என் மலர்
நீங்கள் தேடியது "உலக கோப்பை செஸ்"
- 4-வது சுற்றில் அதிவேகமாக காய் நகர்த்தும் டைபிரேக்கர் நடந்தது.
- ரஷியாவின் டேனில் துபோவுடன் மோதிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தை டிரா செய்தார்.
கோவா:
11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் 4-வது சுற்றில் அதிவேகமாக காய் நகர்த்தும் டைபிரேக்கர் நேற்று நடந்தது. ரஷியாவின் டேனில் துபோவுடன் மோதிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தை டிரா செய்தார். அடுத்த ஆட்டத்தில் 53-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். முடிவில் பிரக்ஞானந்தா 1.5-2.5 புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார். கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.
மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் 2 ஆட்டங்களிலும் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை பதம் பார்த்து (3-1) கால்இறுதிக்கு முந்தைய 5-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசை வீழ்த்தினார்.
- தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார்.
- இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார்.
கோவா:
'பிடே' 11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 2 ஆட்டங்கள் இடம் பெறும். எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், விதித் குஜராத்தி 3-வது சுற்றுடன் நடையை கட்டினர்.
இந்த நிலையில் போட்டியின் 4-வது சுற்றில் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஒரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. 41-வது நகர்த்தலில் டிரா கண்டார். இவர்கள் இருவரும் இன்று மீண்டும் மோத உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர் 5-வது சுற்றுக்கு முன்னேறுவார். இதிலும் சமநிலை நீடித்தால் ஆட்டம் டைபிரேக்கருக்கு நகரும்.
மற்றொரு இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார். 20-வது நகர்த்தலிலேயே இருவரும் டிராவுக்கு ஒப்புக் கொண்டனர். இதே போல் கார்த்திக் வெங்கட்ராமன், பிரணவ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர். இன்று 4-வது சுற்றில் 2-வது ஆட்டம் நடைபெறும்.
- 11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
- நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
பனாஜி:
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம் பெற்றனர். 2-வது சுற்று முடிவில் 74 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். 3-வது சுற்று கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த சுற்றுக்கு 10 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.
3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
விதித் குஜராத்தி, எஸ்.எல்.நாராயணன், உலக சாம்பியன் டி.குகேஷ், பிரனேஷ், தீப்தியான் கோஷ் ஆகிய 5 வீரர்களும் 3-வது சுற்றில் தோற்று வெளியேறினார்கள்.
இன்று ஓய்வு நாளாகும். 4-வது சுற்று ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் ஆட்டமும், 12-ந்தேதி 2-வது ஆட்டமும், தேவைப்பட்டால் 13-ந்தேதி டை பிரேக்கரும் நடைபெறும். இந்த சுற்றில் மொத்தம் 32 வீரர்கள் ஆடுவார்கள்.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனியல் டுபோவுடன் மோதுகிறார். அர்ஜூன் எரிகைசி அங்கேரியை சேர்ந்த பீட்டர் லிகோவை சந்திக்கிறார்.
பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீடனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகுவாங்குடனும் மோதுகிறார்கள்.
- அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது.
நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.
2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 3வது சுற்றில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
மேலும், அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெங்கடேஷ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்திய வீரர்களும் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
- அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும்.
- போட்டி நடைபெறும் நகரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது
இந்நிலையில், 2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என பீடே அறிவித்துள்ளது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் பீடே விளக்கம் அளித்துள்ளது.
- உலக கோப்பை செஸ் அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.
- அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேற்றம் அடைந்துள்ளார். அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார்.
அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் சாதனையால் தமிழகம் பெருமைக் கொள்கிறது. இறுதிப்போட்டியில் வெற்றியடைய வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- உலக கோப்பை செஸ் போட்டிக்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
- இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சென் விளையாட உள்ளனர்.
உலக கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் மோதுகின்றனர். இந்த போட்டியை இந்திய மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கினறனர்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா கேண்டிடேட் செஸ் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் அடுத்த ஆண்டு உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் கேண்டிடேட் செஸ் போட்டியில் விளையாட உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கேண்டிடேட் செஸ் போட்டியில் வெல்லும் பட்சத்தில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனுடன் மோதும் வாய்ப்பை பிரக்ஞானந்தா பெறுவார்.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று நாளை நடைபெற இருக்கிறது.
- பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிரா ஆனது.
- இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் முதல் சுற்று இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் நடைபெற்றது. 35 நகர்வுகள் வரை இந்த போட்டி நீடித்தது. ரூக் நைட் பான் எண்டிங்கை நோக்கி போட்டி சென்ற காரணத்தால், இருவரும் போட்டியை சமன் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.
கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இறுதிப்போட்டி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி அளித்துள்ளார். அதில், "கடினமான போட்டியாகத்தான் இருக்கும், வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார். ஓய்வு எடுத்துவிட்டு, நாளை புத்துணர்ச்சியுடன் திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சியை செய்வேன்," என்று தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரரானார் பிரக்ஞானந்தா.
- இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று இன்று நடைபெற இருக்கிறது.
- இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.
- இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், போட்டியின் 2-வது சுற்று இன்று நடைபெற்றது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் விளையாடினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. டைபிரேக்கர் சுற்று நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






