என் மலர்
நீங்கள் தேடியது "jaiswal"
- ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 3 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 28 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
- ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 4 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை- ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் அணியான மும்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
இதனால் மும்பை அணி ஜம்மு-காஷ்மீரை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெய்ஸ்வால் (4), ரோகித் சர்மா (3), ரகானே (12), ஷ்ரேயாஸ் அய்யர் (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஷர்துல் தாகூர் தாக்குப்பிடித்து 51 ரன்கள் அடிக்க 120 ரன்னில் சுருண்டது.
ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் உமர் நசீர், யுத்விர் சிங் தலா 4 விக்கெட் வீழ்த்தி மும்பையை சுருட்ட முக்கிய காரணமாக இருந்தனர். பின்னர் ஜம்மு-காஷ்மீர் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷுபம் கஜுரியா 53 ரன்களும், அபித் முஷ்டாக் 44 ரன்களும் அடிக்க 206 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 26 ரன்னிலும், ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து சொதப்பினர். ரகானே 16 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 17 ரன்னிலும் ஆட்டமிழக்க 2-வது இன்னிங்சிலும் மும்பை அணி தடுமாறியது. ஆனால் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர் 2-வது இன்னிங்சில் 119 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக தனுஷ் கோட்டியான் 62 ரன்கள் சேர்க்க மும்பை 290 ரன்கள் அடித்தது.

இதனால் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரரான ஷுபம் கஜுரியா 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் அடித்தார். அபித் முஷ்டாக் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு சாம்பியனான மும்பை அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடியும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளது.
- ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
- விராட் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று காலை (இந்திய நேரப்படி 9.30) தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சுப்மன் கில், ரோகித் சர்மா, அஸ்வின் சேர்க்கப்பட்டு ஜூரெல், படிக்கல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டனர்.
ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.
அடுத்து கே.எல். ராகுல் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். சுப்மன் களம் இறங்கியதில் இருந்து அடித்து விளையாடினார். கே.எல். ராகுல் முதலில் நிதானமாக விளையாடினார். அதன்பின் அடித்து விளையாட தொடங்கினார்.
இந்த ஜோடி சிறப்பாக விளையாடிய நிலையில் இந்தியா 69 ரன் எடுத்திருக்கும்போது கே.எல். ராகுல் (37) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 7 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்த இரண்டு விக்கெட்டையும் ஸ்டார்க் வீழ்த்தினார்.
மறுமுனையில் விளையாடிய சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதனால் இந்தியா 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 23 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருக்கும்போது டின்னர் இடைவேளை விடப்பட்டது.
ரிஷப் பண்ட் 4 ரன்னுடனும், ரோகித் சர்மா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய 69 ரன்னிற்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்து 81 ரன்னுக்குள் 4 விக்கெட் இழந்தது. அதாவது 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
- பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணாவுடன் ஸ்டார்க் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.
- ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிற்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது வார்த்தை போர் (ஸ்லெட்ஜ்- sledge) அதிகமான நடக்கும்.
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது, ஹர்ஷித் ராணா மிட்செல் ஸ்டார்க்கை பவுன்சர் மூலம் மிரட்டி முறைத்து பார்ப்பார். அப்போது ஸ்டார்க், நான் இதைவிட அதிக வேகத்தில் பந்து வீசுவேன். எனக்கு இதுபோன்ற அனுபவம் உள்ளது என்பார்.
இந்தியா 2-வது இன்னிங்சில் விளையாடும்போது ஜெய்ஸ்வால் ஸ்டார்க் பந்தில் சிக்சர் விளாசுவார். பின்னர் ஸ்டார்க் வீசிய பந்தை ஸ்மார்ட்டாக தடுத்து ஆடுவார். பின்னர் உங்கள் பந்து மிகவும் வேகமாக வரவில்லை. ஸ்லோவாக உள்ளது என பதிலடி கொடுப்பார். இது மிகப்பெரிய விசயமாக பேசப்பட்டது.
இந்த நிலையில் போட்டியின்போது ஜெய்ஸ்வால் என்னையும் ஸ்லெட்ஜ் செய்தார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
2-வது இன்னிங்சில் 120 ரன்கள் அடித்தபோது தசைப்பிடிப்பு காரணமாக பிசியோ பெற்றார். பின்னர் நான் பந்து வீசும்புாது என்னை நோக்கி நீங்கள் லெஜண்ட்தான். ஆனால் நீங்கள் வயதானவர் என ஜெய்ஸ்வால் என்னிடம் தெரிவித்தார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் 3-வது இடத்தில் உள்ளார். அவர் 130 போட்டிகளில் 532 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- 2 ஆவது இன்னிங்சில் இந்தியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்துள்ளது.
- முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சதம் அடித்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில், முடிந்தால் ரன் அவுட் செய் என்பதுபோல ஜெய்ஸ்வால் கிரீஸ்-க்கு வெளியே நின்றுகொண்டு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனுக்கு போக்கு காட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
2 ஆவது இன்னிங்சில் இந்தியா அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்து 321 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Cute fight between Jaiswal and Marnus..!#INDvAUS #AUSvIND pic.twitter.com/UKSsaOAilr
— KAUSHIK (@cricketkaushik) November 23, 2024
- டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
204 பந்துகளில் 95 ரன்கள் அடித்திருந்த ஜெய்ஸ்வால் 205 ஆவது பந்தை சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.
2 ஆவது இன்னிங்சில் இந்தியா அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்து 258 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 2014 ஆம் ஆண்டு பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சிக்சர்கள் அடித்திருந்தார்.
- ஜெய்ஸ்வால் இந்தாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 193 பந்துகளில் 90 ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற பிரெண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்தார்.
2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை 34 சிக்ஸர்கள் அடித்து ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:-
மெக்கல்லம் -33 சிக்சர்கள் (2014)
பென் ஸ்டோக்ஸ் - 26 சிக்சர்கள் (2022)
கில்கிறிஸ்ட் -22 சிக்சர்கள் (2005)
வீரேந்தர் சேவாக்- 22 சிக்சர்கள் (2008)
- டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். கே.எல். ராகுலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் தொடக்க ஜோடியை பிரிக்க சிரமப்பட்டனர்.
ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோருடன் நாதன் லயனும் பந்து வீசி எந்த பயனும் இல்லை.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 90 ரன்கள் அடித்தும் கே.எல். ராகுல் 153 பந்துகளில் 62 ரன்கள் அடித்தும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இந்தியா 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
1⃣5⃣0⃣ up for the opening stand ✅KL Rahul ? Yashasvi Jaiswal#TeamIndia's lead approaching 200 ? ?Live ▶️ https://t.co/gTqS3UPruo#AUSvIND pic.twitter.com/Y2x5FRMmRV
— BCCI (@BCCI) November 23, 2024
- ஜெய்ஸ்வால் 42 ரன்கள் எடுத்துள்ளார்.
- கே.எல். ராகுல் 34 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனதும் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். கே.எல். ராகுலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் தொடக்க ஜோடியை பிரிக்க சிரமமப்பட்டனர்.
ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோருடன் நாதன் லயனும் பந்து வீசி எந்த பயனும் இல்லை. மதியம் தேநீர் இடைவேளை வரை ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் ஜோடி விக்கெட் இழக்கவில்லை.
தேநீர் இடைவேளை வரை இந்தியா 26 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 88 பந்தில் 42 ரன்கள் அடித்தும், கே.எல். ராகுல் 70 பந்தில் 34 ரன்கள் அடித்தும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இந்தியா 130 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
- ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகினர்.
- விராட் கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை ஏற்றார். பும்ரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்து வந்த விராட் கோலி 12 பந்தில் 5 ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார். கே.எல். ராகுல் ஒருபக்கம் தாக்குப்பிடித்து விளையாடினார். இருந்தாலும் 74 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
இந்திய அணி:-
1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.
ஆஸ்திரேலியா அணி:-
1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.
- ஜெய்ஸ்வால், படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகினர்.
- விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் உடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் பந்துகளை தடுத்தும், பந்து பின்னல் விட்டும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.எல். ராகுல் மட்டும் அவ்வப்போது ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் ரன்கள் எடுக்க திணறினார். இறுதியாக 23 பந்துகள் எதிர்கொண்ட நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் தேவ்தத் படிக்கல் டக்அவுட் ஆனார். இதனால் இந்தியா 14 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 12 பந்துகளை சந்தித்த விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் வீசிய பவுன்சரில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் இந்தியா 32 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்துள்ளது.
தற்போது கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் விளையாடி வருகின்றனர். கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணி:-
1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.
ஆஸ்திரேலியா அணி:-
1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.
- 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது
- நியூசிலாந்து அணி 2 - 0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. சுழற்பந்து வீச்சுக்கு சாதனமாக ஆடுகளத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களும், 2-வது இன்னிங்சில் 255 ரன்களும் சேர்த்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்னில் சுருண்டதால், 359 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2 ஆவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெய்ஸ்வால் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் விக்கெட்டும் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் ரன்கள் வந்துகொண்டே இருந்தது.
அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 41 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில் 23 ரன் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தது. ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்திருக்கும்போது சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி அடித்த பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்றபோது ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனார். பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் 3 பந்துகளை சந்தித்த நிலையில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அடுத்ததாக விராட் கோலி 17 ரன்னிலும் சர்பராஸ் கான் 9 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 21 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் 8 ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்த நிலையில், சான்ட்னெர் சூழலில் அஷ்வின் ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் தனியொருவனாக போராடிய ஜடேஜா 42 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய சான்ட்னெர் 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 2 - 0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.
சொந்த மண்ணில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட் டக்அவுட்.
- ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்று வருகிது. சுழற்பந்து வீச்சுக்கு சாதனமாக ஆடுகளத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களும், 2-வது இன்னிங்சில் 255 ரன்களும் சேர்த்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்னில் சுருண்டதால், 359 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய இலக்கை எதிர்கொள்வது மிகக்கடினம்.
இருந்தாலும் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் களம் இறங்கினர். ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெய்ஸ்வால் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் விக்கெட்டும் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.
இதனால் ரன்கள் வந்துகொண்டே இருந்தனர். மதிய உணவு இடைவேளை வரை 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் அடித்தது. ஜெய்ஸ்வால் 46 ரன்களுடனும், சுப்மன் கில் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அவர் 41 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில் 23 ரன் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தது. ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்திருக்கும்போது சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.
அடுத்து 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி அடித்த பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்றபோது ரிஷப் பண்ட் ரன்அவுட் ஆனார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் 3 பந்துகளை சந்தித்த நிலையில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அடுத்து 5-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது இந்தியா 25 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 218 ரன்கள் தேவை. இன்று முழுவதும் விளையாடினால் இந்தியா வெற்றியை எதிர்பார்க்கலாம். ஆனால் இன்று முதல் நிலைத்து நிற்குமா? என்பது சந்தேகம்தான்.