என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIDE"

    • அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார்.
    • இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.

    FIDE உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.

    இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். மேலும், இதன் மூலம் Candidates தொடருக்கும் திவ்யா தேர்வாகி உள்ளார்

    மற்றொரு அரையிறுதி போட்டியில் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஹம்பி இப்போது டை-பிரேக்கரில் டிங்ஜி லீயை எதிர்கொள்வார்.

    • அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும்.
    • போட்டி நடைபெறும் நகரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது

    இந்நிலையில், 2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என பீடே அறிவித்துள்ளது.

    அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் பீடே விளக்கம் அளித்துள்ளது.

    • கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
    • இப்போட்டியில் ஹம்பி வெற்றி பெற்றார்.

    பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.

    முதல் முறையாக கொனேரு ஹம்பி, வைஷாலி , திவ்யா, ஹரிகா ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார்.

    இதனையடுத்து அவர் விளையாடிய 2 ஆவது காலிறுதி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி பெற்றார்

    சென்னை கிராண்ட்மாஸ்டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது போட்டியில் வைஷாலி தோல்வியை தழுவி வெளியேறினார்.

    மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனைகளான ஹரிகா-திவ்யா தேஷ்முக் மோதினார்கள். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது ஆட்டமும் 60-வது நகர்த்தலின் போது 'டிரா' வில் முடிந்தது. இருவரும் தலா 1 புள்ளியுடன் சம நிலையில் உள்ளனர். இன்று 'நடைபெறும் டை பிரேக்கரில் வெற்றி பெறும் வீராங்கனை அரை இறுதிக்கு முன்னேறுவார்.

    இன்னொரு கால் இறுதி யில் லீடிங்பி (சீனா) 2-0 என்ற கணக்கில் டிஜாக் னிட்ஜியை (ஜார்ஜியா) தோற்கடித்தார். ஹம்பி அரை இறுதியில் லீடிங்சியை எதிர்கொள்கிறார்.

    • இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
    • இன்று 2-வது போட்டியை ‘டிரா’ செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.

    பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட் டங்கள் நேற்று தொடங்கியது. முதல் முறையாக 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

    இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். அவர் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். இன்று 2-வது போட்டியை 'டிரா' செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.

    சென்னை கிராண்ட்மாஸ் டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார்.இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

    மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா-ஹரிகா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, தொடக்கத்தில் முந்தினார். பின்னர் 31-வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் இருந்தனர்.

    • பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிராவின் புனேயில் நடந்தது.
    • இந்தியாவின் கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    மும்பை:

    பிடே பெண்கள் கிராண்ட்பிரி செஸ் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்து வந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று போட்டி நேற்று நடந்தது.

    வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி, 84-வது நகர்த்தலில் நுர்குல் சலிமோவாவை (பல்கேரியா) தோற்கடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் டிரா கண்டனர்.

    ஒரு தோல்வியும் சந்திக்காத ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான கோனேரு ஹம்பி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைச் சொந்தமாக்கினார்.

    சீனாவின் ஜூ ஜினெரும் 7 புள்ளிகளுடன் அவருடன் சமநிலையில் இருந்தார். ஆனால் போட்டி விதிப்படி கருப்பு நிற காயுடன் (5 முறை) விளையாடுகையில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஹம்பி மகுடம் சூடினார். ஜினெர் 2-வது இடம் பெற்றார்.

    இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 5½ புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். தமிழகத்தின் வைஷாலி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    • மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.
    • இம்மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 15, 2024 வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த தொடரில் அடுத்த இரு ஆண்டுகள் உலக செஸ் சாம்பியனாக இருக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்துவிடும். உலக செஸ் சாம்பியன் படத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் சீனாவின் டிங் லைரென் களமிறங்குகிறார்.

    மறுப்பக்கம் செஸ் வரலாற்றிலேயே இளம் வயதில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையுடன் இந்திய வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளார். உலகின் அடுத்த செஸ் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளை நடத்த உலக செஸ் கூட்டமைப்பிடம் மூன்று கூட்டமைப்புகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன.

    இதில் தமிழ்நாடு அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் நடத்த வேண்டும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டு அரசும் விண்ணப்பித்துள்ளன.

    மூன்று விண்ணப்பங்களும் அடுத்த வாரம் நடைபெறும் உலக செஸ் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும். இந்த ஆலோசனை கூட்டத்தில் விண்ணப்பதாரர்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆலோசனை கூட்டத்தில் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான கேள்விகளுக்கு பிரதிநிதிகள் பதில் அளிக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இம்மாத இறுதியில் உலக செஸ் கூட்டமைப்பு சார்பில் முடிவுகள் அறிவிக்கப்படும். 

    • விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு சென்றார்.
    • அர்ஜூன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் அதிவேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நிலையில், FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளார். சமீபத்தில் தியான் சந்த் கேல் ரத்னா விருது வென்ற குகேஷ், விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு வந்து, விளையாடி வருகிறார்.

    இந்த முன்னேற்றம் காரணமாக நீண்ட காலமாக அதிக புள்ளிகளை கொண்ட இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை தற்போது குகேஷ் முந்தியுள்ளார். இதன் காரணமாக அர்ஜூன் தற்போது 2779.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தில் தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா (2802) மற்றும் அவரது சக நாட்டு வீரர் ஃபேபியானோ கருவானா (2798) ஆகியோர் இரண்டு மற்று் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக பட்டத்தை வென்றதில் இருந்து குகேஷ் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

    • சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு.
    • செஸ் விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

    இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் முதலமைச்சர் கூறியுள்ளதாவது:

    புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் ஆகும்.

    கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்க்கடி துவார்கோவிச்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுமுகமாக நடத்துவதில் அவரது பங்கு இன்றியமையாதது. தலைவராக அவரது முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததைப்போல இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
    • சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

    இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன.

    அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    ×