என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி தரவரிசை"

    • பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.
    • பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.

    ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார். இதை தவிர டாப் 10-ல் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார். கேஎல் ராகுல் 2 இடம் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். மற்றபடி பந்து வீச்சு தரவரிசையில் பெரிய மாற்றம் இல்லை.

    • ஒருநாள் பேட்டர் தரவரிசையில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
    • முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

    முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் கோலி 5-வது இடத்திலும் தொடர்கின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் பின் தங்கி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே 11 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா முதல் முறையாக முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    • ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
    • 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார்.

    ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் முதல் இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார். 

    முதல் இடத்தில் இருந்த ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார். அதனை தொடர்ந்து சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் 5-வது இடத்திலும் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார்.
    • முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் உள்ளனர்.

    ஐசிசி தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    அதன்படி முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் 9-வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் தொடர்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி 1 இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார். இதனால் 5-வது இடத்தில் கோலியும் 6-வது இடத்தில் சரித் அசலங்காவும் முன்னேறியுள்ளனர்.

    இலங்கைக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரரான சல்மான் ஆகா 14 இடங்கள் முன்னேறி 16 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசினார்.
    • சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் ஒரு அரை சதம் விளாசினார். இதனால் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

    அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே போல விராட் கோலி 1 இடம் பின் தங்கி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் 23 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

    • தரவரிசைப் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3வது இடத்துக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

    தற்போது நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் கடைசி இரு ஆட்டங்களிலும் மந்தனா அசத்தலாக ஆடி அரை சதங்கள் விளாசினார்.

    2வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் நாட் சீவர்பிரன்ட் உள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை ஆலிசா ஹீலி ஒரு நிலை உயர்ந்து 3ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 3 நிலை உயர்ந்து 15-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3 நிலை உயர்ந்து 669 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 778 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆஸி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 686 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய வீராங்கனை ஸ்நே ராணா 20-வது இடத்தில் உள்ளார்.

    • ஜெய்ஸ்வால் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.
    • குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதால் தரவரிசையில் முன்னேற்றம்.

    கிரிக்கெட் தரவரிசைக்கான அப்டேட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெல்லி போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், பேட்டர்கள் தரவரிசையில் முதல் 5 இடத்திற்குள் முன்னேனியுள்ளார்.

    23 வயதான ஜெய்ஸ்வால், 7ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

    பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 689 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

    ஒருநாள் போட்க்கான பேட்டர்கள் தரவரிசையில் சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    • ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஒருநாள் போட்டிக்கான பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அந்த வகையில் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இப்ராகீம் சத்ரன் 8 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 3-வது இடத்தில் இருந்து 10-வது இடத்தில் இருக்கும் பேட்டர்கள் ஒரு இடம் பின் தங்கினர். மற்றபடி பேட்டர் தரவரிசையில் மாற்றமில்லை.

    அதேபோல் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றபடி இதிலும் மாற்றமில்லை.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் 5 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மற்றொரு வீரரான ஓமர்சாய் 19 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.

    • பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கேஎல் ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அந்த வகையில் பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாத்னை படைத்துள்ளார். அதேபோல கேஎல் ராகுல் 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட் தொடர்கிறார். இதை தவிர பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை.

    அடுத்ததாக பந்து வீச்சில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பும்ரா தொடர்கிறார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.

    ஆல்ரவுண்டரில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் ஜடேஜா உள்ளார். இந்த பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிடித்துள்ளார்.

    • ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இங்கிலாந்தின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.

    இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 791 புள்ளிகளுடன் தொடர்ந்து 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக சதங்களை விளாசினார்.

    இங்கிலாந்தின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 713 புள்ளியுடன் 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.

    பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் நீடிக்கிறார். டாப் 10-ல் இடம்பிடித்தவர் இவர் மட்டுமே.

    • ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து சாதனை.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் 900 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றிருந்தனர்.

    இந்திய டி20 அணியின் அதிரடி வீரராக இளம் வீரர் அபிஷேக் சர்மா திகழ்ந்து வருகிறார். தொடக்க வீரராக விளையாடி வரும் அவர், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து வருகிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். மேலும் தரவரிசைக்கான புள்ளிகளில் 900-த்தை தாண்டியுள்ளார். தற்போது 907 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு 909 மற்றும் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டு 912 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் 900 புள்ளிகளை கடந்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

    • தென்ஆப்பிரிக்கா தொடரில் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • பேட்டர்கள் வரிசையில் சுப்மன் கில், ரோகித் சர்மா தங்களுடைய இடத்தை இழக்கவில்லை.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசியதால் 16 இடங்களில் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் அவருடைய சிறந்த இடமாகும்.

    தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் மகாராஜ் முதல் இடத்திலும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா 2ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய சுழந்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு இடம் சரிந்து 4ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஜடேஜா 2 இடங்கள் பின்தங்கி 10 இடத்தை பிடித்துள்ளார்.

    பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. விராட் கோலி 4ஆவது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்திலும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஜோ ரூட் 5 இடங்களில் முன்னேறி 19ஆவது இடத்தில் உள்ளார்.

    ×