என் மலர்
நீங்கள் தேடியது "Puducherry"
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது வலியும் வருத்தமும் அளிக்கிறது
- 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி லாஸ் பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார்.
பிரதமர் மோடியை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது வலியும் வருத்தமும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் விரும்பும் கோரிக்கையை 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி முன்பே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி விழா மேடையிலேயே முதலமைச்சர் ரங்கசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுச்சேரியின் உட்கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும்.
- இந்த ஆண்டு பட்ஜெட் உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி லாஸ் பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார்.
பிரதமர் மோடியை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் வணக்கம் எனக்கூறி பிரதமர் மோடி பேசியதாவது:-
* சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்.
* பாரதியார் விடுதலைப் போராட்ட பெருநெருப்பை பற்ற வைத்தது புதுச்சேரியில் தான்.
* தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளது.
* புதுச்சேரியின் வளர்ச்சிக்காக 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினேன்.
* கடந்த முறை வந்த போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நான்கரை ஆண்டுகாலம் பல திட்டங்கள் நிறைவேற்றம்.
* அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களால் புதுச்சேரி மக்களின் வாழ்க்கை தரம் உயரும், கட்டுமானங்கள் அதிகரிக்கும்.
* மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் இணைந்து செயல்பட்டால் எப்படி வளர்ச்சி அடையும் என்பதற்கு உதாரணம் புதுச்சேரி.
* புதுச்சேரியில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது.
* புதுச்சேரியின் உட்கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும்.
* இந்த ஆண்டு பட்ஜெட் உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* புதிய திட்டங்கள் மூலம் புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் கிடைக்கும்.
* இதுவரை மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட மூலதன முதலீட்டு நிதி, யூனியன் பிரதேசமான புதுவைக்கும் தரப்பட்டுள்ளது.
* இந்தியா முழுவதும் உயர்தரமான உட்கட்டமைப்பை கொண்டு வர அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* இளைஞர் சக்தியின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையாக உள்ளது.
* இளைஞர்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு கொண்டிருக்கிறது.
* புதுச்சேரியில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* எலெக்ட்ரிக் வாகனங்கள் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
* புதுச்சேரி போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் மின்சார பேருந்து முக்கியம்.
* மருத்துவ சுற்றுலாவின் முக்கிய தளமாக புதுச்சேரி மாறி உள்ளது.
* மருத்துவம் என்பது அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டிய ஒன்று.
* புதுச்சேரி என்பது சித்த மருத்துவத்திற்கு சிறந்த இடமான அறியப்படுகிறது.
* மக்கள் நலமாக இருந்தால் தான் ஒர நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
* புதுச்சேரியை சேர்ந்த யாரும் மருத்துவத்திற்காக பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரக்கூடாது என்றார்.
- 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
- ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து இதற்கு தடையாக இருந்த ஒரு சில விதிகள் புதுச்சேரி அரசால் திருத்தப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
மேலும் மீன்வளத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவர் இறந்துவிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதே போல் 2025-26-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வீதம் விடுபட்ட 328 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.19 லட்சத்து 68 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணம் மீனவர்கள் வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படுகிறது.
- கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.
புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும்.
இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது. விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவுக்கான லோகோ வெளியிடப்பட்டது
இதனை சட்டசபையில் உள்ள தனது அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அப்போது, விருது பெறும் இயக்குநர்களின் பெயர் பட்டியலை அவர் வெளியிட்டார்.
2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிதர்தண்டா டபுள் எக்ஸ், 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது தினேஷ் செல்வராஜ் இயக்கிய கடல்கன்னி ஆகிய தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர் முகமது அஹசன் அபித், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
நாளை வியாழக்கிழமை மாலை கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு புதுவை அரசின் சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் திரைப்பட இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.
விழாவில் திரைப்பட நடிகைகள் ரேவதி, சுனைனா, திரைப்பட இயக்குநர்கள், பா.ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழாவையொட்டி புதுவை அலையான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாள்களும் சர்வதேச திரைப்படங்கள் நாளுக்கு 2 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.
குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நாளுக்கு 3 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.
மொத்த 12 தமிழ் திரைப்படங்கள் உள்பட 45 திரைபடங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களைக் காண விரும்புபவர்கள் புதுவை பிலிம் பெஸ்டிவெல் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
- புதுச்சேரியில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும்.
- மது மீதான வரியை அதிகரித்தால், அரசின் வருவாய் கூடுவதோடு, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தனியார் நடத்திய நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலம் கல்வி, சுகாதார துறைகளில் முன்னோடியாக உள்ளது. சிறிய மாநிலம், மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் இங்கு ஏராளமான கல்லி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன.
இருந்தாலும் திறன் மேம்பாட்டு துறையில் பின்தங்கி இருக்கிறது. அரபிந்தோ ஆசிரமத்தில் உற்பத்தியாகும் அகர்பத்தியை தவிர வேறு எந்த உற்பத்தியும் இல்லை.
புதுச்சேரியில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்பினை ஏற்படுத்து பவர்களாக புதுச்சேரி இளைஞர்கள் மாற வேண்டும். மத்திய அரசின் வருவாயை பெரிதும் சார்ந்து நிற்கிறோம்.
இதில் பெரும்பாலும் அரசின் ஊழியர் சம்பளம் பென்ஷனுக்கு செலவிடப்படுகிறது. எனவே புதுச்சேரியின் வருவாய் உயர்த்தப்பட வேண்டும். இலவசங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, மது வகைகள் மீதான வரி குறைப்பு ஆகியன தேவையற்றவை.
மது மீதான வரியை அதிகரித்தால், அரசின் வருவாய் கூடுவதோடு, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும். இதனால் அரசின் மருத்துவ செலவுகள் ஒரு பக்கம் குறையும்.
ஆளுநரும், முதலமைச்சரும் மோதலின்றி பணியாற்ற வேண்டும் என்றால் இருவருக்கும் மக்கள் நலம் என்ற ஒற்றை குறிக்கோள் இருக்க வேண்டும். அப்போது தான் மோதல் ஏற்படாது. ஆளுநர், முதலமைச்சர் மோதலால் மக்கள் பணம் தான் வீணடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
- வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி வருகிற 16-ந்தேதி அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருவது உறுதியாகி உள்ளது. டெல்லியில் இருந்த வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.
பின்னர் விமான நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா ஏற்பாடு தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.
2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பிரதமரின் வருகையின்போது அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
- புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி
- தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது
15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் பிப்ரவரி 12 தொடங்கும் என சபாநாயகர் ஆர். செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரும் துணை மானியக் கோரிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
மேலும் புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
- அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
- புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே காய் நகர்த்தி வருகிறது. இதற்காக மத்திய மந்திரிகள் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து பேசுகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலை முன்வைத்து கடந்த பொங்கல் பண்டிகையின்போது அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும், ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதே போல் குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் முதியோர், உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரதமர் மோடியும் புதுச்சேரிக்கு வருவதாக உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
- சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
- பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியையொட்டி உள்ள தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்பு என்ற ஜவகர் (வயது 24). இவர் மீது 2 கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள பேக்கரியை மாமூல் கேட்டு சூறையாடிய வழக்கில் புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் அப்பு, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ், சின்ன முதலியார்சாவடியை சின்னப்பிள்ளை ஆகியோருடன் சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து அமைதி நகரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 2 பைக்கில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கும்பல், அப்புவை சுற்றி வளைத்தது.
அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அப்புவை அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், சரமாரியாக வெட்டினர். இதில் அப்பு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
தகவலறிந்த கோட்டக் குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகச்செட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
அந்த சம்பவத்தில் இருந்து அந்த கும்பல், அப்பு மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே அப்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
கொலைக்கு முன்னர் அப்புவுடன் மது அருந்தி கொண்டிருந்த பாலகணேஷ் மற்றும் சின்னப்பிள்ளை ஆகியோர் அப்புவின் எதிராளிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என கருதி அவர்கள் 2 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எத்கெம் பார்மா சூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ் டி.ஆர். என்ற இருமல் மருந்து விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
- திரவ மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
போலி மருந்து புகாரை தொடர்ந்து புதுச்சேரியில் நடந்த ஆய்வில் பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகள் போலியாக தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த 19-ந் தேதி வரை நடந்த ஆய்வில் 38 வகையான போலி மருந்துகள் தயார் செய்து விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் மேலும் 2 இருமல் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்லா சந்த்கோதர் நெடுஞ்சாலையில் உள்ள எத்கெம் பார்மா சூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ் டி.ஆர். என்ற இருமல் மருந்து (சிரப்) புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு இருமல் மருந்தான உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரோர்கி பகுதியில் இருந்து இன்டியன் டிரக் விஷன் நிறுவனத்தின் மெடிகோப் டி சிரப் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 2 இருமல் மருந்துகளையும் மருந்துகடை உரிமையாளர்கள் வாங்கவும் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திரவ மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதோடு துறைக்குத் தகவல் அளித்து விட்டு குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு அல்லது விநியோகஸ்தர்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது
- மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
- மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குடல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் இமாச்சல பிரதேசம், சிர்மூர் பகுதியில் இருந்து நோனிஸ் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான மாக்பான்சோ 40 மாத்திரை, கேரள மாநிலம் மற்றும் அகமதாபாத் பாவியா மாவட்டத்தில் இருந்து அபான் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான பெபாவிட் என்ற பெயரிலான பாராசிட்டிமல் 650 மி.லி. கிராம் மாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் பைவாதி பகுதியில் கார்னானி பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான சங்காவதி 5 கிராம் ஆகிய 3 மாத்திரைகளின் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த மாத்திரைகள் புதுவையில் உள்ள மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. மேலும் மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
அந்த மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நகல் அனைத்து மொத்த மற்றும் சில்லரை மருந்து விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- 2025-ல் காற்று தரக்குறியீடு 67 ஆக பதிவானது.
- போகி புகையினால் காற்றின் தரம் 'மிதமான' மாசு நிலைக்கு தள்ளப்பட்டது.
புதுச்சேரி:
பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழர் மரபு. போகி பண்டிகை புதுமையை வரவேற்கும் நன்னாளாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நாளில் எரிக்கப்படும் பொருட்கள் காற்றில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை புதுச்சேரி ஜவஹர் நகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் பதிவு செய்தது.
2025-ல் காற்று தரக்குறியீடு 67 ஆக பதிவானது. 2026 அடர் மூடுபனியும் மாசடைந்த காற்றும் கடந்த 13 முதல் 14-ந் தேதி வரையிலான போகி பண்டிகை நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. போகி புகையினால் காற்றின் தரம் 'மிதமான' மாசு நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த ஆண்டு காற்று தரக்குறியீடு 113 ஆக உயர்ந்துள்ளது. நுரையீரலுக்குள் எளிதில் நுழையக்கூடிய பி.எம்.,-2.5 நுண்ணிய துகள்கள் 64 என்ற நிலையை எட்டி காற்றின் தரத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக மாறியது. பி.எம்.,-10 துகள்களின் அளவு 96 ஆக உயர்ந்து, காற்றில் தூசு மற்றும் புகையின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது. நைட்ரஜன் டை ஆக்சைடு அளவும் 25.4 ஆக உயர்ந்துள்ளது.
இது வாகன புகை மற்றும் எரிப்பு நடவடிக்கைகளின் அதிகரிப்பை காட்டுகிறது. புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசுபாடு இரு மடங்கு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.






