என் மலர்

    நீங்கள் தேடியது "Priyanka Gandhi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்போது கொள்முதல் விலையும் குறையும்.
    • கூடுதல் வரிகளை நீக்குவதால் ஆப்பிள், வால்நட் மற்றும் பாதாம் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

    புதுடெல்லி:

    அமெரிக்க ஆப்பிள்கள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் மீதான கூடுதல் வரிகளை நீக்குவது குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதன்படி, அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரியை 35 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்போது கொள்முதல் விலையும் குறையும். இதனால் இமாச்சலபிரதேசம், சிம்லாவில் உள்ள ஆப்பிள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இங்கு ஆப்பிள் விவசாயிகள் கஷ்டப்படும்போது அரசு யாருக்கு உதவ வேண்டும்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூடுதல் வரிகளை நீக்குவதால் ஆப்பிள், வால்நட் மற்றும் பாதாம் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக இந்த தயாரிப்புகளின் பிரீமியம் சந்தை பிரிவில் நியாயமான போட்டி ஏற்படும். அதன் மூலம் போட்டி தன்மையில் சிறந்த தரத்தை உறுதி செய்யும் என கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.
    • பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார். இவர் பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பி.ஆர்.அம்பேத்கர், சட்ட மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வாதிட்டார், ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தப் பிரச்சினையை போதுமான அளவு கவனிக்கவில்லை. 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.

    அறுதிப் பெரும்பான்மையை வைத்துள்ள நரேந்திர மோடி அரசு ஏன் மசோதாவை நிறைவேற்றவில்லை. "ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எனது வேண்டுகோள் என்ன வென்றால், அவர்கள் இதை பொது பிரச்சினை யாக பார்க்க வேண்டும்.

    இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.இது நம் நாட்டில் உள்ள 70 கோடி பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.

    போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, பாஜகவின் ஸ்மிருதி , டிகே அருணா ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • பிரியங்கா உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மன்மோ கன்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரியங்கா காந்தி வதேராவும் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோனி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், அஜய் மாக்கன், ப.சிதம்பரம் ஆகியோரும் புதிய செயற் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    தீபாதாஸ் முன்ஷி, சையத் நஸீர் ஹுசைன், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட புதிய முகங்களுக்கும் செயற்குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. சோனியாவின் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பிய சசி தரூர், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சச்சின் பைலட் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதானியின் விமானத்தில் நமது பிரதமர் அமர்ந்திருக்கும் படம் எங்களிடம் உள்ளது.
    • மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் உரிமைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி பாராளுமன்றத்துக்கு செல்ல முழு தகுதியுடையவர் என அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வதேரா டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், "பிரியங்கா காந்தி கண்டிப்பாக மக்களவையில் இருக்க வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. அவர் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார். அங்கிருக்க தகுதியானவர். காங்கிரஸ் கட்சி அவரை ஏற்று சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன்" என கூறினார்.

    அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை ராபர்ட் வதேரா சூசகமாக தெரிவித்துள்ளார்.

    இதனிடையே ராபர்ட் வதேரா தனது பேட்டியில், பாராளுமன்றத்தில் பேசும் போது தொழில் அதிபர் கவுதம் அதானியுடன் தனது பெயரை இணைத்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதை கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் என் பெயருக்காக போராட நான் பேசுவேன், ஏனென்றால் அவர்கள் ஏதாவது சொன்னால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

    நான் அதானியுடன் செய்ததை எனக்கு காட்டுங்கள் என்று அவர்களுக்கு சவால் விடுகிறேன். ஏதேனும் தவறு நடந்தால், நான் எதிர்கொள்வேன். இல்லையென்றால், அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அதானியின் விமானத்தில் நமது பிரதமர் அமர்ந்திருக்கும் படம் எங்களிடம் உள்ளது. அதுபற்றி ராகுல் காந்தி கேட்டதற்கு ஏன் பதில் இல்லை.

    மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் உரிமைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி என்ற முறையில் இரானி அவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க ஒருபோதும் செல்லவில்லை.

    மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. அதுபற்றி பேசாமல், பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத என்னைப்பற்றி ஒருவித எதிர்மறையான விஷயத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு
    • கர்நாடக ஊழல் அரசை போன்று மத்திய பிரதேச அரசையும் மக்கள் வெளியேற்றுவார்கள்

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஞானந்திரா அவாஸ்தி என்ற பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அந்தக் கடிதத்தில் மத்திய பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த கடிதத்தை மேற்கொள்காட்டி காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ''கர்நாடகாவில் ஊழல் பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷனை பயன்படுத்தியது. தற்போது மத்திய பிரதேசத்தில், அதை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. 40 சதவீதம் கமிஷன் அரசை கர்நாடக மக்கள் அப்புறப்படுத்திவிட்டனர். தற்போது மத்திய பிரதேச மக்கள் 50 சதவீத கமிஷன் அரசை வெளியேற்றுவார்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதே கருத்தை அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தும், அருண் யாதவும் வலியுறுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் நிமேஷ் பதாக் புகார் அளித்துள்ளார். கடிதம் யார் பெயரில் வெளியானதோ, அவர் மீதும் புகார் அளித்துள்ளார்.

    சந்யோகிதகஞ்ச் காவல் நிலைய போலீசார் புகார் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 469 (போலி ஆவணம் மூலம் வேண்டுமென்றே நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.
    • மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த ஊரான குவாலியர்-சம்பல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் இந்த மாநிலத்தில் முதல்-மந்திரி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவை போல் மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி கடந்த ஜூன் மாதம் ஜபல்பூரில் பேரணி நடத்தி பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.1500 உதவி உட்பட கட்சியின் 5 வாக்குறுதிகளை அறிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்ட சபை தேர்தலில் பிரியங்கா காந்தியின் பிரசாரம் மற்றும் காங்கிரசின் வாக்குறுதிகள் காங்கிரஸ் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

    கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தை மத்தியப் பிரதேசத்துக்குக் கொண்டு சென்றதில் பிரியங்கா காந்தியின் பங்கு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கடந்த மாதம் பிரியங்கா காந்தியின் பேரணிக்கு முன்பு ஜபல்பூரில் புதிய திட்டத்தைத் தொடங்கினார். அதன்படி மாநிலத்தில் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். எதிர்காலத்தில் லட்லி பஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் தொகை அதிகரிக்கப்படும் என்று சவுகான் கூறியிருந்தார்.

    ஜபல்பூர் பகுதி பழங்குடியினரின் வாக்குகள் அதிகமாக நிறைந்த பகுதி ஆகும். பிரியங்கா காந்தியின் பேரணி அந்த சமூகத்தின் மத்தியில் காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் காங்கிரசின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த ஊரான குவாலியர்-சம்பல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

    ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.க.வுக்குச் செல்வதற்கு முன்பு பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தவர். இந்த பகுதியில் காங்கிரசின் செல்வாக்கை பலப்படுத்தவும், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை தன்பக்கம் ஈர்க்கவும் காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியாகவே பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை குவாலியர்-சம்பல் பகுதியில் நடத்துகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்று தாரளமாக சலுகைகளை அறிவித்து உள்ளார்.
    • மத்திய பிரதேசத்தை பிடிப்பதற்கு தூண்டில் போட்டுள்ளார் பிரியங்கா.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது அந்த கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. அதேபோல் அடுத்து வர இருக்கும் மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா உற்சாக மூடில் காணப்பட்டார்.

    தமிழ்நாடு மாடல் பிரசார யுக்தியை அந்த மாநிலத்திலும் புகுத்தி இருக்கிறார். ஏனெனில் தமிழ்நாட்டை போல் பெண்களுக்கு மாதம் ரூ.1000, பஸ்சில் இலவச பயணம் என்ற வாக்குறுதிகள் கர்நாடகத்தில் வாக்குகளை பெறுவதற்கு காங்கிரசுக்கு கை கொடுத்தது. அதேபோலத்தான் மத்திய பிரதேசத்திலும் தமிழ்நாடு மாடலை கையில் எடுத்து உள்ளார். அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் வரை இலவச மின்சாரம். அதற்கு மேல் 200 யூனிட் வரை பாதி மின்சார கட்டணம் என்று அறிவித்ததோடு ஏற்கனவே அந்த மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்திருப்பதால், அதில் இருந்து ஒரு படி மேல் போய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவித்து கை தட்டலை பெற்றார்.

    மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்று தாரளமாக சலுகைகளை தமிழ்நாடு மாடலிலேயே அறிவித்து உள்ளார். அறிவித்ததோடு மட்டுமல்ல நாங்கள் சொன்னது போல் கர்நாடகாவில் செயல்படுத்தி இருக்கிறோம். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களால் செயல்படுத்த முடியும் என்று சொல்லி மத்திய பிரதேசத்தை பிடிப்பதற்கு தூண்டில் போட்டுள்ளார் பிரியங்கா.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை பிரியங்கா காந்தி சாடினார்.
    • மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுப்பத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மணிப்பூரில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மணிப்பூர் மக்களின் பாதுகாப்பையும் அமைதியை மீட்டெடுக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக உள்ள சிலரை மாற்ற கட்சி திட்டமிட்டுள்ளது.
    • காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி ஏற்கனவே உறுப்பினராக உள்ளார்.

    புதுடெல்லி:

    மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது.

    இதுபோல வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் தோல்வியை தழுவிய காங்கிரஸ், அங்கும் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கர்நாடகா மாநில தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அடுத்து வர இருக்கும் வடமாநில தேர்தலிலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் இப்போதே வியூகம் வகுக்க தொடங்கியுள்ளது.

    இதன்ஒரு பகுதியாக கட்சியின் முக்கிய அமைப்புகளில் இளம் ரத்தத்தை புகுத்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக கட்சியின் தேர்தல் வியூகம், செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை வகுக்கும் காரிய கமிட்டியை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி காங்கிரஸ் காரிய கமிட்டியில் இளம்தலைமுறைக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமனம் மூலம் கட்சி இன்னும் உத்வேகத்துடன் செயல்படும் எனவும், இதன்மூலம் ஏற்கனவே ஆட்சியில் இருந்த மாநிலங்களில் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்க முடியும் எனவும் மூத்த நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

    இதற்காக இப்போது காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக உள்ள சிலரை மாற்ற கட்சி திட்டமிட்டுள்ளது. இதில் கேரள மாநில முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாண்டி, தினேஷ் குண்டு ராவ், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் எச்.கே.பாட்டீல், பீகார் பொறுப்பாளர் பக்தச ரண்தாஸ் மற்றும் நிர்வாகிகள் அவினாஷ் பாண்டே, ஹரிஷ் சவுத்திரி ஆகியோர் மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.

    இவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, மேல்சபை எம்.பி.ரஞ்சித் ரஞ்சன், நிதின் ராவத், கர்நாடக மாநில மூத்த தலைவர் ஹரிபிரசாத், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மத்திய மந்திரி சுபோத்காந்த் சகாய் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதனை கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ராய்ப்பூரில் நடந்த கட்சி மாநாட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் விசுவாசியாகவே கருதப்படுகிறார். எனவே அவர், அவர்களின் விருப்பப்படி, கட்சியில் இளம்தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க ஏற்பாடு செய்வார் என கூறப்படுகிறது.

    காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல் காந்தி ஏற்கனவே உறுப்பினராக உள்ளார். பிரியங்கா காந்தியும் இப்போது உறுப்பினர் ஆகியுள்ளார். இவர்கள் புதுமுகங்களுடன் இணைந்து கட்சியை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
    • மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டதாக பிரியங்கா குறிப்பிட்டார்.

    ஜபல்பூர்:

    மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் ஊழலில் மூழ்கிவிட்டது. வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டது. 'வியாபம்' மற்றும், 'ரேஷன் விநியோகம்' ஆகியவற்றில் ஊழல் நடந்திருக்கிறது. மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் 220 மாத ஆட்சியில் 225, 'மோசடிகள்' நடந்துள்ளன.

    கடந்த 3 ஆண்டுகளில், பா.ஜ.க. அரசாங்கத்தால், மாநிலத்தில் 21 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, எனது அலுவலகத்தில் இதனை 3 முறை சரி பார்த்ததற்கு பிறகு, இது உண்மைதான் என கண்டறிந்தேன்.

    நாங்கள் (காங்கிரஸ்) பல இரட்டை-எஞ்சின் மற்றும் மூன்று-எஞ்சின் அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் (பா.ஜ.க.விற்கு) தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    காங்கிரசிலிருந்து பா.ஜ.க.விற்கு மாறிய தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவை, பெயரை குறிப்பிடாமல் கிண்டல் செய்த பிரியங்கா காந்தி, மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை கைவிட்டதாக குறிப்பிட்டார்.

    சிந்தியாவுக்கு விசுவாசமான எம்.எல்.ஏக்கள் கடந்த மார்ச் 2020 வருடம் காங்கிரஸிலிருந்து வெளியேறி, கமல்நாத் அரசாங்கத்தை வீழ்த்தி, தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் ஆட்சிக்கு வர வழி வகுத்தனர்.