என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்"

    • 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
    • இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் சந்திக்க உள்ளார்.

    குஜராத் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

    முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார்.

    புதிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.     

    • ‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ என்று அந்த ஏஐ அமைச்சருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
    • அல்பேனிய பிரதமா் எடி ராமா அறிவித்தார்.

    உலகில் முதல் முறையாக அல்பேனியா நாடு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சரை நியமித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அந்நாட்டு அமைச்சரவையில் ஊழல் தடுப்புத் துறை அமைச்சராக ஏஐ நியமிக்கப்பட்டதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா நேற்று அறிவித்தார்.

    'சூரியன்' என்று பொருள்படும் 'டியெல்லா' என்று அந்த ஏஐ அமைச்சருக்கு பெயரிடப்பட்டுள்ளது.

    டியெல்லா, 100 சதவீத ஊழல் இன்றியும் விரைவாகவும் வெளிப்படையாகவும் அரசு ஒப்பந்தங்களை கையாள உதவும் என்று பிரதமா் எடி ராமா தெரிவித்தார்.

    1990 இல் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு அல்பேனியாவில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. டியெல்லாவின் வருகை மக்களுக்கு நம்பிக்கையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
    • இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.

    ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.

    குறிப்பாக கடுமையான கிரிமினல் குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

    எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர்.
    • நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவை தொகுதி தி.மு.க. பாக நிலை முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார்.

    அமைச்சர் சசிவ சங்கர்,ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று வருவதை திண்ணை பிரச்சாரம் செய்வது, தோழமை கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது, கட்சிக்கு எதிரான பொய், அவதூறுகளை முறியடிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து களமாடுவது, புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது, 2 மாதங்களுககு முன்பு வரை நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தோம்.

    தற்போது நமது கூட்டணியில் எந்தவித சஞ்சலமும், சலசலப்பும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஆனால் எதிரணியினர் அப்படி அல்ல. பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்துவிட்டனர். ஆட்சி அமைந்தால், அந்த அமைச்சரவையில் பா.ஜ.க.வும் பங்கு பெறும் என்று கூறி வருகின்றனர்.

    ஆகையால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. பா.ம.க.-வினருக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நமக்கு ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது அரியலூர், பெரம்பலூரில் நமக்கு கூடுதல் பலம்.

    பா.ஜ.க.-வினர் தாங்கள் தேர்தலில் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. வெல்லக்கூடாது என நினைக்கின்றனர். அதனால்தான் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர். நாளையே முதல்வராவது போல் நான் உங்களோடு வரவில்லை, அவர்களோடு செல்லவில்லை என கூறிக் கொண்டுள்ளார்.

    அதற்கெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. இளைஞரணியினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவது நமது கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
    • அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார்.

    அரியலூர்:

    கோவையில் கொடீசியா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரின் மூலமாக அரியலூர் நோக்கி புறப்பட்டார்.

    அப்போது அமைச்சர் சிவசங்கர் கரூர்-மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி டீ குடித்தார். அந்த உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.

    இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர்களிடம் உணவு மற்றும் காபி, டீ ஆகியவற்றை உண்பதற்கு உங்களுக்கென்று குறிப்பிட்ட இடத்தினை அரசு ஒதுக்கி இருக்கிறது. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள். உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது என்று வினவியுள்ளார்.

    அமைச்சர் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாத அப்போது அவர்கள் சற்று புலம்பியவாறு ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க? உங்க வேலையை பருங்க என்பது போல பதில் அளித்துள்ளனர். உடனே அமைச்சர் சிரித்தவாறு, நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? என கேட்டார்.

    நீங்கா யாருன்னு தெரியலையே என டிரைவர், கண்டக்டர் கூறினார்கள். அதற்கு அமைச்சர் சிவசங்கர், நான் தான்பா உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என கூறியதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் அவரிடம் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தனர். உடனே அமைச்சர் சிவசங்கர், இனி இதுபோன்று நடக்காமல் உங்களுக்கு உரிய இடங்களில் மட்டும் பேருந்தை நிறுத்தி உணவருந்தி விட்டு எடுத்து செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

    அதிர்ச்சியில் இருந்து மீளாத டிரைவர், கண்டக்டர் இருவரும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று கூறினர். பின்னர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு அரியலூர் நோக்கி சென்றார்.

    • தி.மு.க.வினரே இந்த ஆட்சியின் மீது கடும் அதிர்ச்சியுடன் இருந்து வருகிறார்கள்.
    • அ.தி.மு.க.வை போன்று தி.மு.க. பலமான கட்சி கிடையாது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

    தி.மு.க.வினரே இந்த ஆட்சியின் மீது கடும் அதிர்ச்சியுடன் இருந்து வருகிறார்கள். அ.தி.மு.க.வை போன்று தி.மு.க. பலமான கட்சி கிடையாது.

    எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். அடுத்த ஒரு வருடம் சுறு சுறுப்புடன் நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.

    பூத் கமிட்டி நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டு அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். விளையாட்டு அணி உட்பட அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கு தயாராகிவிட்டார்கள்.

    வருகிற தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் புதிய ஆட்சி அமையும்.

    இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

    • மொழிக் கொள்கையில் பல்வேறு மாநிலங்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
    • கீழடி தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.

    திருவிடைமருதூர்:

    கும்பகோணம் அருகே ஆடுதுறையில் செய்தியாளர்களை அமைச்சர் கோவி.செழியன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆங்கிலம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்து இந்தியையும், வட மொழியையும் திணிப்பதற்கான வழிதான்.

    அவரது கருத்தை என்றும் தமிழகம் ஏற்காது. மொழிக் கொள்கையில் பல்வேறு மாநிலங்கள் இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.

    ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு கூட மாநில மொழி பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாக இருக்கிறார் என கூறியுள்ளார்.

    கீழடி தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது.

    5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை தமிழர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தினர் என்பது உலகினரை அதிசயித்து பார்க்க வைத்து உள்ளது.

    இந்தியாவில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் முன்னிலையில் டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் திட்டினார்.
    • எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியது

    கோவா மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரியை (CMO) பொதுமக்கள் முன்னிலையில் பாஜக அமைச்சர் விஸ்வஜித் அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவா மருத்துவக் கல்லூரியில் மக்கள் முன்னிலையில் டாக்டர் ருத்ரேஷ் குட்டிகரை அமைச்சர் பகிரங்கமாக சத்தம் போட்டது வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த வீடியோ வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்ததையடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரியது. இதன் காரணமாக, அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், என்னை அவமதித்த அதே இடத்திற்கு வந்து அமைச்சர் ரானே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மருத்துவர் ருத்ரேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய மருத்துவர் ருத்ரேஷ், "என்னை பொதுவெளியில் வைத்து அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ரானே, அதே இடத்திற்கு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டூடியோவுக்குள் மன்னிப்பு வீடியோ எடுத்து வெளியிடுவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார். 

    • புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
    • நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவீதம் குறைத்து, 75 சதவீதம் தான் கடன் வழங்கப்படும்

    சென்னை:

    அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

    ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும் பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

    குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவீதம் குறைத்து, 75 சதவீதம் தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.

    அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.

    அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதி முறையைக் கடந்த மாதம் ஆர்.பி.ஐ. கொண்டு வந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ஆர்.பி.ஐ. உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெஸ்ட் புதுவை தோல்வியடைந்துவிட்டது.
    • மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் எற்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    கவர்னர், முதலமைச்சரிடையே எந்த மோதலும் இல்லை என்றும் அரசியல் காழ்புணர்ச்சியால் நாராயணசாமி உள்நோக்கத்தோடு பேசுகிறார் என அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்தார்.

    இந்த நிலையில் மது ஆலைகளுக்கு அனுமதி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மீது அதிருப்தியில் இருப்பதாக மீண்டும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. எங்கு பார்த்தாலும் ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு கும்மாளம் போடுவதுதான் ஆன்மிகமா? ஒரு புதிய தொழிற்சாலை இல்லை, தரமான சுற்றுலா இல்லை. கலாச்சார சீரழிவுதான் நடக்கிறது.

    பெஸ்ட் புதுவை தோல்வியடைந்துவிட்டது. மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை. அனைத்து திட்டங்களும் படிப்படியாக கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறுகிறார். ரேஷன்கடைகளை திறக்க முடியவில்லை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000ம் கிடைக்கவில்லை. மக்களை ஏமாற்ற அவர் நினைக்கிறார்.

    உள் கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை. முதலமைச்சர், அமைச்சர்கள், ஊழல் செய்வது குறையவில்லை. அமைச்சர்கள் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர்.

    மதுபான தொழிற்சாலைகளுக்கு, அனுமதி மற்றும் தனக்கு வேண்டிய அதிகாரிகள் இடமாறுதலுக்கு அனுமதியளிக்காததால் கவர்னர் மீது முதலமைச்சர் அதிருப்தியில் உள்ளார். புதுவையில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. இந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • மீனவர்களுக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.
    • சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை வரிசையாக அறிவித்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு செயல்படுத்தும்.

    அதன்படி சமீபத்தில் அறிவித்த மீனவர்களுக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். ரேசன் கார்டிற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் கோதுமையும் வழங்கப்படும்.

    புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார். அப்போது அவரிடம் மாநில அரசுக்கு நிதி, நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் உதவியை கோரினேன். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொள்கையான மாநில அந்தஸ்து விவகாரத்தை எங்கள் அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

    இப்பொழுதும் வலியுறுத்தினேன். தொடர்ந்து வலியுறுத்துவோம். இது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். நம்பிக்கைத் தான் வாழ்க்கை. அதே நம்பிக்கையில் தான் மாநில அந்தஸ்திற்கு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிடைக்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
    • முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    டெல்லி வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் நகதாணியுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார்.

    தற்போதைய பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு நிலை குறித்து இருவரும் பேசினார்கள். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை பற்றி அவர்கள் விவாதித்தனர்.

    இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடனான வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்காக ஜப்பான் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    இந்தியா-ஜப்பான் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்கள் மகத்தான பங்களிப்புக்காக உங்களை பாராட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன்

    இவ்வாறு அவர் கூறினார்.

    முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    லாவோஸ் நாட்டில் 2024-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது இருவரும் சந்தித்தனர். தற்போது 6 மாதங்களுக்கு பிறகு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் 2-வது முறையாக சந்தித்து உள்ளனர்.

    ×