என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVK"

    • அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, சட்டசபை தேர்தலில் தற்போது வரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. இதனிடையே, அ.தி.மு.க.-வுடன் த.வெ.க. கூட்டணி என்று கூறப்பட்டு வந்த நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணி அமைக்கலாம் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைவர் விஜய் அறிவிப்பார் என்றும் கூறினார். 

    • கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும்.
    • என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம்.

    புதுக்கோட்டை:

    தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தே.மு.தி.க.வை கட்சி ரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த அறிவிப்பு தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியாகும்.

    கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும். ஆனால், அவருடைய ஆசைகளையும், கொள்கைகளையும் நாங்கள் நிச்சயம் வென்றெடுப்போம்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதனை அவருடைய நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.

    த.வெ.கவுடன் கூட்டணி அமைப்பது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி இல்லை. அவர் அண்ணன் தானே.

    விஜயகாந்த் குருபூஜை சமயத்திலும், 'கோட்' திரைப்படத்தின்போதும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது கூட்டணி விஷயங்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம். எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. ஆனால் அண்ணனுக்கு 50 வயது.

    அவர் என்னை விட மிகவும் சீனியர். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பல லட்சம் இளைஞர்கள் அவருக்கு பின்னால் இருப்பது அவரது பலமாக நான் பார்க்கிறேன் என பதில் அளித்தார்.

    • ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம்.
    • இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும்!

    ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம். இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது. இது, இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் தலைமை நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, 'வக்ஃப் என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்ஃப் சொத்துக்கள் (waqt by user) மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது' என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

    பின்னர் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த நிறுத்திவைப்பு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    குறிப்பாக, நமது தமிழக வெற்றிக் கழகத்திற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு. அபிஷேக் சிங்வி அவர்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகளைக் கோடிட்டுக் காட்டியும், மதத் தனியுரிமைச் சட்டங்களில் இதுவரை நீதி அமைப்புகள் மேற்கொண்ட வரலாற்று நிலைப்பாடுகளை விளக்கியும் வாதிட்டார்.

    மேலும், இந்தத் திருத்தச் சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 19, 25, 26 மற்றும் 29 போன்றவையும், இஸ்லாமியர்களின் மதத் தனியுரிமைச் சட்டங்களும் நேரடியாகக் கேள்விக்குள்ளாகின்றன என்பதை எடுத்துக் காட்டினார். எனவே, இந்த இடைக்கால நடவடிக்கையில் நமது தமிழக வெற்றிக் கழகம் முக்கியப் பங்காற்றியது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

    இதன் தொடர்ச்சியாக, வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனுதாரரின் * சிலுக்குப் பதிலுரையைத் (Rejoinder) நமது தமிழக வெற்றிக் கழகம் நாக்கல் செய்துள்ளது. அதன் மீதான வழக்கு விசாரணை, நாளை (மே 15) நடைபெற இருக்கிறது. அந்தப் பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்தச் சட்டம். அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) மேல் கைவைக்கிறது என்ற அபாயத்தை முதன்மையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

    வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்தபோது, அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், தற்போது புதிய வக்ஃப் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி. குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுச் சட்டமாகிவிட்டது.

    இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக முதன்மை நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டாமா?

    வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்?

    சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கேரள இடது முன்னணி அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், மாநில அரசுகளுக்கான உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

    அதுபோல், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை, உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலானத் தமிழ்நாடு அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு வாதங்களை முன்னிறுத்தி. தனியானதொரு சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்க வேண்டாமா? அதை ஏன் இன்னும் செய்யவில்லை?

    வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்குக் கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்திற்கான அறைகூவலாக இருக்க வேண்டும்.

    சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அதற்கு எதிராக உள்ள இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராடி வருகின்றன. அதைப்போன்று இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசின் தார்மீகக் கடமை!

    சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கள் கேட்டார்.
    • நாளை திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது அந்த வகையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ள நிலையில் இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த சூழலில் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இவருக்கு மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளனர்.

    பா.ஜ.க.வுடன் நெருக்கம் வைத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவார் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்பது இன்னமும் தெரியவில்லை.

    காரணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிலையில், மீண்டும் அவரை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கும் நிலையில் இல்லை என்றே தெரிகிறது. எனவே பா.ஜ.க.விடம் பேசி அவர்கள் ஒதுக்கும் இடங்களில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிட முடியும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அப்படியே போட்டியிட்டாலும் சுயேட்சை சின்னம் அல்லது தாமரை சின்னத்தில்தான் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மாவட்டச் செயலாளர்களின் கருத்தை அறிய சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கள் கேட்டார். கட்சியின் எதிர்காலம், தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து அவர் விரிவாக பேசியதாக தெரிகிறது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய படிவத்தில் "த.வெ.க., நா.த.க. உடன் கூட்டணி வைக்க வேண்டும்" என நிர்வாகிகள் எழுதித் தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று மாலையில் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், புதுச்சேரி மாநில நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கிறார்.

    நாளை திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இதன் பிறகு பா.ஜ.க.விடம் உள்ஒதுக்கீடு பெற்று தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது கூட்டணி வியூகத்தை மாற்றி அமைக்கலாமா? என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
    • மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த விஜய், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாக கூறி வந்தார்.

    தற்போதைய சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழலை ஒழிக்கவும், சாதி, மத பேதங்களால் மக்களை பிளவுபடுத்த துடிக்கும் கலாச்சாரத்தை தடுக்கவும் அடிப்படை அரசியல் மாற்றத்தை நோக்கி தனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறிவந்த விஜய் மீதான அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கேற்ப தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளும் இருந்து வருகிறது.

    தனது களப்பணியின் முதல்கட்டமாக விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் மாநாட்டை நடத்திய விஜய், சமீபத்தில் பொதுக்குழுவையும் கூட்டினார். வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

    அதிலும் குறிப்பாக முதல் தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது கட்சி தொடங்கிய உடனேயே எழுதப்பட்டு விட்டதாக அதன் தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறிவருகிறார்கள். அதனை முன்னெடுத்து செல்லும் வகையில், முதன் முதலாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை விஜய் சந்தித்தார். பின்னர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 2 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய், தனது தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார். தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வியூகம் வகுத்து வரும் விஜய், அடுத்த கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கொடைக்கானலில் நடைபெற்ற தனது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு விஜய் வந்தார். விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் வரவேற்பில் நெகிழ்ந்த விஜய், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றார்.

    இந்தநிலையில் மதுரையில் அடுத்த மாதம் (ஜூன்) பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கொடைக்கானல் வருகை தந்த அவர், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இந்த பூத் கமிட்டி மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை மாநகர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்று சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக த.வெ.க. மக்கள் மத்தியில் வெற்றி கொடி நாட்டி உள்ளது. எங்கள் தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள அரசியல் வியூகங்கள் மற்ற அரசியல் இயக்கங்களுக்கு மாற்றாக மக்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.

    கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரலாற்று சிறப்புமிக்க அளவில் நடத்தப்பட்டது. இப்போது பூத் கமிட்டி கூட்டங்கள் கூட மாநாடு போல நடத் தப்பட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை விட சிறந்த முறையில் பூத் கமிட்டி அமைத்துள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 250 பேர் பூத் கமிட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். இளைஞர்கள் மத்தியில் தலைவர் விஜய் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

    த.வெ.க. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதற்கான அரசியல் வியூக மாநாடு மதுரையில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்படுகிறது. முன்னதாக பூத் கமிட்டி மாநாடும் நடைபெறுகிறது. இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கட்சி தலைமை ரகசியமாக தயார் செய்து வருகிறது.

    மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். எனவே நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே சட்டசபை தேர்தல் பணியில் இறங்கி விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள தி.மு.க.வை வீழ்த்துவதில் உறுதியாக இருக்கும் விஜய் அதற்கான வியூகங்களை வகுத்து களப்பணியாற்றி வருகிறார். முன்னதாக தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக 120 மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள விஜய், 66 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளுக்கு கட்சி சார்பில் ஏஜெண்டுகளையும் நியமித்து வருகிறார். மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ள விஜய், நாளை முதல்கட்டமாக டெல்டா மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பணிகள், நிர்வாகிகள் நியமனம், கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களிடம் எடுத்து செல்லப்பட வேண்டிய விஷயங்கள், அதிக அளவில் இளைஞர்களை த.வெ.க.வில் இணைத்தல், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அறிவுரைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறார். அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விஜய் முக்கிய ஆலோசனைகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    • விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
    • பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை :

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

    ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.



    • அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!
    • தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

    சென்னை:

    அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!

    அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்!

    தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    • 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    சென்னை :

    பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்.

    வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.

    விரைவில் சந்திப்போம்.

    வெற்றி நிச்சயம்!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சந்தித்து பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது.
    • மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 3 தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இன்று அதிகாலை 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில், இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! என பதிவிட்டுள்ளார். 

    • வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக த.வெ.க. தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
    • தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து எதிர்க்கடசிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேற்று உச்ச நீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.

    மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை சேர்ப்பது மற்றும் வக்ஃப் சொத்துக்களை மறுவரையரை செய்வதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 15 அன்று நடைபெறவுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பையும், தகுதியானவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    மேலும், உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பையும், சிறுபான்மையினரின் உரிமைகளையும் உறுதியாக பாதுகாக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மக்களின் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.
    • பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் கொடுத்து விட முடியுமா?

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    மக்களின் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.

    சிலர் விஜய்யை பவன் கல்யாணுடன் ஒப்பிடுவதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் கொடுத்து விட முடியுமா?

    நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறும்போது மாற்று சக்தி என சீட் வாய்ப்பு கிடைப்பதகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    • விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
    • நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை:

    கொடைக்கானலில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 1-ந்தேதி மதுரைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.

    இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் த.வெ.க. மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டி (தெற்கு), கல்லணை(வடக்கு) மற்றும் நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×