என் மலர்

    நீங்கள் தேடியது "PM Modi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.
    • வருகிற 5-ந்தேதி மீண்டும் பிரியங்கா மத்திய பிரதேசம் செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா உள்ளது.

    ஆனால் எப்போதும் இல்லாத வகையில் பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு அணியில் இணைந்துள்ளது. இதனால் இம்முறை பாராளுமன்ற தேர்தல் பலத்த போட்டியை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தேர்தல் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    5 மாநில தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா இப்போதே தயாராகி விட்டது. அடுத்த வாரம் தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் அதற்குள் மத்திய பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் 76 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.

    5 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் 5 மாநிலங்களுக்கும் ஏற்கனவே பல தடவை சென்று வந்து விட்டார்.

    இன்று (30-ந் தேதி) முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் பிரதமர் மோடி மீண்டும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இன்று (சனிக்கிழமை) அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இன்று பிற்பகல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதற்கு பிறகு பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா மாநிலத்தில் நாளையும் (1-ந்தேதி ), 3-ந் தேதியும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் மெகபூபா மாவட்டத்தில் ரூ.13,545 கோடி மதிப்பிலான திட்டங்களையும், நிஜாமாபாத் மாவட்டத்தில் ரூ.8,021 கோடியிலான திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்து பொதுக்கூட்டங்களிலும் பேச இருக்கிறார். 2-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்பர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், அதேநாளில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். 6-ந் தேதி மீண்டும் அவர் மத்திய பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    6 நாட்களில் அவர் 4 மாநிலங்களிலும் 8 தேர்தல் பிரசார பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    4 மாநிலங்களிலும் பல்வேறு அரசு திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

    மத்திய பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் அதன் பிறகு அம்மாநிலத்தில் நடந்த அரசியல் மாற்றங்களால் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது.

    இதையடுத்து அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி மலர்ந்தது. தற்போது வரை அங்கு பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இந்த தேர்தலிலும் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா போராடி வருகிறது.

    அதே சமயத்தில் இடையில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றி விட வேண்டும் என்ற தணியாத வேட்கையில் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது.

    இம்மாநிலத்தில் ஏற்கனவே பிரியங்கா கடந்த ஜூன் மாதம் 2 தடவை சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை தொடர்ந்து இன்று ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    அவர் சாஜபூர் மாவட்டத்தில் நடக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் ராகுலும், பிரியங்காவும் தீவிரமாக உள்ளனர்.

    எனவே


    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை அம்மாநிலம் உருவானதில் இருந்து தொடர்ந்து 2 முறை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்று அக்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். வருகிற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் காயை நகர்த்தி வருகின்றன. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா வளர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால் 75 தொகுதிகளை இலக்காக கொண்டு பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. இதற்காக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஏற்கனவே பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு 5 மாநிலங்களிலும் தற்போது நடந்து வரும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.13 லட்சம் கோடி மதிப்பிலான 900 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் பெரும்பாலான திட்டப்பணிகள் சாலை மற்றும் ரெயில்வே திட்டங்கள் ஆகும். இதன் மூலம் மக்கள் மனங்களை கவர்ந்து 5 மாநிலங்களிலும் வெற்றிக்கனியை பறிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டு உள்ளது.

    இதனால் இப்போது இருந்தே 5 மாநிலங்களிலும் தேர்தல் ஜூரம் பற்றி கொண்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் செய்த பணி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது.
    • வேளாண் துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

    விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் செய்த பணி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. நம் தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    வேளாண் துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.எஸ்.சுவாமிநாதன் மிக நெருக்கடியான கால கட்டங்களில் விவசாயத்துறைக்கு பெரும் பங்காற்றியவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 2018-ம் ஆண்டு 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை அந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • பிரதமர் மோடி தெலுங்கானாவில் 2 நாட்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.

    அப்போது 5 மாநிலங்களின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்தவாரம் 5 மாநிலங்ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை அந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் பா.ஜ.க. சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து உள்ளது. ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் பணியை தொடங்கி சுறுசுறுப்பாக பணி செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தெலுங்கானாவில் 2 நாட்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார்.

    இதேபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது.

    தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நமது பெண்களின் பெயரில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
    • எதிர்க்கட்சிகள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்குள்ள சோட்டடேபூர் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் போடேலி நகரில் கல்வி தொடர்பாக ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட ரூ.5,000 மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    நான் உங்களுடன் கணிசமான நேரத்தை செலவிடுவதால், ஏழை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் அறிவேன். அந்த பிரச்சினைகளை தீர்க்க நான் எப்போதும் முயற்சிக்கிறேன்.

    நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நான்கு கோடி வீடுகளை நமது அரசு கட்டிக் கொடுத்துள்ளதால் இன்று நான் திருப்தி அடைகிறேன். முந்தைய அரசுகளைப் போல் ஏழைகளுக்கு வீடு என்பது வெறும் எண் அல்ல.

    ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு கண்ணியம் வழங்க பாடுபடுகிறோம். ஏழைகளின் தேவைக்கேற்ப, அதுவும் இடைத்தரகர்கள் இல்லாமல் வீடுகளை கட்டி வருகிறோம்.

    நமது பெண்களின் பெயரில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டன. என் பெயரில் வீடு இல்லாவிட்டாலும், லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை எனது அரசு வீட்டு உரிமையாளர்களாக்கியது.

    உலக வங்கியின் தலைவர் (அஜய் பங்கா) சமீபத்தில் காந்திநகரில் உள்ள வித்யா சமிக்ஷா கேந்திராவிற்குச் சென்றார். வெளியூர் சந்திப்பின் போது, இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற மையங்களைத் தொடங்குமாறு அவர் என்னை வலியுறுத்தினார். மேலும், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உலக வங்கி இருக்க தயாராக உள்ளது.

    மூன்று தசாப்தங்களாக இழுபறி நிலையில் இருந்த புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதியாக தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    எதிர்க்கட்சிகள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலில் ஈடுபடுகிறார்கள்

    அப்போது நான் முதல்வராகும் வரை, குஜராத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் எந்த அறிவியல் பள்ளியும் செயல்படவில்லை. அறிவியல் பள்ளிகள் இல்லையென்றால், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் எப்படி அனுமதி பெறுவீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
    • ஏற்பாடுகளை பாஜக எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. பல்வேறு வீயூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    அதன்படி வருகிற 1-ந் தேதி தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மற்றும் 3-ந் தேதி நிஜமாபாத்தில் பா.ஜ.க பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச விண்வெளி தினமாக கொண்டாடப்படுவதால், ஆகஸ்டு 23-ந்தேதி, அழியாத புகழை பெற்று விட்டது.
    • ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில், ஜி-20 பல்கலைக்கழக தொடர்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரிடையே பேசினார். அவர் பேசியதாவது:-

    நாட்டின் வளர்ச்சி பயணம் தொடர்வதற்கு தூய்மையான, தெளிவான, வலிமையான அரசு அவசியம். கடந்த 30 நாட்களில், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள், புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

    கடந்த 30 நாட்களில்,85 உலக தலைவர்களை சந்தித்துள்ளேன்.

    இன்றைய சர்வதேச சூழ்நிலையில், எண்ணற்ற நாடுகளை ஒரே இடத்தில் ஒன்றுசேர்ப்பது சிறிய விஷயம் அல்ல. ஜி-20 மாநாட்டுக்காக அதை சாதித்தோம்.

    கடந்த 30 நாட்களின் சாதனை பட்டியலை சொல்கிறேன். கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி, நிலவில் இந்தியா கால் பதித்தது. முதலில் வேண்டிக்கொண்டு இருந்தவர்களின் முகத்தில், திடீரென புன்னகை தோன்றியது. 'நிலாவில் இந்தியா' என்ற நமது குரலை உலகமே கேட்டது.

    சர்வதேச விண்வெளி தினமாக கொண்டாடப்படுவதால், ஆகஸ்டு 23-ந்தேதி, அழியாத புகழை பெற்று விட்டது. இந்த பயணம் வெற்றி பெற்றவுடன், சூரியனுக்கு விண்கலம் அனுப் பும் திட்டம் தொடங்கி விட்டது.

    டெல்லியை மையப்படுத்திய நிகழ்ச்சியாக இருந்த ஜி-20 மாநாட்டை மக்கள்சார்ந்த தேசிய இயக்கமாக மாற்றினோம். இந்தியாவின் முயற்சியால் 'பிரிக்ஸ்' அமைப்பில் மேலும் 6 நாடுகள் சேர்க்கப்பட்டன.

    ஜி-20 மாநாட்டில் டெல்லி பிரகடனத்துக்கு 100 சதவீத கருத்தொற்றுமையை ஏற்படுத்தியது, உலக தலைப்புச்செய்தி ஆனது. அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட சில முடிவுகள், 21-ம் நூற்றாண்டு செல்லும் திசையை மாற்றக்கூடிய வலிமை படைத்தவை.

    கடந்த 30 நாட்களில், ஏழைகள், எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கைவினை தொழிலாளர்களுக்கு 'விஸ்வகர்மா' திட்டம் தொடங்கப்பட்டது.

    ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கட்சியும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தன.
    • வாய்ப்பு கிடைத்தால், மகளிர் மசோதாவை ஆதரிப்பதில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கும் என்பதை மறக்க வேண்டாம்.

    போபால்:

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம், மாநில தலைநகர் போபாலில் நடந்தது.

    அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். பா.ஜனதா தொண்டர்கள் நடத்திய யாத்திரை நிறைவு, ஜனசங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டும் இந்நிகழ்ச்சி நடந்தது.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பெண்கள் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியும், 'இந்தியா' கூட்டணியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தன. பெண்சக்தியின் வலிமையை அவை புரிந்து கொண்டன.

    மேலும், மோடி வாக்குறுதி என்றால் 'உத்திரவாதம்' என்பதை புரிந்து வைத்துள்ளன. எனவே, நிர்பந்தத்தின் பேரிலும், தயக்கத்துடனும் மகளிர் மசோதாவை ஆதரித்தன.

    'இந்தியா' கூட்டணியை தொடங்கியவர்கள் யார்? முன்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்த அரசியல்வாதிகள் சேர்ந்துதான் அக்கூட்டணியை அமைத்துள்ளனர். மகளிர் மசோதாவை முன்பு கொண்டு வந்தபோது, அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை கிழித்தனர். சபாநாயகரை குறிவைத்து செயல்பட்டனர்.

    'இந்தியா' கூட்டணி கட்சிகள், பல்லாண்டு காலம் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தன. அப்போதே ஏன் மகளிர் மசோதாவை நிறைவேற்றவில்லை?

    வாய்ப்பு கிடைத்தால், மகளிர் மசோதாவை ஆதரிப்பதில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கும் என்பதை மறக்க வேண்டாம். வதந்தியை பரப்பி, பெண்களிடையே பிளவு ஏற்படுத்தும்.

    மத்தியபிரதேசத்தை நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தை பின்தங்கிய மாநிலமாக்கியது. மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அக்கட்சி மீண்டும் மத்தியபிரதேசத்தை பின்தங்கிய மாநிலம் ஆக்கிவிடும்.

    காங்கிரஸ் கட்சி, ஒரு குடும்ப கட்சி. கோடிக்கணக்கான ரூபாய் ஊழலையும், வறுமையையும், ஓட்டுவங்கி அரசியலையும் ஊக்குவித்தது. காங்கிரஸ் கட்சி துருப்பிடித்த இரும்பு போன்றது. மழையில் வைத்தால், அதன் கதை முடிந்து விடும்.

    வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைமக்களின் வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக தெரிகிறது. ஏழைகளின் குடிசைகளுக்கு செல்வதை சுற்றுலா போல் கருதுகிறார்கள்.

    ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு சென்று வீடியோ மற்றும் புகைப்பட படப்பிடிப்பு நடத்துகிறார்கள். முன்பும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏழைகளை இழிவுபடுத்தினர். காங்கிரஸ் கட்சி சிறிதுகூட மாறவில்லை.

    ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாக இருந்தால்தான் தங்களுக்கு நல்லது என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பா.ஜனதாவின் 5 ஆண்டுகால ஆட்சியில், 13 கோடியே 50 லட்சம் ஏழைகள், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    புதிய நாடாளுமன்றத்தையும் காங்கிரஸ் விமர்சிக்கிறது. நாட்டின் சாதனைகளை காங்கிரஸ் விரும்புவது இல்லை. எதிர்மறை தன்மையை பரப்பி வருகிறது.

    காங்கிரஸ் கட்சிக்குள் நகர்ப்புற நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிலவுகிறது. அடிமட்ட தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டு அமைதியாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தை அழிக்க முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் ராஜா போஜ் விமான நிலையத்துக்கு வந்தார்.
    • சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநில தேர்தல் விரைவில் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முயற்சி செய்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் களத்தில் இறங்கி உள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி போபாலில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். போபாலில் இன்று பா.ஜ.க. சார்பில் கார்யகா மஹா கும்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் ராஜா போஜ் விமான நிலையத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போபாலின் ஜம்போரி மைதானத்தை அடைந்தார்.

    பின்பு அவர் திறந்த ஜீப்பில் ரோடு ஷோ சென்றார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார். பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மா ஆகியோரும் வந்தனர். இதை தொடர்ந்து பிரதமர் மோடி லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார். முன்னதாக கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோத நிறைவேற்றியமைக்காக பா.ஜ.க. மகளிர் அமைப்பினர் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

    பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மத்தியபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வந்தே பாரத் ரெயில்களை திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் என 2 புதிய ரெயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

    எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ‘வந்தே பாரத்’ ரெயிலானது முற்றிலும் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
    • ‘வந்தே பாரத்’ ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நெல்லையில் இருந்து சென்னை செல்ல வேண்டுமானால் ஒரு நாளாகி விடும். அந்த நிலை இப்போது மாறியுள்ளது.

    'வந்தே பாரத்' ரெயிலானது முற்றிலும் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி ரெயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

    கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் ரெயில்வே துறையில் தமிழகத்திற்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ராமேசுவரம், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரெயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தமிழக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    'வந்தே பாரத்' ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும். அது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.