என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air pollution"

    • நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
    • பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் "தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

    குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    காற்றில் கலக்கும் நுண் துகள்களைக் குறைக்கும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளும் தார்பாலின் கொண்டு முழுமையாக மூடப்படாமல் இருத்தல். கட்டுமானப் பொருட்கள் அல்லது தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல்.

    நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். மேலும், அபராதத் தொகையாக ரூ.25 ஆயிரம் அந்த இடத்திலேயே விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அபராத தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்.

    சென்னை மாநகரைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2025-ல் காற்று தரக்குறியீடு 67 ஆக பதிவானது.
    • போகி புகையினால் காற்றின் தரம் 'மிதமான' மாசு நிலைக்கு தள்ளப்பட்டது.

    புதுச்சேரி:

    பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழர் மரபு. போகி பண்டிகை புதுமையை வரவேற்கும் நன்னாளாகக் கொண்டாடப்பட்டது.

    இந்த நாளில் எரிக்கப்படும் பொருட்கள் காற்றில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை புதுச்சேரி ஜவஹர் நகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் பதிவு செய்தது.

    2025-ல் காற்று தரக்குறியீடு 67 ஆக பதிவானது. 2026 அடர் மூடுபனியும் மாசடைந்த காற்றும் கடந்த 13 முதல் 14-ந் தேதி வரையிலான போகி பண்டிகை நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. போகி புகையினால் காற்றின் தரம் 'மிதமான' மாசு நிலைக்கு தள்ளப்பட்டது.

    இந்த ஆண்டு காற்று தரக்குறியீடு 113 ஆக உயர்ந்துள்ளது. நுரையீரலுக்குள் எளிதில் நுழையக்கூடிய பி.எம்.,-2.5 நுண்ணிய துகள்கள் 64 என்ற நிலையை எட்டி காற்றின் தரத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக மாறியது. பி.எம்.,-10 துகள்களின் அளவு 96 ஆக உயர்ந்து, காற்றில் தூசு மற்றும் புகையின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது. நைட்ரஜன் டை ஆக்சைடு அளவும் 25.4 ஆக உயர்ந்துள்ளது.

    இது வாகன புகை மற்றும் எரிப்பு நடவடிக்கைகளின் அதிகரிப்பை காட்டுகிறது. புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசுபாடு இரு மடங்கு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன் 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
    • தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளார்.

    மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஷி யூ கி (சீனா), குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் (தென்கொரியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), வாங் ஜி யி (சீனா), பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், 4 முறை பேட்மிண்டன் உலக சாம்பியனான டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன், டெல்லி காற்று மாசுவின் காரணமாக 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளதாகவும் "இது ஒரு பேட்மிண்டன் போட்டி நடத்துவதற்கு தகுதியான இடம் அல்ல" எனவும் தனது இன்ஸ்டாகிராமில் அண்டர்ஸ் அண்டன்சன் பதிவிட்டுள்ளார்.

    • மாசுபாட்டை அதிகரிப்பதற்கு நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம்.
    • டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன

    டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தாலே தனக்கு நோய்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    பத்திரிகையாளர் உதய் மஹூர்கரின் 'My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நிதின் கட்கரி, "என்னால் இரண்டு நாட்கள்கூட டெல்லியில் தங்கமுடிவதில்லை. உடனே நோய்தொற்று ஏற்படுகிறது. டெல்லியில் ஏன் எல்லா இடங்களிலும் இவ்வளவு மாசுபாடு உள்ளது? நான் போக்குவரத்து துறை அமைச்சர். இந்த மாசுபாட்டிற்கு 40% காரணம் நாங்கள்தான். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களே காரணம்.

    புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும், மாசுபாட்டை அதிகரிப்பதற்கும் நாம் ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இது என்ன தேசியவாதம்? நம்மால் ஒரு மாற்று இந்தியாவை உருவாக்க முடியாதா? மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு ஒரு ஆத்மநிர்பர் பாரதத்தை (சுயசார்பு இந்தியா) உருவாக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

    டெல்லியில் தொடர்ந்து அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக பாஜக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் நிதின் கட்கரியின் இந்த கருத்து கவனம்பெற்றுள்ளது. நிதின் கட்கரியின் இந்த கருத்துதொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி, இம்ரான் மசூத்,

    "கட்கரிக்கு குறைந்தபட்சம் காற்று மாசு அதிகரிப்பை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தது. நீங்கள் எல்லா தீர்வுகளையும் வழங்கும்போது, தயவுசெய்து இதற்கும் ஒரு தீர்வை பரிந்துரையுங்கள். மாசுபாட்டிற்கு வாகனங்கள் மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியேயும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார். 


    • காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக இன்று முதல் BS-6 தரமற்ற இயந்திர வாகனங்கள் வியாழக்கிழமை முதல் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக, மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.

    இந்த முடிவு டெல்லியின் எல்லை நகரங்களான குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டாவிலிருந்து தினமும் பயணிக்கும் சுமார் 12 லட்சம் வாகனங்களை நேரடியாகப் பாதிக்கும்.

    இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த 126 சோதனைச் சாவடிகளில் 580 காவல்துறையினரையும் 37 அமலாக்கக் குழுக்களையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

    பெட்ரோல் பம்புகளில் PUC விதியைக் கண்காணிக்க போக்குவரத்து, நகராட்சி மற்றும் உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குளிர்காலத்தில் டெல்லியின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 25 சதவீதம் வரை பங்களிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து, அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத அலுவலகத்தில் ஊழியர்களுடன் பணிபுரிய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளிப்பார். 

    • வட மாநில நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • தேசிய பாதுகாப்பு வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

    முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2025 ஆம் ஆண்டிலும் இந்தியாவில் காற்று மாசு ஒரு பெரிய சவாலாகவே இருந்துள்ளது. குறிப்பாக, PM 2.5 போன்ற நுண் மாசுத் துகள்களின் அளவு உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல் அளவை விடப் பல மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்தியாவில் குறிப்பாக வட மாநில நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    மிகவும் மாசுபட்ட நகரங்கள்:

    2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள பைர்னிஹாட் இந்தியாவில் மிக அதிக காற்று மாசுபாடு அளவைப் பதிவு செய்து, மிகவும் மாசுபட்ட நகரமாக முதலிடத்தில் இருந்தது. இதன் சராசரி PM 2.5 செறிவு தேசிய பாதுகாப்பு வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

    டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லி தொடர்ந்து மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. குறிப்பாகக் குளிர்கால மாதங்களில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) இங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) 400 புள்ளிகளைத் தாண்டி 'அபாயகரமான' (Severe) நிலையை எட்டியது.


    வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது காற்று மாசுக்கு முக்கிய காரணமாக அமைகிறது

    பிற முக்கிய நகரங்கள்: கிரேட்டர் நொய்டா, குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் போன்ற தேசிய தலைநகரப் பகுதிகள் (NCR) மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் அதிக மாசுபாடு கொண்ட பட்டியலில் இடம்பிடித்தன.

    ஆண்டு முழுவதும் நீடிக்கும் பிரச்சினை: காற்று மாசுபாடு என்பது குளிர்காலப் பிரச்சினை மட்டுமல்ல; பருவமழை மற்றும் கோடை காலங்களிலும் பல மாவட்டங்களில் (சுமார் 60% மாவட்டங்கள்) PM 2.5 அளவு தேசிய சுற்றுப்புற காற்று தரத் தரங்களை (NAAQS) மீறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்கள்

    தொழில்துறை மற்றும் கட்டுமானம்: பைர்னிஹாட் போன்ற நகரங்களில் தொழில்துறை அலகுகளின் அதிக செறிவு மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தீவிரமான கட்டுமான நடவடிக்கைகள் பிரதான காரணங்களாக உள்ளன.

    வாகன உமிழ்வுகள்: வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, குறிப்பாக டெல்லியில், காற்று மாசுபாட்டைத் தொடர்ந்து அதிகரிக்கிறது.

    விவசாயக் கழிவுகளை எரித்தல்: குளிர்காலங்களில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது (சாகுபடி கழிவுகள் எரித்தல்) டெல்லி மற்றும் வட இந்திய நகரங்களில் காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.

    புவியியல் மற்றும் காலநிலை காரணிகள்: குளிர்காலத்தில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை குறைவது, மாசுபடுத்திகள் நிலப்பரப்பிற்கு அருகில் சிக்கி மேகமூட்டத்தை உருவாக்குகிறது.


    காற்று மாசுக்கு மற்றொரு முக்கிய காரணம் தொழிற்சாலைகள்

    சுகாதார விளைவுகள்: காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள் மற்றும் முன்கூட்டிய உயிரிழப்புகள் ஆகியவை குறிப்பிடத்தக்க தாக்கங்களாக உள்ளன.

    பொருளாதார இழப்பு: காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதாரச் செலவுகள் மற்றும் மனித உழைப்பு இழப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் (GDP) பாதிக்கப்படுகிறது.

    கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள்

    இந்திய அரசு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:

    தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP): இந்தத் திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டுக்குள் PM 2.5 மற்றும் PM 10 அளவுகளில் 40% குறைப்பைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 131 நகரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    காற்றின் தர மேலாண்மை ஆணையம்: தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் (NCR) மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது.

    கட்ட நடவடிக்கை திட்டம் (GRAP): டெல்லி போன்ற நகரங்களில் காற்றுத் தரம் மிகவும் மோசமடையும் போது, கட்டுமானம், வாகனங்கள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்ட நடவடிக்கைத் திட்டங்கள் (Phase III & IV) செயல்படுத்தப்படுகின்றன.

    2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியா மாசுபாடு சவாலைத் தீர்ப்பதில் கணிசமான முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது.

    • பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

    தலைநகர் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '450' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் எட்டியுள்ளதால் நான்காம் கட்ட 'கிராப்' கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

    அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே, கட்டுமானப் பணிகளுக்கும், பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
    • முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.

    எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கை வெளியாகி உள்ளது.

    அதில், நவம்பர் மாதத்தில் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

    அதன்படி மிகவும் மாசுபட்ட நகரங்களின் முதல் 10 பட்டியலில் உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நொய்டா, பகதூர்கர், டெல்லி, ஹாபூர், கிரேட்டர் நொய்டா, பாக்பத், சோனிபட், மீரட் மற்றும் ரோஹ்தக் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை முன்னர் குற்றம் சாட்டப்பட்டன. இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாநிலங்களில் கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.

    காற்று தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து PM2.5 தொடர்பான தரவுகளின் அடிப்படையில் CREA தனது நவம்பர் 2025 அறிக்கையைத் தயாரித்துள்ளது.

    முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.

    நாடு முழுவதும் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 

    • மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது

    டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு இடையில் டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் சுமார் 2 லட்சம் சுவாச நோய்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதிலளித்தார்.

    அவரது பதிலில், அரசு தரவுகளின்படி, டெல்லியில் உள்ள ஆறு பெரிய மருத்துவமனைகள் 2022 ஆம் ஆண்டில் 67,054 சுவாசக் கோளாறுகளையும், 2023 இல் 69,293 மற்றும் 2024 இல் 68,411 சுவாசக் கோளாறுகளையும் பதிவு செய்துள்ளன.

    மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது. மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று பாரளுமன்றத்தில் டெல்லி மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.  

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் முகக்கவசத்துடன் வந்தனர்.

    இந்த நிலையில் டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்று முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காங்கிரஸ் பாராளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது சோனியா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, 'குழந்தைகள் இறந்து கொண்டு இருப்பதால் அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்ற வயதானவர்களும் காற்று மாசு'வால் சிரமப்படுகிறார்கள் என்றார்.

    பிரியங்கா கூறும்போது, 'காற்று மாசுபாடு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் காற்று மாசுடன் தான் இருக்கிறோம். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

    காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர். மேலும் பிரதமர் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக நேற்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    3-வது நாளாக இன்று டெல்லி காற்று மாசு பிரச்சனையை தடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




    • வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.
    • விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று (டிசம்பர் 1) தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

    12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.), டெல்லி குண்டு வெடிப்பு, வாக்கு திருட்டு, டெல்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சனையை கிளப்புவார்கள்.

    கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொட ரில் பீகாா் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொட ரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்-சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப் பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும்.

    வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது.
    • அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று (டிசம்பர் 1) தொடங்குகிறது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

    12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.), டெல்லி குண்டு வெடிப்பு, வாக்கு திருட்டு, டெல்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சனையை கிளப்புவார்கள்.

    கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொட ரில் பீகாா் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொட ரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்-சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப் பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும்.

    வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×