என் மலர்

    நீங்கள் தேடியது "TN Governor"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
    • விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கரமடம் ஆகியவற்றில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

    பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

    கோவிலுக்கு வந்த அவரை அறங்காவலர் குழுவின் உறுப்பினர் வ.ஜெகன்னாதந், காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, தியாக ராஜன், சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.

    மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை கோவில் ஸ்தானீகர்கள் சியாமா சாஸ்திரிகள், நடன சாஸ்திரிகள், கோவில் மணியக்காரர் சூரியநாராயணன், சங்கர மடத்தின் நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

    காஞ்சி சங்கரமடத்தில் உள்ள மகாபெரியவர் அதிஷ்டானத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மடத்தின் நிர்வாகி கீர்த்தி வாசன், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பிருந்தாவனத்தில் மகா பெரியவர் கிரீடம் அணிந்தும் தங்க ஹஸ்தத்துடனும் ஜெயேந்திரர் மயில்தோகை அலங்காரத்திலும் காட்சி அளித்தார்.

    பிருந்தாவனத்தின் அர்ச்சகர் பாலாஜி சங்கர மடத்தின் சிறப்புகள் மற்றும் காஞ்சி மடாதிபதிகளின் சிறப்புகளை விரிவாக விளக்கிக் கூறினார். விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னரின் முதன்மை செயலாளராக பணிபுரிந்து வந்த ஆனந்த்ராவ் பட்டீல் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணை செயலாளராக ஆனந்த்ராவ் பட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு முதன்மை செயலாளராக பணிபுரிந்து வந்த ஆனந்த்ராவ் பட்டீல் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணை செயலாளராக அவர் நியமிக்கப்பட்டு அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் கவர்னர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.
    • தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து கவர்னர் மாதாந்திர அறிக்கை கொடுப்பார் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசவும் நேரம் கேட்டு உள்ளார். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து கவர்னர் மாதாந்திர அறிக்கை கொடுப்பார் என தெரிகிறது. மேலும் சில சட்ட நிபுணர்களையும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    4 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சனாதனம் என்பது பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் இப்போது பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.
    • ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசும்போது, ''சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசுக்களை போன்று ஒழிக்க வேண்டும்'' என்று பேசினார்.

    இந்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

    சனாதனம் என்பது பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் இப்போது பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி ஆன்மிகவாதிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் வெவ்வேறு விளக்கங்களை குறிப்பிட்டு வருகிறார்கள். இதில் எதை அதிகாரபூர்வமாக சனாதனத்துக்கு பொருளாக எடுத்துக்கொள்வது என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

    இந்த நிலையில், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள கருத்துகள் விவரம் வருமாறு:-

    சனாதன தர்மம் என்பது ஆன்மிகம், வாழ்க்கை மற்றும் படைப்பு தொடர்பான அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையாகும். இதில் படைப்பின் ஒவ்வொரு கூறுகளுமே ஆன்மிகத்தின் பல்வேறு வெளிப்பாடுகளாகும். இதனால் அவை ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும், இணைக்கப்பட்டதாகவும் இருக்கிறது. இத்தகைய கண்ணோட்டம், தனிமனிதன், குடும்பம், சமூகம் ஆகியவை தங்களுக்குள்ளும், சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவை பிரதிபலிக்கும் வகையிலும், அவற்றை மதிக்கும் வகையிலும் இருக்கிறது.

    இது அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டாக இணைந்து நடத்தும் ஒரு ஒத்திசைவான கலாசாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. சனாதன தர்மத்தை பொறுத்தமட்டில் சாதி அல்லது சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இத்தகைய பாகுபாடுகள் சமூக தீமைகள் மட்டுமின்றி, சனாதன தர்மத்துக்கும் எதிரானது.

    சனாதன தர்மத்தின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட வெளிபாடு ரிக் வேதத்தின் அடிப்படை கொள்கைகளில் இருந்து வெளிக்கொணரப்பட்டது. அது வருமாறு:-

    * பரமேஸ்வரர் அல்லது ஆதி பகவான் அல்லது சர்வ சக்தி உள்ள கடவுள்தான் படைப்புகளை உருவாக்கினார்.

    * படைப்புகளை உருவாக்கிய பரமேஸ்வரர் படைப்பின் ஒவ்வொன்றிலும் அங்கமாக இருக்கிறார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றிலும் அவர் இருக்கிறார். எனவே படைப்பு முழுவதும் ஒரு குடும்பம்தான்.

    * இந்த உலகளாவிய ஒருமைப்பாடு மக்களின் ஆன்மிக முயற்சிகள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்ப அனுபவிக்கப்படுகிறது. எனவே அவர்கள் அதை தங்கள் வழிகளில் வெளிப்படுத்தி, சம்பிரதாயங்கள் அல்லது நம்பிக்கையின் பிரிவுகள் என்று அழைக்கப்படும் பல பாதைகளை உருவாக்குகிறார்கள். எனினும் அடிப்படை கொள்கைகளில் எந்தவித வேறுபாடும் இல்லை.

    பெரு வழக்கமான உலக சமயங்களுக்கு உரியவையல்லாத சமய நம்பிக்கைகளை உடைய அல்லது சமய நம்பிக்கையற்ற என்ற கருத்து சனாதன தர்மத்துக்கு அன்னியமானது. அதற்கு ஒருபோதும் சனாதன தர்மத்தில் இடம் இல்லை. 'உலகம் ஒரு குடும்பம்' (வசுதைவ குடும்பம்) அல்லது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' ஆகியவை சனாதனத்தின் முக்கிய பிரதிபலிப்புகளாகும். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.
    • முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்.

    கோவை:

    ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் இந்து மதமோ, சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை. பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து கொண்டிருக்கிறார்கள். காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.

    இவர்கள் இன்னும் 1952-ல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். காலம் மாறி வருகிறது. மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரியமும், அதனுடைய பெருமையும் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கிற தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

    தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசு கருத்தைச் செலுத்துவதும், கவனத்தை செலுத்துவதும், தி.மு.க.விற்கும், தமிழகத்திற்கும் நல்லது. ஒட்டு மொத்தத்தில் தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு வேண்டாம் என்கிறார்கள்? ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் முடிவுகளை எடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அது சாத்தியம்.

    தி.மு.க. பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு எதையும் எதிர்பார்க்காத நல்ல கவர்னர் கிடைத்திருக்கிறார். அதைவிட இவர்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை. தமிழ் மீதும், தமிழரின் மீதும், தமிழர்களின் முன்னேற்றத்தின் மீதும், அக்கறை கொண்ட கவர்னர் கிடைத்திருக்கிறார்.

    அதை விட்டுவிட்டு இவர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீட் தேர்வு ரத்து சட்ட மசோதாவை அமல்படுத்த முடியுமா?. முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். அதன் பழியை கவர்னர் மீது போடுகிறீர்கள்.

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என்றீர்கள். நீங்கள் முதல் கையெழுத்து போட்டால் அது சட்டமாகிவிடுமா என்ன? எதுவெல்லாம் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ எதெல்லாம் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருக்கிறதோ அதில் மட்டும்தான் கவர்னர் கையெழுத்திட முடியும்.

    ஏழை மக்களின் நிலையை கண்டு, பொருளாதார நிலையை மனதில் கொண்டு ஏழை மக்களிடம் அதன் பலனை கொண்டு செல்ல வேண்டும் என கருத்தில் கொண்டே ரூ.200 கியாஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது

    பா.ஜ.க.விற்கு எதிரான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்து. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும், ஜே.பி. நட்டாவுக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை கைது செய்து தனி வாகனம் மூலம் பழனிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகை தந்தார். கவர்னர் வருகையை முன்னிட்டு கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார் உத்தரவின்பேரில் தேனி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலுக்கு கவர்னர் வருகையை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் மசோதாவிற்கு கையெழுத்திடாமல் இருப்பது மற்றும் தமிழக உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் செல்லவில்லை. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை கைது செய்து தனி வாகனம் மூலம் பழனிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அப்பகுதியில் வேறு யாரேனும் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் கவர்னர் தங்கியுள்ள கோகினூர் மாளிகை முன்பு யாரும் உள்ளே வராத அளவிற்கு தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 30-வது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவிகள் டாக்டர் பட்டம் பெறுகின்றனர்.
    • தற்போது 2-வது முறையாக கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, டெல்லி அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்த விழாவில் 15,375 மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இதில் 785 மாணவிகள் நேரடியாக கவர்னரிடம் பட்டங்களை பெறுகின்றனர். 40 மாணவிகள் தங்களது துறைகளில் பதக்கங்கள் பெறுகின்றனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் மாணவிகளுடன் கவர்னர் ரவி கலந்துரையாடல் நடத்துகிறார்.

    30-வது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவிகள் டாக்டர் பட்டம் பெறுகின்றனர். மேலும் 76 மாணவிகள் எம்.பில் பட்டம் பெறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் தலைமையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதன்முறையாக கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அப்துல்கலாம் கலந்து கொண்டார். தற்போது 2-வது முறையாக கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா, பதிவாளர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தமிழக கவர்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர் என் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் கூறியிருப்பதாவது:-

    "கல்வி துறையில் உங்களின் தலைசிறந்த முயற்சிகள் மற்றும் அர்பணிப்புக்காக, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை மாலதி, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள்.
    • இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கி கணக்குகள் உள்ளன.

    திருச்சி:

    திருச்சி ஐ.ஐ.எம். நிறுவனத்தில் தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

    தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகில் தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்குவதற்கு தேவைப்படும் புதிய திறன்கள் மற்றும் பரிணாமங்கள் குறித்த கருப்பொருளில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

    இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்தியாவில் ஊழல் ஒரு பிரச்சனையாக உள்ளது.

    ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றடைகிறது. மீதமுள்ள, 85 பைசாவை ஊழல் செய்கிறார்கள். இதற்கான தீர்வாக, 'டிஜிட்டல் இந்தியா' கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 56 சதவீதம் பெண்கள் இருக்கிறார்கள். இதனால் இவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால் இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை. சமீபத்தில் நடைபெற நிகழ்வில் தமிழகத்தில் பள்ளிக்கல்வி படிக்கும் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு மாணவன், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இதனால், பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அந்த மாணவனை நான் பாராட்டினேன்.

    முத்ரா திட்டத்தின் மூலம் பலரும் தொழில் தொடங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பாடு அடைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள்.
    • அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும்.

    கோவை:

    கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் 7 நாட்கள் நடைபெறும் நொய்யல் பெருவிழா இன்று தொடங்கியது.

    விழாவினை கவர்னர் ஆர்.என்.ரவி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

    சந்நியாசிகள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

    நம் நாட்டில் நீர்நிலைகளுடனான தொடர்பு என்பது நமது உணர்வுகளுடன் தொடர்புடையதாகும்.

    ஆனால், பல ஆண்டுகளாக அந்தியர்களால் படையெடுப்பு காரணமாக அந்த உணர்வானது மறைக்கப்பட்டது.

    ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள்.

    அவர்களின் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்களின் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம்.

    அன்னை இயற்கையை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம். அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம். தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை. அதனால், நீரை அன்னையாக பாவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது. அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும். நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin