என் மலர்
நீங்கள் தேடியது "Delhi air quality"
- இன்னும் இரண்டு வாரத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என தகவல்
- குழந்தைகள், முதியவர்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று காலை அது மிகவும் மோசடைய, மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் லோதி சாலை, ஜஹான்கிர்புரி, ஆர்.கே. புரம், விமான நிலையம்(டி3) பகுதிகளில் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசு அளவிடு இந்த பகுதிகளில் முறையே 438, 491, 486 மற்றும் 473 எனப் பதிவாகியுள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் முக்கியத்துவம் இல்லாத கட்டட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
டெல்லியின் அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள விவசாய இடங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், சாதகமற்ற வானிலை நீடிப்பதாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மோசமான நிலையில்தான் இருக்கும் என வல்லுனர்கள் தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளர். மருத்துவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.
- மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
- காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது.
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையிலேயே தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லி காற்று மாசின் அளவு 433 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு பூஜ்ஜியத்தில் இருந்து 50 வரை இருந்தால் "நல்லது" என்றும் 51 முதல் 100 வரை இருந்தால் "திருப்திகரமானது" என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் "மிதமானது" என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் "மோசமானது" என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் "மிகவும் மோசமானது" என்றும் 400 முதல் 500 வரை இருந்தால் "அபாயகரமானது" என்றும் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், இன்று டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவில் இருந்தது. அங்கு இன்றைய வெப்பநிலை 7.5 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலையை பொருத்தவரை பகலில் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெல்லியின் காற்று மாசு மிக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.
டெல்லியின் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக இருந்தது. தூசி மண்டலத்தால் சில சமயம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்நிலையில், காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். ஆனால் டெல்லியில் காற்றின் தரம் அதையும் தாண்டி 778 ஆக உள்ளது. காற்றில் சொரசொரப்பான துகள்கள் அதிக அளவில் உள்ளது. இது சாலையில் பார்க்கும் திறனை குறைக்கும். தொடர்ந்து நான்கு நாளாக இருக்கும் இந்த மாசு இன்று சரியாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிக வேகத்துடன் காற்று வீச உள்ளது. அதனால் இன்று மாலைக்குள் காற்று மாசுவின் தரம் குறைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. #Delhiairquality #duststorm
வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெல்லியின் காற்று மாசு மிக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.
டெல்லியின் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக இருந்தது. தூசி மண்டலத்தால் சில சமயம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்நிலையில், காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். ஆனால் இன்று டெல்லியில் காற்றின் தரம் அதையும் தாண்டி 778 ஆக உள்ளது. காற்றில் சொரசொரப்பான துகள்கள் அதிக அளவில் உள்ளது. இது சாலையில் பார்க்கும் திறனை குறைக்கும். இந்த மாசு இன்று மாலைக்குள் சிறிது குறைய வாய்ப்புள்ளதாக வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. #duststorm






