என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேநீர் விருந்து"

    • நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு வந்த அமித் ஷாவுக்கு மங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மாநாட்டில் பங்கேற்ற வயது முதிர்ந்த பெண்கள் உண்மையிலேயே பூத் கமிட்டியினர் தானா என்று அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.

    நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி தென்மண்டல பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

    இதற்கிடையே, அமித்ஷாவுக்கு, பாளையங்கோட்டை பெருமாள்புரம் புனித தாமஸ் தெருவில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பிரபல தனியார் ஓட்டலில் இருந்து தேநீர் விருந்துக்கான உணவு பொருட்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அமித்ஷாவுக்காக திருநெல்வேலி அல்வா, குழிப்பணியாரம், லட்டு, ரோஸ் பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளும், தட்டாம் பயிறு, சுண்டல், வேர்கடலை போன்ற பயிர் வகைகள், பில்டர் காபி, டீ, லெமன் டீ, கிரீன் டீ ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக 35 உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு இருந்தன.

    மாலை 5.35 மணிக்கு நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு வந்த அமித்ஷாவுக்கு மங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலையை அமித்ஷா கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். தொடர்ந்து அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, இளைஞர் அணி துணை தலைவர் நயினார் பாலாஜி, நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்துபலவேசம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் தேநீர் விருந்திற்கு மூத்த நிர்வாகிகள் அழைக்கப்படாததால் அதிருப்தியடைந்த அமித்ஷா நயினார் நாகேந்திரனை கடிந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமித்ஷாவின் அதிருப்திக்கான காரணம்:

    * தேநீர் விருந்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களை ஏன் அழைக்கவில்லை. மூத்த நிர்வாகிகளை அழைத்து ஒன்றாக அமர்ந்து பேசும்போதுதான் கட்சி, கள நிலவரம் தெரிய வரும்.

    * நெல்லை பூத் கமிட்டி மாநாட்டில் தான் பேசிக்கொண்டிருந்தபோது வெளியில் எழுந்து சென்றவர்கள் யார்?

    * மாநாட்டில் பங்கேற்ற வயது முதிர்ந்த பெண்கள் உண்மையிலேயே பூத் கமிட்டியினர் தானா?

    * நான் பங்கேற்கும் நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வருக வருக என பேனர்கள் வைத்தது ஏன்? என்று அமித்ஷா கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கடைசி நேரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் விருந்தை புறக்கணித்தார்.
    • பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர்.

    நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

    வழக்கப்படி அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கடைசி நேரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் விருந்தை புறக்கணித்தார்.

    இந்நிலையில் இன்று மாலை தொடங்கிய தீநீர் விருந்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பங்கேற்றனர்.

    பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை பங்கேற்றுள்ளார்.

    அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோருக்கும் பங்கேற்றனர். 

    • ஆளுநர் ரவி மாலை ராஜ் பவனில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.
    • முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கட்சிகள் ஏற்கனவே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் ரவி நாளை மாலை ராஜ் பவனில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.

    இதற்கு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்ட்டது.

    இந்நிலையில் ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழர் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி விருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கட்சிகள் ஏற்கனவே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்.
    • சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர்.

    குறிப்பாக, அந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் தனது தீர்ப்பில் கூறினார்கள்.

    இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கவர்னர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்கி, ராகேஷ் திவேதி, வில்சன் எம்.பி. ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தேநீர் விருந்து அளிக்கிறார்.

    வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்வார்கள்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    குடியரசு தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.

    ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளை (26-ம் தேதி) தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

    உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    கடந்த 23.1.2023 அன்று கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளின்போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுத வேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுக்கிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் கவர்னரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரி வித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
    • முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்பு

    புதுடெல்லி:

    இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னர்களும் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். மாநில கவர்னர்கள் அளிக்கும் தேநீர் விருந்துகளில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கின்றனர்.

    அந்த வகையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
    • பொங்கல் மற்றும் சுதந்திர தினவிழா தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்து இருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில், கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர தினவிழா, தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். திமுக கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.

    அதேபோல் குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திலும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

    இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலாளர் நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார். அதை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

    சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக நிர்வாகிகள் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சென்னையில் இல்லாததால், தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை.

    முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.
    • கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    புதுச்சேரி:

    சுதந்திர தினவிழாவையொட்டி கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர், வி.பி.ராமலிங்கம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், கருணாநிதி, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி சீனிவாஸ் மற்றும் அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதேநேரத்தில் கவர்னர் ஜனநாயத்துக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர் போல செயல்படுவதாக கூறி தி.மு.க, காங்கிரஸ் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
    • இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த விருந்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    கவர்னர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு வந்தால் அவர்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கலந்து கொள்ளாததால் அவர்களுக்கு தான் நஷ்டம்.

    அன்போடு அழைத்ததன் பேரில் வந்தவர்களுக்கு வாழ்த்து. பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்வோம். இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    முன்னதாக கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.
    • கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, ஜனநாயக கேரள காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் (எஸ்), கேரள காங்கிரஸ் (பி) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு, முதல் 2½ ஆண்டுகளும், மேலும் உள்ள 2 பேருக்கு அடுத்த 2½ ஆண்டுகளும் மந்திரி பதவி வழங்குவது என தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி முதல் 2½ ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த 2½ ஆண்டுகளுக்கான மந்திரிகளாக நேற்று கடனம்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் அவர்களுக்கு கவர்னர் ஆரிப் முகம்மதுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட மந்திரிகள் அனைவரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் புறக்கணித்தனர். புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகள் கணேஷ்குமார், கடனம்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருடன் வனத்துறை மந்திரி சசீந்திரன் மட்டும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

    முன்னதாக பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் இருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அவர் காரில் புறப்பட்டபோது, இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
    • கவர்னர் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இந்நிலையில் குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

    கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கவர்னரின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியங்களுக்கு எதிராக கவர்னர் பேசுகிறார். வரலாற்றை சிதைக்கும் வகையில் கவர்னர் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ். தொண்டனை போல் செயல்படுகிறார் கவர்னர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
    • புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.

    இதற்கான அழைப்பிதழ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று உள்ளோம்.

    ஆனால் சமீப காலமாக புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.

    ஆகவே, கவர்னர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×