என் மலர்
நீங்கள் தேடியது "PM Modi"
- வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
- ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்தது.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷியாவுக்கு பதில் இந்தியா இனி வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "எண்ணெய் இறக்குமதியை பொருத்தவரை, 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்.அனைத்து கொள்முதல் முடிவுகளும் நாட்டு நலன் மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. இதில் அரசியல் அழுத்தங்களுக்கு இடமில்லை
- ராகுல் கூறும் கருத்துக்களுக்கு ஆளும்கட்சியினர் பதிலளிக்க வேண்டும்.
- ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்துக்கு உள்ளே அமர்ந்து போராடினோம்.
மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. சுதா, "மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டு மிகப்பெரிய பொய். ராகுல் கூறும் கருத்துக்களுக்கு ஆளும்கட்சியினர் பதிலளிக்க வேண்டும்.
ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்துக்கு உள்ளே அமர்ந்து போராடினோம்" என்று தெரிவித்தார்.
- எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை
- முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை நடத்த திட்டம்
மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள பிரியங்கா காந்தி,
"பிரதமர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். நேற்று, மூன்று பெண்கள் இருக்கைக்கு முன்னால் நின்றதால், அவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லையா... இது என்ன முட்டாள்தனம்? இங்கு எந்த விவாதமும் நடக்கவில்லை. காரணம் எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை" என தெரிவித்துள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை பாராளுமன்றம் வரை எதிரொலித்தது.
- அமித்ஷா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கூட்டணி உறுதியாகி விட்டதால் அடுத்த கட் டத்தை நோக்கி இந்த கூட்டணி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிறார்.
வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) அவர் மதுரையில் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தை மதுரையில் நடத்தவே திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தை மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடல், வலையல்குளம், உத்தல்குடி ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். போலீஸ் அனுமதி வழங்கும் இடத்தில் கூட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டணி கட்சி தலைவர்களையும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை பாராளுமன்றம் வரை எதிரொலித்தது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தையே அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். எனவே மதுரை பிரசாரத்தின்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சென்று அவர் சாமி தரிசனம் செய்வார் என்று கூறப்படுகிறது.
மேலும் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடு-ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக் கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2-ம் கட்டமாக மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதனால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளார்கள். பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவும் தமிழ்நாட்டில் பிரசாரத்துக்கு வருகிறார்.
சேலம் விமான நிலையம் அருகே உள்ள திடலில் நடக்கும் கூட்டத்தில் அவர் பேசுகிறார். சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.
அமித்ஷா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.
மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை உடனே தொடங்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள புதுவை மாநிலத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.
வருகிற 21-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 14-ந் தேதி புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் அவர் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வழிபடுகிறார்.
காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார் என கூறப்படுகிறது.
- யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு
- யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கும் பாராட்டு தெரிவிப்பார்கள்
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா - இந்தியா உறவை விமர்சித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தீபாவளிப் பண்டிகையை உலக பாரம்பரியங்களின் பட்டியலில் இனைத்ததற்காக யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு.
அதே யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கானப் பாராட்டை இன்றைய பட்ஜெட் விவாத்தில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
- கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
திருவள்ளூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
கூட்டத்தில் பேசிய எம்.பி. ஜெகத்ரட்சகன், "கலைஞர் உடல்நிலை சரியில்லாதபோது அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இப்படி சிறிய வீட்டில் இருக்கிறீர்களே. டெல்லியில் எனக்கு பெரிய வீடு இருக்கிறது. என் வீட்டுக்கு வாங்க என பிரதமர் மோடி அன்று கலைஞரை அழைத்தார். ஆனால் "எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்காங்க.. அதனால் உங்கள் வீடு பத்தாது என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார்" என்று தெரிவித்தார்.
- இயக்குநர் தீரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெல்லிசை’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படத்தில் வில்லன் கதாபாத்திரல் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இப்படத்தை தொடர்ந்து 'ஜெயம் கொண்டான்', 'வெண்ணிலா கபடிக்குழு', 'விடுதலை', 'வேட்டையன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் தீரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெல்லிசை' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை 'வெப்பம் குளிர் மழை' படத்தைத் தயாரித்த ஹேஷ்டேக் எப்டிஎப்எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் கிஷோர் தற்போது பிரதமர் மோடி குறித்து பேசியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
நடிகர் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு இருந்தால் 2014ஆம் ஆண்டுக்கு சென்று பிரதமரை மாற்றிவிடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கே எதுவுமே இருக்காது," என்று கூறியுள்ளார்.
- வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
- ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்தது.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது. முந்தைய காலங்களிலும் பிற நாடுகளிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியுள்ளது. இதில் புதிதாக எதுவும் இல்லை. ரஷ்யா ஒன்றும் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ஒரே நாடு கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும்
- தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
- தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை.
சேலம்:
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மையக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வருகிற சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும்.
மதுரையில் வருகிற 28-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி அடைவோம் என்று கூறி வருகிறார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 180 தொகுதிக்கு மேல் வெற்றி அடையும் என்று கருத்துக்கணிப்பு கூறி வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கேட்பதால் கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களுக்குள் கூட்டணி குழப்பம் இருக்கிறது.
மத்திய அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கிய நிதியை தமிழக அரசு முழுமையாக செலவு செய்யவில்லை. அந்த நிதியை தமிழக அரசு திரும்ப அனுப்பி உள்ளது. இது நிர்வாகத் திறமை இல்லையா? தாழ்த்தப்பட்ட மக்களை தமிழக அரசு புறக்கணிக்கிறதா? தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இல்லையா?.
5 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 575 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார். அதில் 70 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் ஆட்சி மாற்றம் உறுதி. ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் வருவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை. ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்
- வருகிற பிப்ரவரி 7 மற்றும் 8-ந்தேதி மலேசியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார்.
- தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகிற சனிக்கிழமை மலேசியா செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த பயணத்தின்போது மலேசிய வாழ் இந்தியர்களுடன் உரையாடுகிறார்கள். அதேபோல் தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த பயணத்தின்போது இந்தியா- மலேசியா சிஇஓ மன்றம் நிகழ்ச்சியும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று, நாகரிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் மலேசியாவும் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் 3-வது பெரிய நாடாக மலேசியாவில் 2.9 மில்லியன் பேர் கொண்ட இந்திய வம்சாவளியினர் இருப்பதும் இந்த உறவை மேலும் வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
- இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பிரதமர் உரையாற்றாமலேயே மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா உடனான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேலும் முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள கருத்துகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"சரணடைந்த மோடி" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய மக்களவை, பகல் 12 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 5 மணி எனப் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு இளைஞரும் இந்த புத்தகம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
- புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டக்கூடாது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து பேசும் போது, "பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வர துணிச்சல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் அவர் வந்தால், நான் இந்த புத்தகத்தை அவரிடம் கொடுக்கப் போகிறேன். பிரதமர் வந்தால், நான் நேரில் சென்று இந்த புத்தகத்தை அவரிடம் கொடுப்பேன், அதனால் அவர் அதை படித்து, இந்த நாடு உண்மையை அறிந்துகொள்ள முடியும்."
"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இந்த புத்தகம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது திரு. நரவணேவின் புத்தகம். அவர் இந்த புத்தகத்தில் லடாக் பற்றிய முழு விவரங்களையும் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டக்கூடாது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது."

"முக்கிய விஷயம் என்னவென்றால், பிரதமர் சொன்னதுதான் - "எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்". (முன்னாள்) ராணுவ தளபதி ஜெனரல் நரவணே, ராஜ்நாத் சிங்கை அழைத்து, சீன டாங்கிகள் கைலாஷ் ரிட்ஜூக்கு வந்துவிட்டன, அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, முதலில் ராஜ்நாத் சிங் அவருக்கு பதிலளிக்கவில்லை. அவர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் கேட்டார், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை."
"பின்னர் அவர் மீண்டும் ராஜ்நாத் சிங்கை அழைத்தார். ராஜ்நாத் சிங், தான் 'உயர்மட்டத்திடம்' கேட்பதாக கூறினார். 'உயர்மட்டத்தின்' நிரந்தர உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் உள்ளே வந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது சுடக்கூடாது என்பதுதான். நரவணேவும் நமது ராணுவமும் அந்த டாங்கிகள் மீது சுட விரும்பின, ஏனென்றால் அவை நமது எல்லைக்குள் நுழைந்துவிட்டன."
"நரேந்திர மோடி "எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்" என்று ஒரு செய்தியை அனுப்பினார். இதன் பொருள், நரேந்திர மோடி தனது கடமைகளை செய்யவில்லை; "இது என் சக்திக்கு அப்பாற்பட்டது" என்று கூறி, ராணுவ தளபதியை அவர் விரும்பியதை செய்யச் சொன்னார். 'நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், முழு அரசமைப்பாலும் நான் கைவிடப்பட்டேன்' என்று நரவணே எழுதுகிறார்," என ராகுல் காந்தி தெரிவித்தார்.






