என் மலர்
நீங்கள் தேடியது "செஸ்"
- சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியாவில் நடைபெற்றது.
- முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.
இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்றது.
9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ரேபிட் பிரிவில் 9-வது மற்றும் கடைசி சுற்றில் சென்னையை சேர்ந்த 19 வயது குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் குகேஷ் 36-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9-வது சுற்று முடிவில் குகேஷ் 14 புள்ளிகள் பெற்று (6 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) சாம்பியன் பட்டம் வென்றார்.
போலந்து வீரர் ஜான் கிர்சிஸ்டோப் டுடா (11 புள்ளி) 2-வது இடமும், முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பாபியனோ கருனாவுடன் (இருவரும் தலா 9 புள்ளி) இணைந்து 4-வது இடம் பெற்றார். இதைத்தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவு போட்டி நடக்கிறது.
- அவரை பலவீனமான வீரர்களில் ஒருவராக நான் கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.
- போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாகப் பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும்.
இந்திய இளம் கிராண்ட் மாஸ்டரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ் குரோஷியாவில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் 2025 போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பெற்றார்.
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியின் ஆறாவது சுற்றில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், கார்ல்சனை தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம், போட்டி புள்ளிகள் பட்டியலில் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறினார். போட்டிக்கு முன்பு பேசிய கார்ல்சன், "இதுபோன்ற போட்டிகளில் குகேஷ் சிறந்து விளங்க முடியும் என்று எதையும் நிரூபிக்கவில்லை. அவரை பலவீனமான வீரர்களில் ஒருவராக நான் கருதுகிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால் குகேஷ் அவரை வென்றது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாகப் பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும். முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவ் மற்றும் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருவானா ஆகியோருக்கு எதிராகவும் குகேஷ் வெற்றி பெற்றார்.
- இஸ்லாமிய ஷரியாவில் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
- "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.
இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
இது நாட்டின் "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன.
இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறினார்.
இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- சிவகங்கை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள சுந்தரநடப்பு தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் 234 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்தார். முன்னதாக மாணவர்களுடன் கலெக்டரும் செஸ் விளையாடி உற்சாகப்படுத்தினார். இதில் முதல்வர் இக்னேஷியல்தாஸ், செயலாளர் கண்ணன், பிரகாஷ், மணிமாறன் மற்றும் மாவட்ட செஸ் வீரர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
- நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.
- 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல்:
மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.
அதையடுத்து, மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். அதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஸ்டிரா உள்பட, 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில், செமி பைனலில், மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவரை எதிர்த்து விளையாடிய நவீன்குமார் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில், தமிழக மாணவரை எதிர்த்து விளையாடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
தேசிய அளவில் சாதனை படைத்து, தமிழகத்துக்கும், நாமக்கல் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர் நவீன்குமாரை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பள்ளி தலைமை யாசிரியர் ஆன்ட்ரூஸ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
- அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.
உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடம் முடிகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.
முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.
இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். இதனைத்தொடர்ந்து இறுதி போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாட உள்ளார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா தாய்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என இந்தோனேசியா செஸ் வீராங்கனை ஐரின் சுகந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். அவர் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாகு:
அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்செனிடம் (நார்வே) தோல்வியை தழுவினார். இதன் டைபிரேக்கரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கார்ல்சென் அடுத்த ஆட்டத்தில் 'டிரா' செய்து உலக் கோப்பையில் மகுடம் சூடினார்.
தோல்வி அடைந்தாலும் சர்வதேச செஸ் அரங்கில் ஜாம்பவனாக திகழும் கார்ல்செனுக்கு எதிராக பிரக்ஞானந்தா தைரியமாக போராடிய விதம் ரசிகர்களின் இதயங்களை தொட்டது. பாராட்டுகளும் குவிந்தன. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த போட்டியில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அவரது தாயார் நாகலட்சுமியும் உடன் சென்றுள்ளார். தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் பிரக்ஞானந்தாவை போட்டி நடக்கும் எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வது அவரது தாயார் தான். அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு நாகலட்சுமியின் பங்களிப்பு அளப்பரியது.

இந்நிலையில் செஸ் புகைப்பட கலைஞர் மரியா பிரக்ஞானந்தாவின் தாயாருக்கு சமூக வலைதள பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த பதிவில் லெஜண்ட் மற்றும் அவரது மகனுடன் செல்பி எடுத்துக் கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.
செஸ் விளையாடிய பிரக்ஞானந்தாவை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அவரது அம்மாவுக்கு புகழாரம் சூட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பாராட்டுகளை பெறுவதில்லை.
- மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர்.
நெதர்லாந்தில் நடைபெற்ற செஸ் தொடரில் இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் 12-ம் இடம் பிடித்தார். 18 வயதான அவர் இது போன்று வெற்றி பெறுவதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்காமக கொண்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பலர் பாலியல் சார்ந்த சர்ச்சை கூறிய கருத்துக்களை பதிவிடுவதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.
இது குறித்து திவ்யா தேஷ்முக் கூறியதாவது:-
நான் விளையாடிய போட்டிகளில் சில முக்கிய நகர்வுகளை செய்தேன். இதனால் என்னைப்பற்றி நானே பெருமையும் பட்டேன். ஆனால் பார்வையாளர்கள் அதை பற்றி எந்த அக்கறையும் கொள்ளவில்லை.
மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை சந்தித்து வருகிறேன். இதனால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பாராட்டுகளை பெறுவதில்லை. பெண்கள் சிறப்பாக செஸ் விளையாடினாலும், பார்வையாளர்கள் அவர்களின் திறமையை கவனிக்காமல் இருப்பது சோகமான உண்மையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் (நலன்) மசோதா வெள்ளிக்கிழமை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது, நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.
கர்நாடக மாநில அரசு சினிமா டிக்கெட்டுகள், சினிமா தொடர்பான ஓடிடி சந்தா கட்டணம், கலாச்சார கலைஞர்கள் வருமானத்தின் மீது இரண்டு சதவீதம் செஸ் வரி விதிக்க பரிசீலனை செய்து வருகிறது.
மாநில அரசால் மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒன்றில் இருந்து இரண்டு சதவீதம் வரை செஸ் திருத்தப்படும். இந்த செஸ் வரி சினிமா டிக்கெட்டுகள், ஓடிடி சந்தாக்கள், கர்நாடகாவில் உள்ள நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு ஆகியவற்றிற்கு இந்த செஸ் வரி பொருந்தும். கர்நாடக சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் (நலன்) மசோதா வெள்ளிக்கிழமை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது மற்றும் நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.
இந்த மசோதா திரைப்படத் துறையில் ஒரு கலைஞராக (நடிகர், இசைக்கலைஞர், நடனக் கலைஞர், முதலியன) அல்லது மேற்பார்வை, தொழில்நுட்பம், கலை ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு நபரும் ஒரு சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலராகக் கருதப்படுவார் எனக் கூறுகிறது.
- ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும்.
- பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.
செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.
மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.
இந்நிலையில் செஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடக்க ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொண்டது. இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய பெண்கள் அணி முதல் ஆட்டத்தில் 3.5-0.5 என்ற கணக்கில் ஜமைக்காவை தோற்கடித்தது.
- விதிமுறைக்கு மாறாக இந்திய வீரர் நிஹல் காய்கள் நகர்த்தியதாக புகார்.
- விசாரணைக்குழு குற்றச்சாட்டை நிராகரித்து முடிவை மாற்ற மறுத்து விட்டது.
குளோபல் செஸ் லீக் போட்டியில் ஐநது முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்சல் அணியான ஆல்பின் எஸ்.ஜி. பைப்பர்ஸ் அணியில் டேனியல் தர்தா (Daniel Dardha) இடம் பிடித்திருந்தார். இவர் இந்திய வீரர் நிஹல் சரினை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியின்போது நிஹல் சரின் பலமுறை விதிமுறைக்கு மாறாக காய்களை நகர்த்தியதாக மேக்னஸ் கார்ல்சன் குற்றம்சாட்டியிருந்தார். அவரது அணியின் கேப்டன் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக தொடரின் மூன்று பேர் கொண்ட அப்பீல் கமிட்டி விசாரணை மேற்கொண்டது. அப்போது நிஹல் சரின் விளையாட்டு விதிமுறைக்கு மாறாக காய் நகர்த்தல் ஏதும் செய்யவில்லை. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த முடிவு உறுதியானது எனத் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இந்த போட்டியின்போது ஒருவேளை விதிமுறையை மீறும் சூழ்நிலை உருவாகியிருக்கலாம் எனத் தெரிவித்தள்ளது. நடுவர் தலையிட்டிருக்க வேண்டும் எனவும் அந்த கமிட்டி தெரிவித்துள்ளது.
விளையாட்டின்போது வீரர்கள் சதுரங்கத்திற்குள் காய்களை விட அனுமதி கிடையாது. ஆனால் ஹரின் சதுரங்கத்திற்குள் காய்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டினார்.
இதில் விதிமுறை மீறல் நகர்த்தல் ஏதும் இல்லை. ஆனால், காய்களை சதுரங்கத்தில் விட்டுவிட்டு, நேரத்திற்கான பட்டனை அழுத்த்திய போது விதிமுறை மீறல் தூண்டுதலை பெற்றிருக்கிலாம். போட்டியின்போது நடுவர் தலையிட்டியிருக்க வேண்டும்.
இது தொடர்பாக கார்ல்சென் தனது எக்ஸ் பக்கத்தில் "நிஹல் பல விதிமுறை மீறல் நகர்த்தலை மேற்கொண்டார். நடுவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீவிர விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதது துரதிருஷ்டம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பைப்பர்ஸ் அணியின் கேப்டன் பிரவின் திப்சே அதிகாரப்பூர்வமாக புகார் அளித்திருந்தார்.
ஒட்டுமொத்தமாக பிபிஜி (PBG) அலாஸ்கன் நைட்ஸ் அணி 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
- நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது.
- இதில் குகேஷ் டிங் லிரெனை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.
புதுடெல்லி:
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது.
நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
வெற்றிக்குப் பிறகு குகேஷ் பேசுகையில், உலகின் சிறந்த வீரருக்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன் என்றார்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு, முன்னாள் உலக செஸ் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார் .
இதுதொடர்பாக மேகன்ஸ் கார்ல்சன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் இனி இந்த சர்க்கசின் ஒரு பகுதியாக இல்லை. குகேஷுடன் மோதுவதில் எனக்கு விருப்பம் இல்லை.
குகேஷ் செய்தது நம்பமுடியாத சாதனையாகும் குகேஷ் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிறைய சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
குகேஷ் வெற்றிக்காக தெளிவாக போராடினார். விளையாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர் ஒரு சிறந்த வேலையைச் செய்தார் என நான் நினைக்கிறேன்.
லிரென் கடைசி வரை நம்பிக்கையோடு காணப்பட்டாலும் குகேஷ் அதிரடியாக வெற்றியை வசப்படுத்தினார். இந்த வெற்றி குகேசுக்கு நல்ல உத்வேகம் அளித்திருக்கும்.
தற்போது அவர் தரவரிசையில் 2-வது இடத்தை பிடிப்பார் என்று நினைக்கிறேன். அவர் வருங்காலத்தில் நம்பர் ஒன் இடத்தையும் கைப்பற்றுவார் என தெரிவித்தார்.