என் மலர்
கோவா
- சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
- ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும்.
கோவாவில் குஷாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி, 77 அடி உயர பிரமாண்ட ஸ்ரீ ராமர் வெண்கலச் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மடம் உருவாக்கிய 'ராமாயண கருப்பொருள் பூங்காவையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார்.
சிலைத் திறப்புக்குப் பிறகு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா தற்போது ஒரு பிரம்மாண்டமான கலாசார மறுமலர்ச்சிக்கு சாட்சியாக உள்ளது. இன்றைய இந்தியா புதிய தீர்மானங்கள் மற்றும் புதிதாகக் கிடைத்த நம்பிக்கையுடன் தனது கலாசார அடையாளத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுவது, காசி விஸ்வநாதர் கோவில் மறுசீரமைக்கப்படுவது, மற்றும் உஜ்ஜயினியில் மகாகால் கோவில் விரிவுபடுத்தப்படுவது ஆகியவை, தேசத்தின் ஆன்மீகப் பாரம்பரியம் புத்துயிர் பெறுவதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
நம் இளைஞர்களின் ஆற்றல், வளர்ந்து வரும் தன்னம்பிக்கை மற்றும் நமது கலாசார வேர்களுடனான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு அனைத்தும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை வடிவமைக்கின்றன.
ஆன்மீகம், தேசிய சேவை ஒரே நோக்கத்தில் இணக்கத்துடன் முன்னேறினால்தான், வளர்ந்த இந்தியாவிற்கான நமது இலக்கு நிறைவேறும். மேலும் மக்கள் நீர் பாதுகாப்பு மற்றும் சுதேசி பொருட்களை வாக்குகுதல் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார்
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், கர்நாடகாவின் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்து கோவா பயணமானார். அங்கு மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலையை திறந்துவைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- சிலை திறக்கும் நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனாஜி:
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பிற்பகலில் 77 அடி உயர ஸ்ரீராமர் சிலையை திறந்து வைக்கிறார். இதையடுத்து, பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்றது.
- இந்தத் தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடந்தது.
கோவா:
11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் சீனாவின் வெய் யீ, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ் இடையிலான இறுதிச்சுற்றின் முதலாவது ஆட்டம் சமனில் முடிந்தது. இதன் 2-வது ஆட்டமும் சமனில் முடிந்தது.
இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடந்தது.
இறுதிப்போட்டியின் டை பிரேக்கரில் சீன வீரர் வெய் யீயை உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஜவோகிர் சிந்தரோவ் தனது 19 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
ரஷியாவின் ஆந்த்ரே இசிபென்கோ 2-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன. முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன் உடனான ஆட்டம் டிரா ஆனது. 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, லெவான் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
இந்நிலையில், காலிறுதியில் சீனாவின் வெய் யீ, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசியை 2.5 -1.5 என்ற புள்ளியில் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் எரிகைசி தொடரில் இருந்து வெளியேறினார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி காலிறுதிக்கு முன்னேறினார்.
பனாஜி:
பிடே 11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, மெக்சிகோவின் ஜோஸ் மார்ட்டினஸ் ஆகியோர் இடையிலான 5-வது சுற்றின் 2 ஆட்டங்களும் டிரா ஆனது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு நகர்ந்தது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய டைபிரேக்கரிலும் முதல் 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் ஒரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஹரி கிருஷ்ணா 59-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.
மற்றொரு ஆட்டத்தில் 30-வது நகர்த்தலில் டிராவுக்கு ஒப்புக்கொண்டார். இறுதியில் ஹரி கிருஷ்ணா 2.5 - 3.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார்.
இன்று தொடங்கும் கால் இறுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி சீனாவின் வெய் யிடம் மோதுகிறார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் அரி கிருஷ்ணா 5-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் ஐந்தாவது சுற்றுப் போட்டிகள் நடந்தன.
நேற்று நடந்த முதல் சுற்றில் அர்ஜூன் ஏரிகைசி, அமெரிக்காவின் லெவான் அரோனியன் உடனான ஆட்டம் டிரா ஆனது.
இந்நிலையில், இன்று நடந்த 5-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, லெவான் அரோனியனை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் நான்காவது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.
இந்நிலையில், 4வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் 2 ஆட்டங்களிலும் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை பதம் பார்த்து (3-1) காலிறுதிக்கு முந்தைய 5-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
இதேபோல் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசை வீழ்த்தினார்.
மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா 4வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது.
நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.
2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 3வது சுற்றில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
மேலும், அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெங்கடேஷ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்திய வீரர்களும் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
- கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
- மூன்றாவது சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பனாஜி:
கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில், 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் குகேஷும், ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனும் மோதிக்கொண்டனர்..
இருவருக்குமான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் ஃபிரெடிரிக் ஸ்வேனே குகேஷை வீழ்த்தினார் . இதனால் மூன்றாவது சுற்றிலேயே குகேஷ் தொடரிலிருந்து வெளியேறினார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இரவு உணவு அருந்தினார்.
- இன்று காலை, ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் ஒரு யோகா அமர்வில் அவர் கலந்து கொண்டார்,
நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி கோவா கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படை கப்பலில் தீபாவளியை கொண்டாடினார்.
ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்தபோது, பிரதமர் மோடி மிக் 29 கே போர் விமானங்களால் சூழப்பட்ட விமான தளத்திற்குச் சென்றார்.
பிரதமர் மோடி முன்பு ஐஎன்எஸ் விக்ராந்தின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பல்வேறு தேசபக்தி பாடல்களைப் பாடினார்கள். இதில் ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப்படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் அவர்களால் எழுதப்பட்ட பாடல் அடங்கும்.
கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இரவு உணவு அருந்தினார். இன்று காலை, ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் ஒரு யோகா அமர்வில் அவர் கலந்து கொண்டார்,
ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி ஒரு ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். இதனையடுத்து அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
- பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தோம்.
- அரியானா சட்டசபை மற்றும் குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனியாக சென்றுவிட்டது.
காங்கிரஸ் எப்போதும் அதன் கூட்டாளிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. கோவாவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அமித் பலேகர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் 2027ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் பலேகர் கூறியதாவது:-
கோவாவில் பொதுவாக சொல்லப்படும் விசயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பது மாதிரி. ஏனென்றால் இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் அங்கு மாறிவிடுவார்கள். இது கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் எம்.எல்.ஏ.க்களை பெறும்போது, அவர்கள் பாஜக-வில் இணைந்து விடுவார்கள். கோவாவில் இப்படி நடந்ததை இரண்டு முறை பார்த்திருக்கிறோம். இதனால் மக்கள் அவ்வாறு உணர்கிறார்கள்.
கடந்த மக்களை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தது. ஆனால், குஜராத் (இடைத்தேர்தல்) மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அதன் கூட்டாளியை (ஆம் ஆத்மி) விட்டு விலகி துரோகம் இழைத்தது. காங்கிரஸ் உடன் கூட்டணி உருவாக்குவதற்கான கேள்விக்கே இடமில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
40 தொகுதிகளை கொண்ட கோவாவில் ஆம் ஆத்மிக்கு 2 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.






