என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு - துணை ஜனாதிபதி பங்கேற்பு
- ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Next Story






