என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர் மாளிகை"

    • பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.

    ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி வைத்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாணிகைகளின் ராஜ் பவன் என்ற பெயர் லோக் பவன் என்று மாற்றப்பட்டது.

    ஆளுநர்கள் ராஜாக்கள் அல்ல என்பதாலும் ஆளுநர் மாளிகை மக்களுக்கான தளம் என்பதாலும் லோக் (மக்கள்) பவன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

    இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் அலுவலகம் (PMO) செயல்பட உள்ள புதிய கட்டிட வளாகத்திற்கு 'சேவா தீர்த்' என்று பெயரிடப்பட உள்ளது. 'சேவா தீர்த்' என்பது புனிதமான சேவைத்தலம் என்று பொருள்படும்.

    கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.

    உலகத் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளுக்கான 'இந்தியா ஹவுஸ்' கூட இதில் ஒரு பகுதியாக இருக்கும்.

    பிரதமர் மோடியின் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலை 'லோக் கல்யாண் மார்க்' என்றும், வரலாற்று சிறப்புமிக்க ராஜ பாதையை 'கர்தவ்ய பாதை' என்றும், மத்திய செயலகம் 'கர்தவ்ய பவன்' என்றும் பெயர் மாற்றப்பட்டது.  

    • ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை வைத்தார்.
    • இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

    இதனையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த பெ.சண்முகம், "கொடிய விஷமுள்ள பாம்புக்குகூட நல்ல பாம்பு என்றுதான் பெயர். நல்ல பாம்பு என்று சொல்வதால் அதற்கு விஷமில்லை என்று அர்த்தம் இல்லை. ராஜ் பவனை மக்கள் பவன் என மாற்றியதால் அவர்கள் குணம் எல்லாம் மாறிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியாது" என்று தெரிவித்தார்.

    • உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை "மக்கள் மாளிகை" ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது.
    • இது, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

    தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    "காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் "மக்கள் மாளிகை" என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, "ராஜ்பவன், தமிழ்நாடு" என்பது "மக்கள் மாளிகை தமிழ்நாடு " எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை "மக்கள் மாளிகை" ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது.

    இது, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது. இந்த பெயர்மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும் எக்ஸ் (முன்னாள் டிவிட்டர்), முகநூல் பக்கங்களிலும் ராஜ்பவன் என இருந்த பக்கங்கள் லோக் பவன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    • புதுச்சேரி, போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என கண்டன ஆர்ப்பாட்டம்.
    • விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

    புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது.

    அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரியவந்தது.

    அதன் பெயரில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பொதுமக்களில் உயிர் சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டார். ஆர்ப்பாடத்தை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர் அங்களான் உள்ளிட்டோர் இந்த விவகாரத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.

    • கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.
    • கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

    இந்த சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதனால் இந்த மிரட்டல் புரளி என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர்.
    • ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது.

    ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் வீடு, பிரெஞ்சு தூதரகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    தொடர்ந்து கடந்த வாரத்தில் நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட்டுகள் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது.

    போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் நபரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுவை சைபர் கிரைம் போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இமெயிலில் ஒரு தகவல் வந்தது. அதில், ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என தகவல் இருந்தது.

    இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவற்றுடன் சோதனை நடந்தது. இறுதியில் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.

    இதனிடையே ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது. இதற்கான கணபதி ஹோமம் இன்று அதிகாலை கடற்கரை சாலையில் உள்ள கலாச்சார மையத்தில் நடந்தது.

    இதனால் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தற்காலிக ஆளுநர் மாளிகையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
    • பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கிண்டி ஆளுநர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
    • விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என தகவல் தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என தகவல் தெரியவந்துள்ளது.

    வானிலை ஆராய்ச்சிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்கவிடப்படும் பலூன் செயலிழந்து ஆளுநர் மாளிகையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

    • தமிழர்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என பசும்பொன் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஆளுநர் மாளிகையை இழுத்து பூட்ட வேண்டும் என்றார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கவர்னராக இருக்கும் ரவி தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். நேற்று சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் தமிழக அரசு கொடுத்த உரையை முறையாக வாசிக்காமல் சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை கவர்னர் ஏற்படுத்தி இருக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    கவர்னரின் இந்த மக்கள் விரோத செயலை கருப்பு சட்டை வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். அவருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டின் வரலாறை சரியாக புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழக அரசிற்கும் இடையூறுகளை ஏற்படுத்தி வரும் கவர்னர் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செய்ய விரும்பினால் அவர் பா.ஜ.க.வின் கமலாலயத்தில் இருந்து அரசியல் செய்யட்டும். ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மக்களிடையே பிரிவினை வாதத்தையும், அரசுக்கு எதிரான நடவ டிக்கைகளிலும் ஈடுபடுவதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு எத்தனையோ சான்றோர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் வீரத்தையும் வரலாற்றையும் பாதுகாத்துள்ளார். இதுபோன்று எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தின் வரலாறுகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அவமா னப்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கவர்னர் ரவி வாழ தகுதியற்றவராகி விட்டார். ஆளுநர் மாளி கையை உடனடியாக பூட்ட வேண்டும்.அவரை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதுதான் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது.

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
    • ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கிடையே, அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாருக்கு முறையான பதிலைத் தராமல் மழுப்பலான பதிலை ஆளுநர் அளித்துள்ளார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். தான் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என தெரிவித்தார்.

    ×