என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோபல் அமைதிப் பரிசு"

    • நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை.
    • அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு போர்களை தான் நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அது டிரம்புக்கு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

    இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை. ஆனால் அவர்கள் (நோபல் பரிசு குழு) என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் அதற்காக அதை செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். நான் நிறைய உயிர்களைக் காப்பாற்றவே அதை செய்தேன். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு ஒரு பரிசு கிடைத்தது. ஆனால் அவர் நம் நாட்டை அழித்தார். ஒபாமா ஒரு நல்ல அதிபர் அல்ல என்றார்.

    கடந்த 2009-ம் ஆண்டு ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச ராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    • இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்த முக்கிய காரணமாக டிரம்ப் திகழந்ததாக பாகிஸ்தான் பாராட்டு.
    • அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு பரிந்துரை கடிதம்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லைப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

    அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என அறிவித்தார்.

    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு டொனால்டு டிரம்பின் "தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமை" காரணம் என பாகிஸ்தான் பாராட்டியதோடு, அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு நோபல் பரிசு வழங்கும் கமிட்டிக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

    இதற்கிடையே இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டையில் ஈரான் அணுஉலை நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர்கள், டொனால்டு டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

    டிரம்ப்பிடம் நோபல் பரிசு பற்றி கேட்கப்பட்டபோது, "இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் தனது பணி, மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை கையெழுத்திட ஏற்பாடு செய்தது உட்பட பல காரணங்களுக்காக தனக்கு அது வழங்கப்பட வேண்டும்.

    நான் நான்கு அல்லது ஐந்து முறை அதைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எனக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

    • நோபல் கமிட்டி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.
    • அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாகவும் நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியானது.

    நான் மோடியின் மிக பெரிய ரசிகர், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது-

    ஆனால் இந்த செய்தியை நோபல் கமிட்டி துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    இது தெடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், 'ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்' என்றார்.

    நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டியானது, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் அமைப்பாகும். இந்த குழு தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மோடி தொடர்பான செய்தி பரவி வருகிறது.

    உலகில் அமைதியான சூழலை உருவாக்குவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்று. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் இதற்கு முன் பலமுறை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×