என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்"

    • பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும்.
    • கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசினார் அப்போது அவர் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

    அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித திறன்களை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நேரத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும். இந்த திட்டம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இதன் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள்.

    பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும். இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தேச தலைவர்கள் அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் பிடித்த விளையாட்டுகள் சுற்றுச்சூழல் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி கதை சொல்லுதல் நடித்துக் காட்டுதல் ,குழு விவாதம் பட்டிமன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும் .

    பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறங்கள் விழுமியங்கள், பாலின சமத்துவம், நேர்மறை எண்ணங்கள், போதைப் பொருட்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் விரும்பத்தக்க நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு கட்டகம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் .

    இதற்காக பள்ளிகளின் வாராந்திர கால அட்டவணையில் வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் .

    அரசு பள்ளி மாற்று திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்த 46 ஆயிரம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தகுந்த விளையாட்டு சாதனங்கள் பயிற்சிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 8 வது மாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 300 இருக்கைகள் கொண்ட கருத்தரங்க கூடம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.

    இசை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கை பெரும் பொருட்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அறிவித்தார்.

    • மானாமதுரை சிப்காட்டில் தனியார் உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்கப்பட உள்ளது.
    • மக்களின் எதிர்ப்பை மீறி எதையும் செய்யாதீர்கள் என்று மாவட்ட கலெக்டரிடமும், அமைச்சரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

    சிவகங்கை:

    தமிழக முதலமைச்சரால் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்ட "கலைஞர் கைவினைத் திட்டம்" விழா சிவகங்கையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு ரூ.399.79 லட்சம் மதிப்பீட்டில் 174 கைவினை தொழில்முனைவோர்களுக்கு கடனுதவிகள், மானியங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்து கொண்டார். அவர் அமைச்சர் முன்னிலையில் பேசியதாவது:-

    மானாமதுரை சிப்காட்டில் தனியார் உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி எதையும் செய்யாதீர்கள் என்று மாவட்ட கலெக்டரிடமும், அமைச்சரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழரசி எம்.எல்.ஏ. மருத்துவ கழிவு ஆலையை மக்கள் விருப்பத்துக்கு எதிராக அமைக்க வேண்டாம் என அமைச்சர் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
    • புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பஞ்சநதி கோட்டை கிராமத்தில் அதி திறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தமிழகத்தில் முதல் முதலாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பஞ்சநதிக்கோட்டையில் ரூ. 1.41 கோடி மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அதிதிறன் கொள்முதல் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 15 டன் கொள்முதல் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 21.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு இதுவரை 27.72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    நெல் கொள்முதல் நிலையம் நிகழாண்டு இதுவரை 3.61 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 400 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. புதிதாக 18.10 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு அச்சடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் அல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதுபோல் வெற்றி பெற்று சாதித்து காட்டினோம்.

    தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 என்ற இலக்கை அடைவோம் என முதலமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா கையெழுத்திடவில்லை.
    • கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும்

    கேரளாவின் பொதுக் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய பங்கின் நிலுவைத் தொகை முறையே ரூ.280.58 கோடி மற்றும் ரூ.513.54 கோடி என்றும், 2025-26 ஆம் ஆண்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட தொகை ரூ.654.54 கோடி என்றும் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கேரளாவின் கல்வி நிதிக்கான பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்கும் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் கேரளாவைப் பாராட்டும் மத்திய அரசு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

    • லால்குடியில் அமைக்கப்பட்ட மெய்நிகர் நூலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • நூலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திருவெறும்பூர் அருகே உள்ள பாரத மிகுமின் தொழிற்சாலையில் மையத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் தொழில்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார்.

    அப்போது பேசிய அவர் தொழில் கல்வி என்பது ஒருவரை நாடி நாம் செல்ல தேவையில்லை என்றும், நமக்கு நாமே முதலாளி என்றும் கூறினார். ஆகையால் இந்த தொழில் கல்வியில் கவனம் செலுத்தி ஒவ்வொரு மாணவர்களும் முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக தமிழகத்தில் முதன் முதலாக லால்குடியில் அமைக்கப்பட்ட மெய்நிகர் நூலகம் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்த வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் 76 நூலகங்களுக்கு ஒரு நூலகத்திற்கு 2 மெய்நிகர் கருவிகள் விதம் 152 மெய்நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இக்கருவிகளை பயன்படுத்துவது தொடர்பான விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளில் உள்ள நூலகங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளை காப்பு விழா நடந்தது.

    கா்ப்பிணிப் பெண்க ளுக்கு வளைகாப்பு பொருட்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு கா்ப்பிணிப் பெண்ணும் நிலைப்பாட்டை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசே சமுதாய வளைகாப்பு விழாவை நடத்துகிறது. அதன்மூலம் ஏழை, பணக்காரா் என பாகுபாடின்றி ஒரே நிலையில் அனைத்து மதத்தை சேர்ந்த கா்ப்பிணிப் பெண்களுக்கு இந்த விழாவின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டா ரங்களில் உள்ள 43 தொகுதிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 611 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒரு தொகுதிக்கு 50 கர்ப்பிணிப் பெண்கள் வீதம் 43 தொகுதிகளில் 2 ஆயிரத்து 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற உள்ளது.

    அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.

    கா்ப்பிணி தாய்மார்கள், கா்ப்பகால மாதம் முதல் தொடங்கி, 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து, சாியான மாதாந்திர பாிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தை யைப் பெற்றெடுப்பதுடன், தானும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

    அதன்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயா்தர சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது கா்ப்பகால உயிரிழப்பு என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் 150 கா்ப்பிணி தாய்மா ர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1000 தொகையை வழங்கினார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) பரமேஸ்வரி, நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் புசலான், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் தங்கம், திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி சேகர், ஹரி சரண்யா, திருப்பத்தூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3.19 கோடி மதிப்பில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினா்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சா் தங்கம் தென்னரசு அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். பின்னர்அவர் பேசியதாவது:-

    இந்த பகுதியில் கடந்த வருடம் பெய்த மழையால் வௌ்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள மந்திரிஓடை அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான 54 நாிக்குறவா் இன குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் தலையணை, பாய்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இப்பகுதி நாிக்குறவா் இன மக்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சா் உத்தரவின்போில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை-சத்திர புளியங்குளம் சிறு பாலம் அமைப்பதற்கும், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.5.75 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கும், ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.1.82 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைப்பதற்கும், 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிகள் செய்வதற்கும், ரூ.3.10 லட்சம் மதிப்பில் போர்வெ்ல் அமைத்து குளியல் தொட்டி அமைப்ப தற்காகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூ.47 லட்சம் மதிப்பில் நாிக்குறவா் காலனி பாதுகாப்பிற்காக அருகில் உள்ள காரியாபட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 636 மீ பள்ளி சுற்றுச் சுவா் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.96.51 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமல்லாமல், 25 சதவிகித கனிமவள நிதி திட்டத்தின்கீழ், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினருக்கு வீடு ஒன்றிற்கு தலா ரூ.5.90 லட்சம் வீதம் மொத்தம் 54 வீடுகளுக்கு ரூ.3 கோடியே18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்று, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினுடைய நலத்தி ட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் கல்யாணகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவா் செந்தில், யூனியன் துணைதலைவர் ராஜேந்திரன், பிரமுகர் கண்ணன், செல்லம், கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • பெருவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடை சரியாக செயல்படவில்லை. அங்கு பொது மக்களுக்கு 1½ லிட்டர் மண்எண்ணை தான் வழங்கப்படுகிறது.
    • கோட்டை விளை பகுதியில் ரோட்டில் சாக்கடை விடப்படுகிறது. அங்கு கோவில் உள்ள பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை வணிகர் தெரு பகுதியில் பகுதி சபா கூட்டம் இன்று நடந்தது.மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

    பெருவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடை சரியாக செயல்படவில்லை. அங்கு பொது மக்களுக்கு 1½ லிட்டர் மண்எண்ணை தான் வழங்கப்படுகிறது. மோசமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    கோட்டை விளை பகுதியில் ரோட்டில் சாக்கடை விடப்படுகிறது. அங்கு கோவில் உள்ள பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பெருவிளை பகுதியில் வரி வசூல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகைகள் தற்பொழுது வழங்கப்படவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறுகையில், பெருவிளையில் 10 நாளில் வரி வசூல் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டவிளை பகுதியில் சாக்கடைகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    மேலும் அந்த பகுதியில் மழை நீர் தேங்காதவாறு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கலெக்டர் அரவிந்த் கூறுகையில், பெருவிளை ரேஷன் கடையில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உதவி தொகை வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்பட வில்லை. ஆவணங்கள் முறையாக இருந்தால் உடனடியாக உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க ப்படும்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வழங்க ப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்றார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து அதை தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கு முத்தாய்ப்பாக ஒவ்வொரு வார்டுகளிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டங்கள் நடத்தி பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பெயரில் தற்போது இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் இந்த கூட்டங்களில் உங்களது கருத்துக்களை தெரிவிக்க லாம். அந்த கருத்துக்களின் அடிப்படையில் உங்களது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது ரூ.5¾ லட்சம் கோடி கடன் இருந்தது. அதையும் சமாளித்து தற்பொழுது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறார்கள். இருசக்கர வாகனங்களில் சென்று ஆய்வு செய்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு உள்ளார்கள். அதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொ ண்டு வருகிறோம். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். குமரி மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    கூட்டத்தில் மண்டலத் தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், காங்கிரஸ் நிர்வாகி சிவ பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் விரிவாக்க கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி வரவேற்றார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று விரிவாக்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அவர் பேசியதாவது:-

    பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அதிகமாக செய்துதர வேண்டும். பொதுமக்கள் அலுவலகத்துக்கு வந்து செல்லும் வகையில் நகராட்சிக்கு போதுமான கட்டிடங்கள், பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் முதல்கட்டமாக தற்போது ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவாக்க கட்டிடம் 4800 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இன்னும் பல திட்டங்கள் மானாமதுரை நகராட்சிக்கு வர உள்ளது.

    கடந்த 1½ ஆண்டுகால முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் அமலில் இருந்த பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் தற்போது நகர்புறங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மானாமதுரை நகராட்சியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் எந்த திட்டங்களையும் ரத்து செய்யாமல் மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்து நிதி நெருக்கடியான இந்த கால கட்டத்திலும் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பொதுமக்கள் எப்போதும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அர் பேசினார்.

    விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட விழிப்புணர்வுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றியத்தலைவர் லதா அண்ணாதுரை, ஆணையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் இடைக்காட்டூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் வரவேற்றார்.

    • வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    • 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாமினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் 43,400 நபர்களும், மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ் 18,70 லட்சம் பயனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு 1.99 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1298 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சக்திவேல் பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணி நவம்பர் 11-ந் தேதி தொடங்குகிறது.
    • 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    கரூரில் வருகிற 11-ந் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி வழங்கியிருந்தது. சட்டபேரவையில வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்திருந்து காத்திருந்தனர்.

    அதில் முதல் ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் அரவகுறிச்சியில் உள்ள தடாகம் பகுதியில் நவம்பர் 11-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    மேலும் கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
    • முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மேல்நிலைப்பள்ளி, நீராவி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமசாமி பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    அமைச்சர் ராஜ கன்ணப்பன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளி குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும். கிராமங்கள் தோறும் பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும். அதற்கான பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார். தமிழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடுமையாக திராவிட இயக்கம் எதிர்க்கும்.

    திராவிட தலைவர்களில் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பிறகு மு.க.ஸ்டாலின் மட்டுமே உள்ளார். தமிழ்மக்களில் 88 சதவீதம் பேர் திராவிட இயக்கத்தில் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. மந்திரி, எம்.எல்.ஏ. பதவி வரும்-போகும். எந்த பதவியில் இருந்தாலும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

    முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கமுதியில் மில் தொடங்கப்பட உள்ளது. நான் படிக்கும் காலத்தில் கிராமங்களுக்கு பஸ் வராது. 8 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்வோம். இப்போது அப்படி இல்லை. கிராமங்களுக்கே பஸ் வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பெருநாழி போஸ், முதுகுளத்தூர் பூபதி மணி, கடலாடி ஆறுமுகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×