என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bussy Anand"

    • த.வெ.க. தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
    • அனுமதிச்சீட்டு பெறாதவர்கள் நேரில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டுகோள்.

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13ம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.

    காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

    அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
    • 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்

    மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.

    விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசியதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், "விஜயால் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்ல முடியும். ஆனால், சட்டப்படி 3 அல்லது 4 தொகுதிகளில் மட்டுமே ஒருவர் போட்டியிட முடியும்" என தெரிவித்தார்.

    மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தேர்தலில் ஒருவரால் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை இன்று காலை 10.30 வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
    • பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கலையொட்டி இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை இன்று காலை 10.30 வெளியாகும் என அறிவித்து இருந்தனர். இதனால் 'ஜன நாயகன்' பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில், விஜயின் 'ஜன நாயகன்' படம் எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியாக வேண்டி பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். த.வெ.க. நிர்வாகிகளுடன் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட புஸ்சி ஆனந்த் 108 சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டார். 

    • பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
    • நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்.

    புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜயை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.

    இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.

    இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.

    இதன் பின்னரும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.

    விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மைதானத்திற்குள் பாஸ் இல்லாதவர்கள் செல்ல அனுமதித்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பெண் காவல் அதிகாரி ஈஷா சிங் கடுமையாக எச்சரித்தார்.

    பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுப்பிய புஸ்ஸி ஆனந்தை பார்த்து கடுப்பான பெண் காவல் அதிகாரி, நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.

    • கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
    • தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

    கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.

    இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.

    இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.

    • 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
    • தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்ககவில்லை. இதனால் புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.

    முன்னதாக விஜய் பிரச்சார வாகனம் இன்று இரவே புதுச்சேரிக்கு வந்து சேர்கிறது. அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கின்றனர்.

    பொதுக்கூட்ட மைதானம் டிட்வா புயல் மழை காரணமாக மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது. பொதுக்கூட்டத்துக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மண் கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளது.

    உப்பளம் சாலையிலிருந்து கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் தகர ஷீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் அத்துமீறுவதை தடுக்க இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகளை கடந்த 3 நாட்களாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னின்று செய்து வருகிறார்.

    போலீசாரின் அறிவுறுத்தலின்படி தொண்டர்கள் வந்து செல்ல வசதியாக துறைமுக வளாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, கூடுதலாக 2 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் குடிநீர் வசதிக்காக பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்துக்கு புதுச்சேரி போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனால் கூட்டத்தில் பங்கேற்போருக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் இன்று மாலை முதல் த.வெ.க. நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நிர்வாகிக்கு 5 பாஸ்கள் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அதோடு கூட்டத்துக்கு கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கூட்டத்தை 12.30 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியில் நேற்று முதல் போலீசார் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருவோர், வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது. பழைய துறைமுக வளாகம், உப்பளம் மைதானம், பாண்டி மெரீனா கடற்கரை பின் பகுதியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    உப்பளம் சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் பொதுகூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி விட்டு மைதானத்திற்கு நடந்தே வர வேண்டும்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. கூட்டம் காலையில் நடப்பதால் இந்த பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டத்துக்கு வரும் பாதையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதோடு அந்த பகுதியை சுற்றியுள்ள மதுக்கடைகளை மூட கலால்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன்.
    • கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.

    பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:

    * அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி.

    * த.வெ.க. எனும் கொள்கை கூட்டத்தில் முக்கியமான மாமனிதர் சேர்ந்திருக்கிறார்.

    * கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • சிபிஐ அதிகாரிகள் விசாரணையானது சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் இருந்து 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்த அவர்கள், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கரூர் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 22-ந்தேதி தாக்கல் செய்தனர்.

    முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    விசாரணைக்கு ஆஜராகுமாறு புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சி நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    மேலும் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள், த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து கடந்த 8-ந்தேதி த.வெ.க. வக்கீல் அரசு, சென்னை பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்பட 3 பேர் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர்.

    நேற்று காலை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகிய 5 பேரும் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர்.

    அப்போது அவர்களிடம், பிரசார கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என அறிவித்து இருந்தீர்கள், எத்தனை மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்கினார், கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர், எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தீர்கள் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது. அப்போது, அவர்கள் தெரிவித்த தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணையானது இரவு 8.20 மணி வரை சுமார் 10½ மணி நேரம் நடைபெற்றது.

    இந்நிலையில், கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இன்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினர். நேற்று 10 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    மாநகரப் பொருளாளா் பவுன்ராஜ் தவிர மற்ற 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தவெக பொறுப்பாளர்கள் 5 பேர் சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.
    • த.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

    கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அடுத்த கட்டமாக கூட்ட நெரிசலில் பலியானவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்தவர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேர் இன்று சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு த.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

    கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொறுப்பாளர்கள் 5 பேரிடம் சிபிஐ 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    • கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • த.வெ.க. நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கரூர்:

    கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அடுத்த கட்டமாக கூட்ட நெரிசலில் பலியானவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்தவர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேர் இன்று சிபி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு தெ.வெ.க. நிர்வாகிகள் அளித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த த.வெ.க. தொண்டர்கள், மகளிர் அணியினர் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பாக குவிந்துள்ளனர்.

    • இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

    சென்னை:

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 



    ×