என் மலர்
நீங்கள் தேடியது "Air Pollution"
- சமையல் அறையில் இருந்து வெளிப்படும் புகையும் மாசுவை அதிகப்படுத்திவிடும்.
- சமைக்கும்போது காற்றோட்டமான சூழலை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டில்தான் செலவிடுகிறோம். கொரோனா பரவலுக்கு பிறகு வீட்டிற்குள் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. நோய்த்தொற்றுகளின் தாக்கத்தால் வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு முன்பை விட அதிக அக்கறை செலுத்துகிறார்கள். அழுக்குகள், தூசுகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள், மாசு விளைவிக்கும் வாயுக்கள், நுண் துகள்கள், ஒவ்வாமை போன்றவை மூலம் காற்று மாசுபாடு ஏற்படக்கூடும். குளியல் அறை, சமையல் அறைகளில் இருந்து வெளிப்படும் வாசமும் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். பெரும்பாலும் இத்தகைய மாசுக்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் காற்று மாசுக்களை கட்டுப்படுத்தி வீட்டுக்குள் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.
1. துப்புரவு பொருட்கள்: சமையலறை, குளியலறை, ஜன்னல்கள், தரைத்தளங்கள் போன்றவற்றில் காணப்படும் மாசுக்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் துப்புரவு பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மூலம் கூட மீண்டும் மாசுக்கள் உருவாகக்கூடும். எனவே இயற்கையான துப்புரவு பொருட்களை பயன்படுத்துவது, மாசுபாட்டுக்கு வழிவகுக்காத பொருட்களை உபயோகிப்பது என மாற்று வழிமுறையை பின்பற்றுவது வீட்டின் உட்புற மாசுபாட்டை குறைக்க உதவும்.
2. வெற்றிடம்: வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கரப்பான் பூச்சி மற்றும் நாய் மூலம் உருவாகும் அலர்ஜி போன்றவை நாம் உட்காரும், விளையாடும், தூங்கும் இடங்களில் அதிகமாக காணப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தரை விரிப்புகள், தரை தளங்களில் செல்லப்பிராணிகளின் முடிகள் உதிர்ந்து கிடப்பது, அவற்றின் அழுக்குகள் படிந்திருப்பது மூலமாகவும் மாசுக்கள் அதிகரிக்கலாம். ஷோபாவை தூசு தட்டும்போதோ, குஷனில் அமர்ந்து விளையாடும்போதோ காற்றில் தூசு பறப்பதை காண முடியும். அவற்றில் தங்கி இருந்த தூசுவை நாம் சுவாசிக்க நேரிடும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும். எந்தவொரு பொருளையும் சில நாட்கள் உபயோகிக்காமல் இருந்தால் அவற்றில் தூசுக்கள் படிந்திருப்பதை காணலாம். வீட்டுக்குள் தூசுக்களை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, வெற்றிடமாக வைத்திருப்பதுதான். அதாவது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதிக வெற்றிடங்களை உருவாக்க வேண்டும்.
3. வாசனை திரவியங்கள்: நிறைய பேர் அறைக்குள் நிலவும் கெட்ட வாசத்தை போக்குவதற்கு 'ரூம் பிரஷ்னர்களை' உபயோகிப்பார்கள். அவை நல்ல வாசத்தை கொடுக்கும் என்றாலும் அதனை நுகர்வதை தவிர்க்க வேண்டும். அறை முழுவதும் வாசனை திரவியத்தை ஸ்பிரே செய்துவிட்டு உடனே அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதன் வாசம் நீங்கிய பிறகு அறைக்குள் நுழையலாம். ஏனெனில் அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் காற்றிலும், மாசுக்களிலும் கலப்பதை நாம் சுவாசிக்கும்போது ஒவ்வாமை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.
4. சமையல்: சமைக்கும்போது கையாளும் சில வழிமுறைகள் கூட மாசுபாட்டை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொரிக்கும்போது அவற்றில் இருந்து வெளிப்படும் துகள்கள் மாசுபாட்டை உருவாக்கும். சமையல் அறையில் இருந்து வெளிப்படும் புகையும் மாசுவை அதிகப்படுத்திவிடும். ஆதலால் சமைக்கும்போது காற்றோட்டமான சூழலை உறுதி செய்துகொள்ள வேண்டும். வெளிப்புற காற்று மாசுபாடு பிரச்சினை இல்லாவிட்டால் ஜன்னலை திறந்துவைத்துக்கொள்ளலாம். சுத்திகரிப்பானையும் நிறுவலாம். சமையல் அறை மட்டுமின்றி மற்ற அறைகளிலும் காற்று சுத்திகரிப்பானை நிறுவுவது மாசு பிரச்சினையை கட்டுப்படுத்தும்.


புதுடெல்லி:
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசு பரவி வருகிறது. காற்று மாசுவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த காற்று தரமேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையொட்டி டெல்லியில் வருகிற 21-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வருகிற 21-ந் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். ரெயில்வே, மெட்ரோ ரெயில், விமான நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான பணிகளும் 21-ந் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
டெல்லியை சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் 5 மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை வருகிற 30-ந் தேதி வரை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்
இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. நிதிதலைநகர் மும்பையில் வாகனப்பெருக்கம், கட்டுமான பணிகள், தொழிற்சாலைகளால் காற்றின் தரம் குறைந்து உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மும்பையில் காற்றின் தரம் மோசமாகி உள்ளது.
காற்றின் தரம் மற்றும் வானிலை ஆய்வு, ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்தினம் நகரில் காற்றின் தரம் 245 ஏ.கியூ..ஐ.யும், நேற்றும் 280 ஏ.கியூ.ஐ.யும் பதிவாகி உள்ளதாக கூறியுள்ளது. இந்த அளவு காற்றின் தரம் மோசமாக உள்ளதை குறிக்கிறது.
உலகளவில் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று மோசமான காற்றின் தரத்தில் மும்பை 6-வது இடத்தில் இருந்தது. டெல்லி முதல் இடத்தில் இருந்தது. இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக உருவான வெப்பநிலை மாற்றத்தால் நகரில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு அதிகரித்து இருப்பதாக வல்லுநர்கள் கூறினர்.
இதேபோல கடந்த 2 நாட்களாக மும்பையின் கொலபா, மஜ்காவ் மற்றும் பி.கே.சி. பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக அதாவது 300 ஏ.கியூ.ஐ.க்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
டெல்லியில் ஏற்கனவே வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை போன்றவற்றால் காற்று மாசு அதிகமாக உள்ளது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லி அருகே உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடை முடிந்து பயிர்களின் கழிவு பொருட்களை வயல்வெளிகளில் போட்டு எரிப்பது வழக்கம். அந்த மாசுவும் காற்றோடு கலந்து டெல்லியை தாக்கும்.
தற்போது இதேபோல பயிர்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது. மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறுகிறார்கள். எனவே பள்ளிகளை மூடுவதுடன் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் இது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை ஒரே வழக்காக மாற்றி சுப்ரீம்கோர்ட்டு விசாரணை மேற்கொண்டது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூரியகாந்த் ஆகியோர் கொண்ட பெஞ்சு இந்த விசாரணையை நடத்தியது.
கடந்த சனிக்கிழமை விசாரணை நடந்தபோது காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் டெல்லியில் பொது முடக்கத்தை அமல்படுத்தலாம். இது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் திங்கட்கிழமை (இன்று) பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி மாநில அரசு சார்பில் அளித்த பதிவில் டெல்லியில் பொது முடக்கத்தை அமல்படுத்த தயாராக இருக்கிறோம் என்று கூறினார்கள்.
இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக செயல்பட வேண்டாம். காற்று மாசை தடுப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து செலவு செய்யுங்கள்.
டெல்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு 7 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பக்கத்து மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் தான் மாசு ஏற்படுகிறது என்ற வாதம் சரியானதல்ல. பயிர்களை எரிப்பதால் 10 சதவீதம் தான் மாசு பாதிப்பு ஏற்படுகிறது. மீதி பாதிப்பிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனவே அதை விரிவாக ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதில் அவசரமாக செயல்பட வேண்டும்.
தேவைப்பட்டால் டெல்லியில் வாகன போக்குவரத்தை 3 நாட்களுக்கு நிறுத்தி வையுங்கள். காற்று மாசு குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி பள்ளிக்கு வர முடியும். காற்றுத்தர கண்காணிப்புக் குழு அண்டை மாநிலங்களுடன் இதுபற்றி பேச வேண்டும்.
இது சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எடுத்து நாளை மத்திய, மாநில அரசுகள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
இதையும் படியுங்கள்...அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம்