search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loksabha"

    • நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.
    • நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது.

    மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகமே பாராட்டுகிறது. 10 ஆண்டுகால வலிமையான ஆட்சியின் மூலம் வலிமையான பொருளாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாங்கள் 3வது முறை ஆட்சிக்கு வரும்போது நாடு உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனும்போது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

    எதிர்க்கட்சிகள் விரைவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்தியாவின் ஜிடிபி உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வந்துள்ளது.

    அடுத்த 30 ஆண்டுகளில் இருந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். 30 ஆண்டு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது 3வது இடத்தில் இந்தியா இருக்கும்.

    எனது மூன்றாவது முறை ஆட்சி காலத்தில் இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

    பாஜக அரசின் வேகத்தை காங்கிரஸ் கட்சியால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நகர்புறத்தில் வாழும் ஏழைகளுக்காக பாஜக அரசு 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.

    பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்ய 100 ஆண்டுகள் ஆகும். நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.

    காங்கிரஸ் கொண்டுள்ள மனப்பான்மையால் நாட்டிற்கு பெரும் தீங்கு ஏற்படும். காங்கிரசுக்கு, கடுமையாக உழைக்கும் மனப்பான்மை இல்லை. 

    நாங்கள் 70 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளை கொடுத்துள்ளோம். இதையே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்வதாக இருந்தால் 70 கோடி இணைப்புகளை வழங்க 60 ஆண்டுகள் ஆகி இருக்கும். நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது. காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட பொருளை மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்ய நினைத்து தோல்வியடைந்தது.

    இந்தியாவை பற்றி நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் எண்ணங்கள் மேன்மையாக இல்லை. மக்களை பற்றி சரியாக சொல்லாவிட்டாலும், இந்திரா காந்தி காங்கிரசை பற்றி சரியாக சொல்லி உள்ளார். ஒரு குடும்பத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியால் சிந்திக்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது.

    காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தற்போது அவர்களின் கூட்டணியை உடைத்துவிட்டது. எங்களுக்கு தேசத்தின் திறமையின் மீது நம்பிக்கை உள்ளது மக்களின் சக்தியின் மீதும் நம்பிக்கை உள்ளது.

    3வது ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து, நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற மக்களவைக்குள் புகுந்து வண்ண புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர்கள் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இடத்திற்குள் குதித்து புகைக்குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. பின்னர் எம்.பி.க்கள் மக்களவை பாதுகாவர்களுடன் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதேநேரத்தில் மேலும் இருவர் பாராளுமன்ற வளாகத்திலும் இதேபோன்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

    நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூடுதல் செசன் நீதிமன்ற நீதிபதி ஹர்தீக் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் (மனோரஞ்சன், சாகர் சர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே மகேஷ் குவாவாத் ஆகியோர் "தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக தொடர்புள்ளதா ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்றும் தெரிவித்தனர். இதற்காக தங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதியுடன் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கின் 6-வது குற்றவாளி நீலம் ஆசாத் ஆவார்.

    • பாராளுமன்ற மக்களவையில் இருவர் வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
    • இது தொடர்பாக இதுவரை ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பாராளுமன்ற மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் இருவர் குதித்து வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் புகை குண்டுகள் வீசினார்.

    இந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு மூளையாக செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சதித்திட்டம் தீட்டியது குறித்து வாட்ஸ்அப், சமூக வலைத்தள உரையாடல்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியின் மகனை இந்த வழக்க தொடர்பாக போலீசார் பாகல்கோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்டவர் மக்களவையில் தாக்கப்பட்ட டி. மனோ ரஞ்சனின் நண்பர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர்.

    வீட்டில் இருந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த எனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி போலீசார் வீட்டிற்கு வந்தது உண்மை. எனது சகோதரரிடம் விசாரணை நடத்தினர். நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்ப வழங்கினோம். எனது சகோதரரும் மனோரஞ்சனும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். தற்போது எனது சகோதரர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்" என்றார்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
    • மக்களவை நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

    மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசினார். அமளிக்கு இடையே வன திருத்த சட்ட மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்பட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பின், ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான இரு மசோதாக்களுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் மக்களவையைப் புறக்கணித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார்.
    • சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது வரை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன.

    எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் மீதான விவாதம் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார். சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும்.

    நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று 17-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் கூடின. இன்றும் மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அமளிக்கு மத்தியில் இந்திய தண்டனை சட்டம் தொடர்பான 3 முக்கிய சட்ட திருத்த மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார். அதன்பின்னர், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    • மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விக்கு உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.
    • நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை மக்களவையில் பதில் உரை வழங்குவார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. மேலும் , பாராளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

    மேற்கண்ட கோரிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

    இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்து காட்டமாகப் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி உரையாற்றினார்.

    இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.

    மேலும், மணிப்பூரில் அனைத்துப் பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நாளை பதில் அளிப்பார். குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நிச்சயம் பதிலடி கொடுப்பார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும்.
    • வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை.

    மக்களவையில் இன்று மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

    அவர் பேசுகையில், " மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்.

    மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பு மக்களிடையே பேசியுள்ளேன். மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் உண்மையிலேயே எதிர்க்கட்சிகளை விட, எங்களுக்குத்தான் வலி அதிகம். எனினும், அந்த சம்பவம் அவமானமானது என்றால், எதிர்க்கட்சிகள் அதனை அரசியாக்குவது மேலும் அவமானமானது

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிக வன்முறைகள் நடைபெற்றுள்ளன. வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை.

    மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவதற்கு முதல் நாளில் இருந்தே தயாராக இருந்தோம். மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் கூடி எழுதியுள்ளேன்.

    ஒரு முதலமைச்சர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் மாற்றலாம். மணிப்பூர் முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் முழுவதும் ஒத்துழைக்கிறார்" என்றார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மக்களின் அன்பை பெற்ற பிரதமராக மோடி உள்ளார்.
    • அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் காங்கிரஸின் உண்மையான நோக்கம்.

    ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை.

    மக்கள் அரசின் மீது அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளனர்.

    அறதிப் பெரும்பான்மையுடன் பாஜக அரசு 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த 9 ஆண்டுகளில் 50 வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

    இதே நாளில்தான் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவங்கினார்.

    மக்களின் அன்பை பெற்ற பிரதமராக மோடி உள்ளார்.

    ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பிரதமர் மோடி ஓய்விவன்றி உழைக்கிறார்.

    மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசுக்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை அம்பலத்படுத்தும்.

    அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் காங்கிரஸின் உண்மையான நோக்கம்.

    வெற்றி முழக்கங்களை முன்வைத்து ஏழைகளின் வாக்குகளை பெற்ற காங்கிரஸ்.

    பிரதமர் மோடி ஏறத்தாழ 9 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளார்.

    2 டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து கொரோனா வைரஸில் இருந்து 130 கோடி இந்தியர்களை மோடி அரசு காப்பாற்றியது.

    பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பாடுபட்டு வருகிறார்.

    11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை பிரதமர் நேரடியாக வழங்கியுள்ளார்.

    விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக அவர்கள் கடனே வாங்க வேண்டியதில்லை என்ற நிலையை கொண்டு வர எங்கள் அரசு செயல்படுகிறது.

    அரசியல் உள்நோக்கத்துடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு நாம் கொடுப்பது இலவசம் அல்ல.

    விவசாயிகளிடம் காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இலவச திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது எங்களின் நோக்கம் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் மாநில மக்களின் குரசை நசுக்கிவிட்டீர்கள்.
    • நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. தேச துரோகிகள்.

    மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது, மணிப்பூர் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்தார்.

    இந்நிலையில், மணிப்பூர் சம்பவம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

    ஆளுங்கட்சியின் எதிர்ப்புக்கு மத்தியில் ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:-

    மணிப்பூர் மாநில மக்களின் குரலை நசுக்கிவிட்டீர்கள்.

    மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரத தாயை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்.

    நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. தேச துரோகிகள்.

    இந்திய ராணுவத்தால் மணிப்பூர் கலவரத்தை ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் அதை செய்யவில்லை.

    நாட்டு மக்களின் குரலை கேட்காமல் யாரின் குரலை பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார் ?

    ராவணன் மேகலா, கும்பகர்ணன் ஆகிய இரண்டு பேரின் பேச்சை மட்டுமே கேட்டார். ராவணனை போல் பிரதமர் மோடியும் அமித்ஷா, அதானி ஆகிய இரண்டு பேரின் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இலங்கையை எரித்தது அனுமான் இல்லை. ராவணனின் ஆணவம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை.
    • மணிப்பூரை இன்று நீங்கள் இரண்டாக பிரித்துவிட்டீர்கள்.

    மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி தனது உரையை தொடங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவையில் மீண்டும் என்னை நியமித்ததிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    முன்பு, பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியை மையமாக வைத்து பேசினேன்.

    அதானி குறித்து நான் தெரிவித்த கருத்து சில மூத்த உறுப்பினர்களுக்கு கஷ்டமாக இருந்தது. இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றேன். எனது யாத்திரை இன்னும் முடியவில்லை.

    கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியபோது நாட்டையும், மக்களவையும் பார்க்க விரும்பினேன்.

    யாத்திரையின் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.

    யாத்திரையின்போது நிறைய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.

    யாத்திரை செல்ல செல்ல சாமானிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    பயிர் காப்பீடு குறித்து விவசாயி பகிர்ந்த வலி என்னையும் தொற்றிக் கொண்டது.

    நாட்டு மக்களின் வலியை உணர வேண்டும். மக்களின் துக்கமே எனது துக்கம். அவர்களின் வலியே எனது வலி.

    மணிப்பூரை இன்று நீங்கள் இரண்டாக பிரித்துவிட்டீர்கள். சில நாட்களுக்கு முன்பாக நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை. மணிப்பூரில் பிரதமர் செய்யாததை தான் செய்தேன்.

    மணிப்பூரில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினேன். தனது கண் முன்னே தனது ஒரே மகனை சுட்டுக் கொன்றுவிட்டதாக மணிப்பூர் பெண் ஒருவர் சொன்னார்.

    மகனை இழந்த பெண் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறியதாக கூறினார். ஒரு புகைப்படத்தை காட்டி இதுவே என்னிடம் இருக்கும் மிச்சம் என அந்த பெண் சொன்னார்.

    மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை.

    இந்திய தேசத்தை மணிப்பூர் சம்பவத்தின் மூலம் கொன்றுவிட்டது. பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டுமல்ல நாட்டையே மணிப்பூரில் கொன்றுவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.
    • இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    மக்களவையில் மீண்டும் என்னை நியமித்ததிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    முன்பு, பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியை மையமாக வைத்து பேசினேன்.

    அதானி குறித்து நான் தெரிவித்த கருத்து சில மூத்த உறுப்பினர்களுக்கு கஷ்டமாக இருந்தது. இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம்.

    பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றேன். எனது யாத்திரை இன்னும் முடியவில்லை.

    கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியபோது நாட்டையும், மக்களவையும் பார்க்க விரும்பினேன்.

    யாத்திரையின் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.

    யாத்திரையின்போது நிறைய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்.

    யாத்திரை செல்ல செல்ல சாமானிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

    பயிர் காப்பீடு குறித்து விவசாயி பகிர்ந்த வலி என்னையும் தொற்றிக் கொண்டது.

    நாட்டு மக்களின் வலியை உணர வேண்டும். மக்களின் துக்கமே எனது துக்கம். அவர்களின் வலியே எனது வலி.

    • டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
    • மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    பாராளுமன்றத்தில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×