என் மலர்
நீங்கள் தேடியது "TVK"
- தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த சிந்தாந்தக் கூட்டணி.
- தேர்தல் கூட்டணி தொடர்பாக திரைமறைவில் எந்தவொரு அரசியலும் நடைபெறவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பேச்சுவார்த்தையில் கூடுதல் இடங்கள் கேட்பது வழக்கமானதுதான். தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடம் கேட்டுள்ளோம்.
* முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயமாக அதை பரிசீலிப்பார். எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் சீராக நடக்கிறது.
* தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த சிந்தாந்தக் கூட்டணி.
* கூட்டணி தொடர்பாக த.வெ.க.வுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை.
* த.வெ.க.விடம் பேசுமாறு தலைமையிடமிருந்து எந்த உத்தவும் எனக்கு வரவில்லை.
* தேர்தல் கூட்டணி தொடர்பாக திரைமறைவில் எந்தவொரு அரசியலும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.
- உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
- கடந்த 2 நாட்களாக இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் விஜய். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஹா என்ற மகளும் உள்ளனர். சினிமாத்துறையில் விஜய் பயணித்த காலத்திலேயே அவர் குடும்பத்தினருடன் விலகி இருந்ததாக தகவல் வெளியாகி வந்தன. இதற்கு இருதரப்பினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இதனிடையே விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி கடந்த 27-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இம்மனு மீது ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. மனுவில் விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 2 நாட்களாக இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.
இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இன்ஸ்டாவில் தனது தந்தை விஜயைப் பின்தொடர்வதை ஜேசன் நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
விவகாரத்து குறித்த தகவல் வெளியான பிறகே Unfollow செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிலர் ஜேசன், விஜயின் இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
- காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நிற்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.
- இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் செல்லுமா? விஜய்யிடம் செல்லுமா என்று தெரிந்து விடும்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நடிகையும் பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தயாராக தான் உள்ளது. நாளை மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பிரதமர் தமிழ்நாடு வருவது தேர்தலுக்காக மட்டுமில்லை. எத்தனையோ முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்து சென்று உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமருக்கு அன்பு, பாசம் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம் குறித்து ஆரம்ப காலத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை இதனால் அவர் தி.மு.க.வில் சேர்ந்து விட்டார். அவருக்கு லாபம் கிடைக்கும் இடத்தில் அவர் போய் உள்ளார்.
இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு பா.ஜ.க. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறித்து தெரியவரும்.
விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை அரசியல் ஆக்கக்கூடாது. கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சனைகளை நாம் பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நிற்பதற்கு எந்த தகுதியும் கிடையாது. அவர்களுக்கு அந்த தைரியமும் கிடையாது. அவர்கள் தி.மு.க.விடவுமும் பேரம் பேசுகிறார்கள். விஜய்யிடமும் பேரம் பேசுகிறார்கள். அவர்களுக்கு யாரிடம் இருந்து லாபம் அதிகமாக வருகிறதோ அவர்களிடம் சென்று சேர்ந்து விடுவார்கள்.
இனி மத்தியில் காங்கிரஸ் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் இருக்கிறது. தற்போது தான் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஆட்சியில் பங்கு தர மாட்டோம் எனக் கூறி உள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் செல்லுமா? விஜய்யிடம் செல்லுமா என்று தெரிந்து விடும். காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் இந்த ஒரு தேர்தலில் தனியாக நின்று பாருங்கள். ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற தகுதி இருக்கிறதா என தெரிந்து விடும்.
பா.ஜ.க.வை தயவுசெய்து காங்கிரசுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். பா.ஜ.க.விற்கு உள்ள தைரியம் இங்கு எவருக்கும் வராது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் குஷ்பு போட்டியிடுகிறாரா? இல்லையா? என்பது முக்கியம் கிடையாது. எங்கள் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி மக்களிடத்தில் சேவை செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம் என்றார்.
- அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல் அறிவாலயம் இன்று திணறி வருகிறது.
- இந்தக் கூட்டணி என்பது கொள்கையின் அடிப்படையில் உருவானது அல்ல
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சி சம்பத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் அவர்களின் தன்னம்பிக்கையை விட, அடிமனதின் ஆழத்தில் இருக்கும் தோல்வி பயத்தையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல் அறிவாலயம் இன்று திணறி வருகிறது. இந்த நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே, ஐம்பது கட்சிகளை வளைத்துப் பிடித்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி, தாங்கள் ஏதோ பலமாக இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கப் பார்க்கிறார்கள்.
இந்தக் கூட்டணி என்பது கொள்கையின் அடிப்படையில் உருவானது அல்ல; இது முழுக்க முழுக்க ஒரு "கல்லாப்பெட்டி கூட்டணி". தங்களுக்குச் சாதகமாக அதிகாரத்தைப் பயன்படுத்தியும், தேர்தல் நேரத்து 'கவனிப்புகளை' முன்னிறுத்தியும் சிறு சிறு கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதிலேயே அறிவாலயம் குறியாக இருக்கிறது. மக்கள் செல்வாக்கு இல்லாத லெட்டர்-பேட் கட்சிகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, ஒரு பெரும் படையைத் திரட்டிவிட்டதாகக் மார்தட்டிக் கொள்வது, ஒரு பலவீனமான வீரன் கூட்டத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்வதற்குச் சமமானது.
தனித்து நின்று களம் காணத் துணிவில்லாத திமுக, இப்போது கூட்டணிக் கட்சிகளின் தயவை நாடி நிற்பது அவர்களின் அரசியல் சரிவையே காட்டுகிறது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் வாரிசு அரசியலின் ஆதிக்கத்தால் மக்கள் அடைந்துள்ள சலிப்பை இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் மூலம் துடைத்துவிட முடியாது. எத்தனை கட்சிகள் கைகோர்த்தாலும், மக்கள் மன்றத்தில் அறிவாலயத்தின் "கல்லாப்பெட்டி அரசியல்" எடுபடாது. வரும் தேர்தலில் வாக்காளப் பெருமக்கள் இந்த அதிகாரப் பசி கொண்ட கூட்டணிக்குத் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி"
என்று தெரிவித்துள்ளார்.
- விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
- காரசார விவாதமும் நடைபெற்று வருகிறது.
பிரபல நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் பரவி வந்தது. இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
நடிகர் விஜய்யும் அரசியல், பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு தனியாகவே சென்று வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது அவரின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்- சங்கீதா விவாகரத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு வித தகவல்கள், கருத்துகள் பரவி வரும் நிலையில், விஜயின் அரசியல் பயணத்தின் ஒவ்வொரு திருப்பமும் ஒரே தேதியில் நடைபெறுவது தற்செயலா அல்லது திட்டமிட்ட உத்தியா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருவர் வெளியிட்ட பதிவே காரணம். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
27-ந்தேதியானால் விஜய்க்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. அதில் ஒரு சில நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாக கூறியுள்ள போஸ்டில் "27th Timeline - Coincidence?" என்று தொடங்கி கடந்த ஆறு மாத நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.
அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அவர்களை மாமல்லபுரம் அழைத்து வந்து சந்தித்தது.

நவம்பர் 27-ந்தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது. (செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இணைப்பால் தவெகவுக்கு நன்மைதான்).
டிசம்பர் 27-ந்தேதி எச்.வினேத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' ஆடியோ வெளியிட்டு விழா, மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஜனவரி 27-ந்தேதி 'ஜன நாயகன்' பட சென்ஸார் தொடர்பான வழக்கு மீண்டும் புதிய விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
பிப் 27-ந்தேதி விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த செய்தி வெளியானது.
இப்படியாக பட்டியலிட்டு போஸ்ட்டின் இறுதியில் "Mar 27- Be Ready Guys" என்று கூறப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக காரசார விவாதமும் நடைபெற்று வருகிறது.
- எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது.
- அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.
சென்னை:
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரம் பற்றி முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி கடந்த டிசம்பர் மாதமே செங்கல்பட்டு கோர்ட்டில் மனு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய், அவரது மனைவி சங்கீதா, நீதித்துறை ஆகிய 3 பேருக்கும் சம்பந்தப்பட்டது. அதுவும் தனிப்பட்ட மனிதருக்கான, தனிப்பட்ட வாழ்க்கை விஷயம்.
விஜய்யின் அரசியல் பற்றி கருத்து கேட்டால் எப்போதும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. மனைவி, கணவர் ஆகிய இருவரும் எங்கிருந்தாலும் அவர்களுக்குள் சந்தோசம் நிலைக்கட்டும். அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.
அரசியல் ரீதியாக இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த விவகாரம் விஜய்க்கும், அவரது மனைவிக்கும் நீதித்துறைக்கும் இடையேயான பிரச்சனையாகத்தான் பார்க்கிறேன்.
எப்போதுமே அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்துக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையையும் தோண்டுவார்கள். இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் இருந்ததுதான்.
அரசியலுக்கு வரும் போதே இதை விஜய்யும் உணர்ந்தே வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதையும் கடந்துதான் அவர் போக வேண்டும். இதையும் தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்பது எல்லாம் தேர்தலில்தான் தெரிய வரும்.
விஜய்யை பொறுத்தவரை இது அவருக்கு தீயை எதிர்கொள்ளும் சோதனையை போன்றதுதான். அரசியலுக்கு வராமல் நிம்மதியாக வீட்டில் இருந்து இருக்கலாம். நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து இருக்கலாம். நான் கையை தூக்கினால் 1 லட்சம் பேர் ஆரவாரம் செய்வார்கள் என்றெல்லாம் நினைக்கலாம்.
சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகு இதைப் போன்ற அழுத்தங்களையும், சோதனைகளையும் தாண்டியே வந்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது. எனவே இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.
விஜய் இதை எல்லாம் கடந்துதான் சென்றாக வேண்டும். இதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும். நியாய தர்மங்களை தாண்டிதான் அவர் பயணம் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையாகவே பார்க்கிறேன். தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனம் செய்து அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய்.
- கடந்த 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அடுத்த கூட்டம் தஞ்சாவூரில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் 4-ந்தேதி தஞ்சாவூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் விஜய் வருகிற புதன்கிழமை தஞ்சாவூரில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அனுமதி கோரி த.வெ.க. நிர்வாகிகள் தரப்பில் காவல்துறையிடம் இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார்.
- அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு 73வது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரியவந்தது.
நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்.
விஜயுடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த நடிகை' சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும், நடவடிக்கையில் மாற்றமில்லை.
திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
- அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை:
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
- ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
- தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
குன்னூர்:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் இணைந்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கவும், அ.தி.மு.க. ஒன்றிணையவும் எத்தனையோ முறை கோரிக்கை விடுத்து பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டு கொள்ளவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடியே காரணமாக அமைந்துவிட்டார்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க.வில் சேர்க்காததால், ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்து விட்டார். அவர் சூழ்நிலை காரணமாக தி.மு.க.வில் இணைந்து இருந்தாலும் அவர் எடுத்த இந்த முடிவு என்பது தவறான முடிவு.
ஏனென்றால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால், நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளோம்.
அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டது. இணைப்புக்கான தேதியை அவர்கள் அறிவிப்பார்கள். இருப்பினும் இன்றோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகிய நாங்கள் இணைய உள்ளோம்.
தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மக்கள் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். அவர் சட்டசபை தேர்தலில் கட்டாயம் முதலமைச்சராக பதவியேற்றார். வருகிற தேர்தலில் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
- அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு அனைத்து வரிகளையும் உயர்த்தியது. அதேபோல் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதை மறைக்க தி.மு.க. அரசு ரூ.1,000 வழங்குகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் தமிழக மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகிறது. அதை சகித்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தி.மு.க. அவதூறு பரப்புகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கும் கப்பல் என்று கூறுகின்றனர். அ.தி.மு.க. நீர்மூழ்கி கப்பலாக இருந்து தமிழக மக்களை பாதுகாப்பாற்றும். தி.மு.க. ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் யார்? என்று சி.பி.ஐ. அறிக்கை வெளியாக இருக்கிறது. ஆனால் விஜய் செய்த தவறால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் கரூர் சம்பவத்தில் தன் ரசிகர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்காமல் நான் தான் காரணமா? என விஜய் கேட்கிறார்.
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோட்ஷோக்களை முறைப்படுத்தும் அரசின் நெறிமுறைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. நான் கூறிய பிறகு தான் வேலூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கூடாரம் அமைத்து விஜய் பேசியுள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும் என்று பேசினார்.






