என் மலர்tooltip icon

    நார்வே

    • அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • அமைதிக்கான நோபல் பரிசை மரியா டிரம்புக்கு அர்ப்பணித்தார்

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார்.

    இந்நிலையில், நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு பரிசு அறிவித்ததற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • ஒன்பதாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இதில் 9-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், சீனாவின் வெய் யீயைச் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றார்.

    ஒன்பதாவது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குகேஷ் 14.5 இரண்டாம் இடத்திலும், ஹிகாரு நகமுரா 13 புள்ளியுடன் 3வது இடத்திலும், பாபியானோ கருணா 12.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், அர்ஜூன் எரிகைசி 11.5 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் அணி சார்பில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 13.5 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைன் வீராங்கனை முதலிடத்தில் உள்ளார்.

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

    நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியப்பின் தமிழ்நாட்டு வீரர் குகேஷ் கொடுத்த ரியாக் ஷன்

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.

    அப்போது தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் கார்ல்சன் செஸ் பலகையை ஓங்கி அடித்தார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் குகேஷ் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலானது.

    இந்த வெற்றியின் மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். மேலும், முதல் 2 இடத்தில உள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ ஆகியோரை விட குகேஷ் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இதன் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 74-வது நகர்த்தலில் சீனாவின் வெய் யிவுடன் டிரா செய்தார். இதைத் தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டைபிரேக்கரில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 56-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.

    மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹிகாரு நகமுராவுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார்.

    5-வது சுற்று முடிவில் கார்ல்சென் 9½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபியானோ கருனா (அமெரிக்கா) 8 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகைசி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், குகேஷ் 5½ புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றனர்.

    இதன் பெண்கள் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி 8½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • 4-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    முதல் இரு சுற்றுகளில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் தோல்வி கண்டார். 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்திய குகேஷ் 3 புள்ளிகள் பெற்றார்.

    இந்நிலையில், இதில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பாபியானோ கருணாவை சந்தித்தார். 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றி, தோல்வியை முடிவுசெய்ய நடந்த டைபிரேக்கரில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் பாபியோ கருணாவுக்கு அதிர்ச்சி அளித்தார். குகேஷ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    நான்காவது சுற்று முடிவில் கார்ல்சென் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபியானோ கருணா 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹிகாரு நகமுரா 5.5 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். குகேஷ், அர்ஜூன் எரிகைசி தலா 4.5 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளனர்.

    • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
    • 3வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள

    இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷை வீழ்த்தினார். இந்தப் போட்டி 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.

    இரண்டாவது சுற்று ஆட்டத்திலும் குகேஷ், சக நாட்டு வீரரான அர்ஜுன் எரிகைசியிடம் தோல்வி கண்டார். 2 சுற்று ஆட்டங்களின் முடிவில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மற்றும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (தலா 4.5 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். 42வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியனான குகேஷ் 3 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    தனது 19-வது பிறந்த நாளான இன்று குகேஷ் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நார்வே செஸ் தொடர் திங்கட்கிழமை தொடங்குகிறது.
    • உலகின் முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

    ஸ்டாவஞ்சர்:

    பிரசித்திப் பெற்ற நார்வே செஸ் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

    நாளை தொடங்க உள்ள முதல் சுற்றில் இந்தியாவின் குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதுகிறார்.

    மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகேசி சீனாவின் வெய் யீ உடன் மோதுகிறார்.

    மகளிர் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி, சக நாட்டு வீராங்கனையான ஆர்.வைஷாலி உடன் மோதுகிறார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.
    • தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

    எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.

    பொய்யான தகவலை கொடுத்ததற்காக சாட்ஜிபிடி மீது நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஹோல்மென் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.

    அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார்.

    இதற்கான பதிலளித்த சாட்ஜிபிடி, "ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொன்றுக்கு ஏழு வயது.

    இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020 இல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது" என்று கூறியுள்ளது.

    அர்வே ஜால்மர் ஹோல்மென்

    இதைக் கண்டு ஹோல்மன் அதிர்ச்சியடைந்தார். இதற்குப் பிறகு, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகிய அவர், அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்தார்.

    இதில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்யை மக்கள் உண்மை என்று நம்பக்கூடும் என்பது ஹோல்மனின் கவலை.

    இந்த நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  

    • பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்தது.
    • 26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார்.

    நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் [34 வயது] தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார்.

    நேற்று [சனிக்கிழமை] நார்வே தலைநகர் ஒஸ்லோவில் அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. Holmenkollen Chapel தேவாலயத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக நார்வே ஊடகமான NRK இன் செய்திகள் தெரிவிக்கின்றன.

     

    chess.com இன் படி, திருமணத்தில் நார்வே நாட்டு செஸ் வீரர்கள் ஜோஹன்னஸ் க்விஸ்லா மற்றும் அஸ்கில்ட் பிரைன், ஜிஎம் பீட்டர் ஹெய்ன் நீல்சன் மற்றும் ஜிஎம் ஜான் லுட்விக் ஹேமர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது நெட்பிளிக்ஸ் படக்குழுவினரும் உடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பின்னர் 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டலில் கார்ல்சன் - மலோன் திருமண வரவேற்பு நடந்தது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் சேலஞ்சர் நிகழ்வின் போது இவர்கள் காதலை வெளிப்படுத்தினர். அதன்பின் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் ஜோடியாக காணப்பட்டனர். கார்ல்சனின் செஸ் போட்டிகளின் போது அவருக்கு மலோன் ஆதரவளிப்பதைக் காணலாம்.

    26 வயதான எல்லா விக்டோரியா மலோன் நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தார். ஊடக அறிக்கைகளின்படி, அவர் ஒஸ்லோவில் வளர்ந்தார், அமெரிக்காவில் படித்தார், மேலும் சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்தார், அங்கு அவர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.

    மலோனுடனான திருமணம் கார்ல்சனின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் கார்ல்சன், ஐந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்கள் உட்பட ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். 

     

    • நார்வே செஸ் தொடரில் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இந்தத் தொடரில் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்தார்.

    நார்வே:

    நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சமும், நகமுராவுக்கு ரூ.27 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதேபோல், மகளிர் பிரிவில் சீனாவின் ஜுவெஞுன் முதலிடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வைஷாலி 4வது இடமும், கோனேரு ஹம்பி 5-வது இடமும் பிடித்தனர்.

    நார்வே செஸ் தொடரில் 3-வது பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    • நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது முதல் முறை.
    • தம்பியைத் தொடர்ந்து அக்காவும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும்.

    இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.


    இந்நிலையில், மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் வைஷாலி. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் 2வது இடத்தில் இருக்கிறார்.

    நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவும், அவரது சகோதரி வைஷாலியும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
    • கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2-வது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார்.

    இந்நிலையில், இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    ×