என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபர் அசாம்"

    • பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை.
    • நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படவில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுகள் இன்று தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

    இந்த போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேப்டன் உடனான சண்டை மற்றும் பாபர் அசாமின் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா மற்றும் மைக் ஹெசன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் சல்மான் அகா ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டிலை கீழே வீசுவது போன்ற காட்சிகள் இருந்தன.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வீடியோவை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சல்மான் அகா அவுட் ஆன விரக்தியில் தான் பாட்டிலை வீசினார். எங்களுக்கிடையே எந்த மோதலும் இல்லை என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    அதே போட்டியில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அவரது வழக்கமான 4-வது இடத்தில் களமிறக்கப்படவில்லை.

    பாபர் அசாம் குறித்து கூறியதாவது:-

    பாபர் அசாமின் 'ஸ்டிரைக் ரேட்' திருப்திகரமாக இல்லை என்றும், அவர் இன்னிங்ஸை முடித்துக் கொடுக்கும் சிறந்த வீரர் அல்ல என்றும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
    • பாபர் அசாம் முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

    2026 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.

    முன்னதாக தொடர்ந்து தடுமாறி வரும் பாபர் அசாம், முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பின்னர் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்த பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை, மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் கடந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை பாபர் அசாம் படைத்தார்.

    குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் 500 ரன்கள் அடித்த வீரர்கள் விவரம்:-

    பாபர் அசாம் - 110.4

    மொஹமத் ஹஃபீஷ் - 111.8

    குமார் சங்கக்கரா - 112.2

    கேன் வில்லியம்சன் - 112.5

    • பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்கள் அடித்தார்
    • டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் ஒயிட்வாஷ் செய்தது.

    ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. சைம் அயூப் 37 பந்தில் 56 ரன்னும், பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்னும் அடித்தனர். ஷதாப் கான் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 23 ரென்னும் கேமரூன் கிரீன் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதலிடம் பிடித்தார்.

    விராட் கோலி 38 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில் பாபர் அசாம் 39 அரைசதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் (32), ரிஸ்வான் (30) ஆகியோர் உள்ளனர். 

    • பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. சைம் அயூப் 37 பந்தில் 56 ரன்னும், பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்னும் அடித்தனர். ஷதாப் கான் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 23 ரென்னும் கேமரூன் கிரீன் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    • முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ராஃப் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
    • ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை லாகூரில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ராவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. விக்கெட் கீப்பராக கவாஜா நஃபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இந்த மாதம் தொடக்கத்தில் அணியில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சதாக் கானும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணி:-

    சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், கவாஜா முகமது நஃபே (வி.கி.), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது விசாம் ஜூனியர், நசீம் ஷா, சஹிப்சதா பர்ஹான் (வி.கீ,), சைப் ஆயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, சதாப் பான், உஸ்மான் கான் (வி.கீ.). உஸ்மான் தரீக்.

    • பிக்பாஷ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது
    • சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், பிக்பாஷ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள போட்டிகளில் பாபர் அசாம் பங்கேற்க மாட்டார் என சிட்னி சிக்சர்ஸ்அணி அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளதால் இந்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 

    • பெர்த்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிகள் மோதின.
    • டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    பெர்த்:

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்காட்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. பின் ஆலன் 49 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, சிட்னி சிக்சர்ஸ் அணி 148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பாபர் அசாம் 2 பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    தகுதிச்சுற்று போட்டியில் பாபர் அசாம் விரைவில் வெளியேறியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எனவே சமூக வலைதளங்களில் அவரை சாடி வருகின்றனர். இதனால் பாபர் அசாம் திடீரென டிரெண்டாகி உள்ளார்.

    • ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாபர் அசாம் டக்அவுட் ஆனார்.
    • இது அவரின் 9வது டி20 டக்அவுட் ஆகும்.

    பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

    முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. சாஹிப்சதா பர்ஹான் (16) ஆட்டமிழந்ததும், பாபர் அசாம் களம் இறங்கினர். இவர் 3 பந்துகளை சந்தித்த நிலையில் எவன்ஸ் பந்தில் டக்அவுட் ஆனார்.

    டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் 9ஆவது டக் இதுவாகும். இதன் மூலம் அதிக முறை டக்அவுட் ஆன பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

    • இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்தார்.
    • பாபர் அசாம் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்துள்ளார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. ஜெய்ந்த் லியானகே 54 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கமிந்து மெண்டீஸ் 44 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் ஆசம் சதம் அடித்தார். அவர் 102 ரன்னும் (8 பவுண்டரி), பகார் ஜமான் 78 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அந்த அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.

    இந்த போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்தன் மூலம் 807 நாட்கள் மற்றும் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தியுள்ளார். இதே போல இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல போட்டிகளில் தடுமாறினார். அதன்பிறகு 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்தார். அதேபோல பாபர் அசாமும் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 288 ரன்கள் எடுத்தது.

    ராவல்பிண்டி:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    கடந்த 11-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 289 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. சதமடித்து அசத்திய பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

    • பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார்.
    • முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் உள்ளனர்.

    ஐசிசி தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    அதன்படி முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் 9-வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் தொடர்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி 1 இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார். இதனால் 5-வது இடத்தில் கோலியும் 6-வது இடத்தில் சரித் அசலங்காவும் முன்னேறியுள்ளனர்.

    இலங்கைக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரரான சல்மான் ஆகா 14 இடங்கள் முன்னேறி 16 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார்.
    • பாபர் அசம் 130 டி20 போட்டியில் 4234 ரன் எடுத்துள்ளார்.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 இருபது ஓவர் தொடரில் ராவல்பிண்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.2 ஓவரில் 110 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 13.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார். 9-வது ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்த ரோகித் சர்மா சாதனையை முறியடித்தார். பாபர் அசம் 130 ஆட்டத்தில் 4234 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 4231 ரன்னுடன் (159 போட்டி) 2-வது இடத்தில் உள்ளார்.

    ஆண்கள் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-

    பாபர் அசாம் -130 போட்டிகளில் 4232*

    ரோகித் சர்மா - 159 போட்டிகளில் 4231

    விராட் கோலி - 125 போட்டிகளில் 4188

    ஜோஸ் பட்லர் - 144 போட்டிகளில் 3869

    ×