என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "icc ranking"
- ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
- இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர்.
இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
- ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
- இதில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி காக் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.
- ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை எட்டியது.
புளோம்பாண்டீன்:
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா (121 புள்ளி) மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டதால் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இருக்கிறது.
இவ்விரு அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
- ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.
- 5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த ஃபகார் ஜமான் 2 இடங்கள் பின் தங்கி 5-வது இடத்தை பிடித்தார்.
5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து 9-வது இடத்தில் விராட் கோலியும் 11-வது இடத்தில் ரோகித் சர்மாவும் நீடிக்கிறார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் நீடிக்கிறார்.
டி20-யை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரேஒரு இந்தியர் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் 143 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தாலும் அவர்களின் இடம் உறுதியாக இல்லை.
- ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது நாளில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 20-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தற்போது, ஐசிசி தரவரிசையின்படி, இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக உள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தாலும் அவர்களின் இடம் உறுதியாக இல்லை.
ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றால் முதல் இடத்தை பிடிக்கும். மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் ஜூலை 19-ம் தேதி மான்செஸ்டரிலும், நான்காவது ஆஷஸ் ஜூலை 27-ம் தேதி ஓவல் மைதானத்திலும் தொடங்கும்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால், ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால், பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி முதல் இடத்தைப் பெற இரண்டு வழிகள் உள்ளன.
1. ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்து தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றினால்.
2. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என வென்றால் போதுமானது.
- நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார்.
- ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடியதால், அவர் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பின்தங்கினார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 4வது இடத்திலும் உள்ளனர். டாப்-10 பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார். இந்திய வீரர் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 12வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 8வது மற்றும் 9வது இடங்களில் நீடிக்கின்றனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 2வது இடத்திலும், அக்சர் பட்டேல் 4வது இடத்திலும் உள்ளனர்.
- ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
- இதில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான் டெர் டுசன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 3-ம் இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் இந்தியாவின் முகமது சிராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
- ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை.
- இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது.
நாக்பூரில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.
இந்தியா தற்போது 115 புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா (111), இங்கிலாந்து (106) உள்ளன.
இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்த பிறகு, இந்திய அணி மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 அணியாக மாறியது.
ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை. இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை முறியடித்த முதல் இந்திய கேப்டன் ரோகித் ஆவார்.
கடந்த மாதம் நியூசிலாந்தை சொந்த மண்ணில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியா நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. இலங்கையை 3-0 என்ற கணக்கில் கிளீன் ஸ்வீப் செய்த பிறகு இந்த வெற்றி கிடைத்தது.
முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளவும், இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தவும் இந்தியா அடுத்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். ரோகித் சர்மா தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவை 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தால், தொடரில் மிகப்பெரிய முன்னிலை பெறும்.
- டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.
- இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸ்திரேலியா 6-வது இடத்தில் உள்ளது.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது.
2-வது இடத்தில் இங்கிலாந்து (261 புள்ளி) உள்ளது. தென்ஆப்பிரிக்கா (258 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் (258 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (252 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றன.
இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸ்திரேலியா (250 புள்ளி) ஒரு புள்ளி குறைந்து 6-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் (241 புள்ளி) 7-வது இடத்திலும், இலங்கை (237 புள்ளி) 8-வது இடத்திலும், வங்காளதேசம் (224 புள்ளி) 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (219 புள்ளி) 10-வது இடத்திலும் உள்ளன.
