search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jaiswal"

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது பெற்றார்.
    • ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 2 இரட்டை சதம் உள்பட மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த தொடரில் 2 இரட்டை சதம் அடித்தார். 5 டெஸ்டில் மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்து அணி கடைபிடித்து வருகிறது. நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மெக்கலம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது பேஸ்பால் யுக்தி என அழைக்கப்படுகிறது.

    இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடியதற்காக எங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த மட்டமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான நாசர் உசேன், ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடுவதை கற்றுக் கொண்டார் என தக்க பதிலடி கொடுத்தார்.

    இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருக்கிறார். அவரது அதிரடியான ஆட்டத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடுவதை பென் டக்கெட் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக ஜெய்ஸ்வால் முதல் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:

    நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். கடந்த 9 மாதத்தில் என்னுடைய பேட்டிங் முன்னேற்றத்துக்கு கேப்டன ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் காரணம்.

    வீரர்களின் அறையில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் நன்மையாகும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன். நான் இந்த இருவரிடமும் நிறைய பேசி இருக்கிறேன். அவர்களது ஆலோசனை பெரிதும் உதவியது என தெரிவித்தார்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து 218 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்களை எடுத்துள்ளது.

    தர்மசாலா:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்களும், பேர்ஸ்டோ 29 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரை சதமடித்த ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்தார்.

    இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இங்கிலாந்து அணியை விட 83 ரன்கள் இந்திய அணி பின்தங்கி உள்ளது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறியதால் இந்திய அணி திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுமையாக ஆடிய துருவ் ஜுரல் அரை சதம் கடந்தார். 8வது விக்கெட்டுக்கு துருவ் ஜுரல், குல்தீப் யாதவ் ஜோடி 76 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் 28 ரன்னில் அவுட்டானார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார்.
    • டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார்.

    5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், 600 ரன்களை கடந்து இளம் வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் 2 இரட்டை சதமும் அடங்கும்

    சுனில் கவாஸ்கர், திலிப் தர்தேசாய், ராகுல் டிராவிட் வீராட் கோலிக்கு அடுத்தபடியாக 5-வது இந்திய வீரராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    1971-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர், 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 774 ரன்கள் குவித்ததே இதுவரை தனிப்பட்ட இந்திய வீரரின் சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு 156 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    மேலும், டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடிப்பதற்கு அவருக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 219 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், 2ம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 4 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர் ஜெய்ஸ்வால் ஆவார்.

    3-வது டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த ஜெய்ஸ்வால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும் இரட்டை சதம் (209 ரன்) அடித்திருந்தார். அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர், இந்திய அளவில் 3-வது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஏற்கனவே வினோத் காம்ப்ளி (1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்), விராட் கோலி (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 213 ரன், டெல்லியில் 243 ரன்) ) ஆகிய இந்தியர்கள் தொடர்ச்சியாக இரு டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    ஜெய்ஸ்வாலின் வயது 22 ஆண்டு 49 நாட்கள். டெஸ்டில் இரண்டு இரட்டை சதம் அடித்த 3-வது இளம் வீரராகவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியாவின் வினோத் காம்ப்ளி தனது வயது 21 ஆண்டு 54 நாளிலும், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் வயது 21 ஆண்டு 318 நாளிலும் இச்சாதனையை செய்துள்ளனர்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 10-வது முறையாகும். இதில் உள்நாட்டில் மட்டும் 9 முறை இவ்விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக தடவை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியரான கும்பிளேவின் (இவரும் 9 முறை) சாதனையை சமன் செய்தார்.

    இந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த சர்ப்ராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். திலவார் ஹூசைன் (1934-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக), சுனில் கவாஸ்கர் (1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஸ்ரேயாஸ் அய்யர் (2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது இந்தியராக சர்ப்ராஸ்கான் அறியப்படுகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 134 டெஸ்டில் ஆடியுள்ள இந்தியா அதில் பெற்ற 33-வது வெற்றி இதுவாகும். இவற்றில் 24 வெற்றி சொந்த மண்ணில் கிடைத்தவையாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இது தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 131 ரன் எடுத்தார். இது அவரது 11-வது சதமாகும். அவர் சதம் அடித்த எல்லா டெஸ்டுகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்டில் 10-க்கு மேல் சதம் அடித்து எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பது ரோகித் சர்மாவுக்கு மட்டுமே.

    • இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

    இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.இதை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களில் ஆட்டமிழந்தது.

    இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

    1. நியூசிலாந்து – 75%

    2. இந்தியா – 59.52%

    3. ஆஸ்திரேலியா – 55%

    4. வங்கதேசம் – 50%

    5. பாகிஸ்தான் – 36.66%

    6. மேற்கிந்திய அணி -33.33 %

    7. தென் ஆப்பிரிக்கா – 25.00%

    8. இங்கிலாந்து – 21.87%

    9. இலங்கை – 00.00

    • டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார்.
    • இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்களில் டிக்ளேர் செய்தது.

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.

    தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. 

    557 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

    வெற்றியை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    • 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்தார்.
    • சர்ப்ராஸ் கான் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.

    தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தது.
    • 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினர்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் 300 ரன்களைக் கடந்தது.

    நான்காம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்து, 440 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஜெய்ஸ்வால் 149 ரன்னுடனும், சர்ப்ராஸ் கான் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • இந்திய அணியின் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் சதமடித்தார்.
    • மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 196 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஜெஸ்ய்வால் பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். சுப்மன் கில்லும் அரை சதமடித்தார்.

    104 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய ரஜத் படிதார் டக் அவுட்டானார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.

    முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    முதலில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    ஜெஸ்ய்வால் பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

    ×