என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Puducherry"
- 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது.
- 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்த ஹேமசந்திரன் (26), உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
- அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியர்.
இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு (வயது 26). இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.
இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன.
- தேர்தல் முடிந்துள்ள நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி:
புதுவையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடதேர்தல் துறை உத்தரவிட்டது. மேலும் 10 மணிக்கு மேல் மது கடைகள் திறந்து இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை கலால் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் மதுகடை உரிமையாளர்கள் இரவு 9.30 மணிக்கே மதுகடைகளை மூடிவிடுகின்றனர். தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்ந்துள்ளது.
வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன. சுற்றுலா உரிமம் பெற்ற மதுபார்கள் இரவு 12 மணி வரை இயங்கின.
தேர்தல் முடிந்துள்ள நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வருகின்றன. இதனால் வியாபாரம் பாதித்து அரசுக்கு கிடைக்கும் வருமானமும் குறைகிறது.
இதைத் தொடர்ந்து மதுபான விற்பனை நேரத்தை முன்பு போல் இரவு 11 மணி வரை மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி கலால்துறை தேர்தல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ருத்ரேஷ்(வயது28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை உள்ளது.
பெயிண்டர் வேலை செய்து வந்த ருத்ரேஷ் சமீப காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரும் கஞ்சா விற்று வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் கஞ்சா விற்பதில் தொழில் போட்டி இருந்து வந்தது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கவுதமனை கத்தியால் ருத்ரேஷ் வெட்டினார். இதில் கவுதமனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ருத்ரேஷ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
இந்த பால்குட ஊர்வலத்தில் ருத்ரேசின் தாய் மற்றும் சகோதரியும் பங்கேற்றதால் அதனை காண ருத்ரேஷ் கோவில் எதிரே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் கவுதமன் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் வந்தனர். இதனை கண்டதும் ருத்ரேஷ் ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் சுற்றி வளைத்து ருத்ரேசை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியது.
இதில் ருத்ரேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இதனை பார்த்ததும் பால்குடம் ஏந்தி வந்த பெண்களும், அங்கிருந்த பொதுமக்களும் அலறி அடித்து ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ருத்ரேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ருத்ரேஷ் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக பெரியார் நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறுவதை அ.தி.மு.க. நிரூபிக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சரும், புதுச்சேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான நமச்சிவாயம் கூறியுள்ளார்.
காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காரைக்காலில் உள்ள பா.ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளேன்.
எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கத்தில் இருந்தே சொன்னதுபோல வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
வெற்றி பெற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுவது உடனடியாக அமல்படுத்தப்படும். காரைக்காலில் மருத்துவமனை மேம்பாடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய வெற்றி பெற்ற பின்னர் எம்.பி. என்ற முறையில் பாடுபடுவேன். அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்.
புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது குறித்து நான் ஏற்கனவே கூறியுள்ளது போல மத்திய அரசுடன் பேசி அனைத்து கட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
- வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
- புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அதற்காக வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு ஆயத்தமானார்கள். அத்துடன் வார இறுதி நாளான நேற்று வெளி மாநிலசுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து இருந்தது.
அவர்கள் புதுவையில் கடற்கரை, பாரதி பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.
புதுச்சேரி கடற்கரைசாலை, பாண்டி மெரினா பீச்சில் பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. ஆனால் மாலையில் கூட்டம் அலை மோதியது.
அங்கு அவர்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.
புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒயிட்டவுன் பகுதிகளில் நாகரீக உடை அணிந்த பெண்கள் ஒய்யாரமாக நடந்தது வந்ததை காண முடிந்தது. அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருக்கும் ஒவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.
தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில் வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பினர்.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
- புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
- இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பிரசாரம் மேற்கொண்டார். புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
நாங்கள் எதைச் சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும் அதைச் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். காங்கிரஸ், ராகுல் காந்தி, சோனியா காந்தியால் மட்டுமே செய்ய முடியும்.
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் அபிலாஷைகளை அப்பட்டமாக புறக்கணிப்பதாக உள்ளது.
காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2024 தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள்.
- தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம் உள்ளனர்.
புதுவை தேர்தல் துறையின் இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் இடம் பெற்றுள்ளனர். இதில் மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் பெண் வாக்காளர்கள்தான் அதிகளவில் உள்ளனர்.
புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 28 ஆண்வாக்காளர்களும், 4 லட்சத்து 15 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்களும் உள்ளனர். காரைக்கால் பிராந்தியத்தில் 76 ஆயிரத்து 932 ஆண் வாக்காளர்களும், 89 ஆயிரத்து 258 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
மாகியில் 14 ஆயிரத்து 357 ஆண், 16 ஆயிரத்து 653 பெண், ஏனாமில் 19 ஆயிரத்து 12 ஆண், 20 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தத்தில் புதுவை மாநிலம் முழுவதும் 4லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண், 5 லட்சத்து 41 ஆயிரத்து 431 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதோடு வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள். இதனால் பெண் வாக்காளர்களை கவர, புதுவை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜனதாவினரும், காங்கிரசாரும் பெண்களை அதிகளவில் பிரசாரத்திற்கு அழைத்து செல்கின்றனர். பெண்களும் ஆர்வமாக பிரசாரத்திற்கு சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம், பெண் வாக்காளர்கள், பணத்துக்கு பதிலாக மீண்டும் இலவச அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.
அதோடு புதுவை அரசு 64 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கி வருவதாகவும், விடுபட்ட 10 ஆயிரம் பெண்கள் கண்டறியப்பட்டு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்.என்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பட்டியலிட்டு பேசுகிறார்.
இன்னும் 2 ஆண்டுகள் அரசு தொடரும் என்பதால், மேலும் பல பெண்களுக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளோம். முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என கூறி வருகிறார்.
காங்கிரஸ் தரப்பில் சிறுமி பாலியல் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தி, பெண்களுக்கு புதுவையில் பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்கின்றனர். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம், பெண்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதை எடுத்துகூறி பிரசாரம் செய்கின்றனர்.
அதோடு, பெண்கள் வீட்டு வேலை, குடும்ப பணி செய்தாலும் மதிப்பு, மரியாதை இல்லை. இதனால்தான் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் கொடுக்கப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். அவர் சொன்னதை செய்வார் என குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் பெண் வாக்காளர்களை கவர 2 கூட்டணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
- சமூக வலைதளத்தில் வெளியான பீர் குறித்த தகவலில் ஒரு பீர் கர்நாடகா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இரு இடங்களில் தயாரிக்கப்பட்டதால், லேபிள் மற்றும் கியூஆர் கோடு மாறியுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் வாடிக்கையாளர் ஒருவர் 2 பீர்களை வாங்கி சாப்பிட்டதாகவும், 2-ம் ஒரே கம்பெனி ஆனால் கியூஆர் கோடு மற்றும் லேபில் மாறியுள்ளது என அந்த குடிமகன் புகைப்படத்துடன் ஆடியோ குரல் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை அதிகாரிகள் கூறுகையில்:
சமூக வலைதளத்தில் வெளியான பீர் குறித்த தகவலில் ஒரு பீர் கர்நாடகா மாநிலத்திலும், 2-வது பீர் கோவாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. 2-ம் ஒரிஜினல் பீர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு இடங்களில் தயாரிக்கப்பட்டதால், லேபிள் மற்றும் கியூஆர் கோடு மாறியுள்ளது என தெரிவித்தனர்.
- இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவை உழவர்கரை நகராட்சி ஜவகர் நகரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாடுமுழுவதும் 18-வது பொதுத்தேர்தல் நடக்கிறது. சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இது 2 வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
இது வழக்கமான தேர்தலும் அல்ல. இது தேர்தல் யுத்தம். புதுவைக்கு பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு வேளை வந்தால், அவரிடம் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறதிகள் என்ன ஆச்சு? என புதுவை மக்கள் கேள்வியாக கேட்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் சுப்புராயன் எம்.பி., புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது. தற்போது எப்படி மாநில அந்தஸ்து கெடுப்போம்? என எதை வைத்து சொல்கின்றனர்.
புதுவையில் 800 மதுக்கடைகள் இருந்தது. தற்போது கூடுதலாக 250 ரெஸ்டோபார்கள் திறந்துள்ளனர். இளைஞர்களை சீரழிக்கவே ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா போதையால் சிறுமி பாலியல் வன்கொடு மையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுவையின் உள்துறை அமைச்சர் யார்? அவருக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு என? அவர்தான் விளக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிசயமான மாநிலம் புதுவை. இங்குதான் ரேஷன்கடைகள் இல்லை.
ரங்கசாமி நல்ல மனிதர்தான். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என புலம்புகிறார். சுயமரியாதை இல்லை என புலம்புகிறார். தன் கைகள் கட்டுப் பட்டுள்ளதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறுகிறார்.
சுதந்திரமாக செயல்பட முடியாத முதலமைச்சரால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும்?இந்தியா கூட்டணி தவிர்த்து தேர்தலில் 2 கூட்டணி நிற்கிறது.
மோடி தலைமையிலான நள்ளிரவு கூட்டணி ஒன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கள்ளக் கூட்டணி மற்றொன்று. மோடியை பற்றி எந்த இடத்திலும் பழனிசாமி விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற தேர்தலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுக. இந்தியா கூட்டணி கட்சிகள் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
10 ஆண்டுக்கு மேல் ஒரே கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிக்கை தனித்தனியே விட்டிருந்தாலும், அதில் எந்த முரண்பாடும் கிடையாது.
நெல்லையில் சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஆனால் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதி மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. எனவே பாஜனதா வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் துறை சோதனையிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
- அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
கோடைகாலம் தொடங்கியதால் புதுவையில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது.
காலை 7 மணி முதல் வெப்பம் அதிகரித்து செல்கிறது. சாலையில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முதியோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் கோடை வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் வாடிய முதியவருக்கு போலீஸ்காரர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் நெடுங்காடு சந்திப்பு சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் முகமது ஹாஜா, அந்த வழியே காலில் செருப்பு அணியாமல் வந்த மூதாட்டியை பார்த்தார்.
கடும் வெயிலால் நடக்க சிரமப்பட்டு வந்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர் மூதாட்டியை நிறுத்தி அருகிலிருந்த கடையில் செருப்பு, குடை வாங்கி கொடுத்தார்.
தொடர்ந்து மூதாட்டிக்கு இளநீர் வாங்கி கொடுத்தார். அந்த வழியே சென்ற முதியோருக்கும் இளநீர் வாங்கி கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் போலீஸ்காரரை பாராட்டி வருகின்றனர்.
இவர் ஏற்கனவே அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 27-ந் தேதி முதல் தொகுதி வாரியாக சென்று திறந்த ஜீப்பில் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி புதுவை முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொன்னுமாரியம்மன் கோவிலில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்தநிலையில் முத்தியால்பேட்டை மந்தை வெளி மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசிக்கொண்டிருந்த போது திடீரென பிரசார வாகனத்தின் மீது எங்கிருந்தோ வீசப்பட்ட கல் ஒன்று வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தனது பேச்சை தொடர்ந்தார். அதன்பின் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் வீட்டின் மாடிகளில் யாரும் உள்ளார்களா? எனவும் டார்ச் லைட் மூலமாக அடித்து பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மாதம் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த மர்ம நபர் யாரேனும் முதலமைச்சர் பிரசார வாகனம் மீது கல் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கல் வீசிய மர்ம நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்