search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "homosexuality"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    • நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள்.

    ஆஸ்திரேலிய தொழில்முறை கால்பந்து வீரர் ஜோசுவா ஜான் கேவல்லோ. இவர் ஏ லீக் மென் கிளப் அடிலெய்டு யுனைடெட்டின் மத்திய மிட்பீல்டராக விளையாடுகிறார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.

    ஏனென்றால் இவர் தனது திருமணம் குறித்த தகவலை எக்ஸ் தள பதிவில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் யாருமே இல்லாத கிளப் அடிலெய்டு யுனைடெட் ஆடுகளத்தில் தனது வருங்கால பார்ட்னரிடம் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக முட்டிக்கால் போட்டு ப்ரபோஸ் செய்தார். உடனே லெய்டன் வெட்கத்துடன் முகத்தை மூடி கொண்டார்.

    மேலும் என் வருங்கால மனைவியுடன் இந்த ஆண்டு தொடங்குகிறது. இந்த ஆச்சரியத்தை ஏற்படுத்த உதவிய அடிலெய்டு யுனைடெட் நிறுவனத்திற்கு நன்றி. 

    உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள். இது சாத்தியம் என்று நான் கனவிலும் நினைக்காத ஒன்று. மேலும் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் உண்மையாக வாழ ஊக்குவித்தேன்.

    இந்த சிறப்பு தருணத்தை ஆடுகளத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருந்தது.

    இவ்வாறு எக்ஸ் தளத்தில் கூறினார்.

    ஆண்கள் கால்பந்து வீரர்கள் மறைமுகமாக ஓரினசேர்க்கையாளராக இருந்த போதிலும் வெளிப்படையாக அறியப்பட்ட ஒரே ஓரினச்சேர்க்கையாளர் கேவல்லோ ஆவார். 

    • சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புனே:

    மராட்டிய மாநிலம் புனேயில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் 21 வயது மாணவர் ஒருவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை இவர் வாகோலி பகுதியில் உள்ள பகோரி சாலையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓரினச்சேர்க்கை தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் விசாரணையை தொடங்கினோம்.

    அப்பகுதியில் நடை பெற்று வரும் ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவருடன் ஓரினச்சேர்க்கை தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    • பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார்.
    • தந்தை உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    உடுமலை :

    மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூரைச் சேர்ந்த அப்பு குட்டி என்கின்ற ஈஸ்வரன்( வயது 35).இவர் குமரலிங்கத்தில் குடியிருந்து கொண்டு கூலிவேலை செய்து வருகிறார்.ஈஸ்வரன் நேற்று முன் தினம் வழக்கம்போல் அமராவதி பகுதிக்கு கூலிவேலைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது கல்லாபுரத்தைச் சேர்ந்த 13 மற்றும் 8 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் (அண்ணண்,தம்பி) அவர்களது வயலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.அந்த வழியாக வந்த ஈஸ்வரன் இரண்டு சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார்.மேலும் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அமராவதி முதலைப் பண்ணைக்கு அருகே உள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

    பின்னர் அவர்கள் இருவரையும் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அடித்ததுடன் பாலியல் தொந்தரவுக்கும் உட்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை இரண்டு சிறுவர்களும் நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களது தந்தை உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஈஸ்வரனை கைது செய்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சிறுவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கல்லாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுந்தர்ராஜன்என்பவரது கரும்புதோட்டத்தில் திலீப் குமார் பிணமாக கிடப்பதைகண்டனர்.
    • மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது.

    பண்ருட்டி, ஆக.25-

    கடலூர் மாவட்டம்பண்ருட்டி அருகே மாளிகை மேடு புது காலனியைசேர்ந்தவர் திலீப் குமார் (வயது 57)இவர் பண்ருட்டி அருகே வல்லத்தில் உள்ள ரேசன் கடைவிற்பனையாளராக பணியாற்றிவந்தார்.விடுமுறை நாளான கடந்த 23-ந் தேதிவீட்டில்இருந்துள்ளார். அன்று இரவு7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில்சென்றவர் வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவர்கள்அக்கம்பக்கம்தேடினர். எங்கும்கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார்கொடுத்தனர். இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள சுந்தர்ராஜன்என்பவரது கரும்புதோட்டத்தில் திலீப் குமார் பிணமாக கிடப்பதைகண்டனர். உடனே பண்ருட்டி போலீசார் அவரதுஉடலை கைப்பற்றிபண்ருட்டி அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிணமாககிடந்த திலிப் குமார்மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.சினிமா பட பாணியில்மிளகாய் பொடி தூவிஇவரை எதற்காக யார்?கொலை செய்தனர்என்பதுகுறித்து போலீஸார்விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது. பின்னர் அதே இடத்தில் சுற்றி வந்தது. இதனால் இந்தகொலையில் அவரது உறவினர்யாருக்காவது தொடர்பு இருக்குமா?வேறு ஏதாவது தொடர்புகளால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணைசெய்து வந்தனர். அந்தப் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவைஆராய்ந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அரவிந்த் (24) என்பவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அரவிந்த் கூறினார். இதானல் போலீசாருக்க சந்தேகம் வலுத்தது. பின்னர் தனி இடத்தில் வைத்துவிசாரித்தனர்.விசாரணையில் ரேசன் கடை ஊழியர்திலிப் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். தனக்கு அடுத்த மாதம்திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் பணத்திற்காக திலீப் குமாரை கொலை செய்ய முடிவு செய்தேன். திலீப் குமார் ஓரின சேர்க்கை பழக்கம் உள்ளவர் . அவரோடு நான் பலமுறை ஓரினசேர்க்கை ஈடுபட்டுள்ளேன். அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளேன்.

    திருமண செலவுக்கு பணம் கேட்டேன். இல்லை என்று சொல்லிவிட்டார். அவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன். அவரிடம் இருந்து நகைகளை பறித்துக் கொண்டுபோலீஸ் நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க அவரது உடம்பில் மிளகாய் பொடி தூவினேன். பின்னர் அவரது குடும்பத்தினருடன் அவரை தேடுவது போல நடித்தேன் போலீசில் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனை கைதுசெய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து 2 பவுன் செயின், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் ,கொலை செய்த போது அவன் உடுத்தி இருந்த ரத்தக றைபடிந்த அவனதுஉடைகளை போலீசார் பறிமுதல்செய்தனர். ரேசன் கடை ஊழியர் கொலை வழக்கில் துப்பு துலக்கிய பண்ருட்டி போலீஸ் டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் பாராட்டு தெரிவித்தார்

    சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு பாவச்செயல் என முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #Section377 #SupremeCourt
    சென்னை:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓரினச் சேர்க்கையை குற்றம் என்று கூறிய 377வது சட்டப் பிரிவை ரத்து செய்து ஓரின சேர்க்கை செல்லும். ஓரின சேர்க்கை குற்றமில்லை. இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல.

    சமுதாயம் மாறினால் தான் முன்னேற்றம் அடையும். மாற்றங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையோடு இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது இந்திய மக்களின் வரலாற்றை திசை திருப்பி இருப்பது மட்டுமல்ல இந்திய பண்பாட்டை தீர்த்து கட்டியிருக்கும் தீர்ப்பாகவும் இது அமைந்து இருக்கிறது.

    அமெரிக்காவில் 19 மாநிலங்களும் ஐரோப்பாவில் சில நாடுகளும் தெற்காசியாவில் தைவான் உள்பட சில பகுதிகளிலும் ஓரின சேர்க்கைக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிற வரலாறு உலகத்தின் பெருவாரியான மக்களால் எள்ளி நகையாடப்பட்டு வருகிறது.

    இப்பொழுது இந்தியாவையும் உலக மக்களின் ஏளனத்துக்கும், ஏசலுக்கும் உட்படுத்துகிற ஒரு பாதகமான பாவச்செயலை உச்சநீதிமன்றம் செய்து இருக்கிறது. இந்த தீர்ப்பு இந்திய மக்களின் பெரும்பாலாக உள்ளவர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பாகும். இந்த தீர்ப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள். ஒப்பவும் மாட்டார்கள். ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்.

    நீதியற்ற தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள். இந்திய நீதி திசைமாறி இருக்கிறது. தடுமாறி இருக்கிறது. தடம்புரண்டு இருக்கிறது. தரம் தாழ்ந்து இருக்கிறது. இந்திய பாரம்பரியத்தின் பெருமையையும், சிறப்பையும், பாதுகாக்கிற வகையில்

    இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அதோடு இணைந்து அனைத்து மாநில அரசுகளும் மேல் முறையீட்டுக்கு வழிவகை காண வேண்டும். நீதி குலையும் போது நாகரிகங்கள் அழிந்திருக்கின்றன என்னும் வரலாற்று உண்மையை நீதிபதிகளும், ஆட்சியில் உள்ளவர்களும் எண்ணிப்பார்த்து தமது கடமையை செவ்வையான முறையில் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Section377 #SupremeCourt
    நமது நாட்டுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என திருநங்கை நீதிபதி ஜோயிதா மாண்டர் கூறியுள்ளார். #Transgender #JudgeJoyitaMondal
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் லோக்அதாலத் திருநங்கை நீதிபதி என்ற சிறப்புக்கு உரியவர், ஜோயிதா மாண்டர் மாஹி.

    அங்கு வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிற அவர் ஓரின சேர்க்கை, தண்டனைக்கு உரிய குற்றம் அல்ல என்னும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

    இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “நமது நாட்டுக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது” என கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “இப்போதுதான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்” என்றும் குறிப்பிட்டார். #Transgender #JudgeJoyitaMondal
    ஒரே பாலினத்தவர்கள் விருப்பப்பட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக குறிப்பிடும் 377-வது சட்டப்பிரிவை நீக்கக்கோரும் வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கிறது. #Article377
    புதுடெல்லி:

    ’ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் இல்லற வாழ்வின் மகத்துவம் நாளுக்குநாள் மங்கி, மழுங்கி ’யாரோடும் யாரும்’ என்ற நிலைக்கு இன்று மாறிவருகிறது. குறிப்பாக யூடியூபில் சமீபத்தில் வெளியாகி பல்வேறு கடுமையான விமர்சனங்களுக்குள்ளான ‘லக்‌ஷ்மி’ போன்ற குறும்படங்கள் இந்திய கலாசாரத்தையும், தமிழர்களின் கற்புநெறி சார்ந்த வாழ்க்கை முறைகளையும் கேலிப்பொருளாகவும் கடும் கேள்விக்குரியதாகவும் சித்தரித்திருந்தது.

    ஜீன்ஸ், பீட்ஸா போன்ற மேற்கத்திய வாழ்வியில் முறைகளை கடைபிடித்துவந்த இந்தியர்கள் ஆடைகளை மாற்றுவதுபோல் ஜோடிகளையும் மாற்றிக்கொள்வதில் மிகுந்த முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர்.

    இது போதாது என கருதி, வெளிநாடுகளில் உள்ளதுபோல் ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் கணவனும் கணவனுமாகவும் மனைவியும் மனைவியுமாகவும் வாழ விரும்பும் ஓரினச்சேர்க்கை உறவுமுறையில் நம்மவர்களிடையே நாட்டம் அதிகரித்து வருகிறது.

    ஆணும் பெண்ணும் என்னும் இயற்கையின் நியதியை கடந்து கடைபிடிக்கப்படும் பாலியல் வக்கிரங்கள் அனைத்தும் நமது கலாசாரத்தின்படி அருவெறுக்கத்தக்க அம்சமாகவும், பாவச்செயலாகவும், கொடுங்குற்றமாகவும் கருதப்பட்டு வந்தது.

    ஆனால், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், எல்.ஜி.பி.டி. எனப்படும் ஓரினச்சேர்க்கை பிரியர்களின் குரல் தற்போது சட்ட பாதுகாப்பை தேடி ஒலிக்க தொடங்கியுள்ளது.

    பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டப்பிரிவு 377-ன்படி இயற்கை நியதிக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய செயலாக குறிப்பிடுகிறது. இந்த சட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் உறுதிப்படுத்தியது.

    பிரபல பாலிவுட் நடன இயக்குனர் என்.எஸ்.ஜோஹர், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா போன்ற பல்துறை பிரபலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இப்படி உணர்வுப்பூர்வமாகவோ, விளம்பரத்துக்காகவோ தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. ஓரினச்சேர்க்கை பிரியர்களும் இந்நாட்டில் கவுரத்துக்குரிய குடிமக்களாக வாழும் சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே இவ்வழக்குகளின் முக்கிய கோரிக்கையும், சாரம்சமாகவும் உள்ளது.

    இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாய் கிடந்தன.

    இந்நிலையில், லலித் சூரி குழுமம் என்னும் பிரபல விருந்தோம்பல் நிறுவனத்தின் உரிமையாளரான கேசவ் சூரி என்பவரும் இதே கோரிக்கையுடன் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

    தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இந்த வழக்கு முதன்முதலாக விசாரணைக்கு வந்தபோது, இதை அவசர வழக்காக தொடர்ந்து விசாரித்து தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என மனுதாரர் கேசவ் சூரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாலி பாசின் வலியுறுத்தினார்.

    தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா

    தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எ.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அரசியலமைப்பு சட்ட அமர்வின்முன் நடைபெற்றுவரும் இதர வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், இரு ஆண்கள் விருப்பப்பட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக குறிப்பிடும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் இவ்வழக்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

    மத்திய அரசு அளித்த விளக்கத்தின் அடிப்படையிலும் இருதரப்பினரின் வாதப்பிரதிவாதத்தை வைத்தும் ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. அனேகமாக, ஓரினச்சேர்க்கையை குற்றம் என அறிவிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  #Article377 #SCverdict
    ×