search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gukesh"

    • குகேஷ் தனது 12 வயதில் சாதாரண மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
    • 17 வயதில் கேன்டிடேட் போட்டியில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற வரலாற்றினை படைத்தார்.

    கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேசுக்கு ரூ.78.5 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.

    குகேஷ் தனது 12 வயதில் சாதாரண மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான உலகின் 3-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். தற்போது 17 வயதில் கேன்டிடேட் போட்டியில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற வரலாற்றினை படைத்தார்.

    மேலும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.

    • குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.
    • செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மிக இளம் வயதில் பீடே கேன்டிடேட் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

    பீடே கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் டி.குகேசுக்கு வாழ்த்துக்கள். 17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்சில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங்லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை:

    17 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்களது உறுதியும், விடா முயற்சியும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. செஸ் உலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் குகேஷ் உத்வேகமாக இருக்கிறார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.



    • 13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று நேற்று நடந்தது

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரவுசியாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 63-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 5-வது வெற்றியாகும்.

    பிரவுசியாவிடம் ஏற்க னவே தோற்று இருந்தார். இதற்கு குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெற்றி மூலம் அவர் மட்டுமே முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா இந்த சுற்றில் தோல்வியை தழுவினார். அவருக்கு ஏற்பட்ட 3-வது தோல்வியாகும்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பை ஜான் வீரர் நிஜாத் அப்சோ வாவிடம் டிரா செய்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா)- ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) மோதி னார்கள். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

    13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா , பேபி யானோ ஆகிய 3 வீரர்கள் தலா 8 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    பிரக்ஞானந்தா 6 புள்ளி களுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5. 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா (4.5 புள்ளி) 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் ( 3.5 ) கடைசி இடத்திலும் உள்ளனர்.

    இன்று கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது. குகேஷ் இந்த ரவுண்டில் ஹிகாரு நகமுராவுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள் .

    பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சீனாவை சேர்ந்த டிங்ஜி லீயை 13-வது சுற்றில் தோற்கடித்தார். மற்றொரு இந்தியரான ஹம்பி உக்ரைன் வீராங்கணை அனாவுடன் டிரா செய்தார்.

    வைஷாலி, ஹம்பி ஆகியோர் தலா 6.5 புள்ளி களுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.

    • பிரக்ஞானந்தா 6 புள்ளியுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
    • ஹம்பி 6 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், வைஷாலி 5.5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 12-வது சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவை எதிர் கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 57-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 4-வது வெற்றியாகும். அப்சோவை 2-வது முறையாக வீழ்த்தியுள்ளார்.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 12-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார் . கறுப்பு நிற காய்களுடன் விளையாடி பிரக்ஞானந்தா டிரா செய்தார்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அமெரிக்கா வீரர் பேபியானோவிடம் தோல்வியை தழுவினார். இன்னொரு ஆட்டத்தில் ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரான்சை சேர்ந்த பிரவுசியாவை தோற்கடித்தார்.

    12 சுற்றுகள் முடிவில் குகேஷ், இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா ஆகிய 3 வீரர்கள் தலா 7.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பேபியானோ 7 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    பிரக்ஞானந்தா 6 புள்ளியுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா 4.5 புள்ளியுடன் 7-வது இடத்திலும், அப்சோவ் 3 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர். இன்னும் 2 சுற்றுகளே எஞ்சியுள்ளன. இன்று ஓய்வு நாளாகும்.

    பெண்கள் பிரிவில் வைஷாலி 12-வது சுற்றில் வெற்றி பெற்றார். உக்ரைன் வீராங்கனை அன்னா முசிசெக்கை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.

    ஹம்பி 6 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், வைஷாலி 5.5 புள்ளியுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    • சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள்.
    • பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 11-வது சுற்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோ கருணாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த போட்டியில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார். அவரது 7-வது டிராவாகும்.

    மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள். ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரக்ஞானந்தாவையும், இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) விதித் குஜராத்தியையும் தோற்கடித்தனர்.

    11 சுற்றுகள் முடிவில் ரஷிய வீரர் இயன் நேபோம்னியாச்சி 7 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். டி.குகேஷ், ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 6.5 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர.

    பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். பேபியானோ 6 புள்ளியுடன் 4-வது இடத்திலும், அலிசேரா பிரவுசியா (பிரான்ஸ்) 4.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் (அஜர்பைஜான்) 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஹம்பி. பல்கேரிய வீராங்கனை நூர்சிபால் சலிமோவை தோற்கடித்தார். இதன் மலம் அவர் 5.5 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான சென்னையை சேர்ந்தவருமான வைஷாலி 11-வது சுற்றில் ரஷியாவை அலெக்சான்ட்ரா சோரியாச்சினாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். வைஷாலி 4.5 புள்ளிகளுடன் 6 முதல் 7-வது இடங்களில் உள்ளார்.

    • பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார்.
    • மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 9-வது சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் டி.குகேஷ்- பிரக்ஞானந்தா இந்த சுற்றில் மோதினார்கள். இதில் குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.41-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது.

    இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தார். இந்த டிரா மூலம் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி 9- வது சுற்றில் வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவர் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை 36-வது நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார். 2-வது முறையாக விதித் குஜராத்தி அவரை தோற்கடித்துள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி (ரஷியா)-அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) மற்றும் பேபியானோ (அமெரிக்கா)-நிஜத் அப்சோவ் (அஜர்பைஜான்) ஆகியோர் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

    9 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். விதித் குஜாராத்தி 4.5 புள்ளிகளுடன் 4 முதல் 6-வது இடத்தில் உள்ளார்.

    பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

    9-வது ரவுண்டு முடிவில் ஹம்பி 4 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும், வைஷாலி 2.5 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    • மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார்.
    • பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடை பெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 5-வது ரவுண்டு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 87-வது நகர்த்தலுக்கு பிறகு கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் தேவைப்பட்டது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அமெரிக்காவின் பேபியானோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.

    5 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 2.5 புள்ளியுடன் 4 முதல் 5-வது இடத்திலும், விதித் குஜாராத்தி 2 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது. 5 ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களிலும் உள்ளனர்.

    • கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
    • தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர்.

    சென்னை:

    கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ஏப்ரல் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் 8 வீரர்களும், பெண்கள் பிரிவில் 8 பேரும் விளையாடுகிறார்கள். இதில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்வார்கள். சீனாவை சேர்ந்த டிங் லிரென் உலக செஸ் சாம்பியன் ஆவார். பெண்கள் பிரிவில் ஜூ வென்ஜுன் (சீனா) தற் போது உலக சாம்பியனாக உள்ளார்.

    இதனால் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

    இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு சென்னையை சேர்ந்த டி.குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர். இந்த வரிசையில் 17 வயதான குகேசும் இணைந்துள்ளார்.

    பீடே சர்க்கியூட் போட்டியில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் குகேஷ் கேன்டிடேட் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் சமீபத்தில் நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் பெற்று இருந்தார்.

    இதேபோல ஹம்பியும் கேன்டிடேட் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவுக்கு தகுதி பெற்றார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அதிக புள்ளிகளை பெற்றிருந்ததால் அவர் வாய்ப்பை பெற்றார்.

    1991-ம் ஆண்டு விஸ்வ நாதன் ஆனந்த் மட்டுமே கேன்டிடேட் செஸ் போட் டிக்கு தகுதி பெற்றார். தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டியில் 5 இந்தி யர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் பிரிவில் பிரக் ஞானந்தா, குகேஷ் (தமிழ் நாடு), விகித் குஜராத்தி (மராட்டியம்) பெண்கள் பிரிவில் வைஷாலி (தமிழ்நாடு), ஹம்பி (ஆந்திரா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

    கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

    ஆண்கள்: பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, குகேஷ் (இந்தியா) இயன் நேபோம்னி யாச்சி (ரஷியா), பேபினோ கருவானா, ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), நிஜாத் அபாசோவ் (அஜர்பை ஜான்), அலிரேசா பிர ஷஸ்ஜா (பிரான்ஸ்)

    பெண்கள்: வைஷாலி, ஹம்பி (இந்தியா), லீ டிங்ஜி, டான் ஷோங்கி (சீனா), கேத்தரினா லாக்னோ, அலெக்சான்ட்ரோ கோரியச்சினா (ரஷியா), நூர்சி யுல் சலிமோவா (பல்கேரியா), அன்னா முஷிசெக் (உக்ரைன்).

    • லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியலில், உலக கோப்பை செஸ் போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார்.
    • முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக இடம் பிடித்துள்ளார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754 புள்ளி) முந்தினார்.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு மாதமும் ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியலில், உலக கோப்பை செஸ் போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.

    இதன் மூலம் குகேஷ் 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை முந்தி அந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக பிடித்தார்.

    இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குகேஷூக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். மேலும் செஸ் வீரர் குகேஷூக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக நிதியுதவி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இந்திய செஸ் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தமிழக வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக அதிகாரப்பூர்வமாக ஆனார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754 புள்ளி) முந்தினார்.

    இதன் மூலம் செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்படும் தர வரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து குகேஷ் முந்தி இருந்தால் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில் சமீபத்தில் உலக கோப்பை செஸ் போட்டியில் கால்இறுதி வரை முன்னேறிய குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளர்.

    இதன் மூலம் குகேஷ் 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை முந்தி அந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக பிடித்தார்.

    உலக கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழகத்தின் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் 19-வது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய செஸ் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தமிழக வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.
    • செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ், 2755.9 புள்ளிகள் பெற்று 9-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை முந்தியதன் மூலம் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார்.

    செஸ் உலக கோப்பை (2023) தொடர் அஜர்பை ஜான் நாட்டின் பாகுவில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றுக்கு முன்னேறிய குகேஷ், தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை தோற்கடித்து பிறகு உலக தரவரிசை பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.

    5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் 1986-ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-ஒன் வீரராக இருந்து வருகிறார். வருகிற செப்டம்பர் 1-ந்தேதி அடுத்த தரவரிசை பட்டியல் வெளியிடும் வரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்ததால் 1986-க்கு பிறகு ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெறுவார்.

    இந்த நிலையில் செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு பாராட்டுகள்.

    உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தி உள்ளன.

    உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளந்திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமை, தமிழக வீரருக்கு கிடைத்துள்ளது.
    • ஏழாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.

    ஏய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 9 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 8வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான குகேஷ் எதிர்கொண்டார்.

    வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 26வது காய் நகர்த்தலின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தினார். முன்னதாக நடைபெற்ற ஏழாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, கார்ல்சனை வீழ்த்தி இருந்த நிலையில் தற்போது தமிழக வீரர் குகேஷ்சும் உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

    மேலும் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இதே சாம்பியன்ஷிப் முதல் மற்றும் நான்காவது தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    ×