என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gukesh"

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • மூன்றாவது சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பனாஜி:

    கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

    இந்நிலையில், 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் குகேஷும், ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனும் மோதிக்கொண்டனர்..

    இருவருக்குமான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் ஃபிரெடிரிக் ஸ்வேனே குகேஷை வீழ்த்தினார் . இதனால் மூன்றாவது சுற்றிலேயே குகேஷ் தொடரிலிருந்து வெளியேறினார்.

    கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அணி 5-0 என்ற கணக்கில் இந்தியா அணியை வீழ்த்தியது.
    • ரசிகர்ளை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்.

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் செக்மேட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடைபெற்ற இப்போட்டியல் இந்தியா- அமெரிக்கா மோதியது.

    இதில், அமெரிக்க அணி 5-0 என்ற கணக்கில் இந்தியா அணியை வீழ்த்தியது. 

    நேற்றைய கடைசி ஆட்டத்தில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா, இந்திய கிராண்ட் மாஸ்டரான உலக சாம்பியன் குகேஷ் டோமராஜுவை தோற்கடித்தார்.

    இதையடுத்து, ஹிகாரு நாகமுரா, குகேஷின் கையில் இருந்த KING-ஐ பிடிங்கி அங்கிருந்த கூட்டத்தின் மீது விசிறியடித்தார். பின்னர், ரசிகர்ளை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்தார்.

    அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நாகமுரா ஹிகாருவின் செயலை கண்டு குகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

    • சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியாவில் நடைபெற்றது.
    • முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்றது.

    9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ரேபிட் பிரிவில் 9-வது மற்றும் கடைசி சுற்றில் சென்னையை சேர்ந்த 19 வயது குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் குகேஷ் 36-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9-வது சுற்று முடிவில் குகேஷ் 14 புள்ளிகள் பெற்று (6 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) சாம்பியன் பட்டம் வென்றார்.

    போலந்து வீரர் ஜான் கிர்சிஸ்டோப் டுடா (11 புள்ளி) 2-வது இடமும், முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பாபியனோ கருனாவுடன் (இருவரும் தலா 9 புள்ளி) இணைந்து 4-வது இடம் பெற்றார். இதைத்தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவு போட்டி நடக்கிறது.

    • அவரை பலவீனமான வீரர்களில் ஒருவராக நான் கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.
    • போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாகப் பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும்.

    இந்திய இளம் கிராண்ட் மாஸ்டரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ் குரோஷியாவில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் 2025 போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பெற்றார்.

    வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியின் ஆறாவது சுற்றில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், கார்ல்சனை  தோற்கடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம், போட்டி புள்ளிகள் பட்டியலில் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறினார். போட்டிக்கு முன்பு பேசிய கார்ல்சன், "இதுபோன்ற போட்டிகளில் குகேஷ் சிறந்து விளங்க முடியும் என்று எதையும் நிரூபிக்கவில்லை. அவரை பலவீனமான வீரர்களில் ஒருவராக நான் கருதுகிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால் குகேஷ் அவரை வென்றது முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்தப் போட்டியில் குகேஷ் தொடர்ச்சியாகப் பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும். முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவ் மற்றும் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியானோ கருவானா ஆகியோருக்கு எதிராகவும் குகேஷ் வெற்றி பெற்றார். 

    • நார்வே செஸ் தொடரில் குகேஷ் 3-வது இடம் பிடித்துள்ளார்.
    • அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நார்வே செஸ் தொடரில் அந்நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இறுதிச்சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்குச் சென்றார்.

    10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் 3-வது இடம் பிடித்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
    • கார்ல்சன் சிறப்பாக விளையாடி 7-முறையாக பட்டம் வென்றுள்ளார்.

    நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் உள்பட 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் வீரர் வெற்றி பெற்றவராவார்.

    இந்த நிலையில், இறுதி சுற்று போட்டியில் கார்ல்சன் (நார்வே) சிறப்பாக விளையாடி 7-முறையாக பட்டம் வென்றுள்ளார். இறுதி சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் பாபியானோ கருணாவை எதிர்த்து விளையாடிய குகேஷ் 3-வது இடத்தை பெற்றார். இறுதி சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தால் 3 புள்ளிகள் பெற்று 17.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருப்பார். பாபியானோ கருணா 2-வது இடத்தில் உள்ளார்.



    10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதலிடமும், பாபியானோ கருணா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

    நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ் மனமுடைந்து காணப்பட்டார். 

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • ஒன்பதாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இதில் 9-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், சீனாவின் வெய் யீயைச் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.

    ஒன்பதாவது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குகேஷ் 14.5 இரண்டாம் இடத்திலும், ஹிகாரு நகமுரா 13 புள்ளியுடன் 3வது இடத்திலும், பாபியானோ கருணா 12.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், அர்ஜூன் எரிகைசி 11.5 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் அணி சார்பில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 13.5 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைன் வீராங்கனை முதலிடத்தில் உள்ளார்.

    • 8-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் நகமுராவுடன் மோதினார்.
    • 3-வது சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு நகமுரா பழிவாங்கியுள்ளார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இந்நிலையில் இந்த போட்டியில் 8-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் நகமுராவுடன் மோதினார். இந்த போட்டியில் குகேஷை வீழ்த்தி நகமுரா வெற்றி பெற்றார். 3-வது சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு நகமுரா பழிவாங்கியுள்ளார். இந்த போட்டி கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்தது.

    இன்னும் இரண்டு சுற்றுகள் மீதமுள்ள நிலையில், குகேஷ் 11.5 புள்ளிகளுடன் நகாமுராவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் அமெரிக்க ஜிஎம் கருவானா, எரிகைசியிடம் தோல்வியடைந்த போதிலும், 12.5 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார்.

    கார்ல்சன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் எரிகைசி 10.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர்.

    • செஸ் போட்டியில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
    • நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் ஆவேசமடைந்து டேபிலை தட்டினார்.

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.

    அப்போது, நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் ஆவேசமடைந்து டேபிலை தட்டினார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தருணம் குறித்து உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மேக்னஸ் கார்ல்சன் விரக்தியில் டேபிலை தட்டியதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    நானும் பலமுறை இதுபோல டேபிலை தட்டிய தருணங்களை கடந்து வந்துள்ளேன்.

    ஆனால், மேக்னஸ் என்ன செய்கிறார் என நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. வெற்றி பெற்றதும் என்னை நானே நிதானப்படுத்த முயன்று கொண்டிருந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
    • எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.

    இந்நிலையில் குகேஷ்-க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது:-

    ஒரு சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார் குகேஷ். மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். 2025 ஆம் ஆண்டு நார்வே சதுரங்கப் போட்டியின் 6-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் பெற்ற முதல் வெற்றி அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எதிர்காலப் பயணத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    என பிரதமர் மோடி கூறினார்.

    • நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் கார்ல்சென்னை குகேஷ் வீழ்த்தினார்.
    • இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம்.

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். மேலும், முதல் 2 இடத்தில உள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ ஆகியோரை விட குகேஷ் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் குகேஷ்-க்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷ்-க்கு வாழ்த்துக்கள். இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம் மற்றும் சதுரங்க விளையாட்டில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

    நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியப்பின் தமிழ்நாட்டு வீரர் குகேஷ் கொடுத்த ரியாக் ஷன்

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.

    அப்போது தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் கார்ல்சன் செஸ் பலகையை ஓங்கி அடித்தார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் குகேஷ் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.

    இந்த வெற்றியின் மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். மேலும், முதல் 2 இடத்தில உள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ ஆகியோரை விட குகேஷ் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×