என் மலர்
நீங்கள் தேடியது "Puducherry"
- போதிய நிதி இல்லை என மத்திய அரசு கைவிரிப்பு
- ரூ.8 ஆயிரம் வழங்கக்கோரி புதுச்சேரி பாஜக கோரிக்கை
புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பரிசுத்தொகை பொங்கலுக்கு பின்னர் அவரவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசுத்தொகை வழங்க முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த தொகை ரூ.4000மாக குறைக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ரூ.140 கோடி தேவைப்பட்ட நிலையில் புதுச்சேரி அரசு மத்திய அரசை நாடியது. ஆனால் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசும் கைவிரித்தது.
இந்நிலையில் தொகையை ரூ.3000 என குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி. இதனிடையே புதுச்சேரி பாஜக பொங்கல் பரிசாக ரூ.8000 உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது. ரூ.10,000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.
தமிழ்நாட்டிலும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
- பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்கில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் என்பதும் மற்றொருவர் புதுச்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வரும் வாலிபர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்தி வந்ததும், பின்னர் பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 110 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
- புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன்.
புதுச்சேரி:
கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த கட்சி தொண்டர்கள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. அவர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஆர்.பி.என். கமாண்டன்டுமான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.
தொண்டர்கள் காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வரத் தொடங்கினர். அவர்கள் முண்டியடித்து உள்ளே செல்லும்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம் 'மைதானத்தில் ஏராளமாக இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றார். இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, தனி ஆளாக நின்று கெத்து காட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதன் பின்னர் இஷா சிங்கிற்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி மக்கள் சிலர், சமூக வலைதளத்தில் இஷா சிங் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் உள்ள 'மெல்ல விடை கொடு.. விடை கொடு.. மனமே, இந்த நினைவுகள் நினைவுகள் கனமே, தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம், இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே, சில அழகிய வலிகளும் தருதே, போகின்றோம், போகின்றோம் தூரம் தூரம், ஓ ஓஹோ.. ஓ ஓ ஹோ... என்னை விட்டு செல்லும் உறவுகளே ஓ ஓ ஹோ'. என்னும் பாடலை ரீல்ஸ்சாக வெளியிட்டுள்ளனர். மேலும் 'மிஸ்.யூ.மேம்', உங்களது கடின உழைப்பு மற்றும் சிறந்த சேவைக்கு 'ராயல் சல்யூட்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்ணுகிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங்கின் தந்தை, தாத்தாவும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான். இவரது தாயார் மும்பை கோர்ட்டு வக்கீல் ஆவார். சமூக சேவையில் அக்கறை கொண்ட இஷா சிங், தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
- புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரி:
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு திரளுவார்கள்.
அதுபோல் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாடப்படும் கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளை நோக்கி செல்கின்றனர்.
புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவ ரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரியில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சீருடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மதுகுடித்திருப்பதை கண்டறியும் கருவி (பிரீத் அனலைசர்) சோதனை மேற்கொள்வார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கக்கூடாது. அதிக வேகத்தில் செல்லக்கூடாது இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யக்கூடாது அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது. இதனை இன்டர்செப்டர் வாகனம் மூலமாக கண்கா ணிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டணியை உறுதிப்படுத்த, தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் இடங்கள் கோர பாஜக திட்டமிட்டு வருகிறது
- தவெக, என்.ஆர். காங்கிரஸ் இடையே உருவாகும் புதிய கூட்டணி?
புதுச்சேரியில் தற்போது பாஜக, என்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே அடுத்தாண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி தொடருமா? என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.
இந்நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த, தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் இடங்கள் கோர பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம். புதுச்சேரி வளர்ச்சி குறித்து பாஜக செயல் தலைவர் நிதின் நபீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்" என தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா , புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் அப்பா பைத்திய சுவாமி கோயிலில் முதலமைச்சருடன் வழிபட்டனர்.
- தாடி பாலாஜி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தார்.
- விஜய்யின் முகத்தை நெஞ்சில் பச்சைக் குத்தியிருந்தார்.
நடிகர் தாடி பாலஜி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான, ஜோஸ் சார்லஸ் சொன்னவாறே இம்மாதம் புதுச்சேரில் புதுக்கட்சி ஒன்றை தொடங்கினார். லட்சிய ஜனநாயக கட்சி எனப் பெயரிடப்பட்ட கட்சியின் கொடியையும் கடந்த வாரம்தான் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் நடிகர் தாடி பாலஜி இக்கட்சியில், அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் இணைந்துள்ளார். முன்னதாக நடிகர் தாடி பாலாஜி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தார். தவெக கட்சி தொடங்கப்பட்ட சிலநாட்களிலேயே அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட தாடி பாலஜி, தவெகவுக்கு எவ்வளவு ஆதரவாக பேசியும் பொருப்பு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்தார். பின்னர் தவெகவையே விமர்சனம் செய்யத் தொடங்கினார்.
இந்நிலையில் தவெகவில் இருந்து விலகி, விஜய் பாணியிலேயே புதுச்சேரியில் கட்சி ஆரம்பித்த ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை தாடி பாலாஜி பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
- தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
புதுச்சேரி:
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்ட நிலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரியில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாதிரி தீபத் தூணில் தொழிலதிபர் குணசேகரன் தீபத்தை ஏற்றினார். திருக்கனூர் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பா.ஜனதா தலைவர் வி.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், இந்து முன்னணி தலைவர் சனில்குமார் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள், முருகபக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார்.
புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 45,312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்களாகவும், 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவும் மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. மொத்தம் 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 17,936 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின்
- லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார்
நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது
கட்சியின் கொடிக்கு மும்மத பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார்.
இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ள சார்லஸ் மார்ட்டின், அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.
இதற்காக ஆண்டுதோறும் புதுச்சேரி மின்துறை வருவாய், செலவினங்களை ஆணையத்திடம் சமர்பிக்கும். வரவு, செலவு அடிப்படையில் உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியலையும் ஆணையத்திடம் சமர்பிக்கும்.
இதில் வீட்டு உபயோகம், பொது சேவை, வணிகம், ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உத்தேச கட்டணம் நிர்ணயித்து சமர்பிக்கும். இதையடுத்து ஆணையம், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி மின் கட்டண உயர்வை நிர்ணயம் செய்யும்.
பெரும்பாலும் புதுச்சேரி அரசின் மின்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தையே ஆணையம் ஏற்று அதற்கான அனுமதியை வழங்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அரசே மின் கட்டண உயர்வை ஏற்கும் என அறிவித்தது. இதன்படி ரூ.35 கோடி மின்துறைக்கு அரசு மானியமாக வழங்குகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இந்த மின் கட்டண உயர்வையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. இதற்கான கோப்பு ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் மின்துறைக்கு அரசு ரூ.10 கோடி வழங்கும். நுகர்வோருக்கு கட்டணம் உயராது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2025-2030 வரை 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசின் மின்துறை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இதன்படி நடப்பு ஆண்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.90, 101 முதல் 200 வரை ரூ.4.20, 201 முதல் 300 வரை ரூ.6.20, 301 முதல் 400 வரை ரூ.7.70, 400க்கு மேல் ரூ.7.90 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த கட்டணம் 1.10.2025 முதல் முன்தேதியிட்டு வசூலிக்கப்பட உள்ளது. வழக்கமாக மின் கட்டணம் முதல் 100 யூனிட், 101 முதல் 200, 201 முதல் 300, 300க்கு மேல் என கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது புதிதாக 301 முதல் 400, 400-க்கு மேல் என புதிய சிலாப்பும் உருவாக்கப் பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 பைசா மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் வழங்குமா? என இனிமேல்தான் தெரியவரும்.
- விஜய்பாணியில், அரசியலில் களமிறங்க ஆர்வம் காட்டி வந்தவர்
- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டி
டிசம்பரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அக்கட்சியின் பெயரை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு 'லட்சிய ஜனநாயக கட்சி' எனப் பெயரிட்டுள்ளார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய போது தனது கட்சியின் பெயரை அறிவித்தார். "மனித உரிமைகளைப் பரப்புதல் - உலகளாவிய கல்வியின் சக்தி" என்ற கருப்பொருளின்கீழ், பேசியபோது தனது கட்சிப்பெயர் "லட்சிய ஜனநாயக கட்சி" என அறிவித்தார். இந்த அறிவிப்பு சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அவையில் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின்.இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார்.

ஐ.நா. சபையில் சார்லஸ் மார்ட்டின்
இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தார். இந்நிலையில் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். புதுச்சேரியில் விரைவில் தொடக்க விழா நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று விஜய் குற்றம்சாட்டினார்.
- த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் மத்திய பா.ஜ.க. அரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும் என்.ஆர்.காங்கிரசையோ, முதலமைச்சர் ரங்கசாமியையோ, த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்யவில்லை. அதற்கு மாறாக முதலமைச்சர் ரங்கசாமியை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசும்போது, வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு எழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசு நடந்து கொள்கிறது. இந்த புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்ததற்காக அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அதேநேரத்தில் பா.ஜ.க.வை விஜய் விமர்சனம் செய்தார். மத்திய பா.ஜ.க. அரசு மாநில அந்தஸ்து தரவில்லை, மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்கவில்லை, புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறும் என்ற பேச்சு உள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் ஏற்கனவே நட்புணர்வு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றதும் சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ரங்கசாமி பேசினார். நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
இதனால் ரங்கசாமி வருகிற சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியை விஜய் விமர்சிக்காதது இதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. இதனை அரசியல் நோக்கர்கள் என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க. கூட்டணிக்கு அச்சாரமாக கருதுகின்றனர்.






