என் மலர்
நீங்கள் தேடியது "jaiswal"
- இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர்.
- சுப்மன் கில் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாடவில்லை.
தென்ஆப்பிரி்க்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில் விளையாடாததால் ரோகித் சர்மா உடன் இன்னொரு வீரர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டியுள்ளது. தற்போது அந்த வீரர் யார்? என்பதுதான் கேள்விக்குறி.
டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்கி, சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் காம்பினேசன் ஒர்க்அவுட் ஆகும் என நினைக்கலாம்.
அதேவேளையில் உள்ளூர் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி உள்ளார். இவரும் தொடக்க வீரராக களம் இறங்கக் கூடியவர். இவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
அதேவேளையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கியவர்தான். தற்போது மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி வருகிறார். ஒருவேளை ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களம் இறங்கினால், அவர் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். அப்படி என்றால் கே.எல். ராகுல் ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா- ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா- கே.எல். ராகுல் இதில் எந்த ஜோடி தெடாக்க ஜோடியாக களம் இறங்கும் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
15 பேர் கொண்ட இந்திய அணி:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜுரல்.
- ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சாம்சனை வாங்க அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் வாரம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.
இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணியில் எம் எஸ் தோனிக்கு வயதாகி விட்டதால் அவர் 20 ஓவரும் கீப்பிங் செய்வார் என்பது சந்தேகம்தான். இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சஞ்சு சாம்சனை டிரேட் முறையில் எடுக்க அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறினால் அந்த அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சீசனில் சாம்சன் இல்லாத போட்டிகளில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். அதனால் அவர்தான் கேப்டன் என சில தகவல்கள் வந்த நிலையில் அவரையும் ராஜஸ்தான் அணி விடுவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இவர்களுக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜூரல் உள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக வருவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
- ஜெய்ஸ்வால் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.
- குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதால் தரவரிசையில் முன்னேற்றம்.
கிரிக்கெட் தரவரிசைக்கான அப்டேட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெல்லி போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், பேட்டர்கள் தரவரிசையில் முதல் 5 இடத்திற்குள் முன்னேனியுள்ளார்.
23 வயதான ஜெய்ஸ்வால், 7ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 791 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 14ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 689 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்க்கான பேட்டர்கள் தரவரிசையில் சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
- இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
- ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.
போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் கேல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கி ரன்கள் குவிக்க தொடங்கியது. 38 ரன்கள் எடுத்த ராகுல் 19வது ஓவரில் ஜோமல் வேரிகன் பந்தில் ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் தமிழக வீரர் சாய்சுதர்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்த ஓவரில் சாய் சுதர்சன் 57 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். மறுபுறம் ஸ்கோர் மெஷினாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் 101 ரன்கள் குவித்தார்.
50 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புடன் 196 ரன்கள் எடுத்துள்ளது.
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது.
- இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19 ஆம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் 20 ஓவர் அணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை. இதேபோல சாய் சுதர்சனுக்கும் வாய்ப்பு குறைவு. அதே சமயம் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லுக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் 20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார்கள். முதல் 5 வரிசையில் இருக்கும் இவர்களை மாற்ற கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கே.எல்.ராகுலுக்கு 20 ஓவர் அணியில் இடம் கிடைக்காது என்றே கருதப்படுகிறது. ஜெய்ஸ்வால் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி யில் ஆடினார். கே.எல்.ராகுல் கடைசியாக 2022-ம் ஆண்டு நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடினார். இந்த இருவரும் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பையில் ஆடமாட்டார் என்று முதலில் தகவல் வெளியானது. தற்போது அவர் இந்த போட்டியில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. அவர் அணியில் தேர்வானால் துணை கேப்டன் பதவி வழங்கப்படும். தற்போது அக்ஷர் படேல் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக உள்ளார்.
ஆசிய கோப்பை போட் டிக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என்று எதிர் பார்க்கப்படும் வீரர்கள் விவரம்:-
சூர்யகுமார் யாதவ் (கேப் டன்), சுப்மன் கில், அபி ஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்சித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா, ஜிதேஷ் சர்மா அல்லது துருவ் ஜூரல்.
இந்திய அணி கடைசி யாக கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடியது. 5 போட்டிக்கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
- லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 371 ரன் இலக்கை எளிதாக எடுத்தது.
- ஓவல் ஆடுகளத்தில் 374 ரன் இலக்கை எடுப்பது கடும் சவாலானது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன் எடுத்தது. 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன் னிங்சில் 396 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 374 ரன் இலக்காக இருந்தது.
ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். அவர் 118 ரன னும், ஆகாஷ் தீப் 66 ரன்னும், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்னும் எடுத்தனர். ஜோஷ் டங் 5 விக்கெட்டும், அட்கின்சன் 3 விக்கெட்டும், ஓவருடன் 2 விக் கெட்டும் கைப்பற்றி னார்கள்.
374 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3- வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 324 ரன் தேவை. கைவசம் 8 விக்கெட் உள்ளது. தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் கிறிஸ் வோக்ஸ ஆடமாட்டார்.
லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 371 ரன் இலக்கை எளிதாக எடுத்தது. இதனால் அந்த அணி இந்த இலக்கை எடுக்கும் நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த ஆடுகளத்தில் 374 ரன் இலக்கை எடுப்பது கடும் சவாலானது. இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்று தொடரை சமன் செய்வார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி 374 ரன் இலக்கை எடுப்பது எளிதாக இருக்காது என்று சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார். நேற்றைய போட்டி முடிந்த பிறகு அவர் நிருபர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது:-
இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது சற்று கடினமானது. 4-வது நாளில் 374 ரன் இலக்கை துரத்துவது இங்கிலாந்து அணிக்கு எளிதாக இருக்காது. நாங்கள் நேர்த்தியாக பந்து வீசுவோம். இதனால் பேட்டிங் செய்வது கடினமானது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இங்கிலாந்தில் இது மாதிரியான ஆடுகளத்தில் விளையாடுவதை எதிர் பார்த்தேன். மனதளவில் நான் தயாராக இருந்தேன். நான் எனது பேட்டிங்கை ரசித்தேன். இந்த சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து நிலையாக விளையாடுவதை விரும்புகிறேன். எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி கொண்டேன்.
இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
- இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்து 53 ரன் எடுத்தார்.
இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஜெய்ஸ்வால் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
- ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜ் (4), ஆகாஷ் தீப் (4) ஆகியோர் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார்.
இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 300 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. மேலும் ஒரு ரன் சேர்க்காமல் ஜுரெல் விக்கெட்டை இந்தியா இழந்தது.
ஜுரெல் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர். இந்தியா 77 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா அரை சதத்தை நெருங்கி வருகிறார்.
- சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
- கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் 12 சதங்கள் விளாசியுள்ளனர். அத்துடன் ஒரே தொடரில் அதிக சதங்கள் அடித்த தொடராக இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது.
சுப்மன் கில் 4 சதங்கள் அடித்துள்ளார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.
- முதல் இன்னிங்சில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 2ஆவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 127 பந்தில் சதம் அடித்தார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜெய்ஸ்வால் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனதால் பேட்ஸ்மேன்கள் திணறினர். இருந்தாலும் ஜெய்ஸ்வால் தன்னம்பிக்கையுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்டத்தில் 44 பந்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் 51 ரன்களுடன் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஆகாஷ் தீப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 5ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 70 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆகாஷ் தீப் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் சுப்மன் கில் 11 ரன்னில் வெளியேறினார். ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 127 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
24ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெய்ஸ்வாலின் 6ஆவது சதம் இதுவாகும். இந்த தொடரில் ஜெய்ஸ்வாலின் 2ஆவது சதம் இதுவாகும்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். கே எல் ராகுல் 7 ரன்னிலும், சாய் சுதர்சன் 11 ரன்னிலும் அவுட்டாகினர். ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- அட்கின்சன் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
- இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தால் கே.எல். ராகுல்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஓவல் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தனர். இதனால் ஜெய்ஸ்வால் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் அட்கின்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்த கே.எல். ராகுல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்தை திறமையாக எதிர்கொண்டு விளையாடினர். என்றாலும், கிறிஸ் வோக்ஸ் வீசிய 16ஆவது ஓவரில் கே.எல். ராகுல் இன்சைடு எட்ஜ் மூலம் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அப்போது இந்தியா 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார்.






