search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvPAK"

    • டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 344 ரன்களை குவித்தது.

    ஐதராபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத்தில் 8-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 77 பந்துகளில் 6 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 122 ரன்கள் குவித்தார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய சதீரா சமரவிக்ரம பொறுப்புடன் ஆடி சதமடித்து 108 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை குவித்தது.

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 4 விக்கெட்டும், ஹரிஸ் ராப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது
    • பாகிஸ்தான் 5 முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான ஆட்டங்களில் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

    பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை, இலங்கை அணி கடைசி பந்தில் எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) 12-வது முறையாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், அதிகமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

    இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஐநது முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    கடைசி பந்தில் இலக்கை எட்டிய சம்பவம், ஆசிய கோப்பை தொடரில் இது 2-வது முறையாகும். இதற்கு முன்பாக 2018 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக வெற்றி பெற்றிருந்தது.

    ஆசிய கோப்பையில் முதல் மூன்று போட்டிகளில் 68.3 ஓவர்கள் வீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் 52.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினர்.

    • கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு உதவி
    • 47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தல்

    ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடின.

    இறுதியாக கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், இலங்கை வீரர் அசலங்கா சிறப்பாக விளையாடி இரண்டு ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். மேலும், அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

    47 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சரித் அசலங்கா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து கூறியதாவது:-

    பீல்டரின் இடையே பந்தை தட்டிவிட்டு எப்படி இரண்டு ரன்களுக்கு கஷ்டப்பட்டு ஓடுவது என்பது குறித்து யோசித்தேன். எதிர்பக்கம் இருந்த பதிரனாவிடமும் கடுமையாக ஓடி இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றேன்.

    கடைசி பந்தை பவுன்சர் அல்லது யார்க்கர், அதை தவிர்த்து ஸ்லோவர் பந்தாக வீசுவார் என்று நினைத்தேன். இது எனக்கு ஏற்ற பந்துதான். இதனால் நான் உற்சாகமாக இருந்தேன். மெண்டிஸ்- சதீரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நான் போட்டியை முடிக்க விரும்பினேன். அது என்னுடைய ரோல். என்னுடைய வரலாற்று சாதனை புத்தகத்தில் இது என்னுடைய 2-வது இன்னிங்ஸ்'' என்றார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 42 ஓவரில் 252 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 86 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை எடுத்து, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    அந்த அணியின் குசால் மெண்டிஸ் 91 ரன்னில் அவுட்டானார். சரித் அசலங்கா கடைசி வரை ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:

    எங்கள் பந்துவீச்சு மோசமாக இருந்தது. எங்களை விட இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

    எங்களுடைய பந்துவீச்சும் சரி, பீல்டிங்கும் சரி, சரியான தரத்தில் இல்லை என்பதால் நாங்கள் தோற்றோம். போட்டியின் மிடில் ஓவர்களில் எங்களுடைய பந்துவீச்சு எடுபடவில்லை.

    இலங்கை அணியின் பார்ட்னர்ஷிப்பை எங்களால் பிரிக்க முடியவில்லை. மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து ரன்களை குவித்ததால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை தழுவினோம்.

    இலங்கை அணி பேட்டிங் ஆரம்பத்திலும் சரி, ஆட்டத்தை முடித்ததிலும் சரி சிறப்பாக செயல்பட்டனர்.

    கடைசி கட்டத்தில் சிறந்த பவுலர்கள் பந்து வீசவேண்டும் என முடிவு செய்தேன். அதனாலேயே ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரை ஷகினிடம் கொடுத்தேன். அதன்பின், இறுதி ஓவரை சமான் கானிடம் கொடுத்தேன். அவர்மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று தோல்வியை தழுவினோம் என தெரிவித்தார்.

    • மழை காரணமாக போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் ரிஸ்வான், ஷபிக் அரை சதத்தால் 252 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 47 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் பதிரனா 3 விக்கெட்டும், மதூஷன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 42 ஓவரில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 100 ரன்கள் சேர்த்தது.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமரவிக்ரமா 48 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 91 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் அசலங்கா பொறுப்புடன் ஆடி 49 ரன்னுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி கடைசி பந்தில் 252 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டும், ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. அப்துல்லா ஷ்பீக் 201 ரன்னும், ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 576 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    410 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூல ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

    பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 7 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகனாக அப்துல்லா ஷபீக்கும், தொடர் நாயகனாக ஆகா சல்மானும் தேர்வாகினர்.

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
    • சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் தொடங்கியது. முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்று பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

    முன்னதாக அவர் முதல் டெஸ்டில் 76 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 63 மற்றும் 94 ரன்களும், மூன்றாவது டெஸ்டில் 53 ரன்களும், நான்காவது டெஸ்டில் 55 ரன்களும், ஐந்தாவது டெஸ்டில் 125 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 208 ரன்களும், ஏழாவது டெஸ்டில் 53 ரன்களும் எடுத்து புதிய சாதனையை அவர் படைத்தார். 

    • 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்துள்ளது.
    • தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து அசத்தினார்.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் 38.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சவுத் ஷகில் அரை சதமடித்து 57 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    • முதலில் ஆடிய இலங்கை 166 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 28.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்தது.

    அப்போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தானின் அப்ரார் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கொழும்பு:

    இலங்கை சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணறினர். 36 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    நெருக்கடியில் தவித்த இலங்கை அணியை தினேஷ் சண்டிமால்-தனஞ்சயா டி சில்வா ஜோடி சரிவிலிருந்து மீட்டது.

    பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த தனஞ்செய டி சில்வா 57 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 37 ரன்னிலும் அவுட்டாகினர். ரமேஷ் மெண்டிஸ் 27 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இலங்கை அணி 48.4 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டகாரர் இமாம் ஹல் உக் 6 ரன்னில் அவுட்டானார். அப்துல்லா ஷபீக்குடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில் ஷான் மசூத் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபீக் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 322 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 262 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கொழும்பு:

    வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ - இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 322 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் உமர் யூசுப் 88 ரன்னும், முகமது ஹாரிஸ் 52 ரன்னும், முபாசிர் கான் 42 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 85 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹன் அராச்சிகே 97 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இலங்கை ஏ அணி 45.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பாகிஸ்தான் ஏ அணி சார்பில் அர்ஷத் இக்பால் 5 விக்கெட், முபாசிர் கான், சுபியான் முகிம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது அர்ஷத் இக்பாலுக்கு வழங்கப்பட்டது.

    • இலங்கை முதல் இன்னிங்சில் 312, 2-வது இன்னிங்சில் 279
    • பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 461 ரன்கள் குவித்தது

    இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 312 ரன்னும், பாகிஸ்தான் 461 ரன்னும் எடுத்தன.

    149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 279 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முதலில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது. இமாம்-உல்-ஹக் (25 ரன்) கேப்டன் பாபர் ஆசம் (6 ரன்) களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் ஆசம் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷாகீல் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இமாம்-உல்-ஹாக் அரைசதம் அடித்து நிலைத்து நிற்க பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதனால் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் கொழும்பில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    ×