search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker Appavu"

    • நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
    • மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப்பணி துறையின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக மதுரையை தலைமையிடமாக கொண்ட தென்மண்டலத்தினை 2 ஆக பிரித்து நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. பாளை என்.ஜி.ஓ.பி. காலனி பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தீயணைப்பு மீட்புப்பணி துறை தென்மண்டல துணை இயக்குநர் விஜயக்குமார், நெல்லை மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மண்டலமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 34 தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையங்களையும் உள்ளடக்கியது.

    பேரிடர் மற்றும் அவசர காலங்களில் இம்மண்டல துணை இயக்குநர் உடனுக்குடன் விரைந்து சென்று பணிகளை மேற்பார்வையிடுவதற்கும், மண்டலத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுரை மண்டல அலுவலக்திற்கு சென்று வருவதற்கான பயண நேரம் குறையும். இந்த மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது.
    • கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம்.

    நெல்லை:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

    அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. வாய்ப்பு வழங்குவது தொடர்பாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் பரிசீலிக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு எங்களுடைய சட்டப்பேரவை முதன்மைச் செயலாளருடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம்.

    கால்டுவெல், ஜி. யு.போப் பற்றி கூறியபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்திய கலாசாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள்.

    பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாசாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அவர்கள் தான் சொத்து வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் வெள்ளைக்காரர்களான கால்டுவெல், ஜி. யு.போப் போன்றவர்கள் வந்த பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதைத்தாண்டி இந்திய, தமிழக கலாசாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

    தமிழர்கள், இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம். உயர் ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கும் முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் தான். கால்டுவெல்லை அங்குள்ள 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 1999 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அனுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆள்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த தேர்வை ரத்துசெய்ய கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மறறும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக, அணுமின் நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நாளை நடக்க உள்ள எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்யாவிடில், தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நாளை முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜயதாரணி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
    • பாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 190 (3) (பி)ன் கீழ் சட்டப்பேரவை விதிகளின்படி பிப்ரவரி 24 முதல் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, 'திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருக்கிறதா என சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். இந்த ஆட்சி சட்டத்தின் ஆட்சி. சட்டத்திற்குட்பட்டு சரியான நடவடிக்கை எடுத்து வருவதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார்.

    • தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
    • 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கியது.

    மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    சட்டசபையில் தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    விஜயகாந்த் குறித்து சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கேப்டன் என்று புகழ் பெற்றவர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர் விஜயகாந்த்.

    2006 முதல் 2016 வரை சட்டசபை உறுப்பினராக இருந்தவர் விஜயகாந்த். 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.

    தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதையடுத்து 2வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது.

    • சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த காட்டியது பெருமை அளிக்கிறது.
    • காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

    2022-2023-ம் ஆண்டில் 7.2 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொருத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம் பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.

    மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

    சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

    அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.

    மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைபடுத்த அனுமதிப்பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

    நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    முதலமைச்சரின் கனவுத்திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

    வரலாற்றிலேயே முதல்முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.

    2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.

    மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித்திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.

    மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.

    3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.

    ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.
    • தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

    சென்னை:

    சட்டசபை நிகழ்விற்கு பின்னர் வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.

    * கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி என்று சபாநாயகர் கூறினார்.

    * சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.

    * பாஜக வெளிநடப்பு செய்திருக்கலாம், ஆனால் அவை மாண்புக்கான அமர்ந்திருந்தோம்.

    * கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.

    * அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசி உள்ளார்.

    * கோட்சே என்று பேசி மரபில் இல்லாத வழியை சபாநாயகர் பின்பற்றி உள்ளார்

    * தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

    * சபாநாயகர் தேவையில்லாத விஷயங்களை பேசியதால், கவர்னர் அவையில் இருந்து வெறியேறினார் என்று அவர் கூறினார்.

    • துரைமுருகன் பேச தொடங்கியதும் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார்.
    • துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தமிழில் பேச தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நிமிடங்களில் தனது உரையை கேரள பாணியில் 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரசின் உரையை முழுமையாக கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது, உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன். தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை என்றார்.

    இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் எதிரான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கியதும் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில்,

    * அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும்.

    * கவர்னர் பேசியது அவை குறிப்பில் இடம்பெறாது.

    * கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.

    * முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவது தான் தமிழ்நாடு சட்டசபையின் மரபு.

    * கொள்கை முரண்பாடு இருந்தாலும் மாண்புடன் அவை நடத்துவதுதான் மரபு.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குற்றச்செயல்களை தடுப்பதில் தமிழக அரசு சமரசம் இன்றி செயல்பட்டு வருகிறது.
    • நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு படித்த கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:

    * புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

    * குற்றச்செயல்களை தடுப்பதில் தமிழக அரசு சமரசம் இன்றி செயல்பட்டு வருகிறது.

    * ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே அரசின் நோக்கம்.

    * குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒருபோதும் அமல்படுத்தப்போவதில்லை என்பதில் அரசு உறுதி.

    * மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை.

    * நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

    * மருத்துவ சுற்றுலாவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.

    * கிண்டியில் குறுகிய காலத்தில் 1000 படுக்கைகளுடன் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.

    * ரூ.218 கோடி செலவில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பலன்.

    * முந்தைய ஆண்டுகளை விட 203 சதவீதம் அதிகமாக தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    * காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    * ரூ.4,861 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * 2ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை.

    * மீனவர்களின் நலனை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.

    • கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முடித்துக்கொண்டார்.
    • தமிழக அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தலைமைச் செயலகத்தில் பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி உரையை தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.

    கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முடித்துக்கொண்டார்.

    உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுடன் முரண்படுகிறேன் என்று கூறிய கவர்னர் ஆர்.என்.ரவி 2 நிமிடங்களில் உரையை முடித்துக்கொண்டார்.

    தமிழக அரசின் கொள்கை விளக்க உரையை கவர்னர் முழுமையாக படிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

    சபாநாயகர் வாசித்து வரும் உரையை, சட்டசபையில் அமர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டு வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமைச்செயலகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழில் பேசி உரையை தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை முடித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரசின் உரையை முழுமையாக கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

    * உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.

    * தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.

    * அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. 

    • தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
    • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் இன்று சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டசபை கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்துக்காக சபாநாயகர் அப்பாவு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.

    ×