகுதி கதிர்வேல், முருகேச பாண்டியன், ரவிச் சந்திரன், டேனியல், கிருஷ் ணன். மணிக்குமார், மாரி யப்பன், ராஜா, மதியழகன், காமராஜ்பாபு, மத்திய தொகுதி டி.கார்த்திகை செல்வம், கணேசன், ஜவஹர். பாலன், காசி, பெத்தராஜன்.

    ரவி, சந்திரசேகர். மேற்குத்தொகுதி ஏ.சிவக்குமார், ஜெய்சங்கர், சங்கர், ரவி, ராமலிங்கம். தினேஷ். முத்துராஜ். வடக்கு தொகுதி ஆர்.காசி விஸ்வநாதன், வேலாயுதம். கணேசன் தெற்கு தொகுதி நாகசேகர், வெங்கடேஷ், சுரேஷ், சரவணக்குமார், தன்ராஜ். முருகேசன், முருகானந்தம். விஜய பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை, புன்னம்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதி உள்ளது
    • காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே செங்காட்டனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 33). இவர் தனது பைக்கில், கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை, புன்னம்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதி உள்ளது. பலத்த காயம் அடைந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து பெரியசாமி வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ், காரை ஓட்டி வந்த ஜெகதாபி கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மீது வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அன்பு ராஜா என்பவர் கிருஷ்ணனை வழி மறித்து அவரது சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
    • அதனை கிருஷ்ணன் தடுத்ததால் அவரை அரிவாளால் வெட்ட முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜூவ் நகரை சேர்ந்தவர் கிருஷ் ணன் (வயது 62). இவர் சம்பவத்தன்று புதுக் கோட்டை சாலை யில் வரும்போது குலையன் கரிசலை சேர்ந்த அன்பு ராஜா( 31) என்பவர் வழி மறித்து கிருஷ்ணனின் சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.

    அதனை கிருஷ்ணன் தடுத்ததால் அவரை அரிவாளால் வெட்ட முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×