என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVK"

    • அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார்.
    • தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம்

    தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கோரி இன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், தவெக நிர்வாகி அஜிதாவிற்கு அப்பதவி வழங்கப்படவில்லை. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜை நியமித்தார் அக்கட்சித் தலைவர் விஜய்.

    தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். அதன் ஒருபகுதியாக இன்று விடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியும் நேற்றே பரவியது.

    இதனால் தனக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. விஜய் காரை மறித்தும் விஜய் இடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. 

    இந்நிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

     

    • சார் சார் என அழைத்தும் கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்
    • கட்சிக்காக நீண்டநாட்கள் உழைத்ததாக கூறும் அஜிதா

    சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜய்யின் காரை, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா. இவர் விஜய் கட்சி தொடங்கியவுடன் தவெகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால் தனக்கு அந்தப் பதவியை வழங்கவேண்டும் என அஜிதா கோரியதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு அப்பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அஜிதா காலையிலிருந்து கண்ணீருடன் பனையூர் அலுவலகத்தின் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில் விஜய் அலுவலகத்திற்கு வர, அவரிடம் பேசவேண்டும் என அவரது காரை மறிக்க முயன்றார். ஆனால் விஜய்யின் பவுன்சர்கள் அவரை தடுத்து உடனே அப்புறப்படுத்தினர். பின்னர் விஜய்யின் கார் புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றது. அங்கு போய் விஜய்யை சந்திக்கலாம் என கேட்ட போதும் அஜிதாவுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

    தவெகவில் விடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று நியமிக்கப்படுகின்றனர். இதனால் விஜய் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுவிட்டு அவர் வெளியே வரும் வரை நான் காத்திருப்பேன் என அஜிதா அங்கேயே நின்று கொண்டிருக்கிறார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் முழங்கினார்.
    • தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி... தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே" என்று ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை. அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே முயற்சி செய்து வருகிறார். அவரைப் பார்த்து அதிமுகதான் பயப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது .
    • தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு.

    திருப்பூரில் குப்பை பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாக அமல்படுத்த ப்படாமல் செயல்பாடு இல்லாத பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.

    இந்த குப்பையால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் உப்பு அளவு அதிகரித்துள்ளது. இது கடும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரம் மூலம் தி.மு.க.வினர் புலி வாலை பிடித்து விட்டனர். ஏற்றுமதி நிறைந்த நகரம் தற்போது சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதியாக உள்ளது. திருப்பூர் மாவ ட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பது மக்கள் மீது அவர்கள் எந்த அளவு க்கு அக்கறை வைத்திரு க்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் யாருடைய வாக்கும் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது .

    உரிய முறையில் ஆய்வு செய்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அவர்களை இணைக்க தமிழக வெற்றி கழகம் முயற்சி செய்யும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க தனிக்குழு அமைத்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.

    திருப்பரங்குன்றம் பிரச்சினையில் 2 கட்சிகளும் ஆதாயம் தேட முயன்று வருகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். பிரச்சினை இல்லாத இடத்தில் பிரச்சி னையை உருவாக்கியது இவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

    • வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.
    • மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.

    * தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான். தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான்.

    * வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.

    * உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும்.

    * மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * ஒரு இளைஞருக்கு எதிராக உடன் இருந்தவர்களே கிணற்றில் தள்ளிவிட்ட பின்னரும் மீண்டும் வந்து அரசனாகும் கதை பைபிளில் உள்ளது.

    * தன்னை கிணற்றில் தள்ளிவிட்ட உடன் பிறந்த சகோதரர்களை, அந்த நாட்டு மக்களை அரசன் எப்படி காப்பாற்றினான் என படியுங்கள்.

    * எப்படிப்பட்ட எதிரிகளையும் நாம் ஜெயிக்கலாம் என்பதை இதுபோன்ற கதைகள் நமக்கு கற்றுத்தருகிறது.

    * நானும் த.வெ.க.வும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது.

    * ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    * நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
    • மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்.

    தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார். விழாவில் பங்கேற்றுள்ள விஜய் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

    • விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார்.
    • கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி, கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    விஜய், தி.மு.க. தீய கட்சி, த.வெ.க. தூய்மையான கட்சி என்று பேசுகிறார். த.வெ.க. எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை, எப்படி திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று தெரியாது. அப்படி திட்டம் கொண்டு வந்தால் அதை ஒழுக்கமாக எவ்வாறு நிறைவேற்றுவார்கள் என்று சொல்ல முடியாது.

    குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதுதன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்துடன் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் தான் விஜய் உடன் சேர்ந்துள்ளார்கள்.

    விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார். பிறகு விடுதலை சிறுத்தை கட்சிக்கு சென்றார். அங்கு ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு அங்கிருந்து வந்தார். அவர் அ.தி.மு.க.விற்கு வர முயற்சி செய்தார். ஆனால் அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது. உழைப்பவருக்கான கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

    இங்கு இருப்பவர்கள் எல்லாம் உழைப்பவர்கள். ஆனால் அங்கு சென்று இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள். அதுபோல்தான் இங்கிருந்து செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார். செங்கோட்டையன் 53 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் இருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து கொண்டார்.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள் தான் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அது தூய்மை கட்சி இல்லை. கலப்பட கட்சி. ஏன் கலப்பட கட்சி என்றால் இங்கிருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார்.

    பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார், அதேபோல் பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்த நிர்மல் குமார் அங்கு சென்றுள்ளார். இவ்வாறு எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுகிற கூட்டம் விஜய்யுடன் வந்துள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாளை உங்களையும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள்.
    • நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்

    பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தவெக நிர்வாகி அருண்ராஜ்க்கும் இடையே நீண்டநாட்களாக ஒரு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்காதது அண்ணாமலை கருத்துக்கூற, அதற்கு அவரை கிண்டலடிக்கும் விதமாக பதில் அளித்தார் அருண்ராஜ். 

    மீண்டும் இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் நடிகருக்கு ஜால்ரா போடுகிறவன் அல்ல, மோடியின் விஷ்வாச நாய் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு மீண்டும் பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் அருண்ராஜ், 

    "எனக்கு அவரைப்பற்றி தெரியாது. ஆனால் நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது. குறிப்பாக குரைக்கும் நாய்கள் கிடையாது. நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்; தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள். தவெக தலைவர் கூறியவாறு தரம் தாழ்ந்து நாங்கள் பேசமாட்டோம். விஜய் இப்போது நடிகர் கிடையாது; அவர் முன்னாள் நடிகர்.

    நடிப்பை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் சேவை செய்யவேண்டும் என வந்திருக்கிறார். ஈரோட்டில் வந்தவர்கள் நடிகரை பார்க்க வரவில்லை. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் சக்தியாக இருக்கக்கூடிய தவெக தலைவரை பார்க்க வந்தனர்" என தெரிவித்துள்ளார். 

    • 2026-27-ம் ஆண்டில் ஸ்காலர்ஷிப் பெற இப்போதே விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்பி, மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் மற்றும் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து 2026- 27-ம் கல்வியாண்டுக்கான விஜய் தகுதி ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது. திறமையான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2026-27 கல்வியாண்டிற்கான விஜய் தகுதி ஸ்காலர்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-26-ம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில், தொடர்ந்து இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

    கடந்த ஆண்டு 180-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெற்ற தகுதியான மாணவர்களுக்கு 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஸ்காலர்ஷிப், உயர்கல்விக்கான ஸ்காலர்ஷிப், ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கான ஸ்காலர்ஷிப் ஆகியவையும் வழங்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து, 2026-27-ம் ஆண்டிலும் தகுதியான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. திறமைகளை மேம்படுத்துவதும், நிதி நெருக்கடி காரணமாக எந்த மாணவரும் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கம் ஆகும்.

    2026-27-ம் ஆண்டில் ஸ்காலர்ஷிப் பெற இப்போதே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு 100 சதவீதம் இலவச கல்வி வழங்கப்பட உள்ளது. அதாவது 10, 11, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் வரை தொடர்ந்து நல்ல மதிப்பெண்களை பெற்று, பிளஸ் 2 தேர்வில் 185-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெறுவதில் நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

    தேசிய அல்லது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள், உயர்கல்வி பெறுபவர்கள், ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் ஆகியோருக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்பி, மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 28.2.2026 ஆகும். விண்ணப்பங்களை https://forms.gle/Vfvry5Wru4beQ64JA என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

    • மாமல்லபுரத்தில் உள்ள ‘ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.
    • கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • செந்தில்நாதன் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் மகளிர் அணி நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கட்சிக்கு எந்த விதமான களங்கத்தை யார் விளைவித்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை.
    • கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பாக செங்கோட்டையன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை.

    தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர்ர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×