என் மலர்
நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி எம்பிக்கள்"
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர்.
புதுடெல்லி:
டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் முகக்கவசத்துடன் வந்தனர்.
இந்த நிலையில் டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்று முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காங்கிரஸ் பாராளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது சோனியா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, 'குழந்தைகள் இறந்து கொண்டு இருப்பதால் அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்ற வயதானவர்களும் காற்று மாசு'வால் சிரமப்படுகிறார்கள் என்றார்.
பிரியங்கா கூறும்போது, 'காற்று மாசுபாடு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் காற்று மாசுடன் தான் இருக்கிறோம். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.
காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர். மேலும் பிரதமர் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினார்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக நேற்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.
3-வது நாளாக இன்று டெல்லி காற்று மாசு பிரச்சனையை தடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சியினரின் அமளி செயல் தவறு என சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குறுக்கிட்டதுடன், அவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
எங்கள் ஆட்சியில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
தேசத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம்.
ஊழலை சிறிதுகூட சகித்துக் கொள்ள முடியாத வகையில் நாங்கள் ஆட்சி செய்தோம்.
வாக்கு வங்கிக்காக அல்ல, அனைவருக்கும் நீதி என்ற வகையில் ஆட்சி செய்து வருகிறோம்.
வாக்கு வங்கி அரசியலைப் புறக்கணித்து மதச்சார்பின்மையை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
தோல்வியால் சிலருக்கு ஏற்பட்டுள்ள வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
வெட்கமே இல்லாமல் ஊழல்களை ஒப்புக் கொண்ட கட்சி காங்கிரஸ்.
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி இருந்தது.
வருங்கால தலைமுறைக்காக வலிமையான பாரதத்தை உருவாக்க வேண்டும் என ஆட்சி செய்து வருகிறோம்.
இதற்கிடையே, மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சியினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் அமளி செயல் தவறு என சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளதை மக்களவை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
- இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது என்றார் பிரதமர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்களின் தாரக மந்திரம்.
இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது.
வாக்கு வங்கி அரசியல் நாட்டை பிளவுபடுத்தும். இது நாட்டை நாசப்படுத்தியது
தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதை மக்களவை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான இடங்களில் 2வது இடத்துக்கு வந்துள்ளனர்.
வளர்ச்சி அடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தார்கள்.
2047-ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார்.
அதனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி பதிலுரையின் போது தமிழக எம்பிக்கள் மணிப்பூருக்கு நீதி வேண்டும் எனக்கோரி தமிழில் முழக்கமிட்டனர்.
- நேற்று மக்களவையில் ராகுல் காந்தி குழந்தை போல் அழுததை பார்க்க முடிந்தது.
- ராகுலின் குழந்தைத் தனம் தெரிந்துதான் மக்கள் அவரை ஏற்கவில்லை என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசி வருகிறார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
மக்களவையில் ராகுலின் நேற்றைய செயல்பாடுகள் குழந்தைத்தனமாக இருந்தது.
ஏதோ பாதிக்கப்பட்டவர் போல் மக்களவையில் நாடகத்தை அரங்கேற்றினார் ராகுல்.
குழந்தை புத்தி உள்ளதால் ராகுலுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை.
ராகுலின் குழந்தைத் தனம் தெரிந்துதான் மக்கள் அவரை ஏற்கவில்லை.
குழந்தை புத்தி உள்ள ஒருவரால் தான் மக்களவையில் கண்ணடிக்க முடியும்.
குழந்தை புத்தி உள்ள ஒருவர் தான் மக்களவையில் ஒருவரை திடீரென கட்டிப்பிடிக்க வைக்கும்.
நேற்று மக்களவையில் ராகுல் காந்தி குழந்தை போல் அழுததை பார்க்க முடிந்தது.
ஜாமினில் உள்ள ஒருவர் தன்னை நிரபராதி என நினைத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.






