என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"
- எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.
- இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இதற்கிடையே தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான் கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில், எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்று அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் இம்ரான் கான் சகோதரி அலீமா கானும் 'ஸ்கை நியூஸ்' சேனலுக்கு அளித்த பேட்டியில், "அசீம் முனீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். அதனால்தான் அவர் இஸ்லாத்தை நம்பாதவர்களுடன் சண்டையிட விரும்புகிறார்.
இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
ஆனால் முனீர் போன்ற ஒருவர் இருக்கும்போது, இந்தியாவுடன் போர் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தியாவுடன் போருக்காக ஏங்குகிறார்" என்று அலீமா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்காரவாத தாக்குதலுக்கு பிறகு மே மாத தொடக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட 3 நாட்களில் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
- இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இந்தநிலையில் தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான்கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜி.யும் பொறுப்பாவார்கள்.
நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமான மற்றவைகளாக உள்ளன.
ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், மின்சாரம் அல்லது சூரிய ஒளி, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ உதவி மற்றும் கைதிகளுக்கு பொதுவாகக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
- அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- தனது கைதுக்கும் தற்போதைய நிலைக்கும் காரணமான ராணுவத் தளபதி அஸீம் முனீரை குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார்.
எதிர்க்கட்சிளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், ராணுவத் தளபதி அசிம் முனீர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்திகள் பரவிய நிலையில், நேற்று அன்று அவரைச் சந்தித்த பின் உஸ்மா கானும் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது, "கடவுளின் அருளால் அவர் நலமாக இருக்கிறார். ஆனால், தனக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுவதால் அவர் கோபமாக இருக்கிறார். நாள் முழுவதும் அவர் தனது அறையிலேயே அடைத்து வைக்கப்படுகிறார். குறுகிய காலத்திற்குக் கூட வெளியே வரவோ, யாருடனும் பேசவோ அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், தனது கைதுக்கும் தற்போதைய நிலைக்கும் காரணமான ராணுவத் தளபதி அசிம் முனீரை பாதுகாத்து அதிக அதிகாரம் வழங்க நாட்டின் அரசியலமைப்பை மறுசீரமைக்க முயற்சிகள் நடப்பதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியதாக உஸ்மா கானும் தெரிவித்தார்.
முன்னதாக இம்ரான் கானின் கட்சியினர் அவரின் நிலைமை குறித்து விளக்கம் கேட்டு ராவல்பிண்டியில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் நேற்றும் இன்றும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் - இலங்கை அணிகள் தகுதி பெற்றன.
- இலங்கை அணி 191. ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்தது.
முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் - இலங்கை அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 191. ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது நவாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 178 ரன்களை மட்டுமே எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஷ்ரா அதிரடியாக ஆடி 48 பந்தில் 76 ரன்கள் குவித்தார். குசால் மெண்டிஸ் 23 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் சல்மான் ஆகா தனியாகப் போராடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இலங்கை அணி தான் ஆடிய 4 லீக் போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
- இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.
- இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 3 வாரமாக இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகள் மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி நிர்வாகிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.
இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் நேற்று அடியாலா சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள் தகவலறிந்து ஏராளமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக ராவல்பிண்டி அடியாலா சிறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"இம்ரான் கான் அடியாலா சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவர் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார், அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) இந்த வதந்திகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. அரசாங்கம் உடனடியாக இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உடனடியாக இம்ரானுடன் அவரது குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இதைத்தொடர்ந்து இம்ரான் கானை அவரது சகோதரிகள் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
- ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
- இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆப்கனிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜீஸ் தற்போது இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் போது இந்தத் தாக்குதல் நடந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் பாகிஸ்தானின் பெஷாவரில் துணை ராணுவ தலைமையகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றது. இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் தற்கொலை தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்த நிலையில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சூழலில் போர் நிறுத்தத்தை மீறி தற்போதைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், தாங்கள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.
- ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.
- ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
சிந்து மாகாணம் இந்தியாவுக்கு சொந்தமாகலாம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பேசியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் மாயையான மற்றும் ஆபத்தான கருத்துக்களை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய அறிக்கைகள் யதார்த்தத்தை சவால் செய்ய முயலும் ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. மேலும் அவை சர்வதேச சட்டம், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மீறுகிறது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க, ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காண நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி, சமத்துவம் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தியாவுடனான அனைத்து மோதல்களுக்கும் அமைதியான தீர்வு காண பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த காலங்களைப் போலவே, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு, தேசிய சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிச்சக் செய்தான்.
- மற்ற 2 பயங்கரவாதிகளும் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பெஷாவரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சதார் பகுதியில் அமைந்துள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தில் நேற்று காலை 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.
நேற்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தியபோது 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிரதான வாயிலின் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். அதில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிச்சக் செய்தான். இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மற்ற 2 பயங்கரவாதிகளும் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர். அவர்கள் மீது ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். காயமடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு 'தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்' அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 74 ரன்னிலும், பர்ஹான் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பகர் ஜமான் 10 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் விக்கெட்கள் வீழ்ந்தன. உஸ்மான் தரிக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே அணியின் ரியான் பர்ல் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தரிக் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ரைசிங்ஸ்டார் ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
- சூப்பர் ஓவரில் வென்ற பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
தோகா:
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்கதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் வங்கதேசம் சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணி 125 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது. 3வது பந்தில் 5 வைடுகள் கிடைத்தன. 4வது பந்தில் விக்கெட் வீழ்ந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவரில் 7 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 பந்தில் 7 ரன் அடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜெனித் லியாங்கே 41 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து, 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாஹிப்ஜாதா பர்ஹான் அதிரடியாக ஆடி 45 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முத்தரப்பு தொடரில் இலங்கை தான் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.






