என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"

    • அந்த மோதிரங்களில் ரஹ்மத் சர்க்கார் மற்றும் ரிஸ்வான் 2025 என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
    • புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.

    ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கரா என்ற கிராமம் அமைந்துள்ளது.

    இங்கு நேற்று, ஆரியன் என்ற 13 வயது சிறுவன், கால்களில் மோதிரங்கள் அணிந்த புறா ஒன்றை பார்த்துள்ளான்.

    அதை பிடித்த சிறுவன் தனது குடும்பத்தினருக்கு கூறியுள்ளார். குடும்பத்தினர் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.

    சாம்பல் நிறத்திலான அந்தப் புறாவின் இறக்கைகளில் இரண்டு கருப்புப் பட்டைகள் இருந்தன. அதன் கால்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மோதிரங்கள் கட்டப்பட்டிருந்தன.

    அந்த மோதிரங்களில் 'ரஹ்மத் சர்க்கார்'  மற்றும் 'ரிஸ்வான் 2025' என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

    புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.

    இந்தப் புறா பாகிஸ்தானில் இருந்து உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா அல்லது ஏதேனும் ரகசியச் செய்திகளைத் தாங்கி வந்ததா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

    அண்மையில் சம்பா மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.  

    • வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு அமைந்தது
    • வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.

    பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தையை வங்கதேசம் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்கவும், வங்கதேச விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.

    குறிப்பாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை வருகிற 29-ந்தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
    • 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குகிறார்கள்.

    பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்குப் பகிர்ந்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

    பஞ்சாபின் எல்லைப்பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.

    அவர்களுக்கு இந்திய ராணுவ நிலைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்திய இளைஞர்களைக் குறிவைத்து பெண்ணாசையை தூண்டும் 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில் சிறுவன் சிக்கியுள்ளான்.

    சிறுவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் பாகிஸ்தான் எண்களுடன் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • டிரம்ப்பை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்தது.
    • சீனா தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தக காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.

    அதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்றும் இதில் 3-ம் தரப்பு தலையீடு இல்லை என்றும் தெரிவித்தது. ஆனால் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

    இதற்கிடையே டிரம்ப்பை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்தது.

    இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறும்போது, பல நாடுகள் இடையேயான மோதலை தீர்க்க நாங்கள் கவனம் செலுத்தினோம். வடக்கு மியான்மர், ஈரான் அணுசக்திப் பிரச்சினை மற்றும் இந்தியா-பாகிஸ் தான் இடையேயான மோதல், பாலஸ்தீனம்- இஸ்ரேல் பிரச்சினைகள், கம்போடியா-தாய்லாந்துக்கு இடையிலான மோதல் ஆகியவற்றில் மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.

    சீனா தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாகீர் அந்த்ராபி கூறியதாவது:-

    இந்தியாவுடனான மோதலின்போது சீன தலைவர்கள் பாகிஸ்தான் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். மே 6 முதல் 10-ம் தேதி வரையிலான நாட்களில் அல்லது அதற்கு முன்னரும், பின்னரும் இந்திய தலைமையுடனும் சீன தலைவர்கள் சில தொடர்புகளை ஏற்படுத்தினர்.

    மிகவும் நேர்மறையான தூதரக பரிமாற்றங்களால் வகைப்படுத்தப்பட்ட அந்தத் தொடர்புகள் பதற்றத்தைத் தணிப்பதிலும், பிராந்தி யத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவர முயற்சிப்பதிலும் பங்களித்தன என்று நான் நினைக்கிறேன்.

    எனவே மத்தியஸ்தம் குறித்த சீனாவின் விளக்கம் சரியானது என்பதில் உறுதி யாக இருக்கிறேன். இது மோதலைத் தீர்ப்பதில் மேற்கொள்ளப்பட்ட பல சர்வதேச முயற்சிகளின் சிறப்பம்சமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
    • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை வாயிலாக பரிமாறிக் கொள்ளப்படும்.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதே இதன் நோக்கம்.

    அதன்படி, தங்கள் நாடுகளில் இருக்கும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான விவரங்களை இந்தியாவும், பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது 1991-ம் ஆண்டு ஜனவரி 27 முதல் அமலுக்கு வந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி இந்தப் பட்டியல் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும்.

    இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் மத்திய வெளியவுறவுத்துறை அமைச்சகமும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இந்தப் பட்டியல்களை ஒப்படைத்தன. தொடர்ந்து 35-வது ஆண்டாக பரஸ்பரம் பட்டியல் பகிரப்பட்டுள்ளது.

    • ரிமோட் கண்ட்ரோல் குண்டுவெடிப்பில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • 2025 ஆம் ஆண்டில் மட்டும் பலுசிஸ்தானில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்

    பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகவும், உள்ளூர் மக்களுக்குப் பலன்கள் கிடைப்பதில்லை என்றும் கூறி தனி நாடு கேட்டு நீண்டகாலமாக பல ஆயுத குழுக்கள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில் சுமார் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    கேச், பஞ்ச்கூர் மற்றும் துர்பத் ஆகிய பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    பஞ்ச்கூரில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட சாலையில் ராணுவ வாகனம் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் குண்டுவெடிப்பில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதல்களுக்குப் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பலுசிஸ்தான் விடுதலை முன்னணி மற்றும் பலுச் குடியரசு காவலர்கள் ஆகிய அமைப்புகள் கூட்டாகப் பொறுப்பேற்றுள்ளன.

    துர்பத் பகுதியில் ராணுவத்தினர் பயன்படுத்தி வந்த தகவல் தொடர்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களையும் ஆயுதக் குழுக்கள் வெடிபொருட்கள் மூலம் தகர்த்துள்ளன.

    இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தான் முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

    இதில் இதுவரை 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    2025 ஆம் ஆண்டில் மட்டும் பலுசிஸ்தானில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் நியாயப்படுத்தியது.

    ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். நாங்கள் பயங்கரவாதிகளை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஜமியாத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் {Jamiat Ulema-e-Islam-F (JUI-F)} தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான், பாகிஸ்தான் லாஜிக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் தாக்குதலுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறுகையில் "ஆப்கானிஸ்தானில் உள்ள நம்முடைய எதிரிகள் மீது நாம் தாக்குதல் நடத்தினோம் என்று சொல்லி, அதை நியாயப்படுத்தினால், பின்னர் காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற குழுக்களின் தலைமையகம் மற்றும் பஹவல்பூர், முரித்கே போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தியதற்கு, இந்தியாவும் இதேபோன்று நியாயப்படுத்த முடியும்.

    அதன்பின் நீங்கள் எப்படி ஆட்சேபனை தெரிவிக்க முடியும்?. எப்படி இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று நாம் குற்றம்சாட்டினோமோ, அதே குற்றச்சாட்டை தற்போது பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் சுமத்துகிறது. இரண்டை நீங்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடந்த மே மாதம் 7-ந்தேதி ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்கி அளித்தது.

    • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
    • மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

    கராச்சி:

    12-வது இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது. 172 ரன்கள் குவித்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

    இளையோர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதும் அந்த வெற்றியை திருவிழா போல் அவர்கள் கொண்டாடினர். நேற்று அதிகாலை தாயகம் திரும்பிய அந்த அணி வீரர்களுக்கு சீனியர் வீரர்களுக்கு கொடுப்பது போன்று தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

    பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி (இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் அவர்களை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து விருந்தளிக்க உள்ளார். முன்னதாக அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

    • பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.
    • அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலம் 19 வயதுக்குட்பட்ட வருக்கான 12-வது ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. 172 ரன்கள் விளாசிய சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. இந்த இமாலய இலக்கை துரத்தி இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின.

    லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.

    • நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை
    • ஏற்கனவே "தோஷகானா 1" வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தோஷகானா பார்ட் 2 வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றுமொரு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி பெற்ற பரிசுகளில் ஊழல் செய்ததாக வழக்கு.

     இந்த வழக்கு 'தோஷகானா 2' என்று அழைக்கப்படுகிறது. அரசு கருவூல பரிசுகள் தோஷகானா என்று அளிக்கப்படுவதால் இந்த பெயர் 

    2021-ம் ஆண்டு சவுதி அரேபியாவிடமிருந்து இம்ரான் கான் தம்பதி பரிசாக பெற்ற விலைமதிப்பற்ற நகைகள், வைரங்கள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட அரசு பரிசுகளை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தததே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. 

    சுமார் 10.9 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர்கள் கையாடல் செய்ததாக புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

    அதன்படி நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள், ஆக மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதேபோல் மற்ற சில பரிசுகளை கையாடல் செய்ததாக "தோஷகானா 1" வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்த தோஷகானா பார்ட் 2 வழக்கில் 17 ஆண்டு தண்டனை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்று இம்ரான் கான் ஏற்கனவே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது.

    இதற்கிடையே இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி ஏற்கனவே இந்த 'தோஷகானா 2' வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது அவருக்கு 17 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இம்ரான் கானின் பிடிஐ கட்சி இத்தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சட்டத்தை கேலி செய்யும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.  

    ×