என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்று மாசுபாடு"

    • "இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?
    • டெல்லி ஒரு gas chamber-ஆக மாறி உள்ளது

    டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வரும்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் நிலைமை சீரடையும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஒரு gas chamber-ஆக மாறியிருக்கும்போது பிரதமர் மௌளம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார். மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக இந்த விவகாரத்தில் போதுமான அக்கறை காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் மாசுபாடு குறித்த பொது விவாதத்திற்கு தானும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் தயாராக இருப்பதாகவும், பாஜக தனது அமைச்சர்களை அனுப்பவேண்டும் எனவும் சவால் விடுத்தார்.

    "இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?" என்று கேட்ட அவர், ஆம் ஆத்மி அரசின் கீழ் பஞ்சாபில் பராலி எரிப்பு 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியின் போது டெல்லி இவ்வளவு கடுமையான மாசுபாட்டைக் கண்டதில்லை என்றும், தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பாஜகவின் கவனம் AQI புள்ளிவிவரங்களை நிர்வகிப்பதில்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

    மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் காற்று மாசு தொடர்பாக பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்,

    'ஓமனில் பிரதமர், ஜெர்மனியில் எதிர்க்கட்சித் தலைவர், மாசில் தேசத்தின் தலைநகர்' எனவும் குறிப்பிட்டுள்ளார். 

    • காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக இன்று முதல் BS-6 தரமற்ற இயந்திர வாகனங்கள் வியாழக்கிழமை முதல் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக, மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.

    இந்த முடிவு டெல்லியின் எல்லை நகரங்களான குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டாவிலிருந்து தினமும் பயணிக்கும் சுமார் 12 லட்சம் வாகனங்களை நேரடியாகப் பாதிக்கும்.

    இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த 126 சோதனைச் சாவடிகளில் 580 காவல்துறையினரையும் 37 அமலாக்கக் குழுக்களையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

    பெட்ரோல் பம்புகளில் PUC விதியைக் கண்காணிக்க போக்குவரத்து, நகராட்சி மற்றும் உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குளிர்காலத்தில் டெல்லியின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 25 சதவீதம் வரை பங்களிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து, அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத அலுவலகத்தில் ஊழியர்களுடன் பணிபுரிய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளிப்பார். 

    • பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

    தலைநகர் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '450' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் எட்டியுள்ளதால் நான்காம் கட்ட 'கிராப்' கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

    அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே, கட்டுமானப் பணிகளுக்கும், பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
    • முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.

    எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கை வெளியாகி உள்ளது.

    அதில், நவம்பர் மாதத்தில் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

    அதன்படி மிகவும் மாசுபட்ட நகரங்களின் முதல் 10 பட்டியலில் உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நொய்டா, பகதூர்கர், டெல்லி, ஹாபூர், கிரேட்டர் நொய்டா, பாக்பத், சோனிபட், மீரட் மற்றும் ரோஹ்தக் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை முன்னர் குற்றம் சாட்டப்பட்டன. இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாநிலங்களில் கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.

    காற்று தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து PM2.5 தொடர்பான தரவுகளின் அடிப்படையில் CREA தனது நவம்பர் 2025 அறிக்கையைத் தயாரித்துள்ளது.

    முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.

    நாடு முழுவதும் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 

    • மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது

    டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு இடையில் டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் சுமார் 2 லட்சம் சுவாச நோய்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதிலளித்தார்.

    அவரது பதிலில், அரசு தரவுகளின்படி, டெல்லியில் உள்ள ஆறு பெரிய மருத்துவமனைகள் 2022 ஆம் ஆண்டில் 67,054 சுவாசக் கோளாறுகளையும், 2023 இல் 69,293 மற்றும் 2024 இல் 68,411 சுவாசக் கோளாறுகளையும் பதிவு செய்துள்ளன.

    மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது. மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று பாரளுமன்றத்தில் டெல்லி மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.  

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் முகக்கவசத்துடன் வந்தனர்.

    இந்த நிலையில் டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்று முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காங்கிரஸ் பாராளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது சோனியா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, 'குழந்தைகள் இறந்து கொண்டு இருப்பதால் அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்ற வயதானவர்களும் காற்று மாசு'வால் சிரமப்படுகிறார்கள் என்றார்.

    பிரியங்கா கூறும்போது, 'காற்று மாசுபாடு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் காற்று மாசுடன் தான் இருக்கிறோம். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

    காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர். மேலும் பிரதமர் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக நேற்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    3-வது நாளாக இன்று டெல்லி காற்று மாசு பிரச்சனையை தடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




    • உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது
    • நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது.

    டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. காற்று மாசு குறித்து டெல்லி அரசின் பாரா முகம் குறித்து ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தீபாவளி அன்று பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாஜக அரசு வழக்கு தொடர்ந்து சாதகமாக தீர்ப்பு பெற்றது. எனவே பல வருடம் கழித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    இந்த நடவடிக்கையை ஆர்வலர்கள் விமர்சித்தனர். தீபாவளிக்கு பின் டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே டெல்லியில் செயற்கை மழை பெய்ய செய்ய ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் டெல்லி ஐஐடி மேற்கொண்ட சோதனை தோல்வி அடைந்தது.

    கடந்த சில வாரங்களாகவும், இன்றும் டெல்லி காற்றின் தரம் AQI 400 ஐ தாண்டி 'மிகவும் மோசம்' என்ற வகையை அடைந்துள்ளது.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காற்று மாசினால் ஏற்பட்டுள்ள சுகாதார அவசரநிலை குறித்து மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் மோடியின் பாராமுகம் குறித்து விமர்சித்துள்ளார்.

    டெல்லியில், தாய்மார்கள் சிலருடன் தனது வீட்டில் ராகுல் காந்தி காற்று மாசு குறித்து கலந்துரையாடி அதன் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், நான் சந்திக்கும் ஒவ்வொரு தாய்மாரும் என்னிடம் ஒரு விஷயத்தை தான் கூறுகிறார்கள். அவர்களின் குழந்தை மாசுபட்ட காற்றை சுவாசித்து வளர்வது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் பயத்துடனும், கோபத்துடன், ஏதும் செய்ய முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.

    மோடி அவர்களே,"இந்தியாவின் குழந்தைகள் நமது கண் முன்னே மூச்சுத்திணறி கொண்டுள்ளனர். நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். இந்த பிரச்சனையில் உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், காற்று மாசு விவகாரம் குறித்த பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் செய்யப்பட வேண்டும். இதை சுகாதார அவசரநிலையை கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது, எனவே இந்த விஷயத்தில் இனியும் எந்த சாக்கு போக்குகளும், திசை திருப்புதலும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

    வரும் வாரத்திலும் டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையிலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது.
    • மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    டெல்லியின் பிரதான நதியான யமுனை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது. யமுனையை தாயை மீட்டெடுக்க போவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    இந்நிலையில் யமுனை நதி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் இப்படியே தொடர்ந்தால், டெல்லி தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை (DSIIDC) மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் மன்மீத் ப்ரிதம் சிங் அடங்கிய அமர்வு, DSIIDC தாக்கல் செய்த நிலை அறிக்கைகளில் உள்ள தாமதங்களைக் குறிப்பிட்டு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.

    ரூ. 2.5 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதும், எந்தவொரு மறுசீரமைப்புத் திட்டங்களும் இறுதி செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    எனவே நிலுவையில் உள்ள ரூ. 2.5 கோடி நிதியை இரண்டு வாரங்களுக்குள் நிதியை விடுவிக்குமாறு DSIIDC-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    • டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது.
    • சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அங்கு காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 'மிகவும் மோசமான' பிரிவில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் என்ற செயலி வெளியிட்ட அறிக்கையின்படி இன்று காலை 9 மணிக்கு டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 370-ஆக பதிவாகி உள்ளது.

    இதனால் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது. சாந்தினி சவுக், ஆனந்த் விகார், முன்ட்கா, பவானா, நரேலா, வஜீர்பூர் உள்பட18-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 400-க்கு மேல் பதிவாகி உள்ளன.

    இதற்கிடையே அடுத்த 6 நாட்களுக்கு டெல்லியின் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமான' முதல் 'கடுமையான' மண்டலத்தில் இருக்கும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தர முன்னெச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. வாகன மாசு, பயிர் கழிவுகள் எரிப்பு, குளிர்காலம் ஆகியவை டெல்லியில் காற்றுமாசுக்கு காரணமாக உள்ளது.

    காற்று மாசு காரணமாக டெல்லியில் சுமார் 80 சதவீத வீடுகளில் கடந்த மாதத்தில் குறைந்தது ஒருவராவது நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 36 சதவீத வீடுகளில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சுவாசம் அல்லது மாசுபாடு தொடர்பான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

    • வடக்கு டெல்லியின் நரேலாவில், காற்றின் தரம் கிட்டத்தட்ட 294 ஆக மோசமாக இருந்தது.
    • நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    டெல்லியின் காற்றின் தரம் இன்று மீண்டும் கடுமையாக மோசமடைந்தது. நகரத்தின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு 264 ஆக உயர்ந்து, மோசமான பிரிவில் உறுதியாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.

    டெல்லியின் பல பகுதிகளில், குறிப்பாக ஐடிஓவைச் சுற்றி அடர்த்தியான புகை மூட்டம் நீடித்தது. அங்கு காற்றின் தரக் குறியீடு 290-ஐ தொட்டது. வடக்கு டெல்லியின் நரேலாவில், காற்றின் தரம் கிட்டத்தட்ட 294 ஆக மோசமாக இருந்தது.

    டெல்லி கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு சுத்தமான காற்றை பதிவு செய்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டது. நேற்று மாலை காற்றின் தரக் குறியீடு 202 ஆகக் குறைந்துள்ளது. இது இந்த வார தொடக்கத்தில் "மிகவும் மோசமான" அளவீடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

    ஆனால் இன்று காலை நகரத்தின் 38 கண்காணிப்பு நிலையங்களில் பெரும்பாலானவை கவலையளிக்கும் நிலைக்குத் திரும்பி உள்ளன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் செயலியின் தரவு, 300 க்கு மேல் "மிகவும் மோசமான" வரம்பில் 28 நிலையங்கள் உள்ளன.

    டெல்லியை ஒட்டிய நகரங்களிலும் காற்றின் தரம் அவ்வளவாக சிறப்பாக இல்லை. குருகிராமில் காற்றின் தரக் குறியீடு 229 ஆகவும், நொய்டாவில் 216 ஆகவும், காசியாபாத்தில் 274 ஆகவும் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் 'மோசமான' மண்டலத்தில் உள்ளன. பரிதாபாத்தில் 187 புள்ளிகளில் சற்று சிறப்பாக செயல்பட்டாலும், இன்னும் ஆரோக்கியமற்ற நிலையே நிலவுகிறது.

    காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீ.க்கு கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாசுக்கள் குவிந்துவிடும் என்று முன்கூட்டியே காற்றுத் தர எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்று "மிகவும் மோசமாக" இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    200 பராமரிப்பு வேன்கள் மூலம் சாலைகளை ஆழமாக சுத்தம் செய்தல், தொழில்துறை அலகுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை சோதனை செய்தல் உள்ளிட்ட மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

    தலைநகரில் மீண்டும் புகைமூட்டம் மோசமாக இருப்பதால், நகரம் முழுவதும் ஹாட்ஸ்பாட்களை இயல்பாக்க (normalise hotspots) குழுக்கள் செயல்பட்டு வருவதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

    • டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
    • டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது

    தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.

    காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது.

    அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரபிரதேசத்தின் IIT கான்பூரிலிருந்து நேற்று ஒரு விமானம் புறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசை குறைக்க ரூ.3.2 கோடி செலவில் செயற்கை மழை பெய்விக்க IIT கான்பூர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதுகுறித்து விளக்கம் அளித்த IIT கான்பூர் இயக்குநர், "6,000 அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்ற நிலையில், மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தோல்வி அடைந்தது" என்று தெரிவித்தார். 

    • சென்னை புகைமண்டலமாக காட்சியளித்தது.
    • காற்று மாசால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் சென்னை புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள பகுதிகளில் பதிவான காற்றின் தரக்குறியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு பெருங்குடியில் 229 ஆக பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மணலியில் 175, மணலி நியூ டவுன், வேளச்சேரியில் தலா 152, அரும்பாக்கம் 146, ஆலந்தூர் 127, அம்பத்தூரில் 100 ஆக பதிவாகி உள்ளது.

    அதிகமாக பட்டாசுகளை வெடித்ததால் ஆபத்தான நிலையில் காற்றின் தரக்குறியீடு உள்ளதால் காற்று மாசால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×